Saturday, June 20, 2009

ஐ.நா வின் இரு அதிகாரிகள் இலங்கையில் கைது.

ஐ.நா வின் இரு தேசிய மட்டத்திலான அதிகாரிகள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இருவரில் ஒருவர் யுஎன்எச்சிஆர் இன் ஊழியர் எனவும் ஒருவர் யுஎன்ஓபிஎஸ் இன் ஊழியர் எனவும் தெரிவிதக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த 8 நாட்களாக காணாமல் போயிருந்ததாகவும் பின்னர் அவர்கள் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டமை தெரிவயவந்துள்ளதாகவும் ஐ.நா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இக்கைது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐ.நா கொழும்பு அலுவலகம், அவர்கள் மீது என்ன குற்ச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்பது எமக்கு தெரியாது. ஐ.நா இவ்விடயம் தொடர்பாக அரசுடன் தொடர்பில் உள்ளது. நாம் அவர்களது நலம் தொடர்பாக விசாரித்து வரும் அதே நேரத்தில் விசாரணைகளுக்கு தேவையான உதவிகளை அதிகாரிகளுக்கு வழங்கி வருகின்றோம் என தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com