Tuesday, June 9, 2009

தமிழ் மக்கள் தீர்வு தொடர்பாக இலங்கை அரசு அளித்த வாக்குறுதியை அது நிறைவேற்ற வேண்டும்- காங்ரஸ்

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் திட்ட உறுதிமொழியை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என அதிபர் மஹிந்த ராஜபட்சவை காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை கேட்டுகொண்டுள்ளது.

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஜெயந்தி நடராஜன், திங்கள்கிழமை பேசும்போது கூறியது:

இலங்கை அதிபர் ராஜபட்ச அளித்துள்ள உறுதிமொழியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அங்கு போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறிய மக்களுக்கு மீண்டும் தங்கள் பகுதிகளுக்கு திரும்பத் தேவையான வழிவகைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com