Monday, June 29, 2009

தாய்தந்தையரை இழந்த சிறுவர்களுக்கான பராமரிப்பு நிலையம்.

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் தாய்தந்தயைரை இழநது அனாதைகளாக்கப்பட்டுள்ள குழந்கைகளை கவனிக்கும் பொருட்டு சிறுலிய செவன எனும் பெயரில் பாராமரிப்பு நிலையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையத்தை முதற்பெண்மணி சிறாந்தி ராஜபக்ச திறந்து வைத்தார்.

இன்று வவுனியாவில் இடம்பெற்ற இந்நிலைய திறப்பு விழாவில் அவர் பேசுகையில், இடைத்தங்கல் முகாம்களில் 230 தாய்தந்தையரை இழந்த குழந்கைள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தமது 18 வயதை எட்டும் வரை பராமரிக்கப்படுவர் எனவும் அவர்கள் பராயமடைந்த பின்னர் அவர்களின் விருப்பிற்கேற்ப உறவினர்களுடன் இணைய முடியும் எனவும் தெரிவித்தார்.

இச் சிறுவர்களில் 125 பேர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 5 மாடிக் கட்டிடத்தில் பாராமரிக்கப்படுவர். சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகார அமைச்சு பராமரிப்பிற்கு தேவையான 20 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை வழங்கியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com