Thursday, June 25, 2009

கொடிகாமம் பிரதேசத்தில் புலி உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொலை.

கொடிகாமம் பிரதேசத்தில் புலிகளின் முக்கியஸ்தர் என நம்பப்படும் ஒருவரை படையினர் சுட்டுக்கொன்றுள்ளதாக படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அப் பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான நபர்களது நடமாட்டங்கள் காணப்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் 522ம் படையணியினர் அப்பிரதேசத்தை சுற்றி வளைத்து தேடுதல் நாடாத்தியபோது இச்சம்பவம் இடம்பெற்றதாக அச்செய்தி தெரிவிக்கின்றது.

நேற்றுக் காலை தேடுதலுக்காக சென்ற படையினர் மீது பஸ் ஒன்றின் பின்னால் ஓழிந்திருந்த நபர் ஒருவர் கிரனேட் ஒன்றினை வீச முற்பட்டபோதே அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவ்விடத்தில் இருந்து மைக்ரோ பிஸ்ரல் ஒன்று, கிரனேட்டுக்கள் இரண்டு, கையடக்கத் தொலைபேசி ஒன்று என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவரது உடலம் கொடிகாமம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அது புலிகளின் பிரதேச தலைவர்களில் ஒருவரான சாலப்பனது உடலம் எனவும் கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com