Friday, April 10, 2009

மண்ணெண்ணெய் நிரப்பிய இரு பவுசர்கள் மீட்டெடுப்பு

முல்லைத்தீவு, விசுவமடு பிரதேசத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டிருந்த இரண்டு பவுசர்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இராணுவத்தின் 57வது படைப் பிரிவினர் இந்தப் பிரதேசத்தில் மேற்கொண்ட பாரிய தேடுதலின் போதே இந்த மண்ணெண்ணெய் பவுசர்களை படையினர் கண்டு பிடித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வன்னி பிரதேசத்தில் உள்ள பொது மக்களுக்காக அரசாங்கம் அனுப்பி வைத்த மண்ணெண்ணெய் களை புலிகள் பலாத்காரமாக எடுத்துச் சென்று மறைத்து வைத்திருந்தமை இதன் மூலம் உறுதிசெய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். குண்டுத் தாக்குதல்களில் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே புலிகள் இந்த பவுசர்களை மிகவும் பாதுகாப்பான முறையில் மறைத்துவைத்திருந் துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Thanks Thinakaran

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com