Sunday, March 14, 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 8,9 (கிறேசியன், நாவாந்துறை)

நான் கிடங்கு இருக்கும் பகுதியை நோட்டம் விடுவதையே எனது கடமையாகச் செய்து வந்தேன். குழியில் இருப்பவர்களை காலையில் ஏணிகள் வைத்து வெளியில் வரச் சொல்வார்கள். அவர்கள் வெளியே வரும்போது கையில் சொப்பிங் பை ஒன்றினைக் கொண்டுவருவார்கள். கைகளிலும் கால்களிலும் விலங்குகள் பூட்டப்பட்டிருக்கும்.

அவர்களைப் பார்த்தால் புழுதி படிந்த மேனியுடன் காய்ந்து சாம்பல் படிந்த தலையுடன் நடக்க முடியாமல் மெதுவாக கையில் பையுடன் அசைந்து அசைந்து செல்வார்கள். கையில் கொண்டு வரும் பைகளில் மலமும் சிறுநீரும் இருக்கும். ஒவ்வொருவரும் அதனைக் கொண்டு சென்று மலக்குழியில் வீசவேண்டும், பின்னர் அவர்களும் காலைக் கடனைக் கழிக்கவேண்டும்.

மீண்டும் குழியை நோக்கி நடந்து சென்று ஏணிவழியாக உள்ளே இறங்க வேண்டும். இப்படி குழிகளுக்குள் இருப்பவர்கள் புளொட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், ஈ.பி.ஆர்.எல்.எப். ஐ சேர்ந்தவர்களும்தான் அதிகமாக இருந்தனர்.

முள்ளிக்குளம் முசல்குத்தி என்ற இடத்தில் புளொட் இயக்கத்தினர் முகாம் அமைத்து இருந்ததாகவும், அதனை இலங்கை இராணுவத்தின் துணையுடன் புலி விலங்குகள் தாக்கியதாகவும், அதில் இரு பகுதியினருக்கும் மிகுந்த சேதம் ஏற்பட்டதாகவும், இறுதியில் விலங்குகள் வெற்றிகொண்டதாகவும் அறிந்தேன்.

அப்படி முசல்குத்தி முகாமில் உயிருடன் கைது செய்யப்பட்டவர்களையும், அந்த இயக்கத்துக்கு உதவி செய்த பொதுமக்களையும் பிடித்து வந்து இந்தப் பெருங்குழிகளில் விலங்குகள் இட்டு அடைத்து வைத்திருந்தனர் இந்த விலங்குகள்.

சில முக்கிய உறுப்பினர்களைத் தனிக் குழிகளிலும் ஏனையோரை பொதுவான குழிகளிலும் வைத்திருந்தனர். இரண்டுவேளை உணவு வாழிகளில் கயிற்றைக் கட்டி இறக்குவார்கள். உண்பது, கை கழுவுவது எல்லாம் அந்தக் குழிக்குள்தான். காலை ஒரு வேளைதான் இவர்கள் வெளியே வர முடியும். அதன் பின்னர் ஏணியை எடுத்துச் சென்று விடுவார்கள். 24மணி நேரமும் அவர்கள் அந்தக் குழிக்குள்தான் இருக்க வேண்டும். குழியினுள் எதுவும் கிடையாது. இவர்கள் அனைவருக்கும் நில நிற கால்சட்டை மட்டும்தான் கொடுத்திருந்தனர். இவர்களது விலங்குகளை விலக்கிவிட்டால் கூட இவர்களால் முறையாக நடந்து செல்ல முடியாத அளவு நோய்வாய்ப்பட்டிருந்தனர்.

காலையில் கடன் கழிக்க வரும்போது அவர்களை அருகில் பார்ப்பேன். மனிதன் என்ற அடையாளங்களை இழந்திருந்தனர். அவர்கள் தாக்கப்பட்டு, வதைக்கப்பட்டு, நாட்பட்ட பிணங்கள் போல நடந்து வருவார்கள். மனிதர்கள் விலங்குகளிலும் கேவலமாக நடத்தப்படுகின்றனர் புலி என்ற விலங்குகளால், இந்தப் புலி விலங்குகளை பிற நாடுகளிலும் இந்தியாவிலும் வாழ்த்திப் பாடுகின்றனர். வெளியுலகுக்கு வேங்கைகள், உள்ளுர் மக்களுக்கு கொடிய விலங்குகள்.

இவர்கள் காலைக் கடன் கழித்து மீண்டும் குழிகளுக்குள் இறக்கிய பின்னர் புலி விலங்குகள் தங்களது இயக்கப் பாடல் என்று கூறி சில பாடல்களை பொக்ஸ் வைத்து ஒலிபரப்புச் செய்வார்கள். அவற்றில் ஒரு பாடல் என் நினைவை இன்றுவரை அகலவில்லை. அப்பாடல் பின்வருமாறு:

நடந்து வந்த பாதை தனைத் திரும்பிப் பாரடா நீ நாச வேலை செய்த பின்னர் வருந்துவாயடா அடர்ந்த காற்றில் எரியும் தியாக நெருப்புத்தானடா உன்னை ஆட்டுகின்ற சக்தியோடு எரிக்கும்தானடா

எதிரி காலில் ஏறிநின்று செருப்புமாகினாய் தமிழீழ மண்னை எண்ணை ஊற்றி நெருப்பை மூட்டினாய் கதிரை ஏறும் ஆசை கொண்டு விலையுமாகினாய் புலிவீரர் களத்தில் போகும் போது தலையுமாட்டினாய்….(2) – நடந்துவந்த

தம்பிமாரை கொன்றவர்க்கு வாழ்த்துப் பாடினாய் உன் தங்கை கற்பை தின்றவர்க்கு மாலை சூடினாய் நம்பி இருந்த எங்களுக்கு நஞ்சை ஊட்டினாய், புலி நாளை வரும் அந்த நேரம் கம்பி நீட்டுவாய் -(2) - நடந்து வந்த

இந்தப் பாடலைப் பாடியவர் தேனிசை செல்லப்பா எனக் கூறினர். தமிழகத்தில் பலர் புலிகள் சுரண்டிய பணத்தில் இவர்களும் பக்கவாட்டில் சம்பாதித்தார்கள். சிலர் வாய்கிழியப் பேசிச் சம்பாதித்தனர் ஈழத் தமிழர் பணத்தை.

செல்லப்பா என்ற நபர் தெருக்கூத்துப் பாடல்களைப் பாடித்திரிந்த நபர், சினிமாக்களிலோ அல்லது கச்சேரிகளிலோ தலைகாட்டத் தயுதியில்லாதவர், இன்று பல கோடிகளைக் குவித்து பெருவாழ்வு வாழ்கிறார். அனைத்தும் பிற நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் வழங்கியது. புலி ஏற்பாட்டில் உலகம் சுற்றி சம்பாதித்துள்ள இந்த நபர் தமிழகத்தில் இருக்கும் எங்கள் அகதி இனத்துக்கு அப்படிச் சம்பாதித்தப் பணத்தில் ஒரு ரூபாயைக் கூடக் கொடுக்காத கொடை வள்ளலாவார்.

இந்த நபரது சொந்த ஊர் சொக்கம்பட்டி, இவரது ஊருக்கு அருகில் கடையநல்லூர் என்ற இடத்தில் அகதிகள் முகாம் உண்டு. இவர் ஈழத் தமிழர் பணத்தில் பிளைப்பு நடத்தப் புறப்பட்ட இந்த 25 ஆண்டுகளில் தனது பணத்தில் ஒரு ரூபாயைக் கூட இந்த அகதிகளுக்கு வழங்கியது கிடையாது.

தமிழ் இனத்துக்குள் மோதிக் கொண்டு அழிகின்றனர். பாட்டுப்பாடி அவ்வின அழிப்பை ஊக்குவித்த இந்த மிருகமும் ஓர் கழுதைப் புலிதான்.

“நடந்து வந்த பாதையினைத் திருப்பிப் பாரடா”!

1986ல் ரெலோ இயக்கத்தவர்களை நெருப்பில் போட்டு எரித்துக்கொன்றதையும், துப்பாக்கியால் சுட்டும், கிறனைட்டை அவர்கள் மீது வீசியும் பல நூற்றுக்கணக்கான தமிழீழ விடுதலைப் போராளிகளை படுகொலை செய்து விடுதலைப் போருக்கு களங்கத்தை மட்டுமல்ல தீராத பகையினை ஏற்படுத்திய வரலாற்றை அதாவது நடந்து வந்தவரலாற்றை நீ திரும்பிப் பாரடா என்று நாம்தான் புலி விலங்குகளைப் பார்த்துக் கேட்க வேண்டும்.

ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள், பின்னர் புளொட் தோழர்கள் அதற்கு முன்னர் ஓபராய் தேவன், பின்னர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனது இயக்க அங்கத்தினர் என்று அனைத்து இயக்க இளைஞர்களையும், அவர்களது உறவினர்களையும், உதவி செய்தவர்களையும் வதை செய்து கொன்றவர்கள் மற்றவர்களுக்கு பட்டம் சூட்டி பாடல் பாடுகின்றனர். ஒவ்வொரு முறையும் இப்பாடலைக் கேட்கும் போது செல்லப்பாவின் முகத்தில் காறித் துப்பிக் கொண்டிருந்தேன் மனதுக்குள்.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று கூறுவார்கள். செல்லப்பா கொண்டாடியது மட்டுமல்ல கோடிகளையும் சேர்த்து ஓய்ந்திருக்கிறார். இந்த நாயின் ஊளைக்கு புலி விலங்குகள் அன்று கூத்தாடினர் எங்கள் கண்முன்னே!

“நீ நாச வேலை செய்த பின்னர் வருந்துவாயடா”

நாசவேலைகள் அனைத்தையும் செய்து முடித்தது புலி விலங்குகள் என்பது உலகம் அறிந்ததுதான். ஆனால் “பின்னாளில் வருந்துவாயடா” என்ற தீர்க்க தரிசனம் மிகவும் கச்சிதமாக பொருந்தியது இந்த புலி விலங்குகளுக்குத்தான். வருந்தியது இவர்கள் மட்டுமல்ல, மக்களையும் இழுத்து வந்து வருந்த வைத்தார்கள் முள்ளிவாய்க்காலில்.

நாம் மூவாயிரம் பேர் இவர்களால் துணுக்காயில் வதைக்கப்பட்டோம். நாம் அனைவரும் பல இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால் நாசவேலை செய்த இவர்கள் மொத்தமாகவே வருந்தினார்கள் முல்லைத்தீவில். காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று வானொலி வைத்துக் கதறினார்கள் இவர்களும் இவர்களது புகழ் பாடிகளும். உலகமே மௌனித்து நின்றது இவர்கள் வருந்தும் போது. செல்லப்பாவின் பாட்டு இவர்களது இரக்கமற்ற கொடுஞ்செயலால் முற்றுப்பெற்றது.

தெய்வம் நின்று கொல்லும் என்பது என் கண்முன்னே நடந்தது. ஆயினும் எங்கள் மக்களும் இந்த விலங்குகளிடம் சிக்குண்டு வதைபட்டதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 9)

நாம் சிறைபட்டு இவர்களது சவக்குழிகளுக்குள் இருந்த போது எங்கள் இரத்த உறவுகள் எங்களைப் பார்க்க தினமும் புலி விலங்குகளது அலுவலகங்கள் முன்னால் காத்துக் கிடந்தனர். அங்கு இருந்த மூவாயிரம் பேரில் ஒருவரைக் கூட இந்த விலங்குகள் பார்வையிட அனுமதிக்கவில்லை. அம்மா, அப்பா, சகோதரர்கள், மனைவி, குழந்தைகள் என்று அனைத்து இளைஞர்களுக்கும் இரத்த உறவுகள் இருந்தன. இவர்களது பல அலுவலகங்களுக்கும் நாயாக அலைந்து திரிந்தனர். எங்களை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பது கூட எங்கள் உறவினருக்குத் தெரியாது.

மனித நேயமே அற்ற இந்த விலங்குகளா எங்கள் இனத்துக்கு விடுதலை பெற்று வாழவைக்கப் போகின்றனர்? மனித உரிமைகள் என்றால் என்னவென்றே தெரியாத இந்த மிருகங்கள் தமிழினத்தை வன்னியில் விலங்குகளாக மாற்றிக்கொண்டிருந்தனர்.

“கதிரை ஏறும் ஆசை கொண்டு விலையுமாகினாய்” ஏனைய அனைத்து இயக்கங்களையும் கதிரை ஏறும் ஆசை கொண்டு வதைக்கவில்லை? அழிக்கவில்லை? 1983 முதல் அனைத்து இயக்கங்களும் போர் முனைக்குச் செல்லத்தான் தயாரித்துச் செயல்பட்டன. கதிரை ஆசை யாருக்கும் அப்போது வரவில்லை. கதிரை ஆசை வந்தது புலி விலங்குகளுக்குத்தான். போட்டிக்கு இயக்கங்கள் இருந்தால் தானே கதிரைக்கும் போட்டி வரும். அனைத்து இயக்கங்களையும் அழித்துவிட்டால் எனக்கு மட்டும்தானே கதிரை! மொத்தமாகவே தமிழ் இளைஞர்களையும் தமிழினத் தலைவர்களையும் அழித்த விலங்குகள் கதிரைக்கு ஆசைப்படுவது ஏனைய இயக்கங்கள் என்று கதை சொல்லிப் பாட்டுப்பாடுகின்றனர். என்ன கொடுமை இது! பாவத்தை இரக்கமின்றிச் செய்து கொண்டு பழியைப் பிறர்மீது சுலபமாக விதைத்தனர் பாடல் வழியாக!

“உன் தங்கை கற்பைத் தின்றவர்க்கு மாலை சூட்டினாய்”

எந்த மனிதனாவது தனது தங்கையைக் கற்பழித்தவனுக்கு மாலை சூட்டுவானா? ஐ.பி.கே.எப். கற்பழித்தது, ஏனைய இயக்கங்கள் மாலை சூட்டினர் என்பதுதான் இந்தப் பாடல் வரிகள். “கவிதைக்குப் பொய்யழகு” என்று தமிழகத்தில் ஒருவர் பாடினார். இந்த விலங்கும் பொய்யையே கவிதையாக்கி ஏனைய விலங்குகளிடம் கைத்தட்டல் பெற்றிருப்பார். ஐ.பி.கே.எப். தமிழ் பெண்களைக் கற்பழிப்பதற்காக ஈழத்துக்கு வரவில்லை. மாலை போட்டு வரவேற்றது புலிகள்தான். அமைதியை நிலைநாட்டி தமிழருக்கென்று மாநில அரசொன்றை உருவாக்கி நிர்வாகத்தைத் தமிழரே, தமிழர் பகுதிகளில் நடத்திட ஓர் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்த அமைதிபடை வந்தது. புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது துப்பாக்கியை ஐ.பி.கே.எப். க்கு எதிராக திருப்பினால் ஏனைய இயக்கத்தவர்களும் துப்பாக்கியை அவர்களுக்கு எதிராகத் திருப்ப வேண்டும் என்று எதிர்பார்த்தாரா? எந்த நியாயத்தை வைத்து இந்த விலங்குகள் எதிர்பார்த்தனர்?

கதிரை ஆசைக்காக ரெலோ இயக்க அங்கத்தினரை படுகொலை செய்தீர்கள். எனவே ஏனைய இயக்கத்தினரும் ரெலோ இயக்கத்தினரைக் கொலை செய்ய வேண்டுமா? ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தினரைக் கொன்றார்கள் ஏனையோரும் மதிகெட்டு அப்படிச் செய்ய வேண்டும் என்றா எதிர்பார்த்தனர்?

பிரபாகரன் என்ன நினைக்கிறாறோ அதனைச் செய்ய வேண்டும். இல்லையெனில் அனைவரும் துரோகிகள். பிரபாகரனுக்கோ அல்லது புலிகளுக்கோ முடிசூட்டும் பணிக்காக நாம் விடுதலை கோரவில்லை! தமிழ் இனத்தின் விடுதலைக்காகத்தான் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் திலகமிட்டு அனுப்பினர். அப்படி அனுப்பப்பட்ட பிள்ளைகளை எண்ணை ஊற்றி எரித்துவிட்டு தேவாரம் பாடி மக்களை ஏமாற்றினார்கள் அன்று. தமிழ் இனத்துக்கு எதிரான வன்கொடுமை ஒரு புறம் நடக்க, மறுபுறம் தமிழின உணர்வுப் பிரசாரம் செய்து பணம் பார்த்தார்கள் பிறநாடுகளில்.

ஐ.பி.கே.எப். தமிழர்களைத் தாக்கவுமில்லை, அழிக்கவுமில்லை, எப்போது புலிவிலங்குகள் அவர்கள் மீது தாக்குதல் தொடுத்தார்களோ அப்போதுதான் அவர்கள் திருப்பித் தாக்குவதற்கு ஆரம்பித்தார்கள். புலேந்திரன், குமரப்பா உள்பட 12 புலிகள் இலங்கைக் கடற்பகுதியில் வைத்து சிங்களக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டு இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கை இராணுவம் வடக்கு கிழக்கில் தமிழர்களைக் கைது செய்யக் கூடாது என்று இந்தியாவின் உத்தரவு. கடல் பகுதியில் வைத்து கைது செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என்ற உத்தரவு ஒப்பந்தத்தில் இல்லை. எனவே கடற்படை ஒப்படைத்த நபர்களை விசாரிக்க கொழும்புக்கு கொண்டு செல்லப்போகிறோம் என்று இலங்கை இராணுவம் முயற்சிகள் மேற்கொண்டது. அதை மறுத்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தது.

இந்த வேளையில்தான் புண்ணியவான்களான பாலசிங்கமும், மாத்தையாவும் அந்தக் கைதிகளைச் சந்திப்பதற்கு இந்தியாவிடம் வற்புறுத்தி அனுமதி பெற்று பார்க்கச் சென்றனர். அவர்களுக்கு உண்ண உணவும் கொடுத்துக் கூடவே சைனைட் குப்பிகளையும் கொடுத்து ‘தலைவர் உத்தரவு” சாப்பிட்டுச் செத்துப் போங்கள் என்று ஆசி வழங்கிவிட்டு வந்தனர். அவர்கள் உண்டார்கள், இறந்தார்கள்!

புலிகளது கொள்கைப்படி, படைப்பிரிவுகளிடம் அகப்பட்டுக்கொண்டால் விஷக்குப்பியைக் கடித்துத் தின்று இறந்துவிட வேண்டும். ஆகவே புலேந்திரன் குமரப்பா மற்றும் புலிகளும் கடற்படையிடம் சிக்குண்ட போதே குப்பியைக் கடித்து இறந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை! அப்படியாயின் அவர்கள் வாழவேண்டும் என்று நினைத்துள்ளனர். அவர்களிடமிருந்த குப்பிகளை கடற்படையினர்தான் அகற்றி எடுத்தனர். இவர்கள் இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர்தான் திருமணம் செய்திருந்தனர். அத்திருமணங்களை தாலி எடுத்துக் கொடுத்து வாழ்த்தி நடத்திவைத்தவர் தலைவர் பிரபாகரன்தான். எனவே அவர்கள் தற்கொலை செய்ய விரும்பவில்லை. தங்கள் குடும்பத்தினருடன் வாழ்வதற்கே விரும்பினர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திவைத்த இந்தத் திருமணங்களுக்கு மணப்பெண் வீட்டார் சார்பில் மணப்பெண்களை அழைத்து வந்து மணமேடை ஏற்றியவர்கள் அமைதிப்படையினர்தான் என்றால் நம்பவா போகின்றனர் புலிவிலங்குகள்.

(தொடரும்…)

Read more...

குற்றப்பத்திரிகை : இராணுவ நீதிமன்று இரண்டும் ஜெனரல் பொன்சேகாவால் நிராகரிப்பு.

இராணுவச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீதான விசாரணைகள் எதிவரும் 16, 17 ம் திகதிகளில் இராணுவ நீதிமன்றில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தமக்கு எதிரான குற்றப் பத்திரிகைகளை நிராகரித்துள்ளதாகவும், குறிப்பிட்ட தினங்களில் இராணுவ நீதிமன்றில் ஆஜராக மாட்டார் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இராணுவ நீதிமன்றத்தினால் பொன்சேகாவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப் பத்திரிகையை ஒப்படைக்கும் நடவடிக்கைகள் வெற்றியளிக்கவில்லை. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் பணிப்புரையின் பேரில், பொன்சேகாவிற்கு எதிராக 7 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள மூன்று பேர் அடங்கிய இராணுவ நீதிமன்றமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இராணுவச் சட்டத்தின் அடிப்படையில் இராணுவ அதிகாரி ஒருவரை விசாரணை செய்வதற்கான நீதிமன்றில் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளவரிலும் பார்க்க உயர்ந்த தரத்தில் உள்ளவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படவேண்டும் எனவும் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் மூவரும் ஜெனரல் பொன்சேகாவிலும் பார்க்க இளநிலை அதிகாரிகள் எனக் கூறப்படுவதுடன், அவர்களில் ஒருவர் தற்போதைய இராணுவத் தளபதியின் மைத்துனர் எனவும் முன்னாள் பா.உ அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சுமத்தியுள்ளார்.

பொன்சேகா குற்றப் பத்திரிகையை ஏற்றுக் கொண்டாரா அல்லது நிராகரித்தாரா என்பது குறித்து கருத்து எதனையும் வெளியிட முடியாது என இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம் ஜெனரல் இராணுவ நீதிமன்றை நிராகரித்தாலும் அதிகாரிகள் அவரை மன்றில் அஜர் படுத்துவார்கள் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் இயக்குனர் லக்ஸ்மன் குலுகல்ல தெரிவித்திருந்தார்.

இவருக்கு எதிரான இராணுவ விசாரணை வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கொழும்பு கடற்படை தலைமையகத்தில் நடைபெறவுள்ளது, வரும் செவ்வாய்க்கிழமையன்று இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படும் போது அவரது சார்பாக, பிரபல வழக்கறிஞர்கள் தயா பெரேரா உள்ளிட்டவர்கள் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள குற்றவியல் சட்டத்தரணிகளில் மிகப்பிரபல்லமானவர் தயாபெரேரா என்பதுடன் இராணுவச் சட்டதிட்டங்கள் தொடர்பான விசேட நிபுணர் எனவும் கூறப்படுகின்றது.

குற்றப்பத்திரிகையை நிராகரித்துள்ள ஜெனரல் பொன்சேகா தான் இராணுவச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவன் அல்ல எனவும் கைது சட்டவிரோமானது எனவும் தெரிவித்துள்ளதாக ஜேவிபியின் முன்னாள் பாராளுமன்றக் குழத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதே நேரம் ஜெனரல் மீதான குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதற்கு முன்னாள் பிரத நீதியரசர் தலைமையிலான சட்ட நிபுணர்கள் குழு தயார்படுத்தல்களைச் செய்துவருவதாக ஜெனரலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எது எவ்வாறாயினும் ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டபோது அவர் இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் நாட்டினைக் கைப்பற்ற சதித்திட்டம் தீட்டியிருந்தாகவும், நாட்டின் ஜனாதிபதி உட்பட அவரின் சகோதர்கள் கொல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் மேற்படி குற்றச்சாட்டுக்கள் இல்லை என தெரியவருகின்றது.


Read more...

எதிரணியில் இருந்து விதண்டாவதம் பேசுவதால் எவ்விதபயனுமில்லை என்கின்றார் கனகரட்ணம்.

கேள்வி:- நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணியின் சார்பில் போட்டியிடக் காரணம் என்ன?

பதில்:- மூன்று தசாப்தகால போர்ச்சூழல் ஓய்ந்து, மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடும் இவ்வேளையில் கடந்த காலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டியிருக்கிறது. மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் யுத்தத்தால் இடம்பெயர்ந்து வன்னியில் நிவாரணக் கிராமங்களிலும், முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான உதவிகளை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்தது. போரில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். மக்கள் பிரதிநிதியாக மக்களோடு மக்களாக இருந்த வேளையில் அவர்களின் துயரங்களைப் பகிர்ந்துகொண்டவன். எதிரணி அரசியலில் இருந்து கொண்டு வெறுமனே விதண்டாவாதம் பேசிக் கொண்டிருப்பதில் எதுவிதப் பயனும் ஏற்படப் போவதில்லை. நொந்து போயிருக்கும் மக்களுக்கு ஒரு ஆறுதல் தேவை. அந்தத் தேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பூர்த்தி செய்து வருகிறது.

இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டியிருக்கிறது. மக்களின் பிரதிநிதியாக இருந்துகொண்டு வெறுமனே பார்வையாளனாக, எதிரணி அரசியலில் இருந்து வாய்ச்சடால் பேசுவதில் மக்களுக்கு எதுவித பலனும் ஏற்படப் போவதில்லை. எனவே அரசாங்கம் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் என்னையும் இணைத்துக்கொண்டிருக்கிறேன்.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலமே தமிழ் மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுக் கொடுக்க முடியும். தற்போது மேற்க¦¡ள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் மேலும் தொடர்வதற்கு அரசாங்கத்தை பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாட்டை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்லும் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதற்கு பொதுத் தேர்தல் எனக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளது.


கேள்வி:- யுத்தத்தையும் அதன் மனித அவலங்களையும் நேரில் பார்த்தும் அனுபவித்தும் இருக்கிaர்கள். தற்போதைய நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறதா?

பதில்:- அரசியல் கோட்பாட்டுக்காக அனைத்தையும் இழந்து இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு முதற்கண் நிம்மதியையும், இழந்துவிட்ட இயல்பு வாழ்க்கையையும் பெற்றுக் கொடுப்பதே இன்றைய தமிழ் அரசியல்வாதிகளின் தலையாய கடமையாகும்.

ஒரு பெரும் எண்ணிக்கையான மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களிலும், நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்க வைக்கப்பட்ட போது அரசாங்கமே தேவையான அனைத்து உதவிகளையும் செய்தது. அப்போது நீலிக்கண்ணீர் வடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்காக எவ்வித உதவிகளையும் செய்யவில்லை. அரசாங்கம் முகாம்களுக்கு செல்ல அனுமதிக்கவில்லை என்ற நொண்டிக் குற்றச்சாட்டுகளையே கூறிக் கொண்டிருந்ததே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறு எவ்வழியிலேனும் உதவவில்லை. நிர்க்கதி நிலையில் தவித்த மக்களுக்கு எதையும் செய்யவில்லை. உதவுவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தன. 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் ஒருமாத சம்பளத்தையேனும் கொடுத்து உதவி தமிழ்த் தேசியத்தின் பெருமையை காட்டியிருக்கலாம். இப்போது அரசாங்கம் அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என வெற்றுக்கோஷமிடுகிறார்கள். போருக்குப் பின்னரும் கூட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளிலும் அதன் நடவடிக்கைகளிலும் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை.

ஆனால் ஒரு அரசுக்கு பொறுத்தவரையில் சுமார் மூன்று இலட்ச மக்களை பராமரிப்பது என்பது இலகுவான காரியமல்ல. மக்கள் தாங்கள் தங்கியிருக்கும் இடங்களில் பல்வேறு குறைபாடுகள் இருப்பினும் அதனை பொருட்படுத்தவில்லை. எந்தப் பயமும் இல்லாமல் நிம்மதியாக இருப்பதற்கு ஒரு இடம் கிடைத்திருக்கிறது. அதுபோதும் என்றிருந்தனர்.

தற்போது மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். குறுகிய காலப் பகுதிக்குள் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் இன்னொரு சாதனையாகும்.

சொந்தக் கிராமங்களுக்கு திரும்பிச் செல்லும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். முன்னர் போல குண்டுச் சத்தங்கள் இல்லை. மரண அச்சுறுத்தல்கள் இல்லை. மீளக்குடியமரும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் போதுமானதாக இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழ்வதற்கான சூழல் காணப்படுகிறது.

கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. கிராமப்புற பாடசாலைக் கட்டிடங்களின் புனரமைப்புப் பணிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்கள், பாடப்புத்தகங்கள், மற்றும் ஆசிரியர் பற்றாக்குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. மீள் குடியேற்றம் நடைபெறும் மல்லாவி, பாண்டியன் குளம், துணுக்காய் ஆகிய உதவி அரச அதிபர் பிரிவுகளுக்கு கடந்தவாரம் சென்று வந்தேன். துணுக்காயில் 20 கிராம சேவகர் பிரிவுகளும் பாண்டியன் குளத்தில் 15 கிராம சேவகர் பிரிவுகளும் இருக்கின்றன. சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 5 பாடசாலைகள் இயங்க ஆரம்பித்துள்ளன. அண்மையில் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்துகொண்ட அமைச்சர் றிசாத் ஆசிரியர்களின் போக்குவரத்துப் பிரச்சினையைத் தீர்க்குமுகமாக 43 துவிச்சக்கரவண்டிகளைப் பெற்றுக் கொடுத்தார். மேலும் பாடசாலைகளுக்குத் தேவையான கணனி இயந்திரங்கள், போட்டோ பிரதி இயந்திரங்கள் மற்றும் சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு அனுமதி கிடைத்திருக்கிறது.

விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது. 35 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள், மருந்து தெளிக்கும் கருவிகளை வழங்கியுள்ளது. விவசாயத்துறையில் ஏற்படும் அபிவிருத்தியான அம்மக்களின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும்.

வீடு, வாசல்கள் இழந்த நிலையில் இருப்பதால் தற்காலிக கூடாரங்கள் அமைத்து மிகவும் சந்தோஷமாக வாழ்கிறா ர்கள். கிணறுகள் சுத்திகரிக்கப்படுகின்றன. கற்சிலை மடுவில் அடுத்த வாரமளவில் திறக்கப்படவுள்ளது. முகாம்களில் தங்கியி ருக்கும் எஞ்சியோரும் விரைவில் தங்களை குடியமர்த்த வேண்டும் எனக் கோரினர். சொந்த வீட்டில் ஒருகோப்பை கஞ்சை குடித்தாலும் போதும் என்ற அவர்களின் எதிர்ப்பார்ப்பு விரைவில் நிறைவேறும்.


கேள்வி:- இறுதிக்கட்டப் போருக்கு முன் ஒரு கட்டமைப்புக்குள் இயங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடக் காரணம் என்ன?

பதில்:- போர் முற்றுபெறுவதற்கு முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சுயமாக எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையில் இருந்தது. கிளிநொச்சி புலிகளின் தலைமையகத்தில் இருந்து வரும் உத்தரவுகளுக்கமையவே நடந்து கொண்டார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் பல கட்சிகள் இருந்தன. புலிகள் இருக்கும் வரையிலும் ஒற்றுமையாக இருப்பதுபோலவே தெரிந்தது. புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்குள் முரண்பாடுகள் வெளியேதெரிய ஆரம்பித்தன.

ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு பிரிவினர் பொதுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் இன்னொரு பிரிவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் எனவும் சிலர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாககவும் எடுத்த முடிவுகளே மூன்றாக பிளவுபடுவதற்கு காரணமாய் அமைந்தன. சுயநல நோக்குடன் செயற்படும் சிலர் தாம் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவதற்காக எதிரணி அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். எதிரணி அரசியலால் இப்போதைய அரசியல் சூழ்நிலையில் எதையும் சாதித்துவிட முடியாது என்பதே உண்மையாகும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களை வழிநடத்த சரியானதொரு தலைமைக்கான வெற்றிடம் காணப்படுகிறது. தமிழ்த் தேசியம், தமிழினம், சுயநிர்ணயம் என்பது பற்றியே பேசிப் பயனில்லை. இப்போதைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கத்தின் உதவியுடன் செய்துகொடுக்க வேண்டும்.

நன்றி தினகரன் வாரமஞ்சரி

Read more...

Saturday, March 13, 2010

1990 முதல் 2009 வரை புலிகள்ஆட்சியில்.. நடந்த வன்கொடுமைகள்! கிறேசியன்! (பாகம் -8)

நான் கிடங்கு இருக்கும் பகுதியை நோட்டம் விடுவதையே எனது கடமையாகச் செய்து வந்தேன். குழியில் இருப்பவர்களை காலையில் ஏணிகள் வைத்து வெளியில் வரச் சொல்வார்கள். அவர்கள் வெளியே வரும்போது கையில் சொப்பின் பை ஒன்றினைக் கொண்டுவருவார்கள். கைகளிலும் கால்களிலும் விலங்குகள் பூட்டப்பட்டிருக்கும்.

அவர்களைப் பார்த்தால் புழுதி படிந்த மேனியுடன் காய்ந்து சாம்பல் படிந்த தலையுடன் நடக்க முடியாமல் மெதுவாக கையில் பையுடன் அசைந்து அசைந்து செல்வார்கள். கையில் கொண்டு வரும் பைகளில் மலமும் சிறுநீரும் இருக்கும். ஒவ்வொருவரும் அதனைக் கொண்டு சென்று மலக்குழியில் வீசவேண்டும், பின்னர் அவர்களும் காலைக் கடனைக் கழிக்கவேண்டும்.

மீண்டும் குழியை நோக்கி நடந்து சென்று ஏணிவழியாக உள்ளே இறங்க வேண்டும். இப்படி குழிகளுக்குள் இருப்பவர்கள் புளொட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஐ சேர்ந்தவர்களும்தான் அதிகமாக இருந்தனர்.

முள்ளிக்குளம் முசல்குத்தி என்ற இடத்தில் புளொட் இயக்கத்தினர் முகாம் அமைத்து இருந்ததாகவும், அதனை இலங்கை இராணுவத்தின் துணையுடன் புலி விலங்குகள் தாக்கியதாகவும், அதில் இரு பகுதியினருக்கும் மிகுந்த சேதம் ஏற்பட்டதாகவும், இறுதியில் விலங்குகள் வெற்றிகொண்டதாகவும் அறிந்தேன்.

அப்படி முசல்குத்தி முகாமில் உயிருடன் கைது செய்யப்பட்டவர்களையும், அந்த இயக்கத்துக்கு உதவி செய்த பொதுமக்களையும் பிடித்து வந்து இந்தப் பெருங்குழிகளில் விலங்குகள் இட்டு அடைத்து வைத்திருந்தனர் இந்த விலங்குகள்.

சில முக்கிய உறுப்பினர்களைத் தனிக் குழிகளிலும் ஏனையோரை பொதுவான குழிகளிலும் வைத்திருந்தனர். இரண்டுவேளை உணவு வாளிகளில் கயிற்றைக் கட்டி இறக்குவார்கள். உண்பது, கை கழுவுவது எல்லாம் அந்தக் குழிக்குள்தான். காலை ஒரு வேளைதான் இவர்கள் வெளியே வர முடியும். அதன் பின்னர் ஏணியை எடுத்துச் சென்று விடுவார்கள். 24மணி நேரமும் அவர்கள் அந்தக் குழிக்குள்தான் இருக்க வேண்டும். குழியினுள் எதுவும் கிடையாது. இவர்கள் அனைவருக்கும் நில நிற கால்சட்டை மட்டும்தான் கொடுத்திருந்தனர். இவர்களது விலங்குகளை விலக்கிவிட்டால் கூட இவர்களால் முறையாக நடந்து செல்ல முடியாத அளவு நோய்வாய்ப்பட்டிருந்தனர்.

காலையில் கடன் கழிக்க வரும்போது அவர்களை அருகில் பார்ப்பேன். மனிதன் என்ற அடையாளங்களை இழந்திருந்தனர். அவர்கள் தாக்கப்பட்டு, வதைக்கப்பட்டு, நாட்பட்ட பிணங்கள் போல நடந்து வருவார்கள். மனிதர்கள் விலங்குகளிலும் கேவலமாக நடத்தப்படுகின்றனர் புலி என்ற விலங்குகளால், இந்தப் புலி விலங்குகளை பிற நாடுகளிலும் இந்தியாவிலும் வாழ்த்திப் பாடுகின்றனர். வெளியுலகுக்கு வேங்கைகள், உள்ளுர் மக்களுக்கு கொடிய விலங்குகள்.

இவர்கள் காலைக் கடன் கழித்து மீண்டும் குழிகளுக்குள் இறக்கிய பின்னர் புலி விலங்குகள் தங்களது இயக்கப் பாடல் என்று கூறி சில பாடல்களை பொக்ஸ் வைத்து ஒலிபரப்புச் செய்வார்கள். அவற்றில் ஒரு பாடல் என் நினைவை இன்றுவரை அகலவில்லை. அப்பாடல் பின்வருமாறு:

நடந்து வந்த பாதை தனைத்
திரும்பிப் பாரடா
நீ நாச வேலை செய்த பின்னர்
வருந்துவாயடா
அடர்ந்த காற்றில் எரியும்
தியாக நெருப்புத்தானடா
உன்னை ஆட்டுகின்ற
சக்தியோடு எரிக்கும்தானடா

எதிரி காலில் ஏறிநின்று செருப்புமாகினாய்
தமிழீழ மண்னை எண்ணை ஊற்றி
நெருப்பை மூட்டினாய்
கதிரை ஏறும் ஆசை கொண்டு
விலையுமாகினாய்
புலிவீரர் களத்தில் போகும் போது
தலையுமாட்டினாய்….(2) – நடந்துவந்த


தம்பிமாரை கொன்றவர்க்கு
வாழ்த்துப் பாடினாய்
உன் தங்கை கற்பை தின்றவர்க்கு
மாலை சூடினாய்
நம்பி இருந்த எங்களுக்கு
நஞ்சை ஊட்டினாய்,
புலி நாளை வரும் அந்த நேரம்
கம்பி நீட்டுவாய் -(2) - நடந்து வந்த

இந்தப் பாடலைப் பாடியவர் தேனிசை செல்லப்பா எனக் கூறினர். தமிழகத்தில் பலர் புலிகள் சுரண்டிய பணத்தில் இவர்களும் பக்கவாட்டில் சம்பாதித்தார்கள். சிலர் வாய்கிழியப் பேசிச் சம்பாதித்தனர் ஈழத் தமிழர் பணத்தை.

செல்லப்பா என்ற நபர் தெருக்கூத்துப் பாடல்களைப் பாடித்திரிந்த நபர், சினிமாக்களிலோ அல்லது கச்சேரிகளிலோ தலைகாட்டத் தயுதியில்லாதவர், இன்று பல கோடிகளைக் குவித்து பெருவாழ்வு வாழ்கிறார். அனைத்தும் பிற நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் வழங்கியது. புலி ஏற்பாட்டில் உலகம் சுற்றி சம்பாதித்துள்ள இந்த நபர் தமிழகத்தில் இருக்கும் எங்கள் அகதி இனத்துக்கு அப்படிச் சம்பாதித்தப் பணத்தில் ஒரு ரூபாயைக் கூடக் கொடுக்காத கொடை வள்ளலாவார்.

இந்த நபரது சொந்த ஊர் சொக்கம்பட்டி, இவரது ஊருக்கு அருகில் கடையநல்லூர் என்ற இடத்தில் அகதிகள் முகாம் உண்டு. இவர் ஈழத் தமிழர் பணத்தில் பிளைப்பு நடத்தப் புறப்பட்ட இந்த 25 ஆண்டுகளில் தனது பணத்தில் ஒரு ரூபாயைக் கூட இந்த அகதிகளுக்கு வழங்கியது கிடையாது.

தமிழ் இனத்துக்குள் மோதிக் கொண்டு அழிகின்றனர். பாட்டுப்பாடி அவ்வின அழிப்பை ஊக்குவித்த இந்த மிருகமும் ஓர் கழுதைப் புலிதான்.

“நடந்து வந்த பாதையினைத் திருப்பிப் பாரடா”!

1986ல் ரெலோ இயக்கத்தவர்களை நெருப்பில் போட்டு எரித்துக்கொன்றதையும், துப்பாக்கியால் சுட்டும், கிறனைட்டை அவர்கள் மீது வீசியும் பல நூற்றுக்கணக்கான தமிழீழ விடுதலைப் போராளிகளை படுகொலை செய்து விடுதலைப் போருக்கு களங்கத்தை மட்டுமல்ல தீராத பகையினை ஏற்படுத்திய வரலாற்றை அதாவது நடந்து வந்தவரலாற்றை நீ திரும்பிப் பாரடா என்று நாம்தான் புலி விலங்குகளைப் பார்த்துக் கேட்க வேண்டும்.

ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள், பின்னர் புளொட் தோழர்கள் அதற்கு முன்னர் ஓபராய் தேவன், பின்னர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனது இயக்க அங்கத்தினர் என்று அனைத்து இயக்க இளைஞர்களையும், அவர்களது உறவினர்களையும், உதவி செய்தவர்களையும் வதை செய்து கொன்றவர்கள் மற்றவர்களுக்கு பட்டம் சூட்டி பாடல் பாடுகின்றனர். ஒவ்வொரு முறையும் இப்பாடலைக் கேட்கும் போது செல்லப்பாவின் முகத்தில் காறித் துப்பிக் கொண்டிருந்தேன் மனதுக்குள்.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று கூறுவார்கள். செல்லப்பா கொண்டாடியது மட்டுமல்ல கோடிகளையும் சேர்த்து ஓய்ந்திருக்கிறார். இந்த நாயின் ஊளைக்கு புலி விலங்குகள் அன்று கூத்தாடினர் எங்கள் கண்முன்னே!

“நீ நாச வேலை செய்த பின்னர் வருந்துவாயடா”

நாசவேலைகள் அனைத்தையும் செய்து முடித்தது புலி விலங்குகள் என்பது உலகம் அறிந்ததுதான். ஆனால் “பின்னாளில் வருந்துவாயடா” என்ற தீர்க்க தரிசனம் மிகவும் கச்சிதமாக பொருந்தியது இந்த புலி விலங்குகளுக்குத்தான். வருந்தியது இவர்கள் மட்டுமல்ல, மக்களையும் இழுத்து வந்து வருந்த வைத்தார்கள் முள்ளிவாய்க்காலில்.

நாம் மூவாயிரம் பேர் இவர்களால் துணுக்காயில் வதைக்கப்பட்டோம். நாம் அனைவரும் பல இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால் நாசவேலை செய்த இவர்கள் மொத்தமாகவே வருந்தினார்கள் முல்லைத்தீவில். காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று வானொலி வைத்துக் கதறினார்கள் இவர்களும் இவர்களது புகழ் பாடிகளும். உலகமே மௌனித்து நின்றது இவர்கள் வருந்தும் போது. செல்லப்பாவின் பாட்டு இவர்களது இரக்கமற்ற கொடுஞ்செயலால் முற்றுப்பெற்றது.

தெய்வம் நின்று கொல்லும் என்பது என் கண்முன்னே நடந்தது. ஆயினும் எங்கள் மக்களும் இந்த விலங்குகளிடம் சிக்குண்டு வதைபட்டதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

தொடரும்….

Read more...

ரஞ்சிதாவுடன் இருப்பது நான்தான்: நித்தியானந்தா ஒப்புதல்

நடிகை ரஞ்சிதா உடன் படுக்கை அறையில் இருப்பது தாம்தான் என்று முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ள நித்தியானந்தா, அதே சமயம் சட்டவிரோதமாக தாங்கள் எதையும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா படுக்கையறையில் ஒன்றாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பும், சர்ச்சையும் ஏற்பட்ட நிலையில், அவரது பக்தர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி முதல் முறையாக திடீரென வீடியோவில் தோன்றி, தான் அலகாபாத் கும்பமேளாவில் இருப்பதாகவும், விரைவில் நேரில் வந்து எல்லாவற்றையும் விளக்குவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த நித்தியானந்தாவின் தீவிர சீடரும், எழுத்தாளருமான ராஜீவ் மல்ஹோத்ரா என்பவர், நித்தியானந்தாவின் இரண்டாவது வீடியோ பேட்டியை வெளியிட்டார்.

அதில், ரஞ்சிதா விவகாரம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு மல்ஹோத்ரா - நித்தியானந்தா உரையாடல் வீடியோவின் மூன்றாவது பாகம் வெளியிடப்பட்டது.அதில் நடிகை ரஞ்சிதா உடன் படுக்கை அறையில் இருப்பது தாம்தான் என்று முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார் நித்தியானந்தா.

அதில் , " ரஞ்சிதா என் நீண்ட நாள் பக்தை. அவரின் குடும்பமும் எனக்கு நீண்ட காலமாக பக்தையாக இருக்கிறார்கள்.

பரந்து விரிந்த இந்த சமுதாயத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றையே நாங்கள் செய்தோம். சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத எந்த சோதனை முயற்சியையும் நான் மேற்கொள்ளவில்லை.

அந்த வீடியோவில், சட்டத்துக்கு புறம்பாக எந்த விதமான அம்சங்களும் இல்லையே. ஆடை அணிந்த நிலையில் இரண்டு நபர்கள் இருக்கும் அந்த வீடியோவில் என்ன சட்டவிரோதமான செய்கை இருக்கிறது?

இன்னொன்று இதில், யாரும் யாரையும் எதற்காகவும் நிர்பந்திக்கவில்லை. அந்த வீடியோ எடுத்ததாக சொல்லப்படும் டிசமபர் 2009 ல் எனக்கு உடல் நிலை சரியில்லாததால் ஒரு தாய்மை உணர்வோடு ரஞ்சிதா எனக்கு உதவிகள் செய்தார்.அதை படம் பிடித்து கூடுதல் காட்சிகளை இணைத்து வெளியிட்டுள்ளார்கள்.

மற்றபடி ரஞ்சிதா என் பக்தை.அவ்வளவுதான்.அவர் எனக்கு எப்போதும் பக்தையாக இருப்பார். இது உண்மை. இது சத்தியம்.

எனக்கு எதிரிகள் இல்லை என்று நினைத்தேன். வீடியோ வெளிவந்ததும் அதிர்ச்சியடைந்தேன்; எனக்கு எதிரிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டேன்.

என்னை விட மீடியா தான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.எனவே மீடியா சொல்வது தான் உண்மை என மக்கள் நம்புகிறார்கள்.

நாங்கள் எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்துள்ளோம். அவற்றைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவே இல்லை.இன்று இந்த சாதாரண விஷயத்தைப் பெரிதாக்கி களங்கம் கற்பிக்கிறார்கள்.

இன்று எங்கள் ஆஸ்ரமத்தில் வெறும் 20 பேர் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் உயிருக்குப் பயந்து ஓடிவிட்டார்கள். எனது உயிருக்கே உத்தரவாதமிருக்குமா தெரியவில்லை.அதனால்தான் நான் இன்னமும் வெளிப்படையாக வராமல் இருக்க வேண்டியுள்ளது" " என்று கூறியுள்ளார்

'மாஸ்டர்'களுக்கு இது சகஜம் தான்..


இதற்கிடையே 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி சேனலுக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ள நித்தியானந்தா, 'ரஞ்சிதா என்னுடைய சிஷ்யை. இதற்கு முன்பும், இப்போதும், எப்போதும் அவர் என்னுடைய சிஷ்யையாகவே இருப்பார்.

நான் உடல்நலம் சரியில்லாமல் இருந்தேன். அப்போது எனக்கு பக்தை என்ற முறையில் ரஞ்சிதா எனக்கு பணிவிடை செய்தார். அதில் என்ன தவறு இருக்கிறது?

எந்த ஒரு மனிதருக்கும் உதவி செய்ய ஒருவர் தேவை தானே, ஒரு பக்தை தாமாக முன்வந்து பணிவிடை செய்வதை நான் மறுக்க முடியாது. அதை ஏற்பதும் தவறல்ல.

மற்றபடி, சட்டவிரோதமாக நானும் ரஞ்சிதாவும் எதையும் செய்யவில்லை.இவையெல்லாம் எனக்கு எதிராக திட்டமிடப்பட்ட ஒரு சதி தானே தவிர வேறில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மிகப் பெரிய 'மாஸ்டர்'களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆதி சங்கராச்சாரியார், சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ணர் போன்றவர்களும் இதுபோன்ற சோதனைகளை சந்தித்தார்கள்.

ஒவ்வொரு 'குரு'வும் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு சோதனையான கட்டத்தை தாண்டித்தான் சென்றாக வேண்டும். எல்லா மாஸ்டர்களும் உடலாக இருந்த சமயத்தில் இன்றைய நித்தியானந்தா நிலையை கடந்து தான் சென்றார்கள்' என்று கூறியுள்ளார்.

நித்யானந்தருக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற‌ம் அழை‌ப்பாணை
''பாலியல் புகாரில் சிக்கியுள்ள நித்யானந்த‌ர் ஏப்ரல் 2ஆம் தேதி ஆஜராக வேண்டும்'' என்று ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த வழ‌க்க‌றிஞ‌ர் கே.செல்வமணி என்பவர், ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், 'புனிதமான காவி உடை அணிந்து நித்யானந்த‌ர், நடிகையுடன் சல்லாபத்தில் ஈடுபடும் காட்சிகள் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வெளியானது.

சாமியார் என்ற போர்வையில் நல்லொழுக்கம், நீதிபோதனை செய்துவிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது இந்து மத உணர்வாளர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. அவர் மீது 295ஏ பிரிவின் கீழ் கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

இ‌ந்த மனுவை விசாரித்த நீதிபதி குணசேகர், நித்யானந்த‌ர் ஏப்ரல் 2ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக அழை‌ப்பாணை அனுப்ப உத்தரவிட்டார்.

Read more...

14-03-2010 ரிபிசியின் ஞாயிற்றுக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடல்.

இலங்கையின் தேர்தல் மற்றும் அரசியல் நிலமைகள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – பத்மாநாபா அணியின் செயலாளாரும் யாழ்மாவட்டத்தில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் தலைமை வேட்பாளருமான தோழர் சிறிதரன் சுகுமார், ஜேர்மனிய ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் செ ஜெகநாதன், அரசியல் அவதானியும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – பத்மாநாபா அணியின் மத்திய குழு உறுப்பினருமான தம்பா மற்றும் ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாட உள்ளனர்.

மாலை 3மணி முதல் 5 மணி வiர் நடைபெற உள்ளது. நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்
தொலைபேசி தொடர்புகளுக்கு 00 44 208 930 5313

Read more...

இரு வேட்பாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலின் வேட்பாளர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் முன்னாள் பிரதி அமைச்சர் ஜெயதிஸ்ஸ ரணவீர என தெரியவருகின்றது. தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டதாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களாகும். இதுவரை தேர்தல் வன்செயல்கள் காரணமாக 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

Read more...

இலங்கையின் அனுமதியில்லாமல் ஐ.நா விசாரணை நடத்த முடியாது. பிரதமர்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றது என்கின்றது அமெரிக்கா.
இலங்கை மீது சுமத்தப்படுகின்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. விசாரணை நடத்ததுவதாயின் அவர்களுக்கு நாம் அனுமதிவழங்கவேண்டும் என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். பொரளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர், இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி ஐ.நா. எந்த விசாரணைகளையும் நடத்த முடியாது எனக் கூறியதுடன், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கை தொடர்பாக நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு சிலரின் நடவடிக்கைகளே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகம் குற்றம்சாற்றியுள்ளது. அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகத்தினால் வருடந்தோறும் வெளியிடப்படும் மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கையின் 2009 ஆம் ஆண்டின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

இதில் மேற்கூறிய குற்றச்சாற்று இடம்பெற்றுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் போர் முடிவடைந்த பின்னர் தற்போதும், கடத்தல் மற்றும் காணாமல் போகும் சம்பவங்களும் அதிகரித்த வண்ணமே உள்ளன.

இந்த செயல்களில் ஈடுபடும் அரசாங்க ஆதரவு குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எதுவும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன் பல்வேறு வழிகளிலும் கைது செய்யப்படுகின்றவர்கள் துன்புறுத்தப்படல், மனிதாபிமானம் அற்ற வகையில் பலவந்தப்படுத்தப்படல், மற்றும் தண்டனைக்கு உட்படுத்தப்படல் போன்றனவும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதேவேளை இடம்பெயர்ந்த முகாம்களில் உள்ள மக்கள் தமக்கான சுதந்திரம் இன்றி நெருக்கடியான சூழலில் வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்கள் மிகவும் அசாதாரணமான ஒரு பிரதேசத்தில் அடைத்து வைக்கப்பட்டு, அவர்களின் சுதந்திரம், உரிமை என்பன முற்று முழுதாக மீறப்பட்டுள்ளன. அத்துடன் சட்டத்துக்கு புறம்பான கைதுகளும், தடுத்து வைப்புகளும் அரசாங்கத்தினால் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுக்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல், தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற அதேவேளை, உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களால் அவர்கள் தமக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்படும் போதும், அவை கைவிடப்படுகின்றன.

அத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் நீதிபதியின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும். எனினும் இலங்கையில் பெரும்பாலும் அவ்வாறு நடைபெறுவதில்லை.

இதற்கிடையே பல்வேறு சந்தர்பங்களில், இலங்கை ஜனாதிபதியினால் இராணுவத்தில் இருந்து தப்பி சென்றவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டங்கள் பொது மக்களின் பாவனைக்கு இல்லாது போயுள்ளமைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளுக்கான குற்றப்பத்திரிகை தாக்கல் உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அத்துடன் சட்டவிரோத செயல்கள், அதாவது காணி உள்ளிட்ட சொத்துக்கள் அபகரிக்கப்படல், மற்றும் சுரண்டப்படல், குடும்ப விவகாரங்களில் தலையிடல் போன்ற பல்வேறு முறையற்ற செயல்கள் இடம்பெறுகின்றன என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read more...

எம்மை துரோகிகள் என புலிகள் செய்த பிரச்சாரம் தவிடு பொடியானது. புளொட் பவன். (பேட்டி)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவரும், வன்னி மாவட்டத்தில் அவ்வமைப்பின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவருமான பவான் என அறியப்படும் க.சிவநேசன் வன்னி தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக இலங்கைநெற் இற்கு தொலைபேசி ஊடாக வழங்கிய பேட்டி. பேட்டி கண்டவர் பீமன்.

உங்கள் அரசியல் பிரவேசம் குறித்து விளக்க முடியுமா?

தமிழ் மக்களின் விடுதலைவேண்டி போராடிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் 83 காலப்பகுதிகளில் இணைந்த நான் இன்றுவரை அவ்விக்கத்தின் ஊடே எனது பணிகளை செய்து வருகின்றேன்.

83 ல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து கொண்டேன் என தெரிவித்திருந்தீர்கள். அவ்வியக்கத்தினை தேர்ந்தெடுத்தற்கான விசேட காரணங்கள் உண்டா?

நான் பாடசாலைக் கல்வியை தொடர்ந்து கொண்டிருந்தேன். அக்கால கட்டத்தில் தமிழர்களுக்கெதிரான ஒடுக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருந்தது. பேரினவாத சக்திகளால் 83 வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டிருந்துடன், இதற்கு எதிராக போராடவேண்டும் என்ற கோஷங்களும் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. எம்மை ஆயுதப்போராட்டத்தில் இணைத்து கொண்டு எமது மக்களின் சுதந்திரத்தை, அதாவது தமிழீழத்தை அடையவேண்டும் என்ற இலக்கோடு நான் கழகத்தில் இணைந்து கொண்டேன். நான் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினை தேர்ந்தெடுத்தற்கான காரணம் என்னவென்றால். இவ்வியக்கத்தின் தலைவராக உமா மகேஸ்வரன் அவர்கள் இருந்தார். மக்களுக்கான போராட்டத்தின் அவரது கொள்கைகளில் எனக்கு ஈடுபாடும், அந்த இலக்கை அடையலாம் என்ற நம்பிக்கையும் இருந்தது. அத்துடன் அவர் ஒரளவு படித்த மனிதராக காணப்பட்டார்.

சிங்கள முற்போக்கு சக்திகளுடன் இணைந்தே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என உமா மகேஸ்வரன் அவர்கள் கூறிவந்திருக்கின்றார். அவ்விடயத்தில் தற்போது உங்கள் அமைப்பின் நிலைப்பாடு என்ன?

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை அம்மக்களுக்கு காண்பிக்கவேண்டும் என்ற விடயத்தை அவர் தொடர்ச்சியாக கூறிவந்திருக்கின்றார். ஈழம் என்பது சாத்தியமில்லை, அதை இந்தியா ஏற்றுக்கொள்ள மாட்டாது என்பதையும் எமக்கு பின்புலம் இல்லை என்பதையும் உணரமுடிந்தபோது சிங்கள முற்போக்கு சக்திகளுடன் இணைந்து புரட்சி ஒன்றை உருவாக்கி அவர்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைமையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் காணப்பட்டதை என்னால் அவதானிக்க கூடியதாக இருந்துள்ளது.

ஈழம் என்பதை இந்தியா ஏற்றுக்கொள்ள மாட்டாது என எவ்வாறு உணர்ந்திருந்தீர்கள்?

இலங்கை என்பது ஒரு பல இனங்கள் வாழுகின்றநாடு. எனவே இங்கே தனிநாடு ஒன்று உருவாவதை இந்தியா ஊக்குவிக்குமானால் அல்லது உதவி செய்யுமாக இருந்தால் அது இந்தியாவிற்கும் பாதகமாக அமையும் என்பதை இந்தியாவின் பல சக்கிகளும் தெளிவாகவே கூறியிருந்தார்கள். ஏன் கருணாநிதி அவர்கள் கூட ஈழம் என்பது சாத்தியமில்லை என்பதைத்தான் கூறியிருந்தார்.

இதற்கும் அப்பால் சென்றால் இந்திய இடதுசாரிகளான பாண்டியன் , கதிகாலசுந்தரம் ஆகியோரது அரசியல் பாசறை வகுப்புக்களில் பங்கெடுத்திருக்கின்றேன். அவர்களும் ஐக்கிய இலங்கையினுள்ளே அதிகூடிய அதிகாரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்ற விடத்தினையே கூறினர்.

இவ்வாறான நிலையில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்திருந்தது. இன்று இறுதிவரை ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்திருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட அவ்வொப்பந்தத்தை ஏற்று கையொப்பம் இட்டிருந்தார். ஆனால் எமது தலைவர் உமா மகேஸ்வரன் அதனை ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட்டிருக்கவில்லை. பின்னாட்களில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எமது தீர்வுக்கான முதற்படியாக ஏற்றுக்கொள்வோம் என இணங்கியிருந்தார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை உங்கள் தலைமை அல்லது உங்கள் அமைப்பு ஏற்றுக்கொண்டிராததற்கு காரணம் என்ன?

இலங்கை இந்திய ஒப்பந்தம் எமது பிரச்சினைக்கான முழுத்தீர்வு அல்ல என்பதாகும். அதாவது நாம் ஆயுதப்போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்ததன் இலக்கை இந்திய ஒப்பந்தம் அடைந்திருக்கவில்லை என்பதாகும்.

இலங்கையில் தமிழ் ஈழம் மலர்வதை இந்தியா விரும்பியிருக்கவில்லை எனக்குறிப்பிட்டீர்கள். அவ்விடயத்தினை ஆரம்பநாட்களில் ஏன் மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை?

ஈழம் என்பது சாத்தியமில்லை என தெரிவித்திருந்தபோதும், ஈழத்தை கோருங்கள் அப்போதுதான் இலங்கையில் தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய அதி உச்ச அதிகாரங்களையாவது பெற்றுக்கொள்ளலாம். அதற்கான உதவியை செய்வோம் என தெரிவித்திருந்தார்கள்.

இலங்கையில் ஆயுதப்போராட்டம் முடிவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஆயுத அமைப்புக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அவசியம் இல்லை என்ற கருத்து நிலவுவதை அவதானிக்க முடிகின்றது. உங்கள் கருத்தென்ன?

இதில் உண்மை உண்டு. காரணம் புலிகளின் ஆயுத பலத்திலும் அப்போராட்டத்திலும் மக்கள் அதீத நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவ்வியக்கம் சுக்குநூறாக, நினைத்துப்பார்க்ககூட முடியாத முறையில் வீழ்ந்தபோது மக்கள் சோர்வடைந்து விட்டார்கள். எனவே அப்படியானதோர் நிலைப்பாட்டை அவர்கள் வெறுக்கின்றார்கள். அதற்காக அவ்வாறானதோர் நிலை மீண்டும் உருவாக வேண்டும் என நான்கூறவில்லை.

புளொட் இயக்கத்தினர் வவுனியா பிரதேச மக்களிடம் பலவந்தமாக பணம் பறித்தாகவும், மக்களை துன்புறுத்தியதாகவும் பரவலான குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றது. இந்நிலை தொடர்ந்தவண்ணம் உள்ளதா?

உங்களுக்கு நன்றாக தெரியும் நாம் மக்கள் மக்தியில் இருந்து செயற்பட்டு வருகின்றோம். செயற்படுகின்றபோது ஒருசில முரண்பாடுகள்வரும். எந்த ஒருவிடயத்தை செய்கின்றபோதும் எவருக்கும் மக்கள் மத்தியில் 100 வீத ஆதரவு கிடைப்பதில்லை. அந்தவகையில் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் இருந்து அறிக்கை விடுக்கின்றவர்களுக்கும் மக்களுக்கும் இடையே முரண்பாடுகள் வராது. அவர்கள் மக்கள் மத்தியில் செயற்படுவதில்லை. நாம் செயற்படுகின்றோம். எமக்கும் மக்களுக்கும்மிடையே ஒரு சில முரண்பாடுகள் உண்டு. அவற்றை பெரிதுபடுத்தும் செயற்பாட்டை எமது அரசியல் எதிராளிகள் செய்துகொண்டே இருப்பார்கள்.

அடுத்து பணம்பறிக்கின்ற விடயத்தை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். நாம் யாரிடமும் பலவந்தமாக பறித்ததில்லை. சில காலங்களுக்கு முன்னர் சிலரிடம் எமது கட்சியின் தேவைகளுக்காக கேட்டுவாங்கியிருக்கிறோம். பலர் எமது வேண்டுகோளை ஏற்று தந்திருக்கின்றார்கள். சிலர் இல்லை என்று சொல்லியிருக்கின்றார்கள். நாம் அவற்றை ஏற்றிருக்கின்றோம். கடந்த 6 மாதங்களாக நாம் எவரிடமும் எந்த பணமும் பெறுவதில்லை.

எது எவ்வாறாயினும் நாம் 100 வீதம் சுத்தமானவர்கள் எனக் கூறவில்லை. நாமும் இந்த சமுகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சமுகத்துடன் இணைந்து வாழ்கின்றோம். எமது மக்களுடன் வாழ்கின்றோம். மக்களும் எம்மை பகடைக்காய்களாக பாவித்திருக்கின்றார்கள் என்ற விடயத்தினையும் இங்கு கூறவேண்டும்.

நீங்கள் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து கொள்வதற்காக பல சுற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும், தேர்தல் கூட்டு ஒன்றை அமைக்க முயன்றதாகவும், இறுதியில் தோல்வியடைந்தாகவும் தெரியவருகின்றது. உங்களுடைய அந்த முயற்சி வெற்றியளிக்காமைக்கு காரணம் என்ன?

நாங்கள் பேச்சுவார்த்தைக்கு சென்றது என்பதைவிட மக்களின் வேண்டுகோளின் அடிப்படையில் பேசினோம் என்பது சிறந்ததாகும். வவுனியாவிலே பெரும்பாண்மையாக தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். எனவே பெரும்பாண்மையான தமிழ் ஆசனங்களை பெறவேண்டும் என்ற ஆதங்கம் வவுனியா மக்களிடம் உண்டு. சகோதர இன மக்களின் எண்ணிக்கைக்கேற்ப அவர்களுக்கான பிரதிநிதித்துவம் அமையவேண்டும் எனவும் தமிழர்களாகிய நாம் பிளவுபட்டு நிற்கும்போது அதன் பயனால் அவர்கள் அதிக ஆசனங்களை பெற்றுவிட்டால் அது தமிழ் மக்களின் நலனுக்கு குந்தகம் ஏற்பட்டுவிடும். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும், எமது கட்சியும் ஒன்றிணைந்து போட்டியிடவேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் இருதரப்பினரிடமும் முன்வைத்தார்கள். தேர்தல் கூட்டுக்கள் அல்லாது கொள்கையடிப்படையில் இணையக்கூடிய கூட்டுக்கள் தமிழ் மக்களிடையே அவசியம் என்ற விடயத்தை நாம் பன்நெடுங்காலங்களாக வலியுறுத்தியும் வந்துள்ளோம். அந்த அடிப்படையில் மக்களின் வேண்டுதலை ஏற்று நாம் அவர்களுடன் பேசினோம். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது நான்காக உடைந்திருக்கின்றது. நான்கு குழுக்களாக செயற்படுகின்றது. அதிலும் அவர்கள் கொண்ட கொள்கைக்கு மிக எதிர்மாறான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றார்கள். இருந்தாலும் கூட நாம் சம்பந்தன் மாவை தலைமையிலான குழுவுடன் பேசினோம். ஆனால் அவர்கள் தமது விடயங்களில் மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள். தர்மலிங்கம் அவர்களின் மகன் சித்தார்த்தனை வேண்டுமானால் எம்முடன் இணைந்துக்கொள்வோம், மற்றவர்கனை நாம் சேர்க்க மாட்டோம்.. வவுனியாவில் மாத்திரம் ஒர் இடத்தை ஒதுக்கி தரமுடியும் எனக் கூறியிருந்தார்கள்.

இவ்விடயத்தினை எமது தலைவர் மிகவும் ஆணித்தரமாக எதிர்த்ததுடன், தான் புளொட் அமைப்பின் தலைவராக பேசுவதாக இருந்தால் பேசுகின்றேன், அதைத்தவிர்த்து தனியே தர்மலிங்கம் அவர்களின் மகனாக பேசுவதற்கு எதுவுமில்லை என தெரிவித்திருந்தார். இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகள் துரதிஸ்டவசமாக அமைந்துள்ளது.

கடந்த தேர்தலில் தமிழ் மக்கள், தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றே தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை பாராளுமன்றம் அனுப்பியதாக கூறப்படுகின்றது. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அந்நிலையில் இருந்து விலகியுள்ளதையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிலர் தாம் புலிகளை பயங்கரவாதிகளாகவே கருதியிருந்ததாகவும் கூறியுள்ளதையும் மக்கள் அறிந்துள்ளனர். இவ்வாறான நிலையில் மக்கள் தற்போது எவ்வாறானதோர் அரசியல் தலைமையை எதிர்பார்க்கின்றனர்?

ஓர் நீதியானதும் நேர்மையானதுமான தலைமை தமக்கு வேண்டும் என்பதில் மக்கள் அவாகொண்டிருப்பது போன்றுதான் தோன்றுகின்றது. அன்று புலிகள் தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளென உலகிற்கு எடுத்துக் கூறுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியிருந்தார்கள். கூட்டமைப்பினரும் தமது கதிரைகளை தக்கவைத்துக் கொள்ளவதற்காக புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக உலகிற்கு சொல்வதில் மும்முரமாக நின்றார்கள். ஆனால் இன்று நிலைமை வேறு.

உண்மையிலே இது ஒரு தேசியக் கூட்டமைப்பு அல்ல. சந்தர்ப்பவாத கூட்டென்பதே பொருத்தமானதாகும். ஏனென்றால், அக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, ஈபிஆர்எல்எப், தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றின் தலைமைகள் புலிகளின் தலைமையால் கொன்றொழிக்கப்பட்ட நிலையில், அதன் இரண்டாவது தலைமைகள் தமது தலைகளை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், பாராளுமன்றக் கதிரைகளை பெற்றுக்கொள்வதற்காகவுமே கூட்டில் இணைந்து கொண்டார்கள். இதுவொரு தேசியக் கூட்டடென்றால் அதைப்போல் நகைச்சுவை இருக்கமுடியாது என்றே நான் கூறுவேன். அன்று தேசியம் என்று இலங்கை அரசிற்கு எதிராக கூப்பாடு போட்டவர்களால் எவ்வாறு இன்று அதே அரசின் சின்னத்தின்கீழ் போட்டியிடமுடியும். இவர்கள் கதிரைகளுக்காக எதுவும் செய்வார்கள்.

வன்னியில் புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் செய்கின்றீர்களா?

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒருசில இடங்களில் மக்கள் மீள் குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள். அப்பிரதேசங்களுக்கு நாம் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் செல்லவில்லை. அவர்கள் குடியேற்றப்பட்ட மறுகணமே சென்றோம். அவர்களுடன் பேசினோம். உற்சாகம் அளித்தோம். அவர்களின் குறைநிறைகளை கேட்டு எம்மால் முடிந்தவற்றை செய்தோம். அவர்களின் மனநிலை எமக்கு நன்றாக தெரியும். அவர்கள் தற்போது ஓர் தேர்தலை சந்திப்பதற்கு தயாரானவர்களாக இல்லை. அவர்கள் இழக்க கூடிய யாவற்றையும் இழந்து ஏறக்குறைய பிச்சாண்டிகள் என்றநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே அம்மக்களிடம் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்வது பொருத்தமானது அல்ல. இருந்தாலும் அவர்களுக்கு அரசியல் உரிமை உண்டு. அவர்களுடைய பிரதிநிதிகளை அவர்களே தெரிந்தெடுக்கவேண்டும். அந்த உரிமையை அவர்கள் இழந்து விடக்கூடாது என அவர்களுக்கு தைரியம் கொடுக்கின்றோம். அதே நேரத்தில் உங்களுக்கு நிச்சயமாக சிறந்ததோர் அரசியல் தலைமைத்துவம் வேண்டும் அதை நீங்கள் இப்போது சரியாக தேர்ந்தெடுக்காவிட்டால், இன்னும் ஆறு வருடங்கள் காத்திருக்க நேரிடும் என்ற விடயத்தை விளங்கப்படுத்தி வருகின்றோம்.

உங்கள் கருத்துக்களை கேட்பதற்கு அம்மக்கள் ஆர்வம் காட்டுகின்றார்களா?

நிச்சயமாக, அவர்கள் எமது கருத்துக்களை மிகவும் ஆர்வத்துடன் செவிமடுக்கின்றார்கள். ஆனாலும் அங்குள்ள மக்கள் தடுப்பு முகாக்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளின் விடுதலையிலேயே ஏக்கம் கொண்டுள்ளனர். அவ்விளைஞர் யுவதிகளை தம்முடன் இணைத்துக்கொள்ளவேண்டும், அவர்கள் இழந்த குடும்ப சுகத்தை அவர்களுக்கு கொடுக்கவேண்டும். அவர்களுக்கு கிடைக்காமல்போன கல்வியறிவை ஊட்டவேண்டும் என்ற விடயங்களை எம்மிடம் பேசுகின்றனர். இவ்விடயத்தில் அரசு எமக்கு அளித்த உறுதி மொழிகளை பூரணமாக நிறைவேற்றவில்லை என்றுதான் நான்கூறுவேன். இம்மக்கள் விடுவிக்கப்பட்டதும், இவ்விளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டதுமான காலகட்டங்களில் நாம் அரசுடன் பல தடவைகள் பேசியிருக்கின்றோம். இவ்விளைஞர் யுவதிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுவார்கள் என அரசினால் எமக்கு கூறப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் இவ்விளைஞர் யுவதிகள் புலிகளினால் பலவந்தமாக பிடிக்கப்பட்டவர்கள். புலிகள் தமிழ் இளைஞர் யுவதிகளை பலவந்தமாக பிடித்து போரில் ஈடுபடுத்துகின்றனர் என அரசு சர்வதேச நாடுகளுக்கு சொல்லியிருக்கின்றது. எனவே அவ்வாறான இந்த அரசு அவ்விளைஞர்களை எவ்வாறு தடுத்து வைக்கமுடியும் என எனக்கு விளங்கவில்லை. எனவே இவ்விளைஞர் யுவதிகள் விடயம் தொடர்பாக உடனடியாக எம்மால் நடவடிக்கை எடுக்க முடியாது போனாலும், தேர்தல் முடிந்த பின்னர் எமக்கு தேர்தலில் ஆசனங்கள் கிடைக்காது போனாலும் கூட அவர்களின் விடுதலை வேண்டி பாரிய அளவிலான சாத்வீக போராட்டங்களையாவது நாடாத்தி அவர்களை மீட்க எமது முழுப்பலத்தையும் பிரயோகிப்பது என நாம் உத்தேசித்துள்ளோம். அத்துடன் அதில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையும் உண்டு. இதுவே இன்று வன்னிமக்கள் எதிர்பார்க்கும் பாரிய எதிர்பார்ப்பாகும்.

புளொட் அமைப்பினராகிய உங்களைப்பற்றி வன்னி மக்களுக்கு புலிகளால் ஒரு பயங்கரமான வடிவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அம்மக்கள் உங்களை விரோதிகளாகவே பார்க்க கூடிய அளவிற்கு அவர்கள் மூளைச்சலைவை செய்யப்பட்டுள்ளார்கள். அத்துடன் இம்மக்கள் சுமார் 24 வருடங்களின் பின்னரே உங்களை நேரடியாக காண்கின்றார்கள். புலிகளால் துரோகிகள் என கூறப்பட்டு வந்த உங்களை மக்கள் காணும்போது அவர்களின் உணர்வுகள் எவ்வாறு காணப்படுகின்றது?

எமது அமைப்பு மாபெரும் மக்கள் அமைப்பாக கட்டியெழுப்பட்டு 1986ம் ஆண்டு காலப்பகுதிகளில் கிராமங்கள் தோறும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை கொண்டிருந்த அமைப்பென்பது யாவரும் அறிந்தவிடயம். அவ்வாறே வன்னியில் இருந்த எமது தோழர்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தாலும் கூட அவர்கள், சமுதாயத்தில் நல்ல பிரஜைகளாக இருந்துள்ளதுடன், அவர்கள் தற்போது தம்மை புளொட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியப்படுத்தும்போது புலிகளின் அப்பிரச்சாரங்கள் தவிடு பொடியாகியுள்ளது. இவை அனைத்துக்கும் அப்பால் எம்மை எவ்வாறு கெட்டவர்கள் எனச் சொன்னார்களோ அதற்கு மேலாக இலங்கை இராணுவத்தினர் தொடர்பாக மிக கொடுரமான செய்திகளை புலிகள் மக்களுக்கு கொடுத்திருந்தார்கள். அதாவது சிங்கள இராணுவம் உங்களை அண்டினால் அவர்கள் வெட்டி, சுட்டுக்கொல்வார்கள், கற்பழிப்பார்கள் போன்ற செய்திகள் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் வன்னியிலிருந்து வந்த மக்களை இராணுவம் புலிகள் கூறியது போல் அணுகவில்லை என்பதை அம்மக்களுடாகவே அறிய முடிகின்றது. இராணுவம் தம்மை மிகவும் கண்ணியமாக நாடாத்தியாதாகவே மக்கள் கூறுகின்றனர். ஆகவே இவ்விடயதிலும் புலிகளின் பிரச்சாரம் மேலும் தவிடு பொடியானது. புலிகள் கூறியவை யாவும் பொய்யானது என்ற நிலைப்பாட்டுக்கு மக்கள் வந்து விட்டனர். எனவே புளொட் இயக்கத்தினர் மீதும் கூறப்பட்டவை பொய்யானது என்பதையும் உணர்ந்து விட்டனர். நீங்கள் கூறும் இவ்விடயத்தில் உண்மை இருக்கின்றது. ஆனால் அது புலிகளாலேயே பொய்யாக்கப்பட்டுள்ளது. இவ்விடயங்களை மக்களுக்கு விளங்கவைப்பதற்கு நாம் எதையும் விசேடமாகச் செய்யவில்லை.

உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் வன்னி பிரதேசத்தில் இருந்து மீண்டுவந்துள்ளதாக தெரிவித்தீர்கள். அவ்வாறானவர்கள் மீண்டும் உங்களுடன் இணைந்து செயற்பட ஆர்வம் கொண்டுள்ளார்களா? அவர்கள் இணைவார்களாயின் அது எவ்வாறான செல்வாக்கினை செலுத்தும?

வவுனியாவிலே எமது காரியாலயத்தில் இன்று பழைய தோழர்களுக்கான ஒன்று கூடல் ஒன்று இடம்பெற்றது . அதில் சுமார் 1000 இற்கு சற்று குறைவானவர்கள் வந்திருந்தார்கள். தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன், பழையகால நிகழ்வுகளையும் , சம்பவங்களையும் தோழர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். அத்துடன் எதிர்காலத்தில் ஆயுதங்களுடன் சம்பந்தப்படாத வகையில் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆதங்கம் அவர்களுள்ளே இருப்பதையும் அவர்களது கருத்துக்கள் எடுத்துக்காட்டின.

இவ்விடயத்தில் நான் ஒன்றைச் சுட்டிக்காட்டவேண்டும் நாம் இதுவரை எமது தோழர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கவில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் நாம் நாடளாவிய ரீதியில் எமது தோழர்களை அழைப்போம். அப்போது எமது பலம் தெரியவரும். எமது அமைப்பு அவர்களை சிறந்த முறையில் பயிற்றுவித்து விடுவித்திருக்கின்றது. அவர்களில் பலர் இன்று சமூகத்தில் சிறந்த அந்தஸ்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தேர்தலின் பின்னர் அவர்களை அழைத்து அவர்களுடாக கிராம மட்டங்களில் கட்டமைப்புக்களை உருவாக்கி மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்பது இன்று நடந்த ஒன்றுகூடல் ஊடாக உறுதியாகியுள்ளது.

தேர்தல் நிலவரங்களை பார்க்கும் போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் கட்சிக்கு வாக்கு சேர்க்க முனைவதிலும் பார்க்க விருப்புவாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு முனைப்புக் காட்டுவதையும், அதனடிப்படையில் ஒரே கட்சியை சேர்ந்த வேட்பாளர்களிடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. இவ்விடயத்தில் உங்கள் கட்சி நிலவரங்கள் எவ்வாறு காணப்படுகின்றது?

எங்களுடைய கட்சி வேட்பாளர்களை பொறுத்தவரை அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இல்லை. நானும் கூட ஒரு வேட்பாளன். கட்சிக்கு வாக்குகளை சேர்ப்பதிலேயே எமது வேட்பாளர்கள் குறியாக இருக்கின்றார்களே தவிர விருப்பு வாக்குகள் என்பது பிரச்சினை அல்ல.

தேர்தல் பிரச்சாரங்களின் போது, தமிழர் தமிழருக்கும் முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கும் சிங்களவர் சிங்களவருக்குமே வாக்களிக்கவேண்டும் என்ற குறுந்தேசியவாதம் பேசப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இவ்விடயத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன? இது சரியா?

தேசியவாதம் என்பது எங்களுடைய உள்ளங்களிலே ஊறியவிடயம். தேசியவாதம் என்ற விடயமே எம்மை போராட்டங்களை நோக்கி தள்ளியுள்ளது. தமிழ் தேசியம் என்ற விடயத்திற்காக ஆரம்ப காலங்களில் முஸ்லிம்களும் எம்முடன் இணைந்து போராடிவந்த வரலாறுகளே உண்டு. ஆனால் பேரினவாத சக்திகளால் தமிழ் மக்களில் இருந்து முஸ்லிம்கள் பிரிக்கப்பட்டுவிட்டார்கள். சிங்களத் தேசியவாதம் என்பது சிங்கள மக்களின் நலனை கருத்திற்கொண்டதாக காணப்படுகின்றது. எனவே தமது இனங்களின் நலனில் கவனம் கொண்ட விடயங்களை குறுந்தேசியவாதமாக வரையறுக்க முடியாது. அவை தேசியவாதம்தான். அந்த வகையில் இங்கே வன்னியில் ஏறத்தாழ 12,000 சிங்களவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தமது நலனை கருத்தில் கொண்ட சிங்களவர் ஒருவரை தெரிவு செய்யவேண்டும் எனக்கருதுவது தவறு எனக் கூறிவிடமுடியாது. ஆகவே இவ்விடயத்தினை தேசியவாதம் அல்லது குறுந்தேசியவாதம் என்பதை விட ஒர் இனத்தின் நலன்சார்ந்த விடயம் என்றே நான் கூறுவேன். அந்தவகையில் அதில் எவ்வித தவறும் இல்லை.

வன்னியிலே பல அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றது. சரியாக எத்தனை அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடுகின்றது? இவற்றால் தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் எவை?

அரசியல் கட்சிகள் , சுயேட்சைக்குழுக்கள் என மொத்தமாக 28 குழுக்கள் போட்டியிடுகின்றன. அனேகமான சுயேட்சைக் குழுக்கள் அரசினால் களமிறக்கப்பட்டுள்ளது. ஏன் சில கட்சிகள் கூட அதே நிலைதான். ஊதாரணத்திற்கு யாழ்பாணத்தில் அரசுடன் இணைந்து அரசின் சின்னத்தின்கீழ் போட்டியிடும் தமிழ் கட்சியை இங்கு தனித்து போட்டியிட விட்டிருக்கின்றார்கள். அதேபோன்று கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிட்ட கட்சிகளைத் தனித்தனிக்கட்சிகளாக போட்டியிட விட்டிருக்கின்றார்கள். இது அரசிற்கு சாதகமான ஒர் நடவடிக்கையாகத்தான் நான்பார்க்கின்றேன். அரசு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து கட்சியொன்று அதிகூடியவாக்குகளை எடுப்பதை தடுப்பதன் மூலம் தமது பிரதிநிதித்துவத்தை கூட்டலாம் என கருதுகின்றது. ஆனால் தமிழ் மக்கள் இவ்விடயங்களை நன்கு விளங்கி தாம் தமது பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவேண்டும் என உறுதிபூணுவார்களாயின் எவரது வியூகங்களாலும் எம்மை தோற்கடிக்க முடியாது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் உங்களது கட்சியினால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக்கூட பெற முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அந்தவகையில் இத்தேர்தலை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

கடந்த தேர்தலானது முற்றிலும் வேறுபட்ட நிலையில் நோக்கவேண்டியது. புலிகள் மிகவும் பலமாக காணப்பட்டார்கள். அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவுடன் சமாதான ஒப்பந்தம் என்ற ஒன்றை செய்துகொண்டதுடன் தங்களை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என உலகிற்கு அறிவிக்கும் பொருட்டு ரிஎன்ஏ என்ற அமைப்பொன்றை நிறுவி அவர்களை தேர்தலில் நிறுத்தியதுடன், தமது அரசியல் அங்கீகாரத்திற்காக அவ்வமைப்பை வெல்ல வைக்கும் நோக்கில் தமது முழு ஆயுதப்பலத்தையும் பிரயோகித்து அவ்வமைப்பினை வெல்லவும் வைத்திருந்தார்கள். ஆனால் இத்தேர்தலானது புலிகள் முற்றிலும் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட நிலையில் மக்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே எமக்கு இங்கு சாதகமான நிலை உள்ளதாகவே தோன்றுகின்றது.

நேர்காணல்கள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. XIII

Read more...

Friday, March 12, 2010

1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்! - கிறேசியன்! (பாகம் -6,7)

மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞரைக் காட்டி அவர் யார் என்று கேட்டேன்?அவர்தான் ஈ.பி.ஆர்.எல்.எப். யாழ்மாவட்டப் பொறுப்பாளர் தோழர். முகுந்தன் என்றார். அவர் பட்டிருக்கும் சித்திரவதையை ஒப்பிடும் போது நாம் பட்டவை சாதாரணமாகத்தான் தெரிந்தது எனக்கு. அவரிடமும் ஏதோ விசாரித்துவிட்டு தனியாக அமரவைத்தனர்.

ஏறக்குறைய இரண்டுமணி நேரம் கழித்து மீண்டும் ஒரு பெரிய பேப்பர் கட்டுடன் வந்தனர் வான்மீனும் ஏனைய இரு புலிகளும். எனது பெயர். உறவினர் பெயர் விவரங்கள், நண்பர்களது பெயர் விபரங்கள் போன்றவற்றை எழுதிப் பதிவு செய்து கொண்டனர். இரவு ஏழுமணியளவில் எனது பழைய இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணை என்று எதுவும் இல்லை! வெறும் அடியும் சித்திரவதையும்தான் விசாரணை என்ற பெயரில் நடக்கிறது. விசாரணை நடத்துவதற்கான எந்தவிதத் தகுதியும் இல்லாத வெறும் விடலைக் கொலைகாரர்கள்தான் துப்பாக்கிகளுடன் அதிகாரிகளாக உருமாறியிருந்தனர்.

முக்கிய இருப்பிடமான கோடுகளால் வரையப்பட்ட அந்த சதுரத்துக்குள் நான் அமர்ந்தேன். எனக்கு அருகில் றொலக்ஸ் முதலாளி தனது சதுரக் கோட்டுக்குள் நிமிர்ந்து விறைப்பு ஏற்பட்டவர் போல் சப்பணி போட்டு அமர்ந்திருந்தார்.

எனது கால்களை மடித்துக்கொண்டு இருக்க முடியவில்லை. பின்பகுதியிலும் பலமாக அடித்ததால் என்னால் சரியாக அமர முடியவில்லை. வலியினால் சற்றுச் சரிந்தேன். காவலுக்கு நின்ற புலி ஒன்று நேராக என்னை நோக்கி வந்து தனது காலால் எனது விலாப்பகுதியில் உதைத்தார். “எழும்படா” “சரியா அந்தப் பெட்டிக்குள் இருக்கவேனும்” என்றார். மதியம் அடித்த அடிகளால் விலாபகுதியில் கண்டல் ஏற்பட்டிருந்தது. இவர் உதைத்ததும் சதை பிய்ந்து போவது போன்று இருந்தது. கைவிலங்கை அகற்றினால் என்னால் சரியாக இருக்க முடியும் என்றேன். “அது வேறையா” என்று இன்னும் ஓர் உதை விட்டார் நெஞ்சினில். எனது வாயை சற்று அமைதியாக வைத்திருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்.

பகலிலும் சாப்பிடவில்லை. எனக்கு என்று உணவு எடுத்துவைத்திருந்தார் மூன்றாவது கோடுபோட்ட கட்டத்துக்குள் இருந்தவர். அந்த உணவுத் தட்டை என்னருகில் தள்ளிவிட்டார் அவர். ஆனால் எனது கைகளால் அந்தத் தட்டை எடுக்க முடியவில்லை. கையும் விரல்களும் விறைத்துப் போய் இருந்தன. நான் விரல்களை முன்னும் பின்னுமாக அசைத்தேன், வலிதான் ஏற்பட்டது. அந்த நேரம் இன்னும் ஓர் புலி வந்தது. உணவுத் தட்டையும் என்னையும் பார்த்துவிட்டு கைவிலங்கை கழற்றிவிடும்படி இன்னுமோர் புலிக்குச் சொன்னார். அவரும் வந்து கழற்றிவிட்டு விலங்கை எடுத்துச் சென்றார். தட்டில் இருந்த உணவை கைகளில் கொட்டும்படி கூறி அப்படியே உண்டேன். தண்ணீர் குடித்ததும் என்னை அறியாமலேயே சரிந்து விழுந்து உறங்கிவிட்டேன்.

மறுநாள் காலை எழுந்திருக்க முடியவில்லை. கண்விளித்த போது “ஏன்தான் உலகம் விடிகிறதோ” கடந்த இரவு உறக்கத்தில் இருந்திருந்தால் நல்லது போல் தோன்றியது அன்று. என்னால் எழுந்திருக்க முடியாது என்பதை அங்கே இருக்கும் மருத்துவம் பார்ப்பவர் புரிந்து கொண்டார் போலும், நான் கேட்காமலேயே அவர் “மூவ்” ஓயின்மென்ரைக் கொண்டு வந்தார். அவருக்கும் கால்களில் சங்கிலி விலங்கிட்டு வெல்டிங் செய்யப்பட்டிருந்தது. அவர் என்னை தூக்கி அமர வைத்து அந்த கழிம்பை எனது உடலில் தேய்த்துவிட்டார்.

அவரது பெயரை மறந்து விட்டேன். அவர் யாழ்ப்பாணம் பொது மருத்துவ மனையில் பணியாற்றியுள்ளார். மருந்துகள்பற்றி அவருக்கு ஓரளவு தெரியும். இவர் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்களுக்கு உதவிகள் செய்துள்ளார். அதனால் இவரை அடிமையாக்கி விலங்கிட்டு இங்கு வைத்துள்ளனர். அவரும் பல கண்டங்களைத் தாண்டி உயிருடன் இருப்பதாகக் கூறினார்.

காலைக் கடன் கழிக்க நான் கழிவிடம் செல்லவில்லை. ஏனையோர் தங்கள் கடன்களை கழித்து மீண்டும் வந்து அமர்ந்தனர். புலிகள் வந்தனர், வழக்கம் போல் பட்டியலில் உள்ள இலக்கங்களைப் படித்தனர். 10பேர் வரை எழுந்து சென்றனர். ஏனையோர் அவர்களது முகங்களை அனுதாபத்தோடு பார்த்தனர். அப்படி எழுந்து சென்றவர்களில் றொலெக்ஸ் ஹொட்டல் உரிமையாளரும் இருந்தார். இலக்கத்தை அழைத்த புலியின் அருகில் சென்றதும் அந்தப் புலி எப்படியிருக்கிறாய் குகன்? என்று முதுகில் தட்டினார். றொலெக்ஸ் ஹொட்டலின் உரிமையாளின் பெயர் குகன் என்பது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.

கால்விலங்குடன் 10பேரும் வரிசையாக நடந்து ஏற்கனவே என்னைச் சித்திரவதை செய்த பகுதிக்கு அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்திலெல்லாம் மரண ஓலம் கேட்க ஆரம்பித்தது. இந்த ஓலங்களைக் கேட்டு அங்கிருந்தவர்களுக்குப் பழகிவிட்டது போலும், மரணத்தை நோக்கி இருப்பவர்களுக்கு இவை எல்லாம் வலியாகத் தோன்றவில்லைப் போலும்.

சுமார் 10மணியளவில் மூன்று பேர் எங்கள் பகுதிக்கு வந்தனர். உள்ளே வந்த ஒருவர் அமர்ந்திருக்கும் ஒரு இளைஞரை சைகையினால அழைத்தார். இவர் எழுந்து புலியின் அருகில் சென்றார். இன்னும் அருகில் வரும்படி கூறினார். அருகில் சென்றதும் அந்தப் புலி தனது வலது உள்ளங்கையினால் அந்த இளைஞரது மூக்கில் குத்தினார். இரத்தம் சீறிட்டுப் பாய்ந்தது, “போய் இரடா இடத்தில்” என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

எந்தவிதத் தொடர்பும், சம்பந்தமும் இல்லாமல் ஒருவர் வந்து இளைஞர் ஒருவரின் மூக்கை உடைத்துவிட்டுச் செல்கிறார். யார் இவர்? ஏன் இப்படிச் செய்துவிட்டுச் செல்கிறார்? என்பதை அறிய ஆவலாக இருந்தது. எனது சதுரக் கோட்டுக்கு இடது புறமாக 55, 60 வயது மதிக்கத் தக்க ஒருவர் இருந்தார். இவரை எதற்காக அழைத்துவந்துள்ளனர் என்று அவரிடமும் கேட்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகவே இருந்தது எனக்கு.
முதலில் மூக்குடைக்கும் நபரை அறிவோம் என்ற எண்ணத்தில் அவரிடம், “ஐயா உங்கள் பெயர் என்ன என்று கேட்டேன். “ அப்பையா” என்றார். அப்பையா அண்ண, இப்பவந்து ஒரு சகோதரனது மூக்கை உடைத்துவிட்டுப் போகிறாரே அவர் பெயர் என்ன என்று கேட்டேன்.

தன்னைச் சுற்றி நோட்டம் விட்டார் அப்பையா அண்ணன். தலையைக் குனிந்து கொண்டு சொன்னார், இவன் தான் கேடி. இவன் மகா கொடியவன், கொடோனுக்குள் வந்தால் இரத்தம் காணாமல் செல்ல மாட்டான். இன்றைக்கு மட்டும் தான் ஒரு தம்பியின் மூக்கை உடைத்துவிட்டுச் சென்றுள்ளான். கடந்த ஒரு கிழமையாக இவனைக் காணவில்லை, இன்றைக்குத்தான் வந்துள்ளான். ஒவ்வொரு நாளும் வருவான் தனது கண்ணில் யார் படுகின்றனரோ அவரை அழைப்பான் அருகில் சென்றதும் உள்ளங்கையின் அடிப்பகுதியால் மூக்கில் குத்துவான். மூக்கு உடைந்து இரத்தம் வந்தால்தான் விடுவான்.

தப்பிதவறி யாராவது கைகளால் தடுத்தாலோ, தலையை பக்கவாட்டில் சாய்த்தாலோ அவனுக்குக் கோபம் வந்துவிடும். தலை மயிரைப் பிடித்துக்கொண்டு வலது கையை மூடி நேராக மூக்கில் குத்துவான். இரத்தம் கண்டபின் மீண்டும் தலை முடியைப் பிடித்து முன்புறமாக இழுத்து தனது முழங்கையால் முதுகில் குத்துவான். புதிதாக வந்தவர்களைத் தவிர ஏனைய அனைவரும் இவனால் மூக்கு உடைக்கப்பட்டவர்கள்தான். எனது மூக்கையும் இரண்டுதடவை உடைத்துள்ளான். தம்பி உம்முடைய மூக்கையும் கவனமாகப் பார்த்துக்கொள்ளும் என்று எனக்கு ஆலோசனை வழங்கினார்.

இப்போ விசாரணைப் பகுதியில் அலறும் சத்தம் அதிகரித்துக் கொண்டிருந்தது, கேடியும் அப்பகுதிக்குச் சென்று அந்த இளைஞர்களைத் தாக்கிக் கொண்டிருந்தார். எங்கள் பகுதி காவல் புலிகளும் எதையோ சாப்பிட்டுக்கொண்டு விசாரணைப் பகுதியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். நான் அப்பையா அண்ணனிடம், அண்ண, உங்களை எதற்காகப் பிடித்து வந்தவையள்? என்று கேட்டேன்.

தம்பி, என்னுடைய மகளை வரதராஜப் பெருமாளின் தம்பி மூர்த்தி திருமணம் செய்துள்ளார். அவரைத் தேடிவந்த இந்தப் புலிகள் என்னை இழுத்துவந்து கொடுமைப்படுத்துகிறார்கள். உன்னை அடித்தது போன்று என்னையும் கொடுமைப்படுத்தினார்கள். பலதடவை என்னை, இப்படிச் சித்திரவதை செய்யாமல் கொன்று விடுங்கள் என்று கெஞ்சியிருக்கிறேன். கொல்கிறார்கள் இல்லை! என்று அழுவதற்கு ஆரம்பித்தார். நானும் அதற்கு மேல் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டேன்.

நான் விறைத்துப்போன எனது கைவிரல்களை முன்னும் பின்னும் ஆட்டி பயிற்சி செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து கொண்டிருந்தேன். எனது பகுதிக்கு ஏறக்குறைய அறுநூறு பேருக்கும் மேல் இருந்தனர் விலங்குகள் இடப்பட்டு. மதிய நேரம் வெய்யில் அதிகமாகும் போது மனித வியர்வையும் அதிகரிக்கும். அந்தக் கோடவுண் முழுவதும் வியர்வை நாற்றம் ஏற்பட்டுவிடும், வெறும் உடலில் சட்டை எதுவும் யாருக்கும் கிடையாது. பலர் வெறும் சரத்துடனும், சிலர் வெறும் கால்சட்டையுடனும்தான் இருந்தனர். புலிகள் வரைந்த கோடுகளுக்கு நடுவில் அனைவரும் வரிசையாக அமர்ந்திருப்பதை எழுந்து நின்று பார்த்தால் ஆங்கிலேயர் ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்களை அடிமைகளாக்கி விற்பனைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படும் திரைப்படக் காட்சிகள் நினைவுக்கு வரும்.

பிற்பகலில் உணவு வந்தது. சோறு, அதனுடன் சோயா பீன்சும் பருப்பும் கலந்த சாம்பாருக்கும் சொதிக்கும் இடைப்பட்ட ஓர் திரவமாக இருந்தது. நான் வீட்டினில் மூன்று பிளேற் சோறு சாப்பிடுவேன். இப்படி அதிகமாகச் சாப்பிடாதேயடா என்று அம்மா கூட அடிக்கடி சொல்வா, இவர்கள் கொடுத்தது பாதிப் பிளேற் அளவு சோறுதான். பிளேற்றைப் பார்த்ததும் இதயம் கனத்தது. இந்தச் சோற்றைச் சாப்பிட்டு எனது பசி எப்படி அடங்கப் போகிறது என்று பெரும் கவலையாக இருந்தது. வேறு வழி கிடையாது. வலித்துக் கொண்டிருந்த கைகளைப் பயன்படுத்தி சோற்றைக் குழைக்காமல் அள்ளி வாயில் போட்டு உண்டேன். சாப்பிட்டு முடிந்ததும் எல்லாரும் பெட்டிகளுக்குள் சரியாக அமரும்படி புலிக்காவலாளி ஒரு உரத்த குரலில் கத்தினார். அவரது உத்தரவுபடி நாங்கள் நிமிர்ந்து கோடுகளில் நடுவில் அமர்ந்தோம்.

மாலை ஆறுமணியளவில் விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்ட சகோதரர்களை அழைத்து வந்தனர் புலி விலங்குகள். நடக்க முடியாமல் நொண்டிக்கொண்டும், சரிந்த நிலையிலும், சிலர் கால் சங்கிலி தடக்கி விழுந்து எழுந்தும் எமது மண்டபத்துக்கு வந்து சேர்ந்தனர். எனக்கு அருகில் வந்து நின்றார் றொலெக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் குகன்.

அவரால் நிலத்தில் அமர முடியவில்லை. அமருவதற்கு முற்பட்டவர் விழுந்து போவேனோ என்று பயந்தார். நான் சற்று அருகாமையில் நகர்ந்து எனது தோளில் கைகளை ஊன்றிக் கொண்டு அமரும்படி கூறினேன். அவரும் எனது தோளில் கையை வைத்தார். அவருக்கும் கைவிலங்கிட்டு அடித்திருப்பார்கள் போலும், ஐயோ, அம்மா என்று அலறிக்கொண்டு அமர முற்பட்டார். அவரது நிறை ஏறக்குறைய 120 கிலோவுக்கும் மேல் இருக்கும். அவர் கைவைத்த எனது தோள்பகுதி ஏற்கனவே புலி விலங்குகளின் அடியால் கண்டலாகி இருந்தது. குகன் அழுத்தி அமர்ந்ததில் எனக்கும் வலி அதிகமானது.

அமர்ந்ததும் குகன் அழுவதற்கு ஆரம்பித்தார். நான் எந்தத் தவறும் செய்ய வில்லை. ஈ.எபி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உயிர்தப்பிச் செல்ல உதவினேன். புலிகள் கூட என்னிடத்தில் உதவிகள் பெற்றனர். ஐ.பி.கே.எப். இருந்த போது புலிகளுக்கு உணவு கொடுத்துள்ளேன். காசு கொடுத்துள்ளேன், வேறுபல உதவிகள் கூட செய்துள்ளேன். தமிழ் இளைஞர்கள் கொல்லப்படும் போது அவர்களைக் காப்பாற்ற உதவி செய்தேன். அதற்காக இப்படிக் கொடுமைப் படுத்துகிறார்களே என்று மீண்டும் மீண்டும் விக்கலெடுத்து அழுதார்.

அவரது உடல் முழுவதும் சிவந்து இரத்தக் கண்டல்களாக இருந்தன. இவரை விசாரித்த புலிவிலங்கின் பெயர் அம்புறோஸ், துணைக்கு நின்ற புலி விலங்குகள் மஞ்சு மற்றும் கௌதமன் ஆகிய இருவரும் ஆவர். குகனை மிக அதிகமாகத் தாக்கியவர் மஞ்சுதான்.

குகன் எந்த இயக்கத்திலும் அங்கத்தினர் அல்ல, தமிழர்கள் அனைவரும் விடுதலைக்காக ஏதாவது ஓர் இயக்கத்தினை ஆதரித்தனர் என்பது நாடறிந்த உண்மை. தமிழ் மக்களது உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டது விடுதலைக்காகத்தான். விடுதலை இயக்கங்களை வழி நடத்தியவர்கள் தமிழ் மக்களது தியாக உணர்வினை சரிவரப் பயன்படுத்தத் தெரியாதவர்களாக இருந்தனர். தொண்டர்களும் உறுப்பினர்களும் தம்மை அர்ப்பணிக்க முன்வந்தனர். தலைமைகளுக்கிடையில் புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, கூட்டுத் தலைமை என்பன போன்ற பொதுத் திட்டங்கள் இருந்ததில்லை. துப்பாக்கி ஏந்திய வல்லுநர்கள் ஏனையோரை அழித்துவிட்டு ஆதிக்க வாதிகளாக தம்மைக் காட்டிக்கொள்ள தமிழ் இளைஞர்கள் பலியிடப்பட்டனர்.
எனக்கு மருந்து தடவிய அதே தயாபரன் மீண்டும் வின்டோஜனுடன் வந்தார்.
(தொடரும்…)

(பாகம்-7)

எனக்கு மருந்து தடவிய அதே தயாபரன் மீண்டும் வின்டோஜனுடன் வந்தார். விசாரணை முடிந்ததும் இது வழக்கமாக நடைபெறும் சிகிச்சையாக இருந்ததால் அவரும் தமது கடமையை நிறைவேற்ற றொலெக்ஸ் ஹொட்டல் உரிமையாளருக்கும் எனக்கும் இடையில் வந்து அமர்ந்தார். குகன் அவர்களுக்கு மருந்து தடவ ஆரம்பித்தார். அவரும் வலி நிவாரணச் சொற்களான அம்மா, ஐயோ என்று முனகிக் கொண்டிருந்தார். புலி விலங்குகள் விலகிச் சென்று அவர்களுக்குள் ருசிகர கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அப்போது தயாபரன் அவர்களது வரலாறுபற்றி அறிந்துவிடலாம் என்ற ஆர்வம் மேலோங்கியது. “அண்ணே” என்று தயாபரன் அவர்களை அழைத்தேன். அவரும் திரும்பிப் பார்த்து என்னவென்று தலையை ஆட்டிக் கேட்டார். உங்களை எதற்காக இவையள் பிடித்துவந்திருக்கினம் என்று கேட்டேன்.

தயாபரன் தொடர்ந்தார் – தம்பி, எனது சொந்த ஊர் அரசடிவீதி, கட்டுடை, மானிப்பாய். நான் யாழ்ப்பாணம் பெரிய ஆசுப்பத்திரியில் வரவேற்புப் பிரிவில் வேலை செய்து வந்தேன். இயக்க உறுப்பினர்கள் யார் வந்தாலும் நான் முன்னின்று அவர்களுக்கு உதவி செய்வேன். முன்னர் புலிகள், ரெலோ, புளொட் என்று யார் வந்தாலும் விழுந்து விழுந்து உதவி செய்வேன்.

பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் பல பேரை அழைத்துவந்தனர் ஆசுபத்திரிக்கு அவர்களுக்கும் நான் உதவிகள் செய்தேன். ஐ.பி.கே.எப். (இந்திய இராணுவம்) வெளியேறியதும் புலிகள் வந்து என்னைப் பிடித்து வந்தனர். எதற்காக என்னைப் பிடித்து வந்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு, “நீ எங்கட ஆக்கள ஈ.பி.க்கு காட்டி குடுத்து கொலை செய்திருக்கிறாய்” என்று பெட்டிசம் வந்திருக்கு. விசாரிச்சுப் போட்டு விடுறம் என்று கூறி இறுதியில் இந்த மரணக் குகைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

விசாரண முடிந்துவிட்டதா என்று கேட்டேன். எந்த விசாரணையும் நடைபெறவில்லை. காட்டிக் கொடுத்தாயா? கற்பழித்தாயா? கொள்ளையடித்தாயா? இவைதான் அவர்களது கேள்வி. என்னை பதினைந்து நாட்களுக்கும் மேலாக அடித்து சித்திரவதைச்செய்தனர். இங்கு வந்து செல்லும் புலிகள் அத்தனை பேரும் எனது உடலைப் பதம் பார்த்தவர்கள்தான். என்ன செய்வது தமிழனாக ஏனடா பிறந்தோம் என்று வருந்துவதைத் தவிர வேறு என்னத்தான் நினைப்பது என்று வருந்திச் சொன்னார்.

அதற்கிடையில் புலி விலங்குகளால் தாக்கப்பட்ட ஏனைய சகோதரர்கள் வலியினால் துடித்துக்கொண்டிருநதனர். அவர்கள் இவரை அழைத்தனர். அங்கு இருக்கும் அத்தனை பேருக்கும் இவர்தான் மருத்துவர். வின்ரோஜனில் சிறிது அளவு என்னிடத்தில் தந்து குகன் அவர்களுக்கு போடும்படி கூறிவிட்டு அவர் தனது கடமையைச் செய்ய அடுத்த சகோதரரிடத்துச் சென்றார்.

என்னிடமிருந்த வின்ரோஜனை குகன் அவர்களுக்கு தேய்த்தேன். விரல்களில் படாமல் உள்ளங்கையின் ஓரமாக கழிம்பை தேய்த்துவிட்டேன். அந்தக் கழிம்பு எனது கையில் படும்போது எனது வலிக்கும் மருந்தாக அமைந்தது. இரவு ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டு நித்திரையானோம்.

காலையில் கடன் கழிக்க வரிசையில் நின்றோம். அந்தவேளை அருகில் இருந்த கொடவுனிலிருந்தவர்களும் வரிசையாக காலை கடன் கழிக்க வந்திருந்தனர். இன்று குளிக்கும் தினம் என்று கூறிக்கொண்டார்கள்.

ஒன்றரை லிற்றர் கொள்ளளவு கொண்ட ரின் ஒன்றைக் கொடுத்தனர். காலைக் கடன் முடிந்து தண்ணீர் தொட்டிக்கு அருகில் வந்து வரிசையாக நிற்கும்படி கூறினர். 10 ரின் தண்ணீர் மட்டுமே எடுக்க வேண்டும். சவற்காரம் கிடையாது துடைக்க துவாய் கிடையாது, வெறும் தண்ணீரை தலையில் ஊற்றி கைகளினால் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஏற்கனவே உடல் அழுக்கேறி இருந்தது. தண்ணீர் ஊற்றியதால் ஈரமானதே தவிர அழுக்கு எதுவும் போகவில்லை. உடுத்தியிருந்த சரத்துடன் குளித்தேன். அனைவரும் அப்படித்தான் குளித்தார்கள். யாருக்கும் சவற்காரம் கிடையாது. குளித்து முடிந்ததும் சரத்தைக் கழற்றி பிழிந்து உதறிவிட்டு மீண்டும் உடுத்திக் கொண்டேன்.

இந்த வேளை அருகிலிருந்த கொட்டகைக்கு மேற்குப் புறத்தில் பல இடங்களில் குழிகள் வெட்டப்பட்டு அதன் மேல் நீலநிற பொலித்தீன் கொண்டு பந்தல் போல் அமைக்கப் பட்டிருந்தது. இடையிடையே பெரிய கிடங்குகளும் தென்பட்டன. ஏறக்குறைய 50அடி நீளம் 50அடி அகலம் 15 அடி ஆழம் வரையிலும் சில கிடங்குகள் இருந்தன. அவற்றிலிருந்து ஏணிகள் மூலம் விலங்குகள் இட்டு கழிப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தனர்.

இது என்ன கொடுமை, நாங்கள்தான் கொடுமையில் உளல்கிறோம் என்றால் இவர்கள் படும் கொடுமை எங்களையும் விட அதிகமாக இருக்கும் போல் தோன்றிற்று. அந்தச் சகோதரர்கள் யாராக இருக்கும் என்று அறிய எனது மனம் அலைபாய்ந்தது. யாரிடத்துக் கேட்கலாம் என்று யோசிக்கும் வேளை, நடவுங்கள் கொடோனுக்கு என்றனர். மெதுவாக நடந்து இருப்பிடம் அடைந்தேன் குகன் அண்ணனும் அப்பையா அண்ணனும் குளித்துவிட்டு அதே ஈரச் சரத்துடன் வந்து அமர்ந்தனர்.

11மணியளவில் அரை றாத்தல் பாண் தரப்பட்டது பருப்புடன். இந்தச் சமையலைச் செய்வதும் எமது சகோதரர்கள் தான். இரண்டு வகையான சமையல் செய்யப்படும். கைதிகளுக்கு என்று தரக்குறைந்த சமையல், புலிகளுக்கென்று தனி மாமிச உணவு, இவற்றை சமைப்பது கைதிகள்தான். அவர்களுக்கான கால்விலங்கு ஏனையோரை விட அரையடி அதிகமாக விட்டு வெல்டிங் செய்யப்பட்டிருந்தது. புலி விலங்குகளுக்கு சமைக்கும் போது புலியின் நபர்கள் கதிரைகள் மீது இருந்து பார்த்துக் கொண்டிருப்பார்களென்று விபரம் கூறினார் அப்பையா அண்ணன்.

நான் இப்போது அங்கு இருக்கும் சகோதரர்களைப் பார்த்துப் புன்னகைக்க ஆரம்பித்தேன். சிலர் என்னைப் பார்த்து புன்னகைத்தனர். இந்தப் புன்னகைகள் மனதளவில் கிடையாது. உதட்டளவில் பதிலுக்கு ஆமோதிப்பது போன்று இருந்தது அவர்கள் புன்னகை. ஏனெனில் இவர்கள் அனைவரது இதயங்களும் அவர்களது கைகளில் இல்லை. புலி என்ற விலங்குகளின் கைகளில் அவர்களது உயிரும் உடலும் இருந்தன!

எனக்கு நேர் முன்வரிசையில் அமர்ந்திருந்தவரது பெயர் பிரசாந்த். இவர் றெலோ இயக்கத்தைச் சேர்ந்தவர். கிளிநொச்சி மாவட்டத்தின் ரெலோ இயக்க அரசியல் பிரிவுப் பொறுப்பாளராக இருந்தவர். இவரது காலில் தொடர்ந்து புண் இருந்து கொண்டே இருந்தது. கால்களில் கட்டைகளால் அடிக்கும் போது இரத்தக் கண்டல் ஏற்பட்டு புண்ணாகியிருந்தது. அதன் மேல் கால்விலங்கும் போடப்பட்டு வெல்டிங் செய்திருந்தபடியால், அந்த விலங்கு தொடர்ந்து அந்தப் புண்களில் உரசிக் கொண்டே இருந்தது. இதனால் இருப்பதும் எழுந்து நடப்பதும் அவருக்கு ஓர் தண்டனையாகவே இருந்தது.

இருந்தாலும் அவர் மனவுறுதியுள்ளவராக இருந்தார். இவர்களால் (புலிகளால்) என்னை சித்திரவதைச் செய்துக் கொல்லத்தான் முடியும், நாங்கள் அனைவரும் ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். இறந்த பின் நாம் எங்கே போகிறோமோ அங்கேதான் இந்தப் புலிகளும் பின்னாளில் வரவேண்டும். அங்கே நான் அப்போ சீனியராக இருப்பேன் என்று எனக்கு விளக்கமளித்தார் பிரசாந் அவர்கள். எனக்கும் இவரது கூற்றுச் சரியாகத்தான் பட்டது. ஏன் பயந்து பயந்து வாழ வேண்டும், இவர் (பிரசாந்த்) சாகும் போது நானும் சேர்ந்து செத்தால் போகிற இடத்தில் சீனியராக இருக்கலாம், இந்த விலங்குகள் அங்கு ஒரு நாள் வரத்தானே வேண்டும் என்று நானும் சிந்திக்கலானேன்!

எனக்கு அருகில் இருக்கும் றொலெக்ஸ் உரிமையாளர் அவ்வளவாக கதைக்க மாட்டார். கேள்வி கேட்டால் மட்டுமே பதில் சொல்வார். அந்தப் பதிலும் இரண்டொரு வார்த்தைகளில் முடிந்துவிடும். மறுபுறத்தில் இருக்கும் அப்பையா அண்ணன் கதைக்கக் கூடியவர், புலி விலங்குகளுக்குப் பயந்து தலையைக் கீழே நோக்கிக் கொண்டுதான் கதைப்பார். அதனால் அவர் சொல்வது பாதி அளவுதான் விளங்கும்.

எனக்கோ அந்தக் கிடங்குகளில் இருக்கும் சகோதரர்களை யார் என்று அறிய வேண்டும் என்ற ஆவல் மிகுதியாக இருந்தது. எனக்குத் தெரிந்த யாராவது இருப்பார்களோ என்ற அச்சமும் இருந்தது. தனித் தனிக் குழிகளும் இருந்தன, பெருங் குழிகளும் இருந்தன. நாளைக்கு எப்படியாவது இதன் இரகசியத்தை அறிந்து விட வேண்டும் என்று தீர்மானித்தேன்.

நான் இருக்கும் மண்டபத்தின் மேற்குப் பகுதிக்குச் சென்றால், அதிலிருந்து முப்பது நாற்பது அடி தூரத்தில்தான் அந்தக் குழிகள் ஆரம்பித்தன. எப்படியாவது மேற்கு நோக்கி நகர வேண்டும். மறுநாள் நாள் நான் எதிர்பார்த்த மேற்கு நோக்கிய பயணம் தானாகவே நடந்தது. ஆம், புலி விலங்குகள் இங்கு இருப்பவர்களை தொடர்ந்து ஒரே இடத்தில் இருப்பதற்கு விடுவதில்லையாம். ஒரே இடத்தில் இருந்தால் ஒருவருக்கு ஒருவர் பழக்கம் ஏற்பட்டு ஏதாவது திட்டங்கள் போட்டுச் செயற்படுத்த வாய்ப்பு உண்டு என்று யோசனை செய்து ஒரு முனையில் இருப்பவரை மறுமுனைக்கும் வடக்கில் இருப்பவர் கிழக்குக்கும் என்று தலைகீழ் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தினர் அந்தப் புலி விலங்குகள்.

நான் எதிர்பார்த்திருந்த மேற்கு மூலைக்குச் சென்று ஒரு சதுரக் கோட்டின் நடுவில் நின்றுகொண்டேன். ஒவ்வொருவரும் அவ்விதம் நின்று கொண்டதும் சத்தம் போடாமல் இருக்கும் படி கூறினர். கடந்த இரவு கூட எம்மவரில் ஏழு பேரது இலக்கங்களையும் பெயர்களைக் கூறி அழைத்துச் சென்றனர். அப்படி அழைத்துச் செல்பவர்கள் மீண்டும் இந்தக் கொட்டகைக்குத் திரும்பி வருவது கிடையாது. இங்கு காவலுக்கு நிற்கும் புலி விலங்குகளும் மனிதப் பண்புகளைக் கொண்ட வார்த்தைகளைக் கதைப்பது கிடையாது. யாரை என்றாலும் வாடா, போடா என்று தூசண வார்த்தைகளைத்தான் பயன்படுத்துவர். இவர்களில் ஒருவர் மட்டுமே தூசண வார்த்தைகள் பேசவில்லை. அவர் சலீம் என்ற சேர்லி அம்மான் ஆவார். இவர்தான் இந்தச் சிறைக்கு பொறுப்பானவர். இவர் பின்னாளில் புலிவிலங்குகளை விட்டு விலகி தனது சொந்தக் குடும்பத்தைக் கவனிக்கச் சென்றுவிட்டதாக அறிந்தேன்.

நான் கிடங்கு இருக்கும் பகுதியை நோட்டம் விடுவதையே எனது கடமையாகச் செய்து வந்தேன்.

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 1,2,3

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 4


1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 5



தொடரும்…

இது தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. T111

Read more...

ஐ.நா. சபையின் நல்லெண்ணத் தூதராக சச்சின நியமனம்

இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர், ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட (யு.என்.இ.பி.) நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் சச்சின். சமீபத்தில் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து புதிய சாதனையும் படைத்தார். பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரரான சச்சினை தனது திட்டத்தின் நல்லெண்ணத் தூதராக யுஎன்இபி நியமித்துள்ளது.

உலகளாவிய அளவில் அவருக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் விழிப்புணர்வுத் திட்டங்களைப் பிரபலப்படுத்தவும், சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்கவும் யுஎன்இபி திட்டமிட்டுள்ளதாக அதன் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சச்சின் கூறுகையில், இதுவரை உலகம் முழுவதும் நான் விளையாடியுள்ளேன். எனது கிரிக்கெட்டை பல்வேறு நாடுகளில் அனுபவித்து வந்தேன். இப்போது இந்த உலகுக்காக எனது பங்கை செலவிடும் நேரம் வந்துள்ளது.

உலகைக் காக்கும் முயற்சிகளில் அனைவருக்கும் பங்குண்டு. இது நமது வீடு. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது மிகவும் சவாலானது. ஆனால் அந்த சவாலை ஏற்க நான் தயாராகி விட்டேன். யுஎன்இபியுடனும், உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுடனும் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளேன். அனைவரும் ஒருங்கிணைந்தால் பல அற்புதங்களைப் படைக்க முடியும் என்றார்.

ஐ.நாவுடன் சச்சின் இணைவது இது முதல் முறையல்ல. முன்பு ஐ.நா. குழந்தைகள் நிதியத்துடன் இணைந்து குழந்தைகள் சுகாதாரத் திட்ட பிரசாரத்தில் இந்தியாவில் ஈடுபட்டவர் சச்சின்.

யுஎன்இபியின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள சச்சின் இன்றே தனது பணியைத் தொடங்குகிறார். இன்று தொடங்கும் ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவின்போது அவர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க அதை ரசிகர்கள் திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்கவுள்ளனர்.

Read more...

த.தே.கூட்டமைப்பினரால் ஈழவேந்தனுக்கு கனடாவில் அச்சுறுத்தல் என்கிறது சங்கதி.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும், பிரபாகரனால் கூட்டமைப்பினுள் நேரடியாக உள்நுழைக்கப்பட்டிருந்தவருமான ஈழவேந்தனுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தர் குழுவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் புலிகளின் ஊதுகுழல்களின் ஒன்றான சங்கதி தெரிவிக்கின்றது.

வன்னியில் பிரபாகரன் மண்கவ்வியதை தொடர்ந்து புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமதாக்கி கொண்ட சம்பந்தன், மாவை, சுரேஸ் ஆகியோர் புலிகளியக்கத்தினால் கூட்டமைப்பினுள் உள்நுழைக்கப்பட்டோரை கதவுக்கு வெளியே தள்ளியுள்ளனர். இச்செயற்பாட்டில் அதிருப்தி அடைந்துள்ள ஈழவேந்தன் மேற்படி குழு சம்பந்மாக விமர்சித்துவருவாதாக தெரியவருகின்றது.

இடம்பெற இருக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈழவேந்தனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தால் அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்திருப்பாரா என்பது கேள்வியாகும்.

புலிகளின் அராஜகங்களை நியாயப்படுத்துவதற்கு முன்வந்தால் அவர்கள் கடந்த காலங்களில் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை செய்தவர்களாக இருந்தாலும் அவர்களை நாம் ஜனநாயகவாதிகளாகவும், தேசியத்தை மதிப்பவர்களாகவும் சித்தரிப்போம் என கங்கணம் கட்டி நின்று மண்டையன் குழுத் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரனை தமிழ் மக்களின் சிறந்ததோர் காவலன் என புகழாரம் சூட்டிய சங்கதி தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கனடாவில் அச்சுறத்தல் எனக் கூறுகின்றது.

அவ்வாறாயின் மண்டையன் குழு தற்போது கனடாவில் செயற்படுகின்றதா என்ற கேள்வி எழும்பியுள்ளது.

Read more...

மன்மோகன் சிங்கிற்கு ‘உலக அரசியல் மேதை’ விருது.

நடப்பு ஆண்டுக்கான சிறந்த உலகத் தலைவர் விருது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்படும் என அமெரிக்காவைச் சேர்ந்த அப்பீல் ஆஃப் கன்சைன்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் தனது இல்லத்தில் நேற்று நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்காவின் முன்னாள் அயலுறவுத் துறை இணை அமைச்சர் ஜான் நெக்ரோபான்ட் இந்தத் தகவலைத் தெரிவித்தார். இந்த விருதினை பிரதமர் மன்மோகன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார் என மீரா சங்கர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரௌன் (2009), பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி (2008), ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் (2007), பிரேசில் அதிபர் லூலா டி சில்வா (2006) ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

இலங்கை தேர்தல்: தமிழ் கட்சி நான்காக உடைந்தது.

(By W.A. Sunil)ஏப்பிரல் 8 இலங்கையில் நடக்கவுள்ள தேர்தலானது தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த மே மாதம் இராணுவத் தோல்வியடைவதற்கு முன்னதாக, அதன் அரசியல் குரலாக இயங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிளவை துரிதப்படுத்தியுள்ளது. போட்டியிடும் நான்கு பிரிவுகளில் எதுவும் தமிழ் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மாறாக, நடப்பது என்னவெனில், கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் நிலைமைகளையும் சலுகைகளையும் மீண்டும் ஸ்தாபித்துக்கொள்வதற்கான தமிழ் ஆளும் தட்டின் பகுதியினர் மேற்கொள்ளும் வெறுக்கத்தக்க முயற்சிகளேயாகும்.

புலிகளுக்கும் மற்றும் அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்துக்கும் இடையிலான யுத்த நிறுத்தமும், மற்றும் அதற்கு அடுத்த ஆண்டு நடந்த, சர்வதேச ரீதியில் அனுசரணையளிக்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளும் தொடங்குவதற்கு முன்னதாக, 2001ல் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் ஒரு கூட்டணியாகவே தமிழ் கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. "தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாமே" என்ற புலிகளின் போலி உரிமைகோரலை ஏற்றுக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, கொழும்பு பாராளுமன்றத்தில் புலிகளின் குரலாக செயற்பட்டதோடு எந்தவொரு சமாதான கொடுக்கல் வாங்கலிலும் ஒரு அரசியல் வகிபாகத்தை எதிர்பார்த்தது.

சமாதானப் பேச்சுக்கள் 2003ல் குழம்பிப் போனதோடு, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா மற்றும் ஏனைய சக்திகளதும் தந்திரோபாய ஆதரவுடன் 2006 நடுப்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தீவை மீண்டும் யுத்தத்துக்குள் தள்ளினார். இராணுவம் ஈவிரக்கமற்ற முற்றுகை யுத்தத்தை முன்னெடுத்தது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டு காயமும் அடைந்தார்கள். புலிகளின் தோல்வியின் பின்னர், இராணுவம் 280,000 தமிழ் பொது மக்களை தடுப்பு முகாங்களுக்குள் அடைத்து வைத்திருந்ததோடு இன்னமும் அங்கு 100,000 பேர் உள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏறத்தாழ உடனடியாகவே புலிகளிடமிருந்து தம்மை தூர வைத்துக்கொள்ளத் தொடங்கியது. ஜனவரி 26 நடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே அதன் உறுப்பினர்களிடையே பிளவு வெடித்தன. தமிழ் கூட்டமைப்பு, யூ.என்.பி. மற்றும் ஏனைய எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்த அதே வேளை, பல தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் இராஜபக்ஷவை ஆதரித்தனர். அதே சமயம் எம்.கே. சிவாஜிலிங்கம் ஒரு சுயாதீன வேட்பாளராக போட்டியிட்டார். இராஜபக்ஷ மீதும் மற்றும் யுத்தத்தின் போது இராணுவத்துக்குத் தலைமை வகித்த பொன்சேகா மீதும் வெறுப்பு கொண்ட, யுத்தத்தால் அழிக்கப்பட்ட வடக்கில் உள்ள 74 வீதமான வாக்காளர்கள், வாக்களிக்காமல் இருந்து விட்டார்கள்.

அப்போதிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மேலும் பிளவுபட்டது. இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை அமைப்பு (டெலோ), அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எஃப்.) ஆகிய கட்சிகள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகித்தன. இரு பகுதியினர் உத்தியோகபூர்வமாக பிரிந்துவிட்டனர். தமிழ் காங்கிரசும் மற்றும் சிவாஜிலிங்கம் தலைமையில் டெலோவில் ஒரு பகுதியினரும் பிரிந்துவிட்டனர். அதற்கும் மேலாக, மூன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் திசையமைவை, அதன் தலைவர் ஆர். சம்பந்தன் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் விளக்கினார். தீவின் தமிழ் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு "அரசியல் தீர்வு காண்பதற்காக" தேர்தலின் பின்னர் ஸ்தாபிக்கப்படும் "எந்தவொரு அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்த" கட்சி தயாராக உள்ளது எனத் தெரிவித்தார். இலங்கையின் இனவாத அரசியல் சூழ்நிலையில், "ஒரு அரசியல் தீர்வு" என்பது, வடக்கு மற்றும் கிழக்குக்கு அதிகாரத்தைப் பரவலாக்குவது சம்பந்தப்பட்ட, சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுக்கு இடையிலான ஒருவித அதிகாரப்-பகிர்வு ஏற்பாட்டையே குறிக்கின்றது.


சிங்கள மேலாதிக்கவாதத்தின் பரிந்துரையாளரான இராஜபக்ஷ, குறைந்தபட்சம் மாகாண மட்டத்தில் கூட எந்தவொரு கனிசமான அதிகாரப் பகிர்வையும் நிராகரிக்கின்றார். சுதந்திர முன்னணியின் முகாமில் வெட்கமின்றி நுழைந்துகொண்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமன், "நாட்டின் சிறுபான்மையினரின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய தன்னால் ஆன அனைத்தையும் ஜனாதிபதி இராஜபக்ஷ செய்வார்" என்ற எதிர்பார்ப்பை பற்றி பேசினாரே அன்றி, ஒரு "அரசியல் தீர்வு" பற்றி பேசவில்லை.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் இந்தியாவும் அரசியல் தீர்வொன்றை காணுமாறு கொழும்பு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. புது டில்லி இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை ஆதரித்த அதே வேளை, இலங்கையில் தொடரும் இனவாத முரண்பாடானது தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டின் ஸ்திரநிலைமைக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடும் என பீதி கொண்டுள்ளது. இந்தியா, தனது பிராந்திய எதிரிகளான சீனா மற்றும் பாகிஸ்தானும் கொழும்பில் செல்வாக்குச் செலுத்துவதை எதிர்ப்பதையிட்டும் அக்கறை காட்டுகிறது.

ஞாயிற்றுக் கிழமை திருகோணமலையில் உரையாற்றிய சம்பந்தன், கட்சி புது டில்லியுடன் கலந்துரையாடல் நடத்தி வருவதாகவும் இந்தியாவின் உதவியில் தங்கியிருப்பதாகவும் தெளிவுபடுத்தினார். "நீங்கள் எதிர்வரும் தேர்தலில் உங்களது மக்களிடமிருந்து பிரமாண்டமான மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டு எங்களிடம் வாருங்கள். நாங்கள் உங்களுடன் பேச தயாராக உள்ளோம். சுய மரியாதையுடன் வாழ உங்களுக்கு நாங்கள் வழி செய்வோம். நாங்கள் இந்தப் பணியில் இருந்து தவற மாட்டோம்," என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான இந்தியாவின் செய்தி என அவர் விளக்கினார்.

இந்தியாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுக்கும் வேண்டுகோள், கூட்டமைப்பின் அரசியல் வங்குரோத்தை மட்டுமன்றி, புலிகளது அரசியல் வங்குரோத்தையும் கோடிட்டுக் காட்டுகிறது. ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் முன்னெடுத்த தசாப்த கால தமிழர்-விரோத பாரபட்சங்களுக்கு எதிராகவே புலிகள் அமைப்பு தோன்றிய போதிலும், வடக்கு மற்றும் கிழக்கில் தனியான தமிழ் அரசுக்கான அதன் கோரிக்கை, தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்தது. தொழிலாள வர்க்கத்துக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்க இயல்பிலேயே இலாயக்கற்ற புலிகள், தமது திட்டத்தை யதார்த்தமாக்க எப்பொழுதும் "சர்வதேச சமூகத்திலேயே" தங்கியிருந்தனர்.

யுத்தத்தின் கடைசி மாதங்களின் போது, இராணுவத் தாக்குதல்களை நிறுத்த சர்வதேச அழுத்தத்தை கோரி அற்ப வேண்டுகோள் விடுக்குமளவுக்கு புலிகள் இறங்கி வந்தனர். அவர்கள் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு இராணுவ உதவி உட்பட இராஜதந்திர ஆதரவும் உதவியும் வழங்கிய இந்தியா உட்பட பெரும் சக்திகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இப்போது, தமிழர்களின் உரிமைகளில் அக்கறை இல்லாத, ஆனால் கொழும்பில் இந்தியாவின் செல்வாக்கை பெருக்கி கொள்வதற்காக தமிழர்களின் உரிமைகள் பற்றிய பிரச்சினையை பயன்படுத்திக்கொள்ளும் புது டில்லியின் பக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் திரும்பியுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை ஆற்றிய உரையில், இலங்கை அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்கள், தமிழ் பொது மக்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது, அல்லது இராஜபக்ஷவின் யுத்தத்தை இந்தியா ஆதரித்தமை போன்ற விடயங்கள் பற்றி சம்பந்தன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கடந்த மே மாதம், இலங்கை யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணையை தோற்கடிப்பதில் இலங்கை, சீனா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியாவும் இணைந்துகொண்டது.

எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையிலான டெலோ பிரிவு, தமிழ் தேசிய விடுதலை கூட்டணி என புதிதாகப் பெயரிடப்பட்டுள்ளது. அது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் உரிமையை பாதுகாக்கும் போராட்டங்களை கைவிட்டுவிட்டதாக குற்றஞ்சாட்டியது. கடந்த வாரம் நடந்த பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில், தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் "கைப்பொம்மையாக" செயற்படுவதாக சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டினார்.

எவ்வாறெனினும், சிவாஜிலிங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அடிப்படை வேறுபாடுகளைக் கொண்டிருக்கவில்லை. அவரது "அரசியல் தீர்வும்" ஒரு விதமான சமஷ்டி வடிவத்தையே கொண்டிருக்கின்றது. அவர் ஊடகங்களுக்கு விளக்கியது போல்: "நாட்டைப் பிரிக்காமல், ஒரு ஐக்கியப்பட்ட நாட்டுக்குள் சுயநிர்ணயத்தை நாம் எதிர்பார்க்கின்றோம்: ஒரு நாடு இரு இனங்கள்."

புது டில்லியுடனான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறவை கண்டனம் செய்த அதே வேளை, சிவாஜிலிங்கம் இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சியுடன் உறவு வைத்துள்ளார். கடந்த ஆண்டு இந்திய பொதுத் தேர்தலில் பாரதீய ஜனதாக கட்சியின் பிரச்சாரத்தில் செயலூக்கத்துடன் பங்கேற்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. தமிழ் நாட்டில், தமிழ் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பல கட்சிகளுடன் அவருக்கு தொடர்பு உண்டு.

முன்னாள் இடதுசாரிகளான நவசமசமாஜக் கட்சியினரும் தமிழ் தேசிய விடுதலை முன்னணியுடன் இன்றுமொரு சந்தர்ப்பவாத கூட்டை அமைத்துக்கொண்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கத்தை ஆதரித்த நவசமசமாஜக் கட்சி, தமிழ் தேசிய விடுதலை முன்னணியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைசாத்திட்டுள்ளதோடு அதில் இரு தரப்பினரும் "தமிழர்களின் சுய நிர்ணயத்தை" முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

தமிழ் காங்கிரசும் இதே போன்ற நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், "சுய நிர்ணய உரிமை, சுயாட்சி மற்றும் தாயகம் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆரம்ப கொள்கைகளுடன்" தொடர்வதாக யாழ்ப்பாணத்தில் ஞாயிரன்று நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். "தமது கோரிக்கைகளை அடைய இந்தியாவுடனும் சர்வதேச சமூகத்துடனும்" சினேகப்பூர்வமான முறையில் செயற்படுவதாக அவர் உறுதியளித்தார். "சர்வதேச சமூகம் இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கின்றது, அதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்," என அவர் மேலும் குறிப்பிட்டார்.

"சுயநிர்ணய உரிமைக்காக" அறைகூவல் விடுப்பது, தமிழ் வெகுஜனங்களின் உரிமைகளை காக்க எதுவும் செய்யப்போவதில்லை. தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழ் காங்கிரசின் இலக்கு, தொழிலாள வர்க்கத்தின் மீதான தமது சுரண்டலை உக்கிரப்படுத்த தமிழ் முதலாளித்துவத்தின் பகுதிகளுக்காக வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு தனியிடத்தை அமைத்துக்கொள்ளவேயாகும். இந்த வேலைத் திட்டம் ஒரு ஆபத்தான மரண முடிவு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும், புலிகளின் தோல்வியில் இருந்து அவசியமான பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் தோல்வி இராணுவத் தோல்வி என்பதை விட அடிப்படையில் அரசியல் தோல்வியாகும். உழைக்கும் மக்களுக்கு வர்க்க ரீதியில் வேண்டுகோள் விடுப்பதற்கு மாறாக, புலிகள் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க ஜனநாயக-விரோத வழிமுறைகளை மேலும் மேலும் நாடினர். சிங்கள பொது மக்கள் மீதான புலிகளின் பிற்போக்குத்தனமான தாக்குதல்கள், கொழும்பு அரசாங்கத்துக்கு பயன்பாடாக இருந்ததோடு தீவில் இனவாத பதட்ட நிலைமைகளையும் ஆழமாக்கியது.

சோசலிச சமத்துவக் கட்சியின் முன்நோக்கு, ஜனநாயக உரிமைகளுக்கான உறுதியான போராட்டத்தை முன்னெடுக்க இயலுமை படைத்த ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அதன் தேர்தல் பிரச்சாரம், தொழிலாளர்களின் பொது நலன்களுக்கும் மற்றும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்குமான போராட்டத்தில் இன, மொழி மற்றும் மத பேதமற்று தொழிலாளர்களை அணிதிரட்டுவதை இலக்காகக் கொண்டதாகும். சோசலிச சமத்துவக் கட்சி, தமிழர்களின் உரிமைகளை காக்குமாறும், வடக்கு கிழக்கில் இருந்து சகல பாதுகாப்பு படைகளையும் திருப்பியழைக்கக் கோருமாறும் மற்றும் சகல தமிழ் கைதிகளையும் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய கோருமாறும் சகல தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது.

ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமானது, சில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி, வெகுஜனங்களின் தேவைகளை அடையும் பொருட்டு சமுதாயத்தை சோசலிச முறையில் மாற்றியமைக்கும் பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும் என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. நாம் தெற்காசியா மற்றும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான பரந்த போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடுகிறோம்.

Read more...

Thursday, March 11, 2010

ஜெனரல் பொன்சேகாவிற்கான இராணுவ நீதிமன்ற விசாரணைகள் 16ம் 17ம் திகதிகளில்.

முன்னால் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா மீதான இராணுவ நீதிமன்றின் விசாரணைகள் எதிர்வரும் 16ம் 17ம் திகதிகளில் இடம்பெறும் என இராணுவப் பேச்சாளர் அறிவித்துள்ளார். இராணுவத்தில் இருக்கும்போது அரசியலில் ஈடுபட்டதாக 4 குற்றச்சாட்டுக்களும் , இராணுவத்திற்கான ஆயுதக்கொள்வனவில் மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக 4 குற்றச்சாட்டுக்களும் ஜெனரல் மீது சுமத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர், ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிரான குற்றப்பத்திரிகையின் பிரதியொன்று அவரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெறவுள்ள நீதிமன்ற விசாரணைகளுக்காக நீதிபதிகளாக மேஜர் ஜெனரல்கள் விஜேதுங்க, டி.ஆர்.ஏ.எஸ். ஜெயதிலக மற்றும் ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே. எஸ். பெர்ணாண்டோ ஆகியோர் இராணுவத் தளபதி ஜகத் டயசினால் ஜனாதிபதியின் அறிவுறையின் பேரில் நியமிக்கபட்டுள்ளனர்.

அதே நேரம் மேற்படி இராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்த்து ஜெனரல் தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணி உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அம்முன்னணியில் பங்கு கட்சியான ஜேவிபியின் முக்கியஸ்தர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இராணுவச் சட்டத்திட்டங்களின் பிரகாரம் ஜெனரல் பொன்சேகாவின் விசாரணைக்கான இராணுவ நீதிமன்றில் ஜெனரலிலும் பார்க்க பதவி உயர்ந்தவர்களே நீதிபதிகளாக இருக்க முடியும் என அவர்கள் நீதிமன்று செல்லவுள்ளனர்.

அத்துடன் ஜெனரல் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதற்காக முன்னாள் பிரத நீதியரசர் சரத் என் சில்வா தலைமையில் சட்ட வல்லுனர்கள் குழுவொன்று செயற்பட்டு வருவதாகவும் அனுர குமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.


Read more...

நளினி விடுதலை : தமிழக அரசின் ஆலோசனைக் குழுவின் அறிக்கை நீதிமன்றில்.

ந‌‌ளி‌னி‌ ‌விடுதலை தொட‌ர்பான ஆலோசனை குழு அ‌றி‌க்கையை செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் த‌மிழக அரசு தா‌க்‌க‌ல் செ‌ய்து‌ள்ளது. ந‌‌ளி‌னி ‌விடுதலை தொட‌ர்பாக வேலூ‌ர் மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் தலைமை‌யி‌ல் குழு கட‌ந்த ‌சில மாத‌ங்களு‌க்கு மு‌ன்பு ஆ‌ய்வு செ‌ய்தது.

இ‌ந்த வழ‌க்கை நே‌ற்று ‌விசா‌ரி‌த்த செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், த‌மிழக அர‌சிட‌ம் ஆலோசனை குழு வழ‌ங்‌கிய அ‌றி‌க்கையை சம‌ர்‌ப்‌பி‌க்க உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தது. இதை‌த் தொட‌ர்‌ந்து ந‌‌ளி‌னி‌ ‌விடுதலை தொட‌ர்பான ஆலோசனை குழு அ‌றி‌க்கையை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் த‌மிழக அரசு இ‌ன்று தா‌க்‌க‌ல் செ‌ய்தது.

அ‌ப்போது, ஆலோசனை குழு அ‌றி‌க்கை ‌மீதான முடிவை வரு‌ம் 29ஆ‌ம் தே‌தி தெ‌ரி‌வி‌ப்பதாக த‌மிழக அரசு கூ‌றியது. அர‌சி‌ன் இ‌ந்த ப‌திலை ஏ‌ற்று‌க் கொ‌‌ண்ட ‌உய‌ர் நீ‌திம‌ன்ற‌ம், வழ‌க்கு ‌விசாரணையை வரு‌ம் 29ஆ‌ம் தே‌தி‌க்கு த‌ள்‌ளிவை‌த்தது.

Read more...

அரசு ஊடகவியலாளர்களை பழிவாங்குவதை நிறுத்த வேண்டும் சர்வதேச மன்னிப்புச் சபை.

ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் பழிவாங்குவதை நிறுத்துமாறும், அவர்களை மிரட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் சிறிலங்க அரசை சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பும், மனித உரிமை கண்காணிப்பகமும் கேட்டுக்கொண்டுள்ளன.

ஜனவரியில் நடந்த முடிந்த அதிபர் தேர்தலிற்குப் பின்னர், ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களையும் மிரட்டி பணிய வைக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அம்னெஸ்டியும், மனித உரிமை கண்காணிப்பககும், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் 30 பேர் சிறிலங்க அரசின் புலனாய்வுப் பிரிவினரின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்விரு அமைப்புகளும் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில், “அரசை விமர்சிக்கும் ஊடகங்களை பழிவாங்கும் மிக துல்லியமாகத் திட்டமிடப்பட்ட நடவடிக்கையை சிறிலங்க அரசு மேற்கொண்டு வருகிறது. பத்திரிக்கையாளர்களும், மனித உரிமையாளர்களும் அச்சுறுத்தப்படும், கொல்லப்படும் இந்நாட்டில் இது மிகவும் அபாயகரமான, பொறுப்பற்ற செயல்பாடுகளாகும்” என்று மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குனர் பிராட் ஆடம்ஸ் கூறியுள்ளார்.

மாற்றுக் கொள்கைக்கான மையம் (Centre for Policy Alternatives - CPA), சிறிலங்கா பன்னாட்டு வெளிப்படை அமைப்பு (Transparency International Sri Lanka - TISL) ஆகிய மதிப்பு வாய்ந்த இரண்டு அமைப்புகளின் இயக்குனர்கள், அரசின் கண்காணிப்பு பட்டியலில் உள்ள ஊடகவியலாளர்கள், மனித உரிமையாளர்கள் ஆகியோர் குறித்து கவலை தெரிவித்து அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் எழுதியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள இவ்விரு பன்னாட்டு அமைப்புகளும், அரசை விமர்ச்சித்து, குறிப்பாக தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து எழுதிய பத்திரிக்கையாளர்களைக் குறிப்பிட்டு, அவர்களை ‘ஜனநாயகத்தை சீர்குலைப்பவர்கள்’என்று சித்தரித்து அரசு அதிகாரிகள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளன.

2008 செப்டம்பரில் டிசல் அமைப்பின் இயக்குனர் வீட்டின் மீது இரண்டு கையெறி குண்டுகள் வீசப்பட்டதையும், 2009 ஆகஸ்டில் சிபிஏ அமைப்பின் இயக்குனருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, “போர் முடிந்துவிட்டப் பின்னரும் தனது அடக்குமுறை நடத்தையை சிறிலங்க அரசு கைவிடாததையே காட்டுகிறது” என்று அம்னஸ்டியின் ஆசிய பசிபிக் கிளையின் இயக்குமனர் சாம் ஜாரிஃபி கூறியுள்ளார்.

Read more...

மார்பக புற்று நோயை கண்டறிய புதிய டி.என்.ஏ., பரிசோதனை: அமெரிக்க மருத்துவர்கள்

மனித உடலில் தினந்தோறும் செல்கள் அழிவதும் புதிதாக உருவாவதும் இயற்கையான நிகழ்வுகள். அழியும் செல்களோடு டி.என்.ஏ., க்கள் கசிவதும் உண்டு. இவ்வாறு கசிந்து வரும் டி.என்.ஏ.,க்களை ஆய்வு செய்வதன் மூலம் மார்பக புற்றுநோயை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும் என்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ஜோஸ் என்ற இடத்தில் உள்ள குரோனிக்ஸ் பயோ மெடிக்கல் ஆராய்ச்சி நிலையம் நிரூபித்துள்ளது. இந்த பரிசோதனை மூலம் 70 சதவீதம் மார்பக புற்று நோய் இருப்பதையும், இல்லாத நிலையை 100 சதவீதமும் கண்டறிய முடியும்.

Read more...

புத்த மதத்தை அழிக்க முயற்சிக்கிறது சீனா: தலாய் லாமா குற்றச்சாற்று

திபெத் பிரச்சனைக்கு தான் முன்னெடுத்த அனைத்து முயற்சிகளையும் கண்டுகொள்ளாமல் தட்டிக்கழித்த சீன அரசு, திபெத்தில் புத்த மதத்தை முழுமையாக அழித்து ஒழித்துவிடும் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது என்று திபெத் தலைவர் தலாய் லாமா குற்றம் சாற்றியுள்ளார்.

1959இல் திபெத்தை ஆக்கிரமிக்க சீனா மேற்கொண்ட இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து திபெத்தியர்கள் நடத்திய போராட்டத்தின் 51வது ஆண்டு தினத்தை முன்னிட்ட ஹிமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தலாய் லாமா, “பெளத்தத்தை கொன்றொழிக்க முயற்சிக்கிறது சீனா” என்று நேரிடையாக குற்றம் சாற்றினார்.

திபெத்திற்கு தான் கேட்பது சுயாட்சிதான் என்றும், அதன் மூலம் தங்களுடைய ஆன்மீக வழியையும், பண்பாட்டையும், மொழியையும் திபெத்தியர்கள் காப்பாற்றிக்கொள்ள அந்த அளவிற்காவது சுதந்திரம் வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்று கூறினார்.

ஆனால், தனது முயற்சிகளையும் கண்டுகொள்ளாமல் தட்டிக்கழித்த சீன அரசு, திபெத்தில் ‘தேசப்பற்றுக் கல்வி’யைப் போதிக்க முயற்சித்து வருகிறது என்று கூறினார்.

“திபெத்திலுள்ள மடங்களில் உள்ள சன்யாசிகளை சிறை வைப்பது போன்று அடைத்து, அவர்கள் தங்கள் ஆன்மீகப் பணிகளை தொடர்வதற்கு தடை ஏற்படுத்தி வருகிறது. பெளத்தத்தை கொன்றொழிக்கும் முயற்சியில் நேரிடையாக ஈடுபட்டு வருகிறது. இதையெல்லாம் சீன அரசு ஏற்கிறதோ இல்லையோ, அங்கு மிக மோசமான பிரச்சனை தோன்றியுள்ளது” என்று தலாய் லாமா கூறியுள்ளார்.

“இன்றுள்ள சீனத் தலைமையின் போக்கை வைத்துப் பார்க்கும்போது. எந்தத் தீர்வும் எட்டுவதற்கான சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. ஆயினும் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண தொடர்ந்து முயற்சிப்பது என்ற எங்கள் நிலையில் மாற்றமில்லை” என்றும் தலாய் லாமா கூறியுள்ளார்.

சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய அந்த நிகழ்வை குறிக்கும் நாளில் தலாய் லாமாவின் உரையைக் கேட்க பல்லாயிரக்கணக்கான திபெத்தியர்கள் தர்மசாலா வந்திருந்தனர்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com