Thursday, October 23, 2008

மக்களுக்கு உணவு கிடைக்காமல் செய்து, பிரச்சாரத்தை முன்னெடுப்பது புலிகளின் நோக்கம். அமைச்ச கேஹெலிய ரம்புக்வெல.

யாழ். குடாநாட்டுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற இரு கப்பல்கள் மீது படகுகளில் வந்த புலிகள் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் அவற்றுக்கு சிறிய சேதம் ஏற்பட்டதாக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். புலிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் அதிலிருந்து மீள்வதற்கு தந்திரோபாயமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் அங்கு குறிப்பிடுகையில், கடந்த இருவாரமாக புலிகள் தோல்விகண்டு இறுதிக் கட்டத்தில் இருக்கின்ற நிலையில் பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களை எடுத்துச் சென்ற லொறிகள் மற்றும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மனிதாபிமானப் பிரச்சினைகளை உருவாக்கி, அதனை உலக நாடுகளில் பிரச்சாரம் செய்து தம்மை மீண்டும் மீட்சி பெற செய்யும் தந்திரோபாயமே இதுவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com