Saturday, June 20, 2009

மின்னஞ்சல் தொடர்பில் கனேடிய தமிழ் மக்கள் மத்தியில் விசனம்

காணாமல்ப்போன உறவினர்களை கண்டுபிடிக்க கட்டணத்துடன்கூடிய சேவை செய்யத் தயாராகவிருப்பதாக அனுப்பப்பட்டிருக்கும் மின்னஞ்சல் கனேடிய தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற மோதல்களால் இடம்பெயர்ந்து காணாமல்ப்போயிருக்கும் உறவினர்களை தேடிக்கண்டுபிடிக்க கட்டணத்துடன் கூடிய சேவை செய்யத் தயாராகவிருப்பதாக, இலங்கையைச் சேர்ந்த சிங்களவர் ஒருவரால், கனடாவிலுள்ள தமிழ் மக்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. இந்த மின்னஞ்சலில், காணாமல்ப்போன உறவினர்களைக் கண்டுபிடிக்க உதவுவதற்குரிய தொழில்சார் சேவைகளுக்காக 25 டொலர் கட்டணம் செலுத்தி பதியுமாறும் மின்னஞ்சலில் கோரப்பட்டிருக்கிறது.

இந்த விடயத்தால் கனடாவிலிருக்கும் தமிழ் மக்கள் குழப்பமடைந்திருப்பதுடன், அங்கிருக்கும் தமிழ் சமூகத் தலைவர்கள் விசனமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com