Thursday, July 2, 2009

அவுஸ்திரேலியாவினுள் ஆட்களை கடத்தியவர்களுக்கு 5 வருட சிறைத்தண்டனை.

அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோருமுகமாக அந்நாட்டினுள் நுழைய முற்பட்ட படகொன்றை கடந்த ஆண்டு மார்கழி மாதம் 180 மைல்கற்களுக்கு அப்பால் மறித்த படையினர் படகிலிருந்த இலங்கை, ஈராக் மற்றும் குவைத் நாடுகளைச் சேர்ந்த 34 பேரை மீட்டெடுத்தனர். அப்படகு நாட்டினுள் புகுவதற்கு உடந்தையாகவிருந்தவர்கள் என கைது செய்யப்பட்ட இந்தோனேசிய பிரஜைகள் இருவருக்கு பேர்த் நீதிமன்றம் 5 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

தஞ்சம்கோரியுள்ளவர்கள் தாம் கடற்பயணத்தின் போது உயிருக்காக மிகவும் போராடியதாகவும் பயணம் முழுவதும் படகில் இருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் படகினுள் நுழைந்து கொண்டிருந்த நீரை இறைக்க நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com