Sunday, March 24, 2019

நாங்கள் மாத்திரமல்ல புலிகளும் இலங்கை அரசிற்கு காட்டிக்- கொடுத்தவர்கள்தான். சிறிகாந்தா குற்ற ஒப்புதல் வாக்குமூலம்.

புலிகளின் தலைவர் பிரபாகரனால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ் மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா அவர்களின் நினைவாக அமையப்பெற்றுள்ள விளையாட்டரங்கின் பெயரினை மாற்றுவதற்கான பிரேரணை ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ யாழ் மா நாகர சபையில் கொண்டு வந்துள்ளது.

இப்பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்ளேயே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், இவ்விடயம் சரியா தவறா என டாண் தொலைக்காட்சியில் விவாத நிகழ்வு ஒன்று இடம்பெற்றபோது, துரையப்பாவை துரோகி என சித்தரிக்க முற்பட்ட ரெலோ வின் செயலாளர் நாயகம் சிறிகாந்தாவை, விவாதத்தில் கலந்து கொண்டிருந்த யாழ் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன் பாலசுந்தரம் அவர்களும் முத்த ஊடகவியலாளர் பரமேஸ்வரனும் மூக்குடைத்து அனுப்பியுள்ளனர்.

துரையப்பா துரோகி என சிறிகாந்தா அர்த்தம் கற்பிக்க முற்பட்டபோது, ரெலோ என்ற அமைப்பு சிறிலங்கா அரசுடன் இணைந்து மேற்கொண்ட கைங்கரியங்களை அவர்கள் கேள்விகளாக தொடுத்தனர். அக்கேள்விகளுக்கு பதிலளிக்கமுடியாத சிறிகாந்தா, தாங்கள் மாத்திரம் இலங்கை அரசுடன் இணைந்து செயற்படவில்லை என்றும் புலிகளும் பிறேமதாஸ அரசுடன் இணைந்து மாற்று இயக்கத்தினரை காட்டிக்கொடுத்தனர் என குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

இவ்விவாதங்களின்போது மூன்று தடவைகளில் பொன் பாலசுந்தரம்பிள்ளை அவர்கள், சிறிகாந்தாவை பகுத்தறிவுடன் கருத்துக்களை முன்வைக்குமாறும் தமிழ் தலைமைகள் மக்களை உணர்சியூட்டியதன் விளைவினை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம் என்றும் எச்சரித்தபோது, சிறிகாந்தாவில் இரு கைகளும் உதடுகளும் நடுங்க வாயடைத்துக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

பொன் பாலசுத்தரம்பிள்ளை அவர்களின் கருத்துக்கு வலுச்சேர்க்குமுகமாக கருத்துரைத்த ஊடகவியலாளர் பரமேஸ்வரன், தமிழ் தலைமைகளின் உணர்சி ஊட்டும் பேச்சுக்களால் உந்தப்பட்டு இயக்கங்களில் இணைந்த இளைஞர்களில் தானும் ஒருவன் என தெரிவித்தார்.

தமிழ் தலைமைகளின் உணர்ச்சிப் பேச்சுக்களாலேயே தமிழ் இளைஞர்கள் தமது வாழ்வினை தொலைத்தனர் என்ற உண்மையை எவ்வித கிலேசமும் இன்றி மறுத்துரைத்த சிறிகாந்தா, இளைஞர்கள் தமது தலைவர்களின் பேச்சுக்களால் இயக்கங்களில் இணையவில்லை என்றார்.


தமிழ் தலைவர்கள் மாத்திரம் அல்ல அவர்களின் மனைவியரும் தமிழ் இளைஞர்கள் உணர்சியூட்டினர் என்ற விடயத்தை இலங்கைநெட் சிறிகாந்தாவிற்கு நினைவூட்டுகின்றது. புலிகளால் படுகொலை செய்யப்பட்ட அமிர்தலிங்கம் அவர்களின் மனைவி மங்கையற்கரசி „ சிங்களவனின் தோலை கொண்டுவாருங்கள், செருப்பு தைத்து போடப்போகின்றேன்' என பகிரங்க மேடைகளில் இளைஞர்களை உசுப்பேற்றினார்.

இறுதியாக பிரித்தானியாவில் தஞ்சம் அடைந்த திருமதி. மங்கையற்கரசி அமிர்தலிங்கம் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திறங்கி நேரே ஒரு சிங்கள பொலிஸாரின் வீடு தேடிச் சென்ற வரலாறு பதிவாகியுள்ளது. அதாவது யாருடையை தோலை தனது காலுக்கு செருப்பாக்க வேண்டும் என்று கூறினாரோ அவரது காலடி தேடிச் சென்றார். எனவே சிறிகாந்தா வரலாற்றை மறந்திருக்கலாம் ஆனால் மக்கள் அவற்றை மறந்ததாக இல்லை.

சுயேட்சையாக தேர்தலை எதிர்கொண்டு தமிழ் தேசியத்தை தோக்கடித்து தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற மாபெரும் தலைவனை சிறிகாந்தா துரோகி என்கின்றார். ஆனால் தமிழ் மக்கள் சிறிகாந்தாவை இன்றும் துரோகியாகவே பார்கின்றனர். யாழ்பாணத்தில் அத்தனை குற்றவாளிகளையும் , போதைப்பொருள் காரர்களையும் காப்பாற்றி வரும் சிறிகாந்தா இதுவரை 10 மேற்பட்ட தேர்தல்களில் நின்றபோதும், ஒருமுறைகூட மக்கள் தெரிந்தெடுக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


Read more...

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தாலேயே இன்று மக்கள் வெளிச்சத்தில் உள்ளனர். பந்துல

மஹிந்த ராஜபக்ச நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை உருவாக்கியிராவிட்டால் நாடு இன்று இருளில் இருந்திருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துள குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டுக்கு போதிய மின்சாரத்தை வழங்க முடியாதுள்ளது. இவர்கள் முன்னறிவித்தல் இன்றி மின்சாரத்தை வெட்டுகின்றார்கள். சமைத்துக்கொண்டிருக்கின்றவர்கள் இடையில் நிறுத்திவிட்டு தலையில் கையை வைத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்திடம் இது தொடர்பில் தெளிவான திட்டம் ஒன்று இல்லை. இவ்விடத்தில் ஒன்றை நினைவு கூர விரும்புகின்றேன். கரு ஜெயசூரிய கொழும்பு மாநாகர சபைக்காக போட்டியிட்டபோது, கரு வந்தால் வெளிச்சம் வரும் என்ற சுலோகத்தை தேர்தலுக்கு பயன்படுத்தினார்கள். இறுதியில் வெளிச்சத்திற்கு பதிலாக இருள்தான் மிஞ்சியது. அதனால் மக்கள் அவரை கரு ஜெயசூரிய என்பதற்கு பதிலாக கருவல ஜெயசூரிய என்றார்கள் (கருவல ஜெயசூரிய என்றால் தமிழில் இருள் ஜெயசூரிய)

Read more...

Saturday, March 23, 2019

அரசியலுக்கு வந்ததால் சுமந்திரனுக்கு நஷ்டமாம். அவ்வாறாயின் வரிச்சலுகை வாகனங்கள் எங்கே?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தான் அரசியலுக்கு வந்ததால் தனது வருமானம் குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சட்டத்தரணியாக தொழிலாற்றிய அவர் அரசியலுக்கு நுழைந்தால் தொழில் ரீதியில் சற்று பின்னடைவுகள ஏற்பட்டிருக்கலாம் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனாலும் அதனால் அவரது வருமானம் குறைவடைந்துள்ளது எனபது எவ்வளவு தூரம் நியாமானது என்பது இங்கு கேட்கப்படவேண்டிய கேள்வியாகவுள்ளது.

தேசியப்பட்டியல் ஊடாக ஒரு முறையும் மக்கள் தெரிவினூடாக ஒரு முறையும் பாராளுமன்றுக்கு தெரிவான சுமந்திரன் இரு தீர்வை அற்ற வாகனங்களை பெற்றுள்ளார். இருமுறையும் அவர் பெற்றுக்கொண்ட தீர்வை விலக்கானது அறுநூற்றி அறுபது லட்சங்கள் (66 000 000 ரூபாய்கள்) ஆகும்.

120 மாதங்களுக்காக ஆறுகோடியே அறுபது லட்சங்களை மொத்தமாக பெற்றுக்கொண்டுள்ள சுமந்திரன் எவ்வாறு தனது வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது என்று கூறமுடியும்? அதாவது மாதம் ஒன்றுக்கு வரிவிலக்கினால் மாத்திரம் ஐந்து லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய்கள் வருமானமாக ஈட்டிவரும் நிலையிலேயே சுமந்திரன் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேற்படி வருமானத்திற்கு மேலதிகமாக வாகனத்திற்கான எரிபொருள் மற்றும் சாரதிகளுக்கான ஊதியம், பாராளுமன்ற அமர்வுகளுக்கான விசேட கொடுப்பனவு, காரியாலய நிர்வாகச் செலவு, அதன் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் என ஏகப்பட்ட வருமானத்தை பெற்றுக்கொள்ளும் ஒரு நபரால் தனது வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூறுவது எந்த வகையில் ஏற்புடையதாகும் என்ற கேள்வியை இலங்கைநெட் எழுப்புகின்றது.

Read more...

ஆக்கிரமிப்புகாரர்களான பிரித்தானியர் எமது பெண்களை கற்பழித்தனர். ஐ.நா வில் போட்டுடைத்தார் சரத் வீரசேகர.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வுகளில் கலந்து கொண்டு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று சார்பாக கருத்துரைத்த ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பிரித்தானியர் 7 வீத சிங்கள சனத்தொகையை கொன்றொழித்து இலங்கை பெண்களை கற்பழித்தாக குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில் :

பிரித்தானியா கொண்டுவந்துள்ள இலங்கைக்கெதிரான தீர்மானத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் நிசாந்த த சில்வா தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது, அவர் இடமாற்றம் செய்யப்பட்டது ஒரு கொலைக்குற்றத்துடன் சம்பந்தப்பட்டிருக்கின்றார் என்பதற்காகவே.

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்ட எமது படையினரை போர்க்குற்றவாளிகள் எனும் பிரித்தானியா மறுபுறத்தில் பயங்கரவாத இயக்கத்திற்காக பெண்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்கள் கழுத்துகளில் சயனைட் வில்லைகளை தொங்கவிட்ட அடல் பாலசிங்த்தினை காப்பாற்றி வருகின்றார்கள். இதிலிருந்து பிரித்தானியாவின் இரட்டை முகம் வெளிப்படுகின்றது.

பிரித்தானியாவிற்கு எமது நாடு தொடர்பாக பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. அவர்கள் எங்களை ஆக்கிரமித்து எமது சுதந்திரத்திற்காக போராடிய எங்கள் மூதாதையர்கள் ஈன இரக்கமின்றி கொன்றொழித்தவர்கள். 1818 இல் றொபர்ட் பிறவுன் தலைமையில் எமது இளைஞர்களை கொன்றொழித்துடன் சிங்கள யுவதிகளை கற்பழித்து அவர்களின் வாழ்வினை அழித்தொழித்தார்கள்.

இலங்கையில் 7 விகிதமான சிங்கள மக்கள் பிரித்தானியரால் கொன்றொழிக்கப்பட்டதாக டொக்டர் ஜோன் டேவிட் அவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கள மக்கள் தூக்கிலிடப்படுவதை காலை உணவை உண்டுகொண்டு ரசித்ததாக இழிபுகழ் பெற்றவர்தான் லெப்டினன் மக்ரைன்.

எனவே பிரித்தானியா எமக்கு பொறுப்புக்கூறல் தொடர்பாக கற்றுக்கொடுப்பதற்கு முன்னர் எங்கள் மீது மேற்கொண்ட அட்டூழியங்களுக்காக பகிரங்க மன்னிப்புகோருவதுடன் எம்மிடமிருந்து கொள்ளையடித்துச் சென்ற பெறுமதிப்பு மிக்க சொத்துக்களை மீளளிக்கவேண்டும்.

பிரித்தானியாவால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த தீர்மானத்தை எமது தலைவர்கள் ஆமோதிக்கலாம் ஆனால் நிச்சமாக நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

Read more...

என்னை விட கோத்தபாயவே பொருத்தமானவர். பசில் ராஜபக்ச

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராவதற்கு தன்னை விட கோத்தபாய ராஜபச்சவே சிறப்பானவர் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

லங்காதீப பத்திரிகைக்கு வழங்கியுள்ள நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் :

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சர்கள் ஒருவர் போட்டியிடுவதாக இருந்தால் கோத்தபாய ராஜபக்சவினை களமிறக்குவதற்கு தமது குடும்பம் முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் பொதுஜன பெரமுன வின் பங்காளிக்கட்சிகளின் உடன்பாடு அதற்கு தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

150 கோடி முஸ்லிம்கள் சார்பாக நியுசிலாந்து பிரதமருக்கு நன்றி தெரிவிக்கின்றார் டுபாய் அரசின் துணைத் தலைவர்.

நியுசிலாந்து பள்ளிவாயல்களில் மேற்கொள்ளப்பட்ட இனவெறித்தாக்குதலின் பின்னர் அந்நாட்டின் பிரதம மந்திரி செயற்பட்ட விதம் தொடர்பாக பாராட்டியுள்ள டுபாய் அரசின் துணைத்தலைவர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தௌம், 1.5 பில்லியன் முஸ்லிம்களின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்வதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் பிரதமர் வழங்கிய ஆதரவை கௌரவிக்கும் விதமாக டுபாயில் உள்ள மிகப்பெரிய கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் அவருடைய படம் ஒளிபரப்பப்பட்டது .

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரென்டன் டார்ரன்ட் என்பவர், கடந்த வெள்ளிக்கிழமை, கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள 2 பள்ளிவாசல்கள்களுக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நியூஸிலாந்திலும், வெளிநாடுகளிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மக்கள் வைத்துள்ள தாக்குதல் துப்பாக்கிகள், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தானியங்கி ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றுக்கு நியூஸிலாந்து அரசு தடை விதித்துள்ளது. மேலும் முஸ்லிம்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை பிரதமர் ஜெசிந்தா தெரிவித்து மக்களையும் சந்தித்திருந்தார்.

இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கு சமூக வலைதளத்தின் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு ட்விட்டர் கணக்கில், துப்பாக்கியுடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டு, 'அடுத்தது நீதான்' என நியூசிலாந்து பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனை பார்த்த பொதுமக்கள் பலரும் பொலிஸார் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து அந்த கணக்கை இடைநிறுத்தம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து செய்திவெளியிட்டுள்ள NZ Herald ஊடகம், முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களையும் தீவிர வலதுசாரி கருத்துக்களையும் வெள்ளையின வெறிபிடித்த வசனங்களும் அந்த ட்விட்டர் கணக்கில் அடுத்தடுத்து இடம்பெற்றன.

சுமார் இரண்டு நாட்களாக இந்த அச்சுறுத்தல் அந்த கணக்கில் காணப்பட்டதாகவும், பொதுமக்கள் பலரும் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து, கணக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் ஊடகம் ஒன்றிற்கு கருத்துரைத்த கொலையாளியின் தாயார் அவனுக்கு மரணதண்டனை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

பள்ளிவாயலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு கானொலியை காண்ப்பித்தபோது, அதை தன்னால் பார்க்க முடியாது என்று அழுத அவர், மற்றவர்களின் உயிரை எடுத்த டார்டனுக்கும் அதே தண்டனைதான் பொருத்தமானது என்றார்.

Read more...

பிரபாகரனை இரண்டாக பிரித்ததுபோல் தேவையானால் உன்னையும் நாலாக பிரிக்கலாம். சிவாஜிலிங்கத்திற்கு பதில்.

ஐக்கிய நாடுகள் சபையின் பக்கவறை நிகழ்வுகளில் கலந்து கொண்ட சிவாஜிலிங்கம் அந்நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்த பெரும்பாண்மை இனத்தவர்களுடன் வாதங்களில் ஈடுபட்டார். அவ்வாதங்களின்போது உங்களது நோக்கம் இந்நாட்டினை இரண்டாக பிரிப்பதா என அங்கு கலந்து கொண்டிருந்தோர் கேட்டனர். அதற்கு பதிலளித்த சிவாஜிலிங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் நாட்டினை இரண்டாக அல்ல நான்காக பிரிப்போம் என்றார்.

சிவாஜிலிங்கத்தின் மேற்படி கருத்தானது சிங்கள இனவாதிகளுக்கு மீண்டும் தீனியாக அமைந்துள்ளது. அதன்பிரகாரம் „எமது இளைஞர்கள் பிரபாவை இரண்டாக பிளந்தார்கள், உனக்கு நாலு வேண்டும் என்றால் அதையும் செய்து தருகின்றோம்' என்ற வாசகத்துடன் பிரபாகரன் கொத்தி பிரிக்கப்பட்டுள்ள படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வலம்வருகின்றது.



சிவாஜிலிங்கம் சிங்கள இனவாதிகள் தொடர்ந்தும் சிங்கள மக்களை ஏமாற்றுவதற்கு ஏதுவான கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றார். இச்செயற்பாட்டுக்காக சிவாஜிலிங்கத்திற்கு இனவாதிகளால் பணம் வழங்கப்பட்டு வருவதாகவும் அறியக்கிடைக்கின்றது.

தமிழ் மக்கள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை என்றும் அவர்கள் இந்நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்தினையே கொண்டுள்ளார்கள் என்றும் தமது மக்களை ஏமாற்றி வாக்குசேகரிக்கும் தரப்பினருக்கு வெளிப்படையாக சிவாஜிலிங்கம் சிறிதரன் விக்னேஸ்வரன் போன்றோன் தொடர்ந்தும் உதவி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

சர்வதேச நீதிமன்றுக்கு இடமில்லை. ஜெனீவாவில் இலங்கையில் சுயாதீனத்தை உறுதிபடுத்தியுள்ளோம். ரணில்

இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான எந்தவொரு வெளிநாட்டு நீதி பொறிமுறைக்கும் நாம் இடமளியோம் என்றும் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற பொறிமுறையை ஜெனீவா தொடரில் நிராகரித்ததன் மூலம் இலங்கையின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெருமிதப்பட்டுள்ளார்.

இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் 67வது நினைவு அஞ்சலிக் கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (22) இடம்பெற்றது. இதில் உரையாற்றும்போதே, பிரதமர் இந்த கருத்தை தெரிவித்தார்.

'தேசபிதா டி.எஸ் சேனநாயக்க கொள்கை வழியில்தான் நாம் பயணிக்கிறோம் என்பது நேற்று கூட (நேற்று முன்தினம்) உறுதிப்படுத்தப்பட்டது. ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில், கலப்பு நீதிபதிகளையும் உள்ளடக்கிய பொறிமுறை அவசியம் என, ஆணையாளர் வலியுறுத்தியிருந்தார். இலங்கை ஜனநாயக நாடு, சுயாதீன நீதிக்கட்டமைப்பு உள்ளதென தெரிவித்து, வெளிவிவகார அமைச்சர் அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகமொன்றை இலங்கையில் அமைக்க வேண்டியதில்லை. மனித உரிமை ஆணையாளர் எந்த நேரத்திலும் இலங்கைக்கு வரலாம் என்று, அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். இதன்மூலம் இலங்கையின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தினரை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல இடமளிக்கப்படாது. எவராவது தவறிழைத்தது உறுதிசெய்யப்பட்டால், உள்நாட்டிலேயே வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம். எமது அரசு படையினரை தண்டிப்பதாக சிலர் சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. ஐ.நா அமைதிப்படைக்கே நாம் படையினரை அனுப்பியுள்ளோம்' என்றார்.

Read more...

ரஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடியாது. தி.மு.க அறிக்கையை குப்பையில் போடுங்கள். சுப்பிரமணியன் சுவாமி

பாரத பிரதர் ரஜீவ் காந்தியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை எக்காரணம் கொண்டும் விடுதலை செய்ய முடியாது என்றும் இது தொடர்பில் திராவிட முன்னேற்றக் கழகம் விடுத்துள்ள அறிக்கையை குப்பைக் கூடைக்கு வீசுமாறும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாநில அந்தஸ்தில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவரான தமிழிசை சௌவுந்திரராஜனுக்கு டில்லியின் கொள்கைகள் தெரியாது.

இதுகுறித்து டில்லிதான் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். ஏழு பேர் விடுதலைக்கு டில்லி இணங்காது எனத் தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி, அவர்களின் விடுதலை சாத்தியமே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Read more...

Friday, March 22, 2019

ஊழல் மோசடி பிரிவில் றிசார்ட் க்கு எதிராக முறைப்பாடு. முள்ளிக்குளத்தில் 75 ஏக்கர்

வர்த்தக வாணிப அமைச்சர் றிசார்ட் பதுயுத்தீனது சொத்துவிபரங்கள் தொடர்பாக விசாரணை செய்யுமாறு ஊழல் மோசடி பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வடக்கின் வசந்தம் என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்போது அவர் முறையற்ற விதத்தில் பணம் சம்பாதித்துள்ளாரா என்ற விடயத்தை கண்டறியுமாறு முறையிடப்பட்டுள்ளது.

அரச சொத்துக்களை மோசடி செய்தல் என்ற விடயத்தின் கீழே மேற்படி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம் றிசார்ட் வில்பத்து பிரதேசத்தில் காடுகளை அழித்து இயற்கைக்கு சேதம் ஏற்படுத்தியதாக உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை யாவரும் அறிந்தது.

இவ்வாறான நிலையில் முள்ளிக்குளம் காட்டுப்பகுதியில் வர்த்தக மற்றும் தொழிற்சாலைகள் வலையம் ஒன்றை அமைப்பதற்கு றிசார்ட் 75 ஏக்கர்களை அரசிடம் வேண்டியுள்ளதாக அறிய முடிகின்றது. இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் உள்ளுர் வட்டாரங்களில் அறியகூடியதாகவுள்ளதுடன் இவ்வனுமதிக்கு எதிராக இயற்கையை பாதுகாக்கும் அமைப்புக்கள் பல கண்டனம் வெளியிட்டுள்ளது.

நாட்டில் வர்த்தக வலையத்திற்கு பொருத்தமான இடங்கள் பலவுள்ளபோதும், றிசார் காடுகளினுள் நுழைவது அப்பிரதேசங்களில் குடியேற்றங்களை மேற்கொள்வதற்காக என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Read more...

இந்நாட்டின் நீதித்துறையின் சீத்துவத்தை போட்டுடைக்கும் நாகானந்த கொடித்துவக்கு.

இலங்கையிலுள்ள சட்டத்தரணிகள் தங்களிடம் சேவை நாடிவரும் வாடிக்கையாளர்களான பெண்களிடம் பணம் இல்லாதபோது அவர்களது காதுகளில் இருக்கக்கூடிய தோடுகளையும் கழுத்திலிருக்கக்கூடிய தங்க சங்கிலிகளை பிடிங்கி எடுக்கும் கீழ்தரமான நிலைக்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் சேவை நாடிவரும் ஆண்கள் விளக்க மறியலுக்கு செல்லும்போது அவர்களது மனைவி மாருடன் சட்டவிரோதமாக பலாத்கார பாலியல் உறவு கொள்வதாகவும் அவர் சாடுகின்றார்.

சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு இந்நாட்டில் இடம்பெறும் பல்வேறுபட்ட மோசடிகளுக்கு எதிராக தனி மனிதனாக போராடி வருகின்றார். இதன்காரணமாக அவர் தொடர்ந்தும் சட்டத்தரணியாக செயற்பட முடியாது என உச்ச நீதிமன்றினால் மூன்று வருடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது யாவரும் அறிந்தது.

Read more...

ஜேவிபி – ஐதேக சந்திப்பு! ஐ.தே.கட்சி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஆதரவாம்.

மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்குமிடையே இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. ஜேவிபி யினரால் முன்மொழியப்பட்டுள்ள 20 வது அரசியல் யாப்பு திருத்தத்தினூடாக நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவினை நாடியே குறித்த சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதன்போது ஐதேக நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பதற்கு கொள்கை ரீதியில் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தமது ஐக்கிய தேசிய முன்னணி என்ற அக்கட்சியின் கூட்டணியுடன் இது தொடர்பில் பேசவேண்டும் என்று தெரிவித்துள்ளது. குறித்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை யாவரும் அறிந்தது.

Read more...

கப்டன் அனில் போவத்தை தலைமையில் இலங்கை போர்க்- கப்பலொன்று 180 கடற்படையினருடன் மலேசியா நோக்கி பயணம்.

மலேசியாவின் லங்காவி என்ற தீவில் நடைபெறவுள்ள அனைத்துலக கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி (லிமா) – 2019 சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது. சர்வதேச நாடுகளுக்கிடையிலான உறவினை பலப்படுத்தும் நோக்கில் குறித்த கண்காட்சியானது இரு வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெற்று வருகின்றது.

இதில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா கடற்படையின் எஸ்எல்என்எஸ் சாகர என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை திருகோணமலைத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

கப்டன் அனில் போவத்தை தலைமையில் 180 கடற்படையினர் இந்த போர்க்கப்பலில்மலேசியா சென்றுள்ளனர்.

லிமா-2019 பாதுகாப்பு கண்காட்சியில் உலகின் பல்வேறு நாடுகளின் கடற்படைக் கப்பல்கள், விமானங்கள் பங்கேற்கின்றன.

இந்தக் கண்காட்சி எதிர்வரும் மார்ச் 26ஆம் நாள் தொடக்கம், 30ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.






Read more...

அர்ஜூன மகேந்திரன் விவகாரத்தில் சிங்கப்பூ ஊடகச் செய்தி பொய்யானதாம். ஜனாதிபதி ஊடக பிரிவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கபூர் பிரதமருடன் பிரத்தியேகமாக அர்ஜூன மகேந்திரன் தொடர்பில் பேசியிருந்தும் அந்நாடு அவரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வில்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சிங்கப்பூர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகியிருந்த அறிக்கை ஒன்றினை சுட்டிக்காட்டிய இலங்கை ஊடகங்கள் அரசாங்கத்தினால் முறையான வேண்கோள் விடுக்கப்படவில்லை என குற்றஞ் சுமத்தியிருந்தது.

இச்செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அப்பிரிவு விடுத்துள்ள செய்தியில் :

சிங்கப்பூர் நாட்டின் நாடு கடத்தல் சட்டத்திற்கமைவாக யாரேனும் ஒரு நபரை அந்நாட்டிலிருந்து நாடு கடத்துமாறு கோருவதற்கு அடிப்படையாக அமையும் ஆவணங்கள் எவையும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என அப்பத்திரிகை செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் அத்தகைய கூற்றொன்றினை வெளியிட்டிருப்பது அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்பான சிங்கப்பூரில் வசிப்பதாக கூறப்படும் அர்ஜூன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு சிங்கப்பூர் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து, அந்நாட்டின் பிரதமர் லீ ஷியென் லுங் அவர்களுக்கு விடுத்த உத்தியோகபூர்வ பிரகடனத்தின் அடிப்படையிலேயே ஆகும். எவ்வாறாயினும் இதுவரையில் அவ்விடயம் தொடர்பாக எந்தவித உத்தியோகபூர்வ அறிக்கையும் சிங்கப்பூர் அரசாங்கத்தினால் இலங்கை அரசாங்கத்தின் உரிய அதிகாரிகளுக்கு விடுக்கப்படவில்லை.

அர்ஜூன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கத்தினால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் ஊடாக இராஜதந்திர மட்டத்திலான உத்தியோகபூர்வ வேண்டுகோள் 2018 மே 28 ஆம் திகதி விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவ்வேண்டுகோள் தற்போது சிங்கப்பூர் சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உரிய துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அமுலில் இருப்பது அந்நாட்டின் ஒப்படைத்தல் சட்டமாகும். அச்சட்டத்தின் 2வது அத்தியாயத்திற்கு அமைவாக 18 வது குற்றத்திற்கு சமமான குற்றமொன்றினை அர்ஜூன் மகேந்திரன் இழைத்திருப்பதாக கோட்டை நீதவானினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட 8266ஃ2018 டீ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு 2018.04.19 ஆம் திகதி சர்வதேச பொலிஸினால் சிகப்பு பிடியாணை விடுக்கப்பட்டுள்ளதோடு, குறித்த சிகப்பு பிடியாணையும் மேற்குறித்த சிங்கப்பூர் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட அர்ஜூன் மகேந்திரனை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கான வேண்டுகோளுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் சிங்கப்பூருக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போதும் அர்ஜூன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு சிங்கப்பூர் பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.

அதற்கமைய அர்ஜூன் மகேந்திரனை ஒப்படைப்பதற்கு தேவையான பூரண தகவல்கள் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்கனவே சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் அடிப்படையில் சிங்கப்பூர் அரசாங்க அதிகாரிகளின் ஊடாக அர்ஜூன் மகேந்திரனுக்கு அழைப்பானை விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜூன் மகேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மேலும் தெளிவுபடுத்துமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரால் இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக இலங்கை சட்டமா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அண்மையில் கிடைத்த அந்த கடிதம் தொடர்பான விடயங்களை சிங்கப்பூருக்கு அனுப்பி வைப்பதற்காக இலங்கையின் சட்டமா அதிபர் தற்போது முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். மேற்குறித்த சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக கூறப்படும் கூற்றினை அடிப்படையாகக் கொண்டு அந்நாட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த செய்திகளை சுட்டிக்காட்டி இலங்கை ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த செய்திகளை ஒருபோதும் சிங்கப்பூர் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையாக ஏற்றுக்கொள்ள முடியாதென்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

Read more...

Thursday, March 21, 2019

ஒரு ஆவணத்தை தயாரிக்கக்கூட, இந்த அரசாங்கத்திற்கு திறன் இல்லை - ஜே.வி.பி

மத்திய வங்கியில் இடம்பெற்ற முறி மோசடிகளுடன் தொடர்புபட்ட அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான முன்னெடுப்புக்கள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாக பல விமர்சனங்கள் வெளிவருகின்றன.

இந்த நிலையில் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அனுப்பி வைக்க சிங்கபூர் பிரதமர் ஒத்துழைப்பு வழங்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். எனினும் இலங்கை, தமது நாட்டு சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக எந்தவித ஆவணங்களையும் இதுவரை முன்வைக்கவில்லை என, சிங்கப்பூர் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனவே ஒரு ஆவணத்தை தயாரிப்பதற்கு கூட, இலங்கை அரசாங்கத்திற்கு திறன் இல்லையா? என, மக்கள் விடுதலை முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது. அந்த முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய தினம் கூடிய பாராளுமன்ற அமர்வில் ஆரம்பக் கைத்தொழில், சமூக வலுவூட்டல் அமைச்சு, பொது வழங்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு, விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

Read more...

காணி சுவீகரிப்பு நடவடிக்கை, தற்போது வடக்கில் கைவிடப்பட்டுள்ளது - தமிழ் தேசிய கூட்டமைப்பு

தற்போது வலிகாமம் வடக்கில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து, இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகியோர் தம்மிடம் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.

வலிகாமம் - வடக்கு கடற்படை முகாமுக்காக சுமார் 252 ஏக்கர் காணியை சுவீகரிக்க தீர்மானிக்கப்பட்டதுடன், அதற்கான நில அளவீடுகள் நாளை முன்னெடுக்கப்படவிருந்தன.

இந்த காணிப்பரப்பில், பாரிய கடற்படை முகாமை அமைப்பதற்காக வலிகாமம் வடக்கை சுற்றியுள்ள சில பகுதிகளையும் சுவீகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக குறித்த பகுதிகள், அடுத்து வரும் நாட்களில் நில அளவீடு செய்யப்படும் என, நில அளவைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

எனினும் நாளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த சுவீகரிப்புப் பணிகள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய இடைநிறுத்தப்பட்டுள்ளன என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

Read more...

கையூட்டல் பெற்றுக்கொண்ட, களுத்துறை நகர சபை அதிகாரி கைது

கையூட்டல் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், களுத்துறை நகர சபையில் கடமையாற்றி வந்த, கடமை நேர அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி, களுத்துறை நகர சபையின் அனைத்து வாகனங்களுக்குமான காப்புறுதியை பெற்றுக்கொள்வதற்கென, தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றிடம் குறித்த நகரசபை அதிகாரி 15 ஆயிரம் ரூபாவை கையூட்டலாக பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதனை அடுத்து குறித்த அதிகாரிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைகள், இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. இதன்போது கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி விக்கும் களு ஆராய்ச்சி, நகர சபை அதிகாரி கையூட்டல் பெற்றுக்கொண்டமை உறுதியானதுடன், அவருக்கு நான்கு வருடகால கடூழிய சிறைத்தண்டனை வழங்குவதாக உத்தரவு பிறப்பித்தார்.

Read more...

இது நாட்டையும் விற்பனை செய்யும் நிலை - மஹிந்த ராஜபக்ஸ

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, தங்காலை பிரதேச சபையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு, தற்போதைய அரசாங்கம் தொடர்பில் தனது விசனத்தை தெரிவித்துள்ளார். அதில், துறைமுகம் விற்பனை செய்யப்பட்டது. நாங்கள் கடன் வாங்கினோம். கடன் அதிகம் என்றனர். அதனை விற்பனை செய்வதாக இருந்தால் கடனை செலுத்துங்கள். சீனாவுக்கு கடனை செலுத்துங்கள். அவ்வாறு செய்யவில்லை. இந்தியாவிற்கு விமான நிலையத்தை விற்றனர். துறைமுகம் போன்றில்லை, வானத்தையும் அவர்களுக்கு விற்பனை செய்ய வேண்டிவரும். இது நாட்டையும் விற்பனை செய்யும் நிலை என்று கூறினார்.

மேலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை தான் அமைக்காவிடின் மக்கள் இருளில் தான் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.


Read more...

மத்திய வங்கியின் தடயவியல் கணக்காய்வு அடுத்த மாதம் ஆரம்பம்

மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தடயவியல் கணக்காய்வை எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அடுத்த வாரமளவில் தடயவியல் கணக்காய்வை நடாத்தும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என, இலங்கை மத்திய வங்கியின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முறிகள் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய ஊழியர் சேமலாப நிதியத்தின் முதலீடு குறித்து, 5 தடயவியல் கணக்காய்வுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மத்திய வங்கியின் தடயவியல் கணக்காய்விற்கான கொள்கைவகுப்பு குழுவின் பரிந்துரைக்கு அமைய, இந்தியாவிலுள்ள M.S.B.D.O – INDIA மற்றும் M.S.K.P.M.G. – SRILANKA ஆகிய இரு நிறுவனங்களிடம் இந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முறிகள் மோசடி தொடர்பில் ஆராய்வதற்கு 2017 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. முறிகல் கொடுக்கல் வாங்கலில் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்துடன் முன்னெடுக்கப்பட்ட அனைத்து கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கட்டாயமாக முன்னெடுக்கவேண்டியுள்ள ஆறாவது தடயவியல் கணக்காய்வு தொடர்பில், அமைச்சரவையின் அனுமதியைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Read more...

''எனது சிறப்புகள் காரணமாகவே மக்கள் என்னை கோருகிறார்கள்..'' - ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவது தொடர்பில் கருத்து வெளியிடுள்ளார். நாராஹேன்பிட்டியிலுள்ள விகாரைக்குச் சென்ற அவரிடம் ஜனாதிபதி தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த கோட்டாபய ராஜபக்ஸ, பொது ஜன பெரமுனவின் அரசியலை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் கூறினார்.

சிறுபான்மை மக்களின் ஆதரவும் கட்டாயமாக தனக்கு கிடைக்கும் என கோடாபய ராஜபக்ஸ நம்பிக்கை வெளியிட்டார். தன்னிடமுள்ள சிறப்புகள் காரணமாகவே மக்கள் தன்னை கோருவதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், யுத்தத்திற்கு தலைமைத்துவம் வழங்கியதை விட யுத்தத்திற்கு பின்னர் வழங்கிய தலைமைத்துவத்தை மக்கள் பெரிதும் வரவேற்பதாக கூறினார். முக்கியமாக வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு நகரை ஆசியாவிலேயே துரிதமாக அபிவிருத்தி அடைந்துவரும் நகராக மாற்றுவதற்கு செயற்பட்டதன் மூலம் மக்கள் தனது செயலாற்றலை புரிந்துகொண்டதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார். மேலும், இராணுவத்தினரின் சேவை தொடர்பிலான உரிய புரிந்துணர்வு சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச்செல்லப்படாமை துரதிர்ஷ்டம் எனவும் அவர் கவலை வெளியிட்டார்.

Read more...

தலைமன்னார் கடல் பகுதியில் இருவர் 912kg பீடி சுற்றும் இலைகளுடன் கைது

தலைமன்னார் கடல் பகுதியில் ஒரு தொகை பீடி இலைகளுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் வௌிச்சவீட்டிற்கு, 5 கடல்மைல் தொலைவில் 912 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் குறித்த இருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் 32 மற்றும் 38 வயதான மன்னார் – பேசாலை பகுதியை சேர்ந்தவர்களை தாம் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. 27 மூடைகளில் பொதியிடப்பட்டு, டிங்கி படகொன்றில் இவை கொண்டுவரப்பட்டபோதே கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பீடி சுற்றும் இலைகள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது. இதனையடுத்து, சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட பீடி சுற்றும் இலைகளையும் யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read more...

இரண்டு கட்சிகளுக்கிடையிலான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையில் கூட்டணி அமைப்பது தொடர்பான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெற உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான முதலாவது பேச்சுவார்த்தை கடந்த 14ம் திகதி இடம்பெற்றது. இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரும் கலந்துரையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் நியமனம் - திங்கள் முதல் விசாரணைகள் ஆரம்பம்

முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சாட்சிப் பதிவுகளுக்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சட்ட வல்லுநர்களைக் கொண்ட இந்தக் குழுவின் தலைவராக சிரேஷட் ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார். அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழலை மோசடிகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு ஜனாதிபதி ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, சட்டமா அதிபரால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 6 பேரை விசாரணைகளுக்காக நியமிக்குமாறும் பொலிஸ்மா அதிபரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு போதிய அதிகாரிகள் இன்மையால் மேலதிக பொலீசாரின் தேவைப்பாடு நிலவுகின்றது. இந்தநிலையில், ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஶ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளரினால் இழைக்கப்பட்ட முறைகேடு தொடர்பில் கிடைத்த முறைப்பாடு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஆணைக்குழுவில் 1,142 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் 48 முறைபாடுகள் பொலிஸ் விசேட பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிகளுக்குள் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், அரச வளங்கள் மற்றும் சலுகைகளை தவறாக பயன்படுத்துதல், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் குறித்த ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

சுகாதார அமைச்சின் கீழுள்ள நிறுவனம், பெற்றோலிய கூட்டுத்தாபனம், ஶ்ரீலங்கன் விமான நிறுவனம், விவசாய அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

...............................

Read more...

Wednesday, March 20, 2019

சிவனொளிபாத மலையின் பெயர்ப்பலகை சிலரால் சேதம்

சிவனொளிபாத அடிவாரத்தில் மஸ்கெலியா பிரதேச சபையினால் வைக்கப்பட்ட புதிய பெயர் பலகையின் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள்,இன்று இனந்தெரியாத சிலரால் சேதமாக்கப்பட்டமை தொடர்பில், மஸ்கெலியா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். சிவனொளிபாத மலை என்று எழுதப்பட்டிருந்த குறித்த பெயர் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்துக்கள் ஸ்ப்ரே செய்து மறைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து மஸ்கெலியா காவல்த்துறை அதிகாரி டிரோன் ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் அந்தப் பகுதிக்கு சென்று, ஆய்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தை அடுத்து அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து, பெயர் பலகையை சீரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக சிவனொளிபாதமலை என்றிருந்த பெயர் ஸ்ரீபாத என்று மாற்றப்பட்டது. எனினும் மஸ்கெலியா பிரதேச சபையின் தீர்மானத்திற்கு அமைய மீண்டும் சிவனொளிபாதமலை என எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. இந்த நிலையில், குறித்த பெயர்ப் பலகையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

Read more...

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில், இலங்கைக்கு 130 ஆவது இடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 130 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தமாக 156 நாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

ஒரு நாட்டில் வாழும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைத் தரம், ஆயுட்காலம், சமூக ஒத்துழைப்பு மற்றும் இலஞ்ச ஊழல் ஆகிய விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட பட்டியலில்,
முதலாவது இடத்தை பின்லாந்து பெற்றுக் கொண்டுள்ளது. இந்நாடு இப்பட்டியலில் இரண்டாவது தடவையாக முதலிடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா இந்தப் பட்டியலில் பின்னடைவை சந்தித்து வருகின்றது. ஆரம்பத்தில் 14 ஆவது இடத்தில் இருந்த அமெரிக்கா, தற்போது 19 ஆவது இடத்திற்கு பின்னோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

யாழில் வாள்வெட்டு தாக்குதல் - ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் - வேம்படி வீதியில் இன்று நண்பகல் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் படுகாயமடைந்த நபர் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கோவில் வீதியைச் சேர்ந்த குணசிங்கம் ரஜீவ்குமார் என்பவரே இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். வாடகை மகிழுந்து சேவையில் .ஈடுபடும் வாகனத்தை மறித்து, சந்தேகத்திற்கு இடமான கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இதன்போது குறித்த வாள்வெட்டுக் கும்பல், மகிழுந்தில் பொருத்தப்பட்டிருந்த கமராவையும் அபகரித்துக் கொண்டு தப்பிச்ச சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை மேற்கொண்ட கும்பல், 5 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்து, மகிழுந்தின் சாரதியை வெட்டிக் காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. இந்த தாக்குதல், தனிப்பட்ட முரண்பாடு காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

இந்த அரசாங்கத்தின் வரிகள், எனது எதிர்காலத்தை விட இரண்டு மடங்கு அதிகம் - மஹிந்த ராஜபக்ச

தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது சுமத்தி வரும் வரிகள், தமது எதிர்காலத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தெஹியோவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, இதனை குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கத்தின் நான்கு வருட ஆட்சிக் காலத்தில், நாட்டு மக்களுக்கான பயனுள்ள உதவிகள், வேலைத்திட்டங்கள் என்பன இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் பொருளாதாரம் வீழ்ச்சி பாதையில் பயணிக்கின்றது. .

இந்த நிலையில், அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து, சரியான முறையில் அணுகி, மக்களை காப்பாற்ற அடுத்து நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் அர்ப்பணித்து செயல்பட வேண்டும்.

அதற்கு, எமது தரப்பில் இருந்து, பலம் பொருந்திய வேட்பாளர் ஒருவரே முன்னிறுத்தப்பட்டுவார் என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

Read more...

பிணை முறி விவகாரம் குறித்து ஜனாதிபதி விசேட பணிப்புரை

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிண முறி மோசடிகள் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், அது குறித்த அறிக்கையை, தமக்கு விரைவாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பிணமுறி விவகாரம் குறித்த தடயவியல் கணக்காய்வு அறிக்கைகளை பெற்று அது குறித்த விசாரணைகளை மேலும் துரிதப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் இது குறித்த விசாரணைகளுக்காக சர்வதேச நிறுவனம் ஒன்றும் இலங்கை அரசாங்கத்தின் விசாரணைகளுக்கு உதவியளிக்கவுள்ளதாக தெரியவருகின்றது. எனவே இது குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் நீதியான விசாரணை அறிக்கையை விரைவில் கையளிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

இந்த விசாரணைகளுக்கு மத்திய வங்கியும் தமது ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

யுத்த குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயின், அது குறித்த பதிலை வழங்க தயார் - சரத் பொன்சேகா

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த விதிமுறை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால், அதற்கு பதில் வழங்க தாம் தாயாராக உள்ளதாக, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் யுத்தத்தை அடுத்து உண்டான பிரச்சனைகளை உள்நாட்டு விசாரணைகளினூடாகவே முன்னெடுத்து சிறந்த தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். இலங்கையின் யுத்த செயற்பாடுகளை அப்போதைய ஜனாதிபதியாக செயல்பட்ட மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது தரப்பினர் தமது சொந்த சுய அரசியல் லாபத்திற்காகவே பயன்படுத்திக்கொண்டனர்.

இலங்கைக்கு சர்வதேச நீதிமன்ற விசாரணை தேவையற்ற ஒன்று என கூறிய சரத் பொன்சேகா , குற்றவாளிகள் மீதான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல் விடுத்தார்.

களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், இதனை கூறினார்.

Read more...

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் இழப்பீடுகளை வழங்க வேண்டும் - பாகிஸ்தான் வலியுறுத்தல்

முப்பது வருடகாலமாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தால், பல்லாயிரக்கணக்காக மக்கள் கொன்று குவிக்கப்பட்டதுடன், ஏராளமானவர்கள் அங்கவீனமடைந்தனர்.

அத்துடன் இன்னும் பலர் தமது உறவுகளை தொலைத்ததுடன், காணி, சொத்து உள்ளிட்டவற்றையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த முறையில் இலங்கை அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் என, பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கை குறித்து இன்று தமது உத்தியோகப்பூர்வ அறிக்கையை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பாச்லெட் சபையில் சர்வதேச நாடுகள் குழுமியிருக்க சமர்ப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் பேரவையின் உறுப்பு நாடுகள், குறித்த அறிக்கை தொடர்பில்தமது நிலைப்பாடுகளை முன்வைத்த போதே, பாகிஸ்தான் பிரதிநிதி மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்திற்கு பின்னர் இலங்கை பல காத்திரமான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதை அவதானிக்க முடிக்கின்றது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கு பின்னர் வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் பொறுப்பேற்றக்கப்பட்ட பொதுமக்களின் காணிகள் உரியவர்களுக்கே மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

எனினும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பல பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாதுள்ளன. அவை குறித்து ஆராய்ந்து தீர்வு பெற்றுக் கொடுப்பது முக்கியமானது என, பாகிஸ்தான் பிரதிநிதி கூறினார்.

Read more...

ஆறே நாட்களில் 1321 பேர் கைது - காவல்துறையினர்

கடந்த ஆறு நாட்களாக காவல்துறை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களின் போது, சுமார் 1321 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மா அதிபரின் உத்தரவுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் மது போதையில் வாகனம் செலுத்தியமை, போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்தமை, அதிக வேகத்துடன் வாகனத்தை செலுத்தியமை முதலான குற்றச்சாட்டுக்குக்களின் கீழ் கைது செய்யப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 29 ஆயிரத்து 275 சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.


Read more...

பெலியத்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் காயம்

பெலியத்த பல்லத்தர – மோதரவான பகுதியிலுள்ள வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெலியத்த பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கபில அமரகோன் காயமடைந்துள்ளார். பிரதேச சபையின் உறுப்பினரான கபில அமரகோன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, குறித்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த பிரதேச சபை உறுப்பினர் சிகிச்சைக்காக தங்காலை வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்த துப்பாக்கி பிரயோகம் எதற்காக யாரால் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Read more...

தேர்தல் முறை முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது - எதிர்க்கட்சித் தலைவர்

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் தனது ஆட்சிக்காலத்தை விட இரு மடங்கு வரிச் சுமை சுமத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தெஹியோவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோது அவர் மேற்படி தெரிவித்தார். நடப்பு அரசாங்கத்தினால் சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமையானது, எனது காலத்தையும் விட இரண்டு மடங்காகும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 4 வருடங்கள் கடந்த போதிலும், நாட்டு மக்களுக்கு இதுவரை எதனையும் செய்யவில்லை.

இந்த அரசாங்கம் பழிவாங்கும் செயற்பாடுகளையே அடிப்படையாக கொண்டு செயற்பட்டு வருகின்றது. வாழ்க்கை செலவு நாளாந்தம் அதிகரிக்கின்றது. பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை வரலாற்றில் இவ்வாறு கடன் பெற்றதில்லை. இந்த அரசாங்கம் அதிகூடுதலான கடனை பெற்றுள்ளது.

அத்தோடு தேர்தல் முறை முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், வெற்றிபெறும் வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவோம். அந்த வேட்பாளரை வெற்றிபெறச் செய்யும் பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com