Thursday, March 11, 2010

ஒருவழி பண்ணிய நடிகை.

துறவறத்தைத் துறந்து விட்டு இல்லறத்துக்கு வரும்படி ஒரு சாமியாரை ஒரு நடிகை வலியுறுத்தினார். சாமியார் அதற்குத் தயாராக இருந்தார். ஆனால் அப்படிச் செய்தால் சிஷ்யர்களின் கோடானுகோடி சொத்து கையை விட்டுப் போய் விடும் என்று பயந்து பிறகு சாமியார் தன் முடிவை மாற்றிக் கொண்டார்.

இதனால் ஏமாற்றமடைந்த நடிகை, தன் ‘கொழுந்தனுடன்’ சேர்ந்து அந்தச் சாமியை ஒரு வழி பண்ணிவிட்டார். காமலீலை குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கும் சுவாமி நித்யானந்தா விவகாரத்தில் அந்த சாமியின் ஆசிரம வட்டாரங்கள் இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளன.

ரஞ்சிதாவுக்கு இப்போது வயது 35. சாமியாருக்கு வயது 32. மணமான ரஞ்சிதாவுக்கு இரண்டு பிள்ளைகள். இப்போது விவாகரத்துக்குக் காத்து இருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன், நடிகை கே ஆர் விஜயாவின் உறவுப் பெண் சுதா, ரஞ்சிதாவை சாமியாருக்கு அறிமுகம் செய்துவைத்தார். படிப்படியாக ரஞ்சிதா, சாமியாரைக் கண்டு சொக்கி, தன் இருப்பிடத்தைச் சென்னையில் இருந்து பெங்களூரூவுக்கு மாற்றிக் கொள்ளக்கூட முடிவு செய்தார். சாமியார்- ரஞ்சிதா உறவு வலுவானது. சாமியார் ஒருவர் துறவறத்தைவிட்டு இல்லறத்தைக் கைப்பிடித்த கதையை எல்லாம் சாமியாரிடம் எடுத்துச் சொல்லிய ரஞ்சிதா, ஒருவழியாகச் சாமியாரைத் தன் வழிக்குக் சொண்டு வந்தார்.

திருமணத்துக்கு முதலில் சம்மதித்த சாமியார், ஆல விருட்சமாக வளர்ந்து இருந்த சொத்து எல்லாம் போய்விடும் என்று பயந்து தன் முடிவை மாற்றிக்கொண்டு பிறகு ரஞ்சிதாவை ஔரங்கட்டினார். ரஞ்சிதா எவ்வளவே கெஞ்சிப் பார்த்தார். ஆனால் சாமியார் மசியவே இல்லை. அதோடு சாமியாரின் கண்கள் வேறு ஒரு பெண் பக்கம் திரும்பின. ஏமாற்றம், கோபம் எல்லாம் விஸ்வருபம் எடுக்க, ரஞ்சிதா, தன்னை ‘அண்ணி’, ‘அண்ணி’ என்று அன்புடன் அழைத்து வந்த லெனின் கருப்பன் என்பவரின் உதவியை நாடினார். லெனின் கருப்பன், சாமியாரின் வலது கையாக இருந்தவர். இவர் ஒரு மாதத்துக்கு முன் சாமியாரை ஏதோ ஒரு விவகாரம் தொடர்பில் மிரட்டினார். அவருக்கும் சாமியார் மசியவில்லை. சாமியாரை ஒரு கை பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு இருவரும் வந்தனர்.

ரஞ்சிதாவும் லெனினும் சேர்ந்து வீடியோ திட்டத்தைத் தீட்டினர் என்று ஆசிரம வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்தியத் தகவல் சாதனங்கள் குறிப்பிட்டு உள்ளன. “ரஞ்சிதாவும் லெனினும் சேர்ந்து இந்த வீடியோ திட்டத்தை போட்டனர் என்று நான் நினைக்கிறேன். இருவரும் பல நாட்களாக அணுக்கமாக இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன்,” என்று ஒரு வட்டாரம் கூறியது. “எனக்கு ரஞ்சிதாவையும் தெரியும். லெனினையும் தெரியும். இருவரும் நேர்மையானவர்கள் அல்ல என்பதும் எனக்குத் தெரியும்,” என்று சொன்னார் சாமி நித்யானந்தாவின் அந்தரங்கச் செயலாளர் சுவாமி சேவானந்தா.

இதற்கிடையே சாமி நித்யானந்தாவின் சார்பில் முன் ஜாமின் கேட்டு கர்நாடக நீதிமன்றத்தில் மனு செய்யப்படும் என்று அவரின் வழக்கறிஞர் தரப்பு தெரிவித்துள்ளது. இவ்வேளையில் சேலம் பெரிய புதூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்த எட்டு பெரும் புள்ளிகள், மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வெளியேறிவிட்டனர். பெரும் சொத்துகளை ஆசிரமத்துக்கு எழுதி வைத்துள்ள அவர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர் என்று தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. தமிழக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனுக்கும் நித்யானந்தாவுக்கும் தொடர்புகள் இருந்ததாக இந்தியா டுடே இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

Wednesday, March 10, 2010

ந‌‌ளி‌னி ‌விடுதலை தொட‌ர்பான அ‌றி‌க்கையை நாளை தா‌க்க‌ல் செ‌ய்ய ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு.

ந‌‌ளி‌னி ‌விடுதலை தொட‌ர்பான ஆலோசனை குழு அ‌றி‌க்கையை த‌மிழக அரசு நாளை தா‌க்க‌ல் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது. ந‌ளி‌னி ‌விடுதலை தொட‌ர்பாக வேலூ‌ர் மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் ராஜே‌ந்‌திர‌ன் தலைமை‌யி‌லான குழு ‌சில மாத‌ங்களு‌க்கு மு‌ன்பு ஆ‌ய்வு செ‌ய்தது. அ‌ந்த அ‌றி‌க்கை இ‌ன்னு‌ம் த‌மிழக அர‌சி‌ட‌‌ம் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்பட‌வி‌‌ல்லை.

இ‌ந்நிலை‌யி‌ல் ந‌‌ளி‌னி ‌விடுதலை தொட‌ர்பான வழ‌க்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, வேலூ‌ர் ஆ‌ட்‌சிய‌ர் தலைமை‌யி‌லான குழு அ‌றி‌க்கை த‌ற்போது தா‌ன் ‌கிடை‌த்து‌ள்ளது எ‌ன்று‌ம் அ‌றி‌க்கையை சம‌ர்‌ப்‌பி‌க்க 2 வார‌ கால‌ம் அவகா‌ச‌ம் தேவை எ‌ன்று‌ம் த‌மிழக அரசு வழ‌க்க‌றிஞ‌ர் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

ஆனா‌ல் த‌மிழக அர‌சி‌ன் கோ‌ரி‌க்கையை ‌நிராக‌ரி‌த்த உய‌ர் ‌நீ‌திம‌ன்‌ற‌ம், ந‌‌ளி‌னி ‌விடுதலை தொட‌ர்பான ஆலோசனை குழு அ‌றி‌க்கையை த‌மிழக அரசு நாளையே தா‌க்க‌ல் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று உ‌த்தர‌வி‌ட்டது.

Read more...

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 5

எனது நண்பன் விஜித்தரன் கூறி முடித்ததும், ரெலோ சகோதரர்கள் மீது செம்மனியில் அடுக்கிவைக்கப்பட்ட மூடைகள் எதுவாக இருக்கும்? எனது அறிவுக்கு எட்டியவரை சிந்தித்துப் பார்த்தேன், விடை தெரியாமல் இருந்தது. இந்தக் கொடியவர்களது கூடாரத்துக்குள் வந்த பின்னர்தான் அறிந்தேன். அன்று எனது நண்பன் கூறிய அடுக்கி வைக்கப்பட்ட மூடைகள் அனைத்தும் சீனி மூடைகள் என்று. மனிதர்கள் உடல் மீது சீனியைக் கொட்டி எரியூட்டினால் உடலில் ஒரு பாகம் கூட மிஞ்சாது எரிந்து விடும். மனிதர்களை அழிக்க வேர்கள் ஆரம்ப காலங்களிலேயே வித்தைகளைக் கற்று வைத்திருந்தனர்.

எனக்கு அந்த வயதில் பெரிய அளவு பகுத்தறிந்து பார்க்க, நன்மை தீமைகளை விபரிக்க இயலாது இருந்தது. பின்னாளில் இவர்களது படுகொலைகளது செயல் முறையைப் பார்க்கும் போது இவர்கள் மனிதர்கள் அல்ல! அரக்கர்கள்! மனித நேயம் அற்ற படுபாவிகள். உலகில் வாழத் தகுதியற்றவர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

நான் யாழ்ப்பாணத்தை சைக்கிளில் சுற்றிப்பார்த்த இடங்கள் கோண்டாவில், திருநெல்வேலி, அராலி, கல்வியங்காடு, மானிப்பாய்“விமாகி”, கட்டப்பிராய், கச்சேரி அடி, அரியாலை இத்தனை இடங்களையும் ஏதோ ஓர் உந்துததால் சென்று பார்த்தேன். இதோ இங்கு வைத்துத்தான் சுட்டார்கள், இங்கு வைத்துத்தான் ரயரில் போட்டு எரித்தார்கள் என்று எனது வயதை ஒத்த பெடியங்கள் காண்பித்துச் சொன்னார்கள். பல இடங்களிலும் இரத்தக் கறை படிந்த சதைகள் தொங்கிக் கொண்டிருந்ததையும் பார்த்தேன்.

ஓ! இதுதான் விடுதலைப் போராட்டமோ? சிங்கள இராணுவத்துக்கு எதிராகப் போராடப் போகிறோம் என்ற எனது வீட்டுக்கு அருகில் இருந்த அண்ணாக்கள் எல்லோரும் இயக்கங்களுக்குச் சென்றார்கள். நாடு கிடைத்துவிட்டது போலும், இப்போது பதவிக்காக ஆக்களை ஆக்கள் சுட்டுச் சண்டைபிடிக்கினம் போல என்று அந்த வயதில் நான் நினைத்துக் கொண்டேன்.

வான்மீன் தனது கேள்விகளைத் தொடர்ந்தார், கேள்விகளில் எந்தவித மாற்றமும் இல்லை. கொலை, கொள்ளை கற்பழிப்பு இதே கேள்விகள்தான். இறுதியில் ஆயுதங்களை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் என்று கேட்டார்? எனக்கு எதைப்பற்றித் தெரியும் இவர்ளிடத்து சொல்வதற்கு? தெரியாது என்றேன். வான்மீன் என்ற புலிக்கு கோபம் வருவதற்கு முன்னர், அருகில் அடியாட்கள் போல் நின்ற இரு புலிகளுக்கும் கடுங் கோபம் வந்திருக்கும் போல, காலால் உதைத்தனர், முகத்திலும் முதுகிலும். எனது கண்கள் கட்டப்பட்டிருந்ததால் அவர்களைத் தெரியவில்லை. ஆயினும் அவர்கள் கட்டிய துணியின் அடிப்பகுதியால் இவர்கள் இருவரது கால்களையும் அவர்களது முழங்காலுக்குக் கீழ் பார்க்கக் கூடியதாக இருந்தது.

எழும்படா என்று கத்தினார் வான்மீன். கால்களில் சங்கிலி போட்டு வெல்டிங் பண்ணியிருந்ததால் உடனடியாக எழுந்திருக்க முடியவில்லை. இரண்டு கால்களையும் ஒன்றாக மடித்து முழங்காலை நிலத்தில் பதித்து கைகளை முன்புறமாக நிலத்தில் ஊன்றி எழுந்தேன். எழுந்து நிற்பதற்கு தாமதம் ஆவதைக் கண்ட அருகில் நின்றிருந்த “திசை” என்ற புலி மீண்டும் எனது பின்பகுதியில் உதைத்தார். நான் முகம் மேசைக் காலில் அடிபட நிலத்தில் விழுந்தேன். மீண்டும் முயற்சித்து எழுந்தேன்.

ஒரு கைவிலங்கை எனது இரு கைகளிலும் பூட்டினர். இரண்டு கைகளின் ஊடாக பெரிய மரக்கட்டை ஒன்றை நுழைத்தனர். அதன் ஒரு பகுதியை அந்தக் கொட்டகையின் வளையில் வைத்தனர். மறு முனையை கயிற்றினால் அருகில் நடப்பட்டிருந்த மரத்தின் மீது கயிற்றைப் போட்டு கீழே இழுக்க நான் கைவிலங்கில் தொங்கினேன். எனது கால் பெருவிரல் மட்டும் மண்ணில் தொட்டுக்கொண்டு இருந்தது. இரு கைகளும் வலியால் மரத்துப் போயின. என்னை அறியாமலேயே கண்களால் கண்ணீர் வடிந்தது.

அந்த வலியில் துடிக்கும் போது “மஞ்சு” என்ற புலியும், ‘திசை” என்ற புலியும் தடிகளால் அடித்தார்கள். பின்னர் வான்மீன் ஓர் தடித்த கட்டை ஒன்றினால் அடிக்க ஆரம்பித்தார். இவர்கள் அடித்த அடியினால் ஏற்பட்ட வலியை விட கைகளில் பூட்டப்பட்டிருந்த விலங்கினால் ஏற்பட்ட வேதனைதான் அதிகமாக இருந்தது. இதே போன்று என்னுடன் அழைத்து வரப்பட்ட ஏனையோருக்கும் இதே கொடுஞ்செயலைத்தான் செய்தனர் இந்தப் புலிகள்.

நேரம் செல்லச் செல்ல அலறல் சத்தம் அதிகரித்தது. இந்த விசாரணை புலிகள் ஒருவரை மிஞ்சி ஒருவர் சித்திரவதை செய்வதில் வல்லூநர்களாக இருநதனர். இவர்கள் இப்போது களைப்படைந்து விட்டனர். எங்களை அப்படியே கைவிலங்களில் தொங்க விட்டுவிட்டு அவர்கள் தேனீர் அருந்தச் சென்று விட்டனர். கட்டப்பட்டிருந்த கண்ணுக்கான துணி இன்னும் மேலே சென்றது.

யாரும் அருகில் இல்லை. அந்த வலியுடன் சுற்றும் முற்றும் பார்த்தேன். என்னைத் தொங்கவிடப்பட்டிருந்த கொட்டகைக்கு வெளியே பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டிருந்தன. சில குழிகளினுள் ஏணிகள் இறக்கப்பட்டிருந்தன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கு மேற்பட்ட குழிகள் தென்பட்டன.

புலிகள் அந்தக் குழியில் இருப்பவர்களுக்கு எதையோ வாளிகளில் போட்டு கயிறு மூலம் உள்ளே இறக்குகிறார்கள். பின் வாளியை எடுத்துக்கொண்டு அடுத்த குழிகளுக்குச் செல்கிறார்கள். எனது வலியை விட இது பெரும் ஆச்சரியமாக இருந்தது. அந்தக் குழிகளுக்குள் யாரோ எம்மவர்தான் இருக்க வேண்டும். இது என்ன கொடுமை. குழிகள் வெட்டி மனிதர்களை உள்ளே இறக்கி வதை செய்கின்றனரா?

இப்போதுதான் கிற்லரின் ஆட்சியில் நடந்தவை என்று சினிமாக்களில் வரும் காட்சிகளை நான் கண்டேன். மூன்றடி நீளம் அல்லது 2.5 (இரண்டரை) அடி அகலம் கொண்டதும், ஏழு அடி நீளம் 12 அடி ஆழம் கொண்டதுமான ஓர் குழியிலிருந்த நன்கு மெலிந்த ஓர் இளைஞன் எம்மைப் போன்றே வெறும் மேலுடனும் நீல நிற அழுக்கேறிய கால்சட்டையுடனும் ஏணிவழியாக வெளியே வந்தார். அவரை மூன்று புலிகள் சூழ்ந்து கொண்டு அழைத்துவந்தனர், என்னை வைத்திருக்கும் கொட்டகைக்கு அருகிலிருந்த சிறிய கொட்டகை ஒன்றுக்கு. அவர் தனது அடையாளத்தை இழந்திருந்தார். சரியாக அடையாளம் தெரியவில்லை.

இந்த நிலையில் தேனீர் அருந்தச் சென்ற புலிகள் மீண்டும் வந்தனர். மறுபடியும் விசாரணை. அதே கேள்விகள் தான்! அவர்களுக்கு எதைப் பற்றி விசாரிப்பது என்று தெரியாது, ஏனைய தமிழ் இளைஞர்களை அழிக்க வேண்டும், எதைச் சொல்லி அழிப்பது? கொலை, கொள்ளை, கற்பழிப்பு இவைகளை இவர்கள் சுலபமாகச் சொல்லலாம். நீங்கள் கேட்பதும், சொல்வதும் தவறு என்று எதிர்த்தச் சொல்ல, எதிர்த்துக் கேட்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. அப்படிக் கேட்டால் அவரும் கொல்லப்படுவார். இந்த விசாரணை அதிகாரிகள் யாருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது என்பதை அங்கிருந்த நாட்களில் தெரிந்து கொண்டேன். 17, 18 வயதுடையவர்களும் விசாரணை அதிகாரியாக இருந்ததைப் பார்த்தேன். இவர்களால் மனிதனின் உரிமைகள் மிதிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

விசாரணையில் நான் மீண்டும் மீண்டும் தெரியாது, இல்லை என்ற வார்த்தைகளையே பதிலாகச் சொல்லிக்கொண்டிருந்தேன். அவர்களுக்கும் ஆத்திரம் கபாலத்தை பிளந்தது. நாங்கள் கேட்கிறோம், “சொல்கிறான் இல்லை” என்று கூறி முதுகுப் பக்கங்களில் தாக்கினர். ஏனைய இளைஞர்கள் தாக்கப்படும் போது எழுப்பும் அவலக் குரலான “அம்மா”, “ஐயோ” என்ற அவலக்குரலை நானும் எழுப்பினேன்.

இந்தக் கொடிய வலியினைத் தாங்கிக் கொள்ள இறைவனால் வழங்கப்பட்ட வார்த்தைகள்தான் “அம்மா”, “ஐயோ” என்றிருந்த இரு வார்த்தைகளும். துணுக்காய் புலிகளின் சிறையில் தினமும் இந்த வலிதாங்கும் அவலச் சொற்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. சாவுக்கு முன்னால் இந்த வலி அனைவருக்கும் ஏற்படும் என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன்.

எனது கைகளில் போடப்பட்ட விலங்கு இரு கைகளையும் பிடுங்குவது போன்று வலித்தது. அடியில் வேதனை ஒரு பக்கம் விலங்கில் தொங்கும் வலி வேறொருபக்கம். எனது கால் பெருவிரல் மட்டுமே நிலத்தில் தொட்டுக்கொண்டு இருந்தது. அவர்களில் ஒரு புலி எனது இடுப்பை தனது இரண்டு கைகளாலும் பிடித்து சுழற்றினார். எனது உடல் முறுக்கப்பட்டது. கைகள் முறுகி உடைந்துவிடும் போல் தோன்றியது. வலியினால் நான் ஓலமிடுவதை அவர்கள் ரசித்தனர். முடிந்தவரை என்னை முறுக்கிப் பிழிந்து முடியாது போனதும் விட்டுவிட்னர்.

இப்படி நான் தொங்கவிடப்பட்டு சுமார் மூன்று மணி நேரமாகிவிட்டது. காலை உணவும் இல்லை. உடல் பலவீனமடைந்ததால் நான் மயக்கமடையும் நிலையை அடைந்தேன். எனது கைகள் இரண்டும் எனது உடலை விட்டு பிரிந்து சென்று விட்டன போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அப்போது வான்மீன் சொன்னார், “டே இவன் மயங்கிற்றா நாங்கள் கஸ்ரப்பட்டுத்தான் இறக்க வேண்டி வரும், இப்பவே இறக்குங்க” என்றார். அவரது உத்தரவைத் தொடர்ந்து மறுமுனை கயிற்றைத் தளர்த்தி எனது கைவிலங்கினூடாக இடப்பட்டிருந்த அந்த மரத்தடியை கீழே இறக்கினர். எனது கைகள் செயலிழந்து இருந்தன. கையை கீழே கொண்டு வர முடியவில்லை. அப்படியே சரிந்து விழுந்தேன்.

பிற்பகல் நான்குமணிவரை மயக்கநிலையிலேயே இருந்தேன். கண்விழித்ததும், இரண்டு புலிகள் அருகில் நின்று “எழும்படா” என்றனர். கைகளை இயக்கமுடியவில்லை, முழங்கை வரை விறைத்துச் செயலிழந்து இருந்தன. எழுந்து நின்றேன். வாடா என அழைத்தனர், கால் சங்கிலியுடன் நடந்தேன். அவர்கள் அடித்த இடங்கள் அனைத்தும் கண்டலடைந்து வீங்கிப் போய் இருந்தது.

என்னை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த இன்னொரு திறந்த குடிலுக்கு வந்தனர். அங்கும் ஆறு முதல் ஏழு பேர்வரை இருந்தனர். கை கால்களில் சங்கிலியும் விலங்குகளும் இடப்பட்டிருந்தன. சற்றுத்தள்ளி, முன்னர் நான் பார்த்த கிடங்கில் இருந்து அழைத்துவரப்பட்டவர் இருந்தார். அருகில் பார்க்கும் போது இந்த விலங்குகளின் கொடுமை அவரது உடலில் தெரிந்தது. ஆங்காங்கே புண்கள் வந்து பாதி காய்ந்த நிலையில் இருந்தன. முகத்திலும் காய்ந்த வடுக்கள் இருந்தன. இவ்வளவு விழுப் புண்களுடன் இவர் எப்படி உயிர் வாழ்கிறார் என்று வியந்தேன்.

என்னை ஏனைய இளைஞர்களுடன் இருக்கும்படி கூட்டிவந்த புலிகள் கூறினர். நானும் அவர்களுக்கு அருகில் இருந்தேன். அவர்களில் ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் அங்கத்தினர்கள் இருந்தனர். கூட்டி வந்த புலிகள் தள்ளிச் சென்றனர். சுற்றுப்புறத்தைப் பார்த்துவிட்டு அருகில் இருந்தவர்களிடம் மெதுவாகக் கதைத்தேன், மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞரைக் காட்டி அவர் யார் என்று கேட்டேன்?

தொடரும்…...........
1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 1,2,3

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 4



இது தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. T111

Read more...

இலங்கை அகதிப் பெண்ணை பாலியல் வன்முறை செய்த தமிழக போலிசார்.

ஓர் நடிகை புகார் செய்யாமலே ஓர் திருட்டு வீடியாவை வைத்து, பணம் சம்பாதிக்கும் சன் டிவியோ, நக்கீரன் பத்திரிகையோ, மற்றும் தலைப்பு செய்தியாகப் போட்டு வியாபாரத்தை கூட்டும் பத்திரிகையாளர்களோ, இந்த மாதர் அமைப்புகள் என்று சொல்லும் அமைப்புகளோ இந்த அபலைப் பெண்ணிற்கு நீதிக்கு போராடுவார்களா? இல்லை ஈழத்தமிழர், ஈழத்தமிழர்.... என்று கூக்குரல் போடும் அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் நீதிக்கு முன் இட்டுச்சென்று தண்டனை வான்கிக்கொடுப்பார்களா?

அல்லது இன்று இலங்கை அகதிப் பெண்ணை பாலியல் வன்முறை செய்த தமிழக போலிசாரை அவ் உயர் அதிகாரிகள் விசாரித்து அவ் அவலைப்பெண்ணிற்கு நீதி சொல்வார்களா?

இந்த இலட்சணத்தில், பெண்கள் அமைப்புகள் எதுவும் இதுவரை புகார் கொடுக்கதாத நிலையில், மாதர் அமைப்புகள் எதுவும் இதுவரை புகார் கொடுக்கதாத நிலையில் நடிகை ரஞ்சிதா செய்தியை பிரபல்யப்படுத்துவது இது ஓர் அரசியல் சாயம்பூசப்பட்டதாகவே தெரிகின்ற நிலையில் அப்பாவிப் பெண்கள் என்றால் இவர்கட்கு இளிச்சவாய். அதற்கு மேலே "சர்வதேச பெண்கள் தினத்திற்கு முண்டியடித்து ஜெயலலிதா உட்பட வாழ்த்து செய்திகள்???

அதிலும் வைகோ தனது வாழ்த்து செய்தியில் சொல்கிறார், "உலகிலேயே எங்கும் நடந்திராத வீரகாவியத்தை ஈழத்துப் பெண்கள் போர்க்களத்தில் படைத்தனர். மகளிருக்கு எதிரான குற்றம் புரிவோரைக் கடும் தண்டனைக்கு ஆளாக்க வேண்டும். பெண்ணின் பெருமை சிறக்கட்டும். பெண் உரிமை வெல்லட்டும்."......இதெல்லாம் இந்தப் பேசலாம் எதற்க்காக? எம் ஈழத்துப் பெண்கள் தங்கள் நாட்டில் படும் அவலம் தெரியவில்லையோ?

அவர்களின் வாழ்த்துச் செய்திகளை வாசியுங்கள்: http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=17042

சத்ய சாயிபாபாவின் மடத்தில் இறந்து யேர்மனியப் பெண் பற்றியும், பற்றைக்குள் கிடந்தது எடுக்கப்பட்ட அவரின் கைப்பை பற்றியும் என்ன நடந்தது? அதன் பின் ஒரு முறை அவரை கொல்ல சென்றவர்களை பாதுகாவலர் கைது செய்யாமல் சுட்டுக் கொன்றது ஏன்? அதற்கு விசாரணை நடந்ததா? ஏன் மூடி மறைக்கப்பட்டது?

இந்தியாவின் பெரும் அரசியல் தலைவர்கள் (முன்னால் ஜனாதிபதி ஒருவர் கூட), போலிஸ் முக்கியஸ்தர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள் அவரின் பக்தர்கள் ஆகும். ஏன், நாத்திக திராவிடத் தலைவர் கருணாநிதி அவரை சென்னையில் வரவேற்றது............... பணமும், செல்வாக்கும், அரசியலும் பத்தும் என்ன..... நூறும், ஆயிரமும் செய்யும்.

"ஸ்ரீசத்திய சாயி சேவா அமைப்பு மூலம் சுமார் ரூ.200 கோடி செலவில் கால்வாய் பலப்படுத்தப்பட்டது. பூண்டிக்கு வரும் நீரின் வேகத்தை தாங்கும் அளவிற்கு கால்வாயின் கரைகள் மேம் படுத்தப்பட்டன".

"சாய்பாபாவின் முயற்சியால் சென்னை மக்களுக்கு கிருஷ்ணா நீர் கிடைத்ததையொட்டி அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் 21-ந் தேதி காலை 11 மணிக்கு சென்னை மக்கள் சார்பாக நடத்தப்படுகிறது. முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். விழாவில் சத்ய சாயிபாபா கலந்து கொள்கிறார்".

ஆதாரமும் சுவாரஸ்யமும்: http://idlyvadai.blogspot.com/2007/01/blog-post_17.html

http://idlyvadai.blogspot.com/2007/01/blog-post_12.html

இந்த இலட்சணத்தில் யாரோ ஓர் நடிகைக்காக இந்த சன் டிவி யில் எத்தனை முக்கியத்துவம்? அதை விட ஈழப்பிரச்சனையை வைத்து வியாபாரம் செய்யும் நக்கீரன் பத்திரிகையும் நடிகை ரஞ்சிதாவை வைத்து முழு வீடியோ பார்க்க log in செய்யும்படி. மாறன் குடும்பத்தில் ஒருவரோ, அல்லது நக்கீரன் கோபால் குடும்பத்தில் ஒருவரோ இந்த நித்தியானந்தாவின் சீடராக இப்படி நடிகை ரஞ்சிதாவின் இடத்தில் இருந்தால் இவ்வளவு விளம்பரம் செய்து இருப்பார்களா?

பெண்ணியல் வாதி கனிமொழி எங்கு சென்றுவிட்டார்? அத்துடன் ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பவர். நேற்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடிய உயர் மத்திய தரப்பு மாதர் அமைப்புகள், உயர்தரப்பு மாதர் அமைப்புகள் இந்தப் பெண்ணின் நீதிக்காக குரல் கொடுப்பார்களா?

மறு பக்கத்தில், மேல்மருவத்தூரில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா மிகுந்த உற்சாகத்துடன் ஒருவார விழாவாக கொண்டாடப்பட்டது. அவரது 70வது பிறந்தநாளாகிய இன்று அவரை அலங்கரிக்கப்பட்ட மலர் அலங்கார ரதத்தில் பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். விழா சிறப்பு மலரை வெளியிட்டு அருள்தரிசனம் தந்த அடிகளாரிடம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அருளாசி பெற்றனர்.

பிப்ரவரி 13 முதல் 15 தேதிவரை நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமில் 5000 பேருக்கு மேல் பங்கேற்று சிகிச்சை பெற்ற மக்கள் நலப் பணியுடன் விழா நிகழ்ச்சிகள் துவங்கின. பிப்ரவரி 25 முதல் தொடர் அன்னதானம், கலச வேள்வி பூசை, சிறப்பு பாத பூசைகள், தினசரி பல்வேறு சிறப்பு கலைநிகழ்ச்சிகள், தங்கரதத்தில் வரவேற்பு, ரூ.1கோடி மதிப்பிலான மக்கள் நலப்பணிகள், வானத்தில் வண்ணக் கதிரொளிக் காட்சிகள் என தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. .

அருளாசி மேடையில் பிறந்தநாள் விழா சிறப்பு மலரை அடிகளார் வெளியிட தமிழக விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி எம். தணிகாசலம் முதலியோர் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து அங்கு காத்துக் கொண்டிருந்த பல்துறைப் பிரமுகர்களும், அரசு உயர் அதிகாரிகளும் ஆசி பெற்றனர்.

மேலும் அறிய: http://www.kalaikesari.com/culture/culturenews/Results.asp?key_c=54

இவருக்கும்உலகம் பூராகவும் கிளைகள் உள்ள நிலையிலும், பல ஈழத்தமிழர்கள் போட்டி போட்டு கிளைகள் (டொராண்டோவிலேயே ஒன்றில் இருந்து பிரிந்து என்று மூன்று கிளைகள்) அமைத்து வழிபடும் நிலையிலும், கூடுதலாக செவ்வாடை பெண்களையே கொண்டுள்ளதாலும் இவ் ஆன்மீக வாதி தானும் இப்பெண்ணிர்காக குரல் கொடுப்பாரா? இல்லை........ ஏன் நமக்கு வம்பு என்று விட்டுவிடுவார்கள். அப்பெண்ணின் குடும்பத்தார் என்ன நன்கொடை கொடுக்கப்போகிறார்களா?

“ராமேஸ்வரம்” திரைப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. “நந்தா”, “கன்னத்தில் முத்தமிட்டால”; அந்த வரிசையில் இன்று “ராமேஸ்வரம்”. ஈழத்தமிழரின் அகதி நிலையை எடுத்துக்காட்டும் திரைப்படமாக இந்திய இயக்குனர்களால் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் இவை. இந்த மூன்று திரைப்படங்களிலும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இந்தியர்கள் ஈழத்து அகதிகளுக்கு எந்த அளவிற்கு உதவி செய்யத் தவிக்கின்றார்கள் என்பதே.”

“நான் படித்த கட்டுரைகள், சிறுகதைகளிலில் இருந்தும், தனிப்பட்ட முறையில் கேட்டறிந்த சம்பவங்களில் இருந்தும் ராமேஸ்வரத்தில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள் எந்த அடிப்படைத் தேவையும் பூர்த்தி செய்யப்படாமலும், அதே வேளை பலவிதமாக வன்முறைக்குள்ளாக்கப்பட்டும் வருகின்றார்கள் என்பதே. ஆனால் மேற்கூறப்பட்ட எந்த ஒரு திரைப்படத்திலும் அதற்கான அடையாளங்கள் எதுவும் காட்டப்படவில்லை. தமிழ்நாட்டின் அரசியல் அட்டூழியங்கள், வன்முறைகள், போன்றவற்றை படத்திற்குப் படம் புடம்போட்டுக் காட்டும் எந்த ஒரு இயக்குனரும் ரமேஸ்வரத்தில் ஈழத்து அகதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சிறிதேனும் காட்டுவதற்கு எதற்காக அஞ்சுகின்றார்கள்?”

மேலும்: http://karupu.blogspot.com/2008/04/blog-post.html

இப்படியும் ஓர் குமுறல், ஆனால் இதுதான் நிஜம். ஈழத்தமிழரை வைத்து சம்பாதிப்பவர்கள் இந்தியாவில் இருக்கும் ஈழத்தமிழருக்கு என்ன செய்கிறார்கள்? இதற்கு மேலையும் பணத்திக்காக எத்தனையோ நடக்கிறது. பிணத்தின் மேலேயே பணம் கறப்பவர்கள்.

அதே நேரத்தில் "எந்த ஒரு மனிதப் பிறப்புக்கும் தன் சொந்த நாட்டில் வாழ்வது தான் கௌரவம், பாதுகாப்பு. ஆனால் ஈழத் தமிழனுக்கென்று ஒரு பாழ் விதி எழுதி வைத்திருக்கிறான் கடவுள் அகதிகளாக அலைய வேண்டுமென்று. சொந்த மண்ணிலேயே வாழும் உரிமையோ, தகுதியோ இல்லாதவனாக அகதியாக்கப்பட வேண்டுமென்ற கொடும் விதி எழுதியவன் எவனோ அவனை நான் மதியேன்!"

“உயிர் தப்பி ஓடி வர ஈழத் தமிழனுக்கு பரப்பளவுகள் குறைந்து கொண்டே போகிறது. ஒன்று தமிழகத்தை நோக்கி ஓடி வர வேண்டும், அல்லது இலங்கையின் கொழும்பை நோக்கி பயணிக்க முனைய வேண்டும். அகதியாக கொழும்பில் இருக்க முடியாது, அங்கே தமிழனை விரோதியாகத் தான் பார்ப்பார்களே தவிர அகதியாக புகலிடம் கொடுக்கமாட்டார்கள். ஆக..எஞ்சியிருப்பது 24 மைல் கடல் தாண்டிய தூரத்திலிருக்கும் தமிழகம் மாத்திரமே!! என்றைக்கு உயிருக்காக ஓடி வர நினைத்தோமோ அன்றைக்கே எமது நிலை அண்டிப் பிழைக்கும் நிலைக்கு வந்துவிட்டது என்று தெரிந்தே தான் அகதியாக ஓடி வருகிறோம்”.

“எங்கே தமிழன் அடித்து துரத்தப்படும் போதும் ஐயோ என்று ஓடி வருவது தமிழகத்தை நோக்கித் தான். நடுக்கடலில் உயிருக்காகத் தத்தளிக்கும் நீச்சல் தெரியாத எந்த பிறவியும் கைக்கு எந்த ஒரு பொருள் கிடைத்தாலும் அதைப் பற்றி கரையேறித் தப்பிவிடத் தான் எத்தனிக்கும். அப்படியொரு சூழ்நிலை தான் எந்த ஒரு அகதிக்கும். முதலில் உயிரைக் காப்பாற்றினால் போதும் என்ற நிலை. தவிப்பு.. ஓடி வந்து விடுகிறோம். வந்த பின் உயிர் வாழ வேண்டுமென்றால் எத்தனை இன்னல்களையும் தாங்கித் தானாக வேண்டும். எத்தனை அவமானங்களையும் சகித்துத் தானாக வேண்டும். நாம் தான் எல்லாமிழந்துவிட்டோமே? எம்மைத் திரும்பக் கட்டியெழுப்பவோ நாம் இன்னார் என்று அடையாளம் காட்டவோ இனி என்ன இருக்கிறது, உயிரைத் தவிர...? பாழாய்ப் போன வயிறும், உயிரும் இருந்து தொலைக்கிறதே... என்ன செய்வது?”

ஆனாலும்.............

“எப்போது எமக்கான சுயம் கிடைக்குமோ அப்போது தான் அகதி என்ற வார்த்தை தமிழினத்தின் வரலாற்றிலிருந்து அகற்றப்படும். கற்பனை செய்து பாருங்கள்..அகதிகளாக தமிழகம் வருவதை விட , சுதந்திரமானவர்களாக தொப்புள் கொடியுறவுகளிடம் வரும் போது ஈழத் தமிழனுக்கு எத்தகைய ஆத்ம திருப்தி கிட்டும் என்று??. அந்த சந்தோசத்தின் அளவீடு என்பதே தனித்துவமானதாயிருக்கும்.”

“எப்போது தமிழினம் தன் சொந்த மண்ணில் சுதந்திரமாக சுவாசிக்க முடியுமோ அப்போது தான் அகதி என்ற நிலைபாடு எம்மை விட்டுப் போகும்.”

“அதற்கான வழிமுறையை ஈழத் தமிழன் அமைக்க முற்பட்டால் தடைக்கல் ஏன் மற்றவர்கள் போட நினைக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு தார்மீகமான , மனிதாபிமான, உணர்வுமிகுந்தவர்கள் நியாயமான பதில் தரமுடியுமா?” என்று ஓர் அகதியின் எதிர்பார்ப்பு.

மேலும்: http://groups.google.ge/group/piravakam/msg/2b11ee3d3391b823

இதற்கு இன்று நமது தாயகத்தில் வாக்கு வேட்டைக்காக இறங்கியிருக்கும் எமது வேட்டையாளர்கள் (ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட தமிழ் வேட்டையாளர்கள்) குரல் கொடுப்பார்களா? அல்லது அரசாங்கதுடன் இணைந்து உள்ளவர்கள், ஜனாதிபதி தெரிவில் மக்களுடன் சேர்ந்து மகிழ்ச்சிக் கடலில் குளித்தவர்கள், நிருபாமாவை சந்தித்தவர்கள், நல்லிணக்க, சமூக நலத்துறை அமைச்சர்கள் குரல் கொடுத்து இவ் நம் தொப்புள் கொடியுறவுகளை அவர் தம் தொப்புள் கொடியுறவுகளிடம் சேர்ப்பார்களா? முயற்சி தன்னும் எடுப்பார்களா?

இன்று இவ் வாக்கு வேட்டையாடும், வேட்டையாளர்கள் இவர்களை தாயகம் அழைத்து மீள் குடியேற்றினால் அவ் இரண்டு இலட்ச்சத்திர்க்கும் மேற்ப்பட்ட வாக்குகளும் இவர்களுக்குத்தானே, அதைதன்னும் சிந்திக்கிறார்களா? இதைப்பற்றி பலதடவை எடுத்துக் கூறியுள்ளேன். தற்போது தமிழ் நாட்டு அரசியலை விட கேவலமாகிய அரசியலாகிவிட்டது.

குஷ்புவிற்கு, ராதிகாவிற்கு, நமீதாவிற்கு, நயன்தாராவிற்கு ஓர் பிரச்சனைஎன்றால் தமிழகமே திரண்டு எழும்!

ஏன் நம் நாட்டிலும் வசந்தம் கொண்டாடுபவர்கள் அவர்களைக் கூப்பிட்டு அரங்கேற்றி மாலைகள் , பூச்செண்டு கொடுத்து வாழ்த்துவார்கள். அதுமட்டுமா இதை எதோ ஈழத்தமிழரின் அடிப்படைப் பிரச்சனை எல்லாம் தீர்ந்து விட்டதாக பிரச்சாரம் செய்யும் இணையதளங்கள் வேறு. கூலிக்கு மாரடிப்பவர்களை, கவர்ச்சியை காட்டுபவர்களை இவ்வளவு பணம் செலவழித்து கூப்பிடுகிறவர்கள், ஏன் நம் தொப்புள்கொடி உறவுகளைக் கூப்பிடக்கூடாது....... முயற்ச்சிக்கக்கூடாது? அவர்களும் தமது திறமைகளை வெளிக்கொண்டுவருவார்கள் தானே! அவர்கள் உங்களுக்கு கவர்ச்சியில்லையா?

வாழ்க தமிழகம்! வாழ்க ஈழத்தமிழ் எழுச்சி!

எல்லாவற்றிக்கும் மனிதாபிமானம் வேண்டும்!

அலெக்ஸ் இரவி

Read more...

புலிகளின் ஆதரவாளர்களே எனது பயணத்தை தடை செய்தனர். பாலித ஹோகன.

ஐக்கிய நாடுகளின் நியூயோர்க்கிற்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி பாலித கோஹன நாளை புதன் கிழமை கனடா டொரன்டோ பல்கலைக்கழககத்தின் விரிவுரை ஒன்றை நிகழ்த்த இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட விரிவுரை பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று இயக்குனர் மார்கிரட் மெக்கோன் அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாலித்த ஹோகன விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாலேயே தனது விரிவுரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றம் சுமத்திப்பட்டுள்ள நாடொன்றின் பிரதிநிதியெனக் குறிப்பிட்டு, கனடாவில் உள்ள மாவணர்கள் பாலித ஹோகன குறிப்பிட்ட விரிவுரையில் பங்கெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

மேலுமோர் வேட்பாளர் ரிஐடி யினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரான சிறிலால் லக்திலகே இன்று காலை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஜெனரல் பொன்சேகாவிற்கு வழங்கிய ஆதரவு தொடர்பாக விசாரிக்கப்பட்டதாக ஜேவிபி சார்பு இணையத்தளம் ஒன்று தெரிவிக்கின்றது. அச்செய்தியில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜெனரலுக்கு ஆதரவாக செயற்பட்ட பலரையும் சீஐடி யினர் விசாரணை செய்து வருவதாகவும், அதே நேரம் புலிகளுடன் நேரடித் தொடர்புகளை வைத்திருந்த பலம்வாய்ந்த அமைச்சர்ளை விசாரணை செய்யத் தவறியுள்ளதாகவும் குற்றஞ்சுமத்தியுள்ளது

Read more...

வவுனியாவில் ஐவர் சேர்ந்து ஒரு சிறுமியை கற்பழித்துள்ளனர்.

14 வயதுடைய பாடசாலைச் சிறுமி ஒருவர் வவுனியா தேக்கவத்தை பிரதேசத்தில் ஐவர் கொண்ட குழுவொன்றால் கற்பழிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறிப்பிட்ட சிறுமி அவருடைய காதலனால் பாழடைந்த வீடொன்றினுள் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் 5 பேரால் தொடர்ச்சியாக கற்பழிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேச நபர்களை தேடி வலைவிரிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read more...

டீன்ஏ ஒரு ஆசனத்தையேனும் பெற்றால் பாராளுமன்றிலிருந்து வெளியேறுவேன். மேர்வின்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜெனரல் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகத் தேசிய முன்னணி பாராளுமன்றத்திற்காக ஒரு ஆசனத்தை தன்னும் பெற்றுக்கொண்டால் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜனாமா செய்வதாக பிரதி தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணியில் போட்டியிடும் அவர் அதிகூடிய விருப்புவாக்குகளுடன் பாராளுமன்றுக்கு தெரிவாவேன் எனவும் உறுதிபட கூறியுள்ளார். அம்மாவட்டத்தில் தலைமை வேட்டபாளராக பசில் ராஜபக்ச போட்டியிடுகின்றார்.

ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களின்போது தான் வெற்றிபெற்றால் மேவின் சில்வாவுடன் உள்ள பாதாள உலக குழுக்களை சிறையில் அடைப்பேன் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

விகிதாசாரத் தேர்தல் முறையும், சிறுபான்மை சமூகத்தவர்களும் - 02 :

போனஸ் ஆசன முறை சிறுபான்மையினருக்கான விமோசனம் அல்ல – புன்னியாமீன்
விகிதாசார தேர்தல் முறையின் கீழ் தேர்தல் தொகுதிகள் வரையறை செய்யப்படும்போது தேர்தல் மாவட்டங்களாகவே வரையறை செய்யப்படுவதினால் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவத்தினைவிட, விகிதாசார பிரதிநிதித்துவத்தின் மூலமாக சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்தகவு அதிகமானது என்பதைக் கடந்த வாரம் நோக்கினோம்.

பெரும்பான்மை தேர்தல் முறையினையும், விகிதாசார தேர்தல் முறையினையும் ஒப்பிட்டு ஆராயக்கூடிய ஏனைய தலைப்புக்களை இன்று நோக்குவோம்.

நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும்முறை


முதலாம் குடியரசு அரசியலமைப்பின் 70ம் உறுப்புரையின் 1ம் உபபிரிவின்படி தேசிய அரசுப் பேரவை (நாடாளுமன்ற) உறுப்பான்மைக்கான தகுதியின்மை எனும் தலைப்பில் விபரிக்கப்பட்ட தகுதியீனங்களுக்கு உரித்தாகாத தேர்தல் யாப்பில் பெயர் பதிவாகியுள்ள எந்த ஆளுக்கும், நியமனப் பத்திரம் தாக்கல் செய்கையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியொன்றின் மூலமாகவோ, சுயேட்சை வேட்பாளராகவோ நேரடியாகத் தாக்கல் செய்ய முடியும்.

இந்த முறையின் கீழ் தகுதியுள்ள அனைவருக்கும் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும் உரிமை இருந்தாலும் கூட, மக்கள் மத்தியில் பிரபல்யமான அரசியல் கட்சியொன்றினூடாக சிறுபான்மை வேட்பாளர் ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது கேள்விக் குறியே.

ஏனெனில், தேர்தல் தொகுதியொன்றிற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றினால் ஒரு வேட்பாளரை மாத்திரமே அபேட்சகராக நிறுத்தமுடியும். எனவே, சிறுபான்மை இனத்தவர்கள் செறிவாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய மாகாணங்களில் அமைந்துள்ள தொகுதிகளில் - குறிப்பாக பெரும்பான்மையினர் அதிகமாக வாழும் தொகுதிகளில் பிரதான கட்சிகள் இச்சந்தர்ப்பத்தினை வழங்கமாட்டாது. (பல அங்கத்துவ, இரட்டை அங்கத்துவ தொகுதிகள் நீங்கலாக) இதனால் விகிதாசார தேர்தல் முறை அறிமுகமானதை அடுத்து இலங்கையில் தோற்றம் பெற்றுள்ள சிறுபான்மை அரசியல் கட்சிகளால் வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எந்தவொரு பிரதிநிதியையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும்.

யதார்த்த பூர்வமாக நோக்குமிடத்து வடக்கு – கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய 7 மாகாணங்களிலும் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் சுற்றியே வாக்காளர்களின் விருப்புக்கள் அமைவதினால் சுயேட்சையாகவோ, அன்றேல் ஒரு சிறுபான்மைக் கட்சியின் மூலமாகவோ போட்டியிட்டு வெற்றி பெறுவது கடினமான காரியமே.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் நியமனப் பத்திரம் தாக்கல் செய்தல்

1978 யாப்பின் கீழ் நியமனப்பத்திரம் தாக்கல் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகள் யாப்பின் 99ம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1 ம் குடியரசு அரசியலமைப்பைப் போல இங்கு நேரடியாக நியமனப்பத்திரம் தாக்கல் செய்ய முடியாது. தேர்தல் மாவட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஊடாக அல்லது சுயேட்சை குழுவாக ஒரு பட்டியலையே தாக்கல் செய்ய வேண்டும்.

யாப்பின்படி பட்டியலைத் தாக்கல் செய்கையில் தேர்தல் மாவட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய அங்கத்தவர் எண்ணிக்கையுடன் மூன்றிலொரு பங்கு அதிக உறுப்பினர்களைக் கொண்டதாக பட்டியல் தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்படல் வேண்டும். யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 14ம் திருத்தத்திற்கமைய பட்டியலைத் தயாரிக்கும்போது தேர்தல் மாவட்டத்திற்குத் தெரிவாகவுள்ள அங்கத்தவர் எண்ணிக்கையுடன் மூன்றைக் கூட்ட வேண்டும். உதாரணமாக கண்டி தேர்தல் மாவட்டத்திற்கு 12 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டுமாயின் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளும் அல்லது சுயேட்சைக் குழுக்களும் பின்வரும் எண்ணிக்கைக்கமைய பட்டியலைத் தயாரித்தல் வேண்டும். 12+03 = 15 வேட்பாளர்கள் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்படும்போது பிரதான கட்சிகள் அத்தேர்தல் மாவட்டத்திலுள்ள சிறுபான்மைச் சமூகங்களினது வாக்குகளையும் பெற்றுக் கொள்ள விழைவதினால் பட்டியலில் சிறுபான்மை சமூக வேட்பாளர்களுக்கும் இடம் வழங்குதல். எனவே, பெரும்பான்மை பிரதிநிதித்துவ முறையில் கிடைக்காத வாய்ப்பு இங்கு விகிதாசார பிரதிநிதித்துவத்தினால் கிடைக்கிறது.

வாக்களிக்கும் முறை

1972ம் ஆண்டு குடியரசு யாப்பின் கீழ் வாக்களிப்பது நேரடி முறையாகும். வாக்குரிமை பெற்ற எவரும் தொகுதி ரீதியாக தான் விரும்பும் வேட்பாளருக்கு நேரடியாக புள்ளடி இடுவதன் மூலம் வாக்களிக்கலாம். எனவே, பெரும்பான்மைச் சமூகத்தினர் அதிகமாக வாழும் தேர்தல் தொகுதிகளில் பெரும்பான்மைப் பிரதிநிதிகள் தெரிவாக்கப்படக்கூடிய வாய்ப்புகள் இங்கு அதிகமாக உள்ளன.

2ம் குடியரசு யாப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் போது வாக்களிப்பு 2 கட்டங்களாக நிகழ்த்தப்படும்.

1. தான் விரும்பும் கட்சிக்கு சுயேட்சைக் குழுவிற்கான வாக்கு.
2. விருப்புத் தெரிவு வாக்கு

விகிதாசார முறையின் கீழ் வாக்களிக்கும் விளக்கங்கள் 1981 இலக்கம் 1 பாராளுமன்ற தேர்தல் சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளாலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்டியல் சிங்கள அகரவரிசைக்கமைய வரிசைப்படுத்தப்பட்டு, அபேட்சகர்களுக்கு இலக்கங்கள் ஒதுக்கப்படும். இதில் கூடியது 3 அபேட்சகர்களுக்கு விருப்புத் தெரிவு வாக்குகளை வழங்குமாறு வாக்காளர் கோரப்படுவர்.

விருப்புத் தெரிவு வாக்குமுறை வேட்பாளர் மத்தியில் போட்டி நிலையையும், குரோதங்களையும் ஏற்படுத்துவதால், விருப்புத் தெரிவு முறை பற்றி பலத்த கண்டனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும்கூட சிறுபான்மையினத்தவர்களுக்கு தமது சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு வாக்களிக்கும் நிலை சாத்தியப்படுவதை நிராகரித்து விடமுடியாது.

உதாரணமாக 2000ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலின்போது கண்டி மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 2 முஸ்லிம் பிரதிநிதிகளும், தேசிய ஐக்கிய முன்னணியின் சார்பில் ஒரு முஸ்லிம் பிரதிநிதியுமாக மொத்தம் 3 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டார்கள் என்றால் விகிதாசார தேர்தல் முறையில் விருப்புத் தெரிவு வாக்குமுறையும் ஒரு காரணம் என்பதை மறந்துவிட முடியாது. மாறாக பெரும்பான்மைத் தேர்தல்முறை அமுல்படுத்தப்பட்டிருந்தால் 3 முஸ்லிம் பிரதிநிதிகள் கண்டி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாக முடியுமா என்பது கேள்விக்குறியே.

ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யும்முறை

பெரும்பான்மைத் தேர்தல் முறையின் கீழ் தொகுதி ரீதியாக நடைபெறும் தேர்தலில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர் நேரடியாக உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவார். உதாரணமாக x எனும் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட A, B, C ஆகிய வேட்பாளர்கள் பின்வருமாறு வாக்குகளைப் பெற்றுள்ளனர் எனக் கொள்வோம்.

A – 18.332
B – 16.218
C – 573

இதில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர் A ஆவார். இதன்படி X எனும் தேர்தல் தொகுதிக்கு A என்பவர் உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவார்.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஆசனங்களை ஒதுக்கீடு செய்தல்.

1978ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறையின் கீழ் பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றில் ஆசனங்களைப் பகிர்ந்தளிக்க பின்வரும் 6 படிமுறைகள் கையாளப்படும்.

1ம் படிமுறை : போனஸ் ஆசனத்தினை வழங்குதல்
2ம் படிமுறை : வெட்டுப்புள்ளிகளைப் பெறாத கட்சிகள்
குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல்
3ம் படிமுறை : தொடர்புடைய வாக்குகளைக் கணித்தல்
4ம் படிமுறை : முடிவான எண்ணைக் கணித்தல்
5ம் படிமுறை : முடிவான எண்ணுக்கமைய ஆசனங்களைப் பகிர்தல்
6ம் படிமுறை : மிகுதிப் பெரும்பான்மை முறைக்கமைய ஆசனங்களைப் பகிர்தல்

மேற்குறித்த 6 படிமுறைகளுக்கமையவே தேர்தல் மாவட்டத்துக்கான பிரதிநிதிகளைத் தீர்மானிப்பர். இப்படிமுறைகளினால் சிறுபான்மைக் கட்சிகளுக்குப் பாதிப்புக்களும் உள்ளன. நன்மைகளும் உள்ளன. இதனைப் பின்வரும் உதாரணத்துக்கமைய ஆராய முடியும்.

உதாரண எடுகோள்
X எனும் தேர்தல் மாவட்டத்தில் 10 ஆசனங்கள் உள்ளன என்றும், இந்தப் 10 ஆசனங்களுக்குமாக நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றில் 3 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன என்றும்: போட்டியிட்ட கட்சிகளும், குழுக்களும் பின்வருமாறு வாக்குகளைப் பெற்றுள்ளன எனவும் கொள்வோம்.
கட்சி A = 5,400 வாக்குகள்
கட்சி B = 3,600 வாக்குகள்
கட்சி C = 1,410 வாக்குகள்
சுயேட்சைக்குழு 1 = 540 வாக்குகள்
சுயேட்சைக்குழு 2 = 750 வாக்குகள்
மொத்தமாக செல்லுபடியான வாக்குகள் 11700

1 ம்படிமுறை – போனஸ் ஆசனத்தினை வழங்குதல்

விகிதாசார தேர்தல் முறையில் ஆசனங்களைப் பதிவு செய்யும்போது பேணப்படும் 1வது படிமுறை போனஸ் ஆசனத்தை வழங்குவதாகும். அதாவது குறிப்பிட்ட ஒரு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது குழுக்களுள் எந்தக் கட்சி அல்லது குழு அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதோ, அந்தக் கட்சி அல்லது குழுவிற்கு வழங்கப்படும் அன்பளிப்பு ஆசனத்தையே போனஸ் பிரதிநிதித்துவ ஆசனம் என அழைக்கின்றோம்.

எனவே, எமது உதாரண எடுகோளின்படி அதிக வாக்குகளைப் பெற்றுள்ள கட்சி A ஆகும். எனவே A கட்சிக்கு ஒரு போனஸ் ஆசனம் வழங்கப்படும்.

போனஸ் ஆசன முறையின் கீழ் சிறுபான்மைக் கட்சிகளுக்கு வாய்ப்புக்கள் உண்டு எனப்பொருள் கொள்ள முடியாது. பெரும்பாலும் இதன் மூலம் பிரதானக் கட்சிகளுக்கே வாய்ப்பு அதிகம். இலங்கையில் இதுகால வரை நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களில் போனஸ் ஆசனங்கள் பெற்ற கட்சிகளைப் பின்வரும் அட்டவணை மூலம் கண்டு கொள்ளலாம்.; வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரமே சிறுபான்மைக் கட்சிகள் நன்மை பெற்றுள்ளன.

1989/ 1994 /2000/ 2001/ 2004ம் ஆண்டுப் பொதுத் தேர்தல்களில் மாவட்ட ரீதியாக கட்சிகள் பெற்ற அதிகமான வாக்குகளைக் கொண்டு போனஸ் ஆசனம் பகிரப்பட்ட முறை. மேற்குறிப்பிட்ட ஆண்டு ஒழுங்கில் மாவட்டத்தில் வெற்றியடைந்த கட்சிகள் தரப்பட்டுள்ளன.

தேர்தல் மாவட்டம்
1989/1994/ 2000/ 2001 / 2004
1. கொழும்பு : ஐ.தே.க / பொ.ஜ.மு /ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க.
2. கம்பஹா: ஐ.தே.க/ பொ.ஜ.மு/ பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு.
3. களுத்துறை: ஐ.தே.க/ பொ.ஜ.மு/ பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு.
4. கண்டி: ஐ.தே.க /ஐ.தே.க /பொ.ஜ.மு / ஐ.தே.க/ ஐ.தே.க.
5. மாத்தளை : ஐ.தே.க/பொ.ஜ.மு/ பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு.
6. நுவரெலியா : ஐ.தே.க/ ஐ.தே.க / பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு.
7. காலி : ஐ.தே.க/ பொ.ஜ.மு / பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு.
8. மாத்தறை : ஐ.தே.க / பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு.
9. ஹம்பாந்தோட்டை: ஐ.தே.க / பொ.ஜ.மு / ஐ.தே.க / ஐ.தே.க/ பொ.ஜ.மு.
10. யாழ்ப்பாணம்: சுயேட்சை/ சுயேட்சை/ ஈ.பி.டி.பி/ த.ஐ.வி.மு/ இ.த.அ.க
11. வன்னி : த.வி.கூ/ புளொட் / டெலோ/ த.ஐ.வி.மு/ இ.த.அ.க
12. மட்டக்களப்பு:த.வி.கூ/ த.வி.கூ / த.வி.கூ/ த.ஐ.வி.மு/ இ.த.அ.க
13. திகாமடுல்லை: ஐ.தே.க / ஐ.தே.க/ பொ.ஐ.மு/ ஸ்ரீ.ல.மு.க /பொ.ஜ.மு.
14. திருகோணமலை: ஸ்ரீ.சு.க/ ஐ.தே.க / பொ.ஐ.மு / ஐ.தே.க / இ.த.அ.க
15. குருநாகலை : ஐ.தே.க/ பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு.
16. புத்தளம்: ஐ.தே.க/ பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு.
17. அநுராதபுரம்: ஐ.தே.க / பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு
18. பொலன்னறுவை: ஐ.தே.க / பொ.ஜ.மு / ஜ.தே.க / ஐ.தே.க / பொ.ஜ.மு.
19. பதுளை: ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க.
20. மொனராகலை: ஐ.தே.க / பொ.ஜ.மு/ பொ.ஜ.மு / பொ.ஐ.மு / பொ.ஜ.மு.
21. இரத்தினபுரி : ஐ.தே.க / பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு.
22. கேகாலை: ஐ.தே.க / ஐ.தே.க / பொ.ஐ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த போனஸ் ஆசன முறையால் ஆளும்கட்சிக்குத் தன் பலத்தை ஓரளவேனும் அதிகரித்துக் கொள்ளும் ஒரு ஏற்பாடாகவே இம்முறை காணப்படுகின்றது என கூறப்படுகின்றது. மேலும், இலங்கையில் இதுவரை நடைபெற்ற 5 பாராளுமன்ற தேர்தல்களின் போதும் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு தேர்தல் மாவட்டங்கள் தவிர ஏனைய 19 தேர்தல் மாவட்டங்களிலும் ஐ.தே.க.கட்சியும், பொ.ஐ. முன்னணியுமே முன்னணியில் நிற்பதையும் அவதானிக்க முடிகின்றது.

2ம் படிமுறை : வெட்டுப்புள்ளிகளைப் பெறாத கட்சிகள் குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல்

ஒரு தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 1/20 பங்கு (5%) வாக்குகளைப் பெறாத கட்சிகளை அல்லது சுயேட்சைக் குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல். வெட்டுப்புள்ளி வாக்குக் கணிப்பு, சிறுபான்மைக் கட்சிகளின் வளர்ச்சிக்கும் , சிறிய கட்சிகளின் வளர்ச்சிக்கும், பெரிதும் தடையாகும். விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில் இந்த வெட்டுப்புள்ளி 1/8 பங்கு (அதாவது 12.5 % ஆகக் காணப்பட்டது. 1988ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பிரகாரமே 1/20 பங்காக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உதாரண எடுகோளை எடுத்து நோக்கும்போது வெட்டுப்புள்ளிக் கணிப்பு பின்வருமாறு அமையும். வெட்டுப்புள்ளி வாக்கு = செல்லுபடியான வாக்கு X 1/20 எமது உதாரணத்தின்படி = 11700X1/20 = 585

எனவே 585 வெட்டுப்புள்ளி வாக்குகளைப் பெறாத கட்சிகள், குழுக்கள் நீக்குதல் வேண்டும். இதன்படி 540 வாக்குகளைப் பெற்ற சுயேட்சைக்குழு 1 போட்டியிலிருந்து நீக்கப்படும்.

இதே போல நடைபெறக்கூடிய பாராளுமன்றத் தேர்தலிலும், 5 வீத வாக்குகளைப் பெறாத கட்சிகள் போட்டியிலிருந்து நீக்கப்படும். எதிர்வரும் பாராளுமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் 8 இல் இடம்பெறவுள்ள நிலையில் வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7,625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இலங்கை அரசியல் திட்டத்துக்கு அமைய 22 மாவட்டங்களில் இருந்து மக்களை பிரதிநிதிதுவம் படுத்தும் வகையில் 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

இருபத்து நான்கு அரசியல் கட்சிகளிலும், 312 சுயேச்சைக் குழுக்களிலும் இவர்கள் களமிறங்கியுள்ளார்கள். 22 தேர்தல் மாவட்டங்களுக்கும் அரசியல் கட்சிகளினூடாக 3859 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களில் 3691 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். கடந்த கால அனுபவங்களை வைத்து நோக்குமிடத்து இம்முறை போட்டியிடக்கூடிய கட்சிகள், சுயேட்சைக் குழுக்களில் 90 வீதத்துக்கும் அதிகமான கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் ஐந்து வீத வாக்குகளைப் பெறாமல் நீக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

மாவட்டங்களுக்கு ஆசனங்கள் பகிர்ந்தளிக்கக் கூடிய முறைப்பற்றியும, சிறுபான்மைக்கு ஏற்படக்கூடிய சாதக பாதக நிலைப் பற்றியும் தொடர்ந்தும் இடம்பெறும். (தொடரும்…….)

Read more...

ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவம் வாபஸ்: ஒபாமா முடிவு

வருகிற ஆகஸ்டு மாதம் 31-ஆம் தேதிக்குள் ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடும் அமெரிக்க படை வீரர்கள் வாபஸ் பெறப்படுவார்கள். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்கள் அடுத்த ஆண்டில் முற்றிலும் திரும்ப பெறப்படுவார்கள். இருந்தாலும் ஈராக்கில் அமைதி முழுமையாக திரும்பும் வரை அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் பொதுத் தேர்தல் மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அமெரிக்க படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும் என அதிபர் ஒபாமா அறிவித்து இருந்தார். இதற்கிடையே அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பலத்த வன்முறை சம்பவங்களுக்கு இடையே தேர்தல் நடந்தது. வன்முறையையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது ராணுவத்தை அங்கிருந்து வாபஸ் பெற முடிவு செய்துள்ளது.

ஈராக்கில் நடைபெற்ற தேர்தல் குறித்து அதிபர் பராக் ஒபாமா கருத்து தெரிவித்தார். அப்போது, பல வன்முறை சம்பவங்களுக்கு இடையே அங்கு தேர்தல் நடைபெற்றது ஒரு மைல்கல் ஆகும்.

தற்போது தேர்தல் நடைபெற்று விட்டதால் ஈராக் மக்களின் தேவைகள் முழுவதும் நிறைவேற்றப் பட்டு விட்டதாக கருதுகிறேன். எனவே அங்கு தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடும் அமெரிக்க படை வீரர்கள் வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந்தேதிக்குள் வாபஸ் பெறப்படுவார்கள் என்றார். (டிஎன்எஸ்)

Read more...

பொது மக்களுடன் நல்லுறவு பேண யாழில் இராணுவ அலுவலகம்

பொது மக்களுடனான உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இலங்கை இராணுவம் யாழ்ப்பாண த்தில் நேற்று அலுவலகமொன்றை திறந்துள்ளது. இராணுவ தளபதி லெப்டினெட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் உத்தரவின்பேரில், பாதுகாப்பு படைகளின் யாழ். தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த அதுருசிங்க இந்த அலுவலகத்தை நேற்று திறந்து வைத்தார்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காண இந்த அலுவலகம் உதவும் அதேவேளை, இங்கு பொதுமக்கள் பாதுகாப்பு படையின் யாழ். தளபதியையும் சந்தித்து பேச முடியும். யாழ். குடாநாட்டு மக்களின் வாழ்க்கை நிலையை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் நோக்கத்துடனேயே இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





Read more...

Tuesday, March 9, 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 4

அவரும் கண்விளித்து என்னைப் பார்த்தார். அவருக்கு சங்கிலி பிணைப்பு இடப்பட்டிருந்தது. கண்கள் கலங்கியபடி பரிதாபமாக என்னை நோக்கினார். உங்கள் பெயர் என்ன? என்று கேட்டேன்! நான்தான் யாழ்ப்பாணம் றொலெக்ஸ் ஹொட்டல் ஓணர் என்றார். எனக்கு றொலெக்ஸ் ஹொட்டலைத் தெரியும், அந்த றொலெக்ஸ் ஹொட்டலில் நான் உணவு அருந்தியிருக்கிறேன். நான் கதைப்பதை தள்ளி நின்ற அட்டை ஒன்று பார்த்து விட்டது. என்ன கதைச்சனி என்னிடத்துக் கேட்டது அந்த அட்டை. நான், ஒன்றுமில்லை என்று தலையாட்டினேன். முறைத்துக் கொண்டு நகர்ந்தது அந்த அட்டை!

காலைக்கடன்கள் முடித்து மீண்டும் எங்களுக்கு வரையப்பட்ட இடத்தில் அமர்ந்து அட்டைகள் இல்லாத நேரம் பார்த்து அவருடன் கதைத்தேன். காலை ஒன்பது மணிக்கெல்லாம் அங்கிருக்கும் இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து விசாரணை என்று தாக்குவதன் மூலம் ஓர் பயங்கர சூழல் ஏற்படுத்தப்படும். றொலெக்ஸ் ஓணரும் அன்று காலைதான் இப்படி ஓர் அவல ஓலத்தைக் கேட்டு மிரண்டு போய் கண்களை மூடி இறைவனை ஏதோ வேண்டிக்கொண்டிருந்தார்.

இந்த நான்கு நாட்களும் இரவு 1 மணி அளவில் எங்கள் கொட்டடிக்கு வரும் 10க்கும் மேற்பட்ட அட்டைகள் ஆயுதங்களுடன் வருவார்கள் 10முதல் 12பேர்களது இலக்கங்களைப் படிப்பார்கள். அந்த இலக்கம் உடையவர்கள் எழுந்து நின்றதும் அவர்களை கெட்டவார்த்தைகளால் பேசி இழுத்துச் செல்வார்கள். அவர்களை எங்கு கொண்டு செல்கின்றனர் என்பது எங்களுக்குத் தெரியாது. அப்படி அழைத்துச் செல்லப்படுபவர்கள் யாரும் திரும்பி வந்தது கிடையாது. புலிகளது (அட்டைகளது) நாசி முகாம்களில் கொடுமையானது துணுக்காயில் இருக்கும் இந்தச் சிறைகள்தான்.
கிழக்கு மாகாணத்திலிருந்து கூட ஏனைய இயக்கச் சகோதரர்களையும் இங்குதான் வைத்திருந்தனர். இந்தச் சிறையிலிருந்து தினமும் 10முதல் 15 பேர்வரை இந்த அட்டைகளால் கொல்லப்படுவார்கள் என்று உதயன் என்று கூட இருந்த சகோதரன் என்னிடத்துக் கூறினார். இரவு நேரத்தில் அழைத்துச் செல்லப்படுபவர்கள் இவ்விதம் கொல்லப்படுவார்கள் என்று நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

வழக்கம் போல் அன்று யாருடனும் கதைப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இரண்டு வேளை உணவுடன் அவர்களது கோடு வரையப்பட்ட பெட்டிக்குள் அவர்களது உத்தரவுபடி அசையாமல் இருந்தேன். றொலெக்ஸ் ஓணரும் அப்படியே அன்று முழுவதும் இருந்தார். அவரால் இது போன்று அமர முடியவில்லை. நாங்கள் உழைக்கும் வர்க்கம், எதனையும் தாங்கிக் கொள்வோம், இவர் அப்படி வாழ்ந்திருக்க மாட்டார். அவர் படும் வேதனையைப் பார்த்து என்னால் வருந்தத்தான் முடிந்தது. எம் இனத்தின் இரத்தத்தை உறுஞ்சும் இந்த அட்டைகளுக்கு மனிதனின் வலி எப்படித் தெரியவரும்.

மறுநாள் காலைக் கடன் முடித்து அடிமேல் அடிவைத்து மீண்டும் எனது இடத்தில் அமர்ந்தேன். 10மணியளவில் தீபன் தலைமையில் அட்டைகள் கூட்டம் ஒன்று வந்தது. சிலரது இலக்கங்களை சத்தமாகப் படித்தனர். எனது இலக்கமான “K 87” ம் அதில் இருந்தது. எழுந்து சென்றேன் மொத்தம் 9 பேர், வெளியே அழைத்தனர்.

அந்த இடம் நீளமான ஓலைக்குடில். ஆறடி அகலத்தில் ஆறடி உயரத்தில் முள்ளுக் கம்பிகளால் குடிலினுள் வேலி போன்று அமைத்திருந்தனர். வரிசையாக ஒன்பது கதிரைகளும், பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் டெஸ்க்கும் போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு டெஸ்க்குக்கும் இடையில் உள்ள தூரம் குறைந்தது 6 அல்லது 7 அடிகள் வரும். ஒவ்வொரு கதிரையிலும் ஒரு களுதையும். மன்னிக்கவும் அட்டையும், அவருக்குத் துணையாக இரண்டு அட்டைகளும் அருகில் நின்றிருந்தனர்.

என்னை நான்காவது மேசைக்கு அழைத்தனர். விசாரித்த அட்டையின் பெயர் வான்மீன். அருகில் நின்றிருந்த இரண்டுபேரின் பெயர்கள் முறையே மஞ்சு (திருகோணமலை) கௌதமன் (திருகோணமலை). இந்த கொளதமன் பின்நாளில் யாழ்ப்பாணத்தில் வைத்து புலிகளின் ஒரு பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் இரண்டு யாழ்ப்பாணப் பெண்களை கற்பழித்தார் என்பது குற்றச்சாட்டு. இந்தக் கற்பழிப்பு பொதுமக்களுக்குத் தெரியவந்ததும் வேறு வழியின்றி தங்களை இனத்தின் காவலர்களாகக் காண்பிப்பதற்காகச் சுட்டுக்கொல்லப்பட்டார். இதே போன்ற சம்பவம் ஒன்றினால்தான் உருத்திரபுரம் வதைமுகாம் பொறுப்பாளராக இருந்த அத்தார் என்பவரும் தற்கொலை செய்தார் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

என்னை விசாரணைக்கு அழைத்த வான்மீன் என்ற அட்டை அவருக்கான கதிரையில் அமர்ந்திருந்தார். அருகில் இரண்டு பேர் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தனர். “இடே வாடா இங்கே” என்று அழைத்த அந்தப் பெருமகன் தன் முன்னிலையில் நிலத்தில் இருக்கும் படி உத்தரவிட்டார். இவர்கள் ஆட்சியாளர்ள், நாங்கள் அடிமைகள். ஏஜமானிய தோரணையில் இந்த அட்டை செயல்பட்டார்.

அமர்ந்தேன் தரையில். பெயர், முகவரி, குடும்ப அங்கத்தவர்கள் விவரங்களை எழுதிக் கொண்டார். விசாரணையை ஆரம்பித்தார், ஆரம்பம் முதலே அவரது வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட நல்ல வார்த்தையாக வெளிவரவில்லை. பெண் உறுப்பை வேறு வார்த்தையில் நினைவுபடுத்தி “மவனே” என்பது முதற்கொண்டு அவர் கேட்கும் கேள்விகளில் அவ்வளவும் அசைவ வார்த்தைகளாக இருந்தன. இவர் மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் இருந்த பொறுப்புவாய்ந்த அட்டைகள் அனைவருமே இதே வார்த்தைகளைத்தான் பயன்படுத்தினர்.

வான்மீன் - நீ எத்தனை பேருக்குக் கூட்டிக்கொடுத்தாய்? கோத்தை, கொக்கா எல்லாரையும் I.P.K.F க்கு கூட்டிக் கொடுத்தனிதானே? எத்தனை பேரைக் கற்பழித்தனீ? எத்தனை பேரைக் கொலை செய்தாய்? இப்படி இவர் கேட்ட அனைத்துக் கேள்விகளுமே பெண்கள் சம்பந்தப்பட்டதாகவும், கொலை, கொள்ளை சம்பந்தப்பட்டதாகவும் இருந்தன.

பிற இயக்கங்களைப் பற்றி இந்த அட்டைகள் இவ்விதமே விசமப் பிரசாரம் செய்து ஏனையோரை துரோகி என்று நம்பும்படி செய்தனர். ஒருவரை குற்றஞ்சாட்டி விசாரிப்பது என்றால் பாதிக்கப்பட்டவர் முறையிட வேண்டும், கொள்ளை அடித்திருந்தால் அதில் குற்றம் சுமத்தப்பட்டிருக்க வேண்டும், அதில் சாட்சியங்கள் இருக்க வேண்டும், கற்பழித்திருந்தால் அதில் பாதிக்கப்பட்டவர் முறையிட்டிருக்க வேண்டும், சந்தர்ப்ப சாட்சியங்கள் இருக்க வேண்டும், களவு செய்திருந்தால் அதில் முறையீடு இருந்திருக்க வேண்டும், களவு போன பொருட்கள் மீட்கப்பட்டிருக்க வேண்டும்.

இவற்றில் எதுவுமே இல்லாமல் பிற இயக்க அங்கத்தினரைப் பிடித்து வந்து கொடுமைப்படுத்துவதற்கு இவர்கள் சொன்ன குற்றச் சாட்டு சமூக விரோதிகள் என்பதாகும். நாம் எங்கள் நாட்டை மீட்கப் போராடப்புறப்பட்டவர்கள். ஒவ்வொரு இயக்கத்திலும் இளைஞர்கள் இணைந்தது நாட்டின் மீது பற்றுக்கொண்டே அல்லாமல், சுகபோகங்களை அனுபவிக்க இயக்கத்துக்கு வரவில்லை. புலிகளது கைகள் ஓங்கியதால் இவர்கள் ஏனைய இயக்க அங்கத்தினரைப் பிடித்துவந்து படுகொலை செய்கின்றனர்.

இவர்கள் 1986ஆம் ஆண்டு ரெலோ இயக்க அங்கத்தினரை படுகொலை செய்ததை நானே நேரில் பார்த்துள்ளேன். அப்போது எனக்கு பதினாறு வயது படித்துக்கொண்டிருந்தேன். விடுதலைப் போராட்டத்தில் இப்படிக் கொடியவர்களா ஈடுபடுகின்றனர்! ரெலோ இயக்கத்தினரை சுட்டுக்கொன்றனர், வெட்டிக்கொன்றனர், ரயறை எரித்து அதனுள் அந்தச் சகோதரர்களைப் போட்டு எரித்துக் கொன்றனர், கொதிக்கும் தாருக்குள் அவர்களை உயிருடன் போட்டு அவித்துக் கொன்றனர், இவை அனைத்தையும் யாரும் கதை சொல்லி நான் கேட்கவில்லை. என் கண்களால் இவற்றைப் பார்த்தேன். எனது அன்றைய வயதின் ஆர்வக் கோளாறானது இது. இந்தச் செயல்களை நான் நாவாந்துறையிலிருந்து எனது சைக்கிளில் சுண்ணாகம் முதற்கொண்டு பாசை ஊர் வரைக்கும் ஒரே நாளில் தண்ணீர் உணவு எதுவுமின்றி சுற்றித்திரிந்து பார்த்தேன்.

துப்பாக்கிகளுடன் வாகனங்களில் பறந்து திரிந்தனர், சுட்டு வீழ்த்தப்படும் தமிழ் சகோதரர்களை தெருக்களுக்கு இழுத்து வந்து நெருப்பில் போட்டனர். இந்த அட்டைகளை அன்று பார்க்கும் போது மனித இனத்தில் இப்படியான விலங்குகளா? என்று வியந்தேன் எனது நண்பன் ஒருவன் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர், நான் சைக்கிளில் இந்தக் கொடுமைகள் எல்லாவற்றையும் பார்த்து விட்டு இரண்டு நாட்கள் கழித்து நண்பன் விஜித்தைப் பார்க்க அங்கு சென்றேன்.

அவன் என்னை அழைத்துக் கொண்டு முத்திரைச் சந்தை வழியாக செம்மணி நோக்கி சென்றான். நான் ஒரு சைக்கிளிலும் அவன் ஒரு சைக்கிளிலுமாக சென்றோம். செம்மணி சுடலையின் எதிரில் சைக்கிளை நிறுத்தி அங்கபார் என்று காட்டினான். அங்கே ஒன்றும் தெரியவில்லை. நிலத்தைப்பார் என்றான், நிலத்தைப் பார்த்தேன், நிலத்தில் அறுபதிலிருந்து எழுபது அடி நீளத்துக்கு இரண்டடி அகலத்துக்கு சாம்பலாக இருந்தது. என்ன இப்படி சாம்பலாக இருக்குதே என்றேன். பார்த்தாச்சுதானே வா சொல்கிறேன் என்றான். திரும்பியும் நாங்கள் கல்வியங்காட்டுக்கு வந்தோம். இப்போது என்றாலும் சொல்லடா என்று ஆவலுடன் அவனிடத்துக் கேட்டேன் நண்பன் ஆரம்பித்தான்:-

நேற்று மாலையில் செம்மணியை நோக்கி வாகனங்களில் புலிகள் அங்குமிங்குமாக ஓடினர். ஒரு லொறியில் விறகுகளும் ஏற்றி அதன் மேல் ரையர்களும் ஏற்றிக் கொண்டு சென்றனர். நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு செம்மணி நோக்கிச் சென்றேன். சுடலைக்கு முன்னால் நான்கு ஐந்து வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. லொறியிலிருந்து விறகுகளையும். ரையர்களையும் இறக்கினர்.

நான் சைக்கிளை பூவரசமரத்தடியில் நிறுத்திவிட்டு மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டேன். இருட்டுவதற்கு ஆரம்பித்தது. அந்த நேரத்தில் மூன்று வான்கள் வந்தன. அவற்றிலிருந்து பல அண்ணன்மார்களை கண்களையும், கைகளையும் கட்டியபடி இறக்கினார்கள். அவர்கள் அனைவரும் ரெலோ இயக்க அண்ணன்மார்களாகத்தான் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அதே வான்கள் மீண்டும் திரும்பிச் சென்று 20 நிமிடங்களில் இன்னும் அதுபோல் அண்ணன்மார்களை அழைத்து வந்தனர்.

லொறியில் எடுத்துவந்த கட்டைகளை வரிசையா ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கினார்கள். க கண்கள் கட்டப்பட்டிருந்த அண்ணன்மார்களை இழுத்து வந்து வரிசையாகப் படுக்க வைத்தார்கள். இப்படி நாப்பது முதல் ஐம்பது பேர்வரையிலான அண்ணன்மார்களைப் படுக்க வைத்தார்கள். சில பேருக்கு துப்பாக்கியால் முதுகில் குத்தி தள்ளிச் சென்று படுக்க வைத்தார்கள். பின்னர் அவர்கள் மேல் சில மூடைகளையும் அடுக்கினார்கள். அவை என்ன மூடைகள் என்று தெரியவில்லை. அதன் பின்னர் அந்த மூடைகளின் மேல் ரயர்களை அடுக்கினார்கள். அதனைத் தொடர்ந்து பல கான்களில் எதையோ ஊற்றினார்கள். அது மண்ணெண்னையாக இருக்க வேண்டும் அல்லது பெற்றோலாக இருக்க வேண்டும் ஏனெனில் இவர்கள் ஊற்றும் போது அந்த அண்ணன்மார்களது கால்கள் துடித்தன. வெளியே தெரிந்த கால்களில் கட்டைகளைக் கொண்டு தாக்கினார்கள் புலிகள்.

திடீரென நெருப்புச் சுவாலை அவர்கள் மீது படர்ந்தது. அவர்கள் அலறும் சத்தம் மரத்தில் இருந்த என்னை உதறிக் கீழே தள்ளுவது போன்று இருந்தது. சுற்றி நின்ற புலி அண்ணாக்கள் எல்லாரும் தள்ளி ஓடினார்கள். சிறிது நேரத்தில் அவர்களது அலறும் சத்தம் நின்றுவிட்டது. மேலும் அரைமணி நேரமளவில் புலி அண்ணாக்கள் அங்கு நின்றனர். பின்னர் அவர்கள் வாகனங்களில் ஏறி கல்வியங்காடு நோக்கிச் சென்றனர். எனக்கும் பயமாக இருந்தது. மரத்திலிருந்து இறங்கி சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடி வந்துவிட்டேன் என்று கூறி முடித்தான்.

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 1,2,3 களை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தொடரும்…



இது தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. T111

Read more...

பிரான்ஸ் கடற்படையினர் 35 கடற்கொள்ளையர்களை மடக்கிப் பிடித்தனர்.

சோமாலியா கடற்கொள்ளையர்கள் 35 பேரை பிரான்ஸ் கடற்படையினர் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதன் வளைகுடா கடல் பகுதி வழியாக வரும் சரக்கு கப்பல்களை கடத்திச் சென்று, பணம் பறிப்பதை சோமாலியா கடல் கொள்ளையர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இவர்களை ஒடுக்க ஐரோப்பிய யூனியன்,"அட்லாண்டா மிஷன்" என்ற அமைப்பை கடந்த 2008 ஆம் ஆண்டு உருவாக்கியது.இதில் பல்வேறு நாட்டுப் படையைச் சேர்ந்தவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 4 நாட்களாக பிரான்ஸ் கப்பற்படையினர் சோமாலியா கொள்ளையர்களை பிடிக்க அதிரடி வேட்டை நடத்தினார்கள்.அப்போது கப்பலை கடத்த முயன்ற 35 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களால் கடத்தப்பட்ட 4 பெரிய கப்பல்கள், 6 சிறிய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் கொள்ளையர்களுக்கு சொந்தமான 4 பெரிய கப்பல்கள் மற்றும் ஏராளமான படகுகளையும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக பிரான்ஸ் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more...

பொன்சேகாவால் கைது செய்யப்பட்டுவர்களுக்கு இவ்வசதிகள் வழங்கப்படவில்லை. குலுகல்ல

ஜெனரல் சரத் பொன்சேகாவின் சேவைக்காலத்தில் பெரும் எண்ணிக்கையான இராணுவ அதிகாரிகள் இராணுவ நீதிமன்றில் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்டு எவ்வித காரணங்களும் இல்லாமல் சிறிய கூடுகளில் அறைக்கப்பட்டவர்களில் சிலர் இராணுவ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர் பலர் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் விடுதலை செய்யப்படுட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் இயக்குனர் லக்ஷ்மன் குலுகல்ல அவ்வாறு சரத் பொன்சேகாவினால் கைது செய்யப்பட்டவர்கள் எவரும் இன்று சரத் பொன்சேகா கோரும் சலுகைகளை அனுபவித்திருக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

தனது மகள்மாருடன் கதைப்பதற்காக ஜெனரல் பொன்சேகாவிற்கு ஸ்கைப் வசதிகள் வழங்கப்பட்டிருந்தது. அவ்வசதிகளை கடந்த 6ம் திகதியிலிருந்து இராணுவத்தினர் வாபஸ் பெற்றனர். அதைத்தொடர்ந்து அவ்வசதி மீள அளிக்கப்படும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஜெனரல் பொன்சேகா அறிவித்திருந்தார். இதனால் எழும்பிய சர்ச்சைகள் தொடர்பாக விளக்கியபோது மேற்கண்டவாறு தெரிவித்த லக்ஷ்மன் குலுகல்ல சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்டும் இவ்வாறான வசதிகள் சலுகைகளே அன்றி அவற்றினை செய்யவேண்டும் என்ற கடமைப்பாடு இராணுவத்திற்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Read more...

இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தின் ஐ.நா விற்கு இடமில்லை. பிரதமர்

இலங்கையின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட இடமளிக்க மாட்டோம் என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நமது நாடு சிறிய நாடு என்பது உண்மை. எங்களிடம் போதியளவு ஆயுதபலம் இல்லை என்பதும் உண்மை. ஆனால் அதையே காரணமாக வைத்துக்கொண்டு எங்களை அதிகாரம் செய்ய முயற்சிப்பார்களானால் அது தவறானதாகும்.

ஈராக்,பிரிட்டன் ஆகிய நாடுகளில் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்படுகின்றன.ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருக்கு ஏன் அந்த நாடுகளில் தலையிட முடியாது? மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராய அந்த நாடுகளில் மாத்திரம் ஏன் குழுக்களை நியமிக்க முடியாது?

நாம் இதனை தெளிவாக சிந்திக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

டெல்லி விமான நிலையத்தில் முழுஉடலையும் காட்டும் ஸ்கேன்

பயணிகளின் முழு உடலையும் படம் பிடித்துக்காட்டும் ஸ்கேன் சாதனங்கள் டெல்லி விமான நிலையத்தில் விரைவில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமான பயணிகள் தங்களுடன் ஆயுதம், போதை மருந்து போன்றவற்றை சட்டவிரோதமாக மறைத்து எடுத்து செல்வதைத் தடுத்து அவர்களைப் பிடிக்க வெளிநாட்டு விமான நிலையங்கள் பலவற்றில் முழு உடலையும் பரிசோதிக்கும் ஸ்கேன் கருவிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த கருவிகள் பயணிகளை முழு நிர்வாணமாகப் படம் பிடித்துக்காட்டும். இதனால் இவற்றுக்குச் சில நாடுகளில் எதிர்ப்பு கிளம்பி இருக்கின்றன. இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் முழு உடல் பரிசோதனை ஸ்கேன் அமைக்கப்படுகின்றன. டெல்லி இந்திராகாந்தி அனைத்துலக விமான நிலையத்தில் இதை அடுத்த மாதம் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

இதுபற்றி விமானத்துறை மந்திரி பிரபுல் பட்டேல் பலா விவரங்களைத் தெரிவித்தார். “இந்தியாவுக்குப் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறது. எனவே இந்த கருவியை நாமும் பொருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நவீன பாதுகாப்பு வசதிகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்வோம்,” என்று அவர் சொன்னார். “இந்த நவீன ஸ்கேன் கருவி முழு உடலையும் பரிசோதனை செய்தாலும் உடலை அருவருக்கத்தக்க முறையில் காட்டாது. எனவே கருவிக்கு பிரச்சினை இருக்காது,” என்று இந்தக் கருவி உடலை நிர்வாணமாக காட்டுவது குறித்து அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார்.

Read more...

இலங்கை அமைச்சரின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்துள்ளது.

இலங்கை உள்வீட்டு விவாகாரங்களில் இந்தியா மூக்கை நுழைப்பதாக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து பிரிந்து சென்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ள தபால் துறை அமைச்சர் நந்தன குணதிலக குற்றச்சாட்டியிருந்தார்.

அத்துடன் சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலின்போது ஜனாதிபதி ராஜபக்சவுக்கு எதிராக சில இந்திய அதிகாரிகளும், இந்தியாவின் அயல்நாட்டு விவகாரங்களுக்கான புலனாய்வு அமைப்பான 'ரா'வைச் சேர்ந்த சில அதிகாரிகளும் மகிந்த ராஜபக்ச தோல்வி அடைவதற்கு ஏதுவாக செயற்பட்டதாகவும் இலங்கை தபால் துறை அமைச்சர் நந்தன குணதிலக குற்றம் சுமத்தியிருந்தார்.

இலங்கை வந்த இந்திய அயலுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ், ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்துப் பேசியபோது, அவர் முன்னிலையில் நந்தன குணதிலக இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆனால் அப்போதே நிருபமா இந்தக் குற்றச்சாற்றை மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கொழும்பிலிருந்து வெளியாகும் ' டெய்லி மிரர்' நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் இதே குற்றச்சாற்றை குணதிலக மீண்டும் தெரிவித்துள்ளார். முன்னர் அமெரிக்காவுடன் இலங்கை நல்லுறவை வளர்த்துவந்ததால் விடுதலைப்புலிகளை இந்தியா வளர்த்துவிட்டது. அதன் உளவு ஏஜென்சியான 'ரா' மற்ற போராளி குழுக்களை உருவாக்கியது.

இந்நிலையில் சமீபத்திய தேர்தலில் ராஜபக்ச வெற்றி பெறுவதை விரும்பாத சில இந்திய அதிகாரிகள், அவரை தோற்கடிக்க முயற்சித்தனர். அதே சமயம் இந்திய அரசோ அல்லது பிரதமரோ இதை செய்யவோ அல்லது விரும்பவோ இல்லை' என்று அந்த பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதனிடையே குணதிலகவின் இந்த குற்றச்சாற்றை இந்தியா அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது இது தொடர்பாக கொழும்பில் இந்திய ஊடகவியலாளர்கள் இடம் பேசசிய நிருபமா ராவ், 'ரா' போன்ற இந்தியாவின் எந்த நிறுவனமும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக செயல்படவில்லை என தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக இந்தியா செயற்பட்டதாக கூறப்படுவது பொய்யான தகவல் எனவும், இந்தியா எந்த ஒருநாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடுவதில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

Read more...

புலிகளின் சட்டப் பிரிவில் பணியாற்றிய பெண் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைப்பு

விடுதலை புலிகளின் சட்டப்பிரிவில் பணியாற்றிய பெண் ஒருவரும் அவரது இரு பிள்ளைகளும் கிறிஸ்மஸ் தீவில் வைத்துத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய இணையத்தளம் செய்திவெளியிட்டுள்ளது.

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 78 பேர் கிறிஸ்மஸ் தீவருகே வைத்து கடந்த ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தமது அகதி அந்தஸ்து கோரிக்கை அங்கீகரிக்கப்படும் வரை ஓஷியானிக் விகிங் கப்பலில் இருந்து இறங்குவதில்லை எனத் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து அவுஸ்திரேலிய அரசாங்கம் 12 கிழமைகளுக்குள் இவர்களுடைய கோரிக்கை மற்றும் மீள் குடியேற்றம் குறித்து கவனம் செலுத்துமென உறுதியளித்திருந்தது.இவ் உறுதிமொழியை அடுத்து இலங்கை அகதிகள் தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந்நிலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி பெண்ணின் சகோதரர் கருத்துத் தெரிவிக்கையில்

'அவர் விடுதலை புலிகளின் நீதிமன்றம் அல்லது அலுவலகத்தில் பணியாற்றியிருக்கலாம்.எனினும் அவர் விடுதலை புலி உறுப்பினர் அல்லர்' எனத் தெரிவித்தார்.

மோதல் முடிவடைவதற்கு முன்னரான காலப்பகுதியில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைகளுக்குக் கீழ் பணியாற்றுவதைத் தவிர வேறு தெரிவுகள் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதற்கு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளவர்கள் என ஏற்கனவே நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது ஐந்தாவதாக இப்பெண் அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் தனது இரு பிள்ளைகள்இ தாய்இ மற்றும் சகோதரருடன் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு கப்பல் மூலம் பயணித்துள்ளார். இவரது கணவர் ஏற்கனவே அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தினால் அனுமதி மறுக்கப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ___

Read more...

பயங்கரவாதம் அற்ற நாட்டில் இராணுவ தடுப்பு முகாம்கள் எதற்காக? சுனில் ஹந்துநெட்டி.

அவசரகாலச் சட்டத்தினை நீடிக்கும் பொருட்டு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களுடாக இன்று பாராளுமன்றம் கூட்டப்பட்டு, அவசரகாலச் நீடிப்பு மீதான விவாதங்கள் இடம்பெற்றபோது பேசிய ஜேவிபி பாராளுன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெட்டி புதிய இராணுவ தடுப்பு முகாம்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் இடம்பெற்றுள்ளது, இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் இவ்வாறான முகாம்கள் அமைக்கப்படுவதன் நோக்கம் என்ன? இது எதிர்கட்சி அரசியல்வாதிகளையும் , தொழில் சங்கத்தினரையும் அடைத்து வைப்பதற்காகவா என்ற கேள்விகளை எழுப்பினார்

Read more...

மகளிர் தினத்தன்று நியூயார்க், கொழும்புக்கு இயக்கப்பட்ட அனைத்து மகளிர் விமானங்கள்.


மகளிர் தினத்தையொட்டி நேற்று சென்னையிலிருந்து கொழும்புக்கும், மும்பையிலிருந்து நியூயார்க் நகருக்கும் முற்றிலும் பெண் ஊழியர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்த விமானங்கள் இயக்கப்பட்டன. சர்வதேச மகளிர் தினம் நேற்று உலக முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி மகளிரை கெளரவப்படுத்தும் வகையில் நேற்று மும்பையிலிருந்து நியூயார்க் நகருக்கு முதல் முறையாக மகளிர் மட்டுமே இயக்கிய விமானத்தை ஏர் இந்தியா செலுத்தியது.

மும்பையில் இருந்து நியூயார்க் நகருக்கு வழியில் எங்கும் நிற்காமல் 14 மணி நேரம் தொடர்ந்து பயணம் செய்யும் வகையில் போயிங் 777-200 ரக விமானத்தை முழுவதும் பெண்களே இயக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது.

இந்த விமானத்தில் பெண் கேப்டன்கள் மிரன்டா, சுனிதா நருல்லா ஆகியோர் விமானத்தின் கமாண்டர்களாகவும், பெண் கேப்டன்கள் சுவாதி ரவால், நேகாகுல்கர்னி ஆகியோர் விமானத்தின் முதல் அதிகாரிகளாகவும் இருந்தனர். நேற்று பிற்பகல் 1.30 மணி அளவில் மும்பையில் இருந்து 174 பயணிகளுடன் இந்த விமானம் புறப்பட்டது.

இதுபற்றி காமாண்டர் சுனிதா கூறும்போது, எப்போதும் விமானத்தில் 2 ஆண் விமானியும், 2 பெண் விமானியும் இருப்பார்கள். சில சமயங்களில் 3 ஆண் விமானியும், 1 பெண் விமானியும் இருப்பார்கள். ஆனால் முதல் முறையாக பெண் விமானிகளை மட்டும் கொண்டு விமானம் இயக்கப்படுவது இது தான் முதல் முறை என்றார்.

இதேபோல, சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு முழுக்க முழுக்க பெண்களே இயக்கிய விமானத்தை இந்தியன் ஏர்லைன்ஸ் செலுத்தியது. விமானி தீபா மேத்தா தலைமையில் உதவி விமானி சோனியா ஜெயின், பணிப் பெண்கள் ராஜானி, விருந்தா, தன்னியா, பிரசன்னா, யாமினி கொண்ட குழு தயாரானது.

இந்த விமானத்தில் 141 பேர் பயணம் செய்யதனர். கொழும்பிற்கு பெண்களே இயக்கும் விமானத்தில் செல்ல இருந்த விமானி, உதவி விமானி, பணிப்பெண்கள், பெண் பயணிகள் ஆகியோருக்கு தென்மண்டல விமான நிறுவன அதிகாரி சுனில் கிஷாந்த் மலர் கொத்து தந்து வழியனுப்பி வைத்தார்.

விமானி தீபாமேத்தா நிருபர்களிடம் கூறுகையில், தற்போது விஞ்ஞான ரீதியாக பெண்கள் மேலோங்கி வருகின்றனர். பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நிலைமை கொண்டு வரப்படுகிறது.

அப்படி இருக்கும்போது கொழும்பிற்கு ஆண்கள் உதவியின்றி முழுக்க முழுக்க பெண்களை கொண்டே இயக்க உள்ளோம். இது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. பெண்களால் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்க இந்த வாய்ப்பு கிடைத்து உள்ளது என்று விமானி தீபா மேத்தா கூறினார்.

பெண் குழுவால் இயக்கப்பட்ட அந்த விமானம் கொழும்பு சென்றுவிட்டு மாலை 4.25-க்கு சென்னை திரும்பியது. வரும் வழியில் 117 பயணிகள் அதில் பயணித்தனர்.

Read more...

பாதாள உலகத்தினை சேர்ந்தவர்கள் என இருவர் சுட்டுக்கொலை.

குருநாகல் படகமுவ பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இருவர் மீதும் 28க்கு மேற்பட்ட கொலைக் குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளதுடன், நேற்று பன்னலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இவர்கள் பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றதாகவும், இவர்கள் படகமவில் உள்ள காட்டுப்பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தங்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸார் அவ்வீட்டினை சுற்றி வளைத்தபோது, அவர்கள் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும், பொலிஸார் மேற்கோண்ட பதில் துப்பாக்கி பிரயோகத்தில் அவர்கள் இருவரும் உயிரிழந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரத்தின் ஊடாக கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றம் இன்று கூட்டப்பட்டு அவசரகால நீடிப்புக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது. அவசரகாலச் சட்டம் 69 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்தினை எதிர்த்து ஜேவிபி, ஐ.தே.க, த.தே.கூ மற்றும் மனோ கணேசன் ஆகியோர் வாக்களித்துள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்னர் மீண்டும் பாராளுமன்றம் கூட்டப்பட்டு மேலும் ஒரு மாதத்திற்கு அவசரகாலச் சட்டத்தினை நீடிப்பதற்கான வாக்கெடுப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

கை கால் பிடித்து விடுவது தப்பா? - ரஞ்சிதா பரபர பேட்டி

நித்யானந்தா செக்ஸ் லீலையில் சம்பந்தப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டுவரும் நடிகை ரஞ்சிதா தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இப்போது அவர் முதல்முறையாக
குமுதம் ரிப்போர்டர் இதழுக்கு செல்போன் மூலம் பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

அந்த வீடியோவில் இருப்பது நீங்கள்தானே?

ஆமாம். நான்தான். ஆனால் அதை மிகைப்படுத்தி ஏதேதோ சேர்த்துள்ளனர். எனக்கு நித்யானந்தர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. அது ஊருக்கே தெரியும். அவரது கொள்கைகள்இ ஆன்மீக உரைகளால் கவரப்பட்டவள் நான். எனக்கு பல ஆண்டுகளாக இருந்த வீஸிங் தொல்லையை ஒரே நாளில் குணப்படுத்தியவர் அவர்... அன்று முதல் அவரது பக்தை ஆகிவிட்டேன்...

அந்த ஆபாச காட்சிகள்...

காலைப் பிடித்து விடுவதும் மாத்திரை கொடுப்பதும் உணவு தருவதும் ஒரு பணிவிடைதானே.. அத்துடன் ஏதேதோ சேர்த்து ஒரு நீலப்படம் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.


சாமியாரை மிரட்டி பணம் பறிக்கத்தான் இப்படிச் செய்தீர்களாமே?


நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள். பணத்துக்காக நானே இப்படியெல்லாம் படமெடுத்தேன் என்று மீடியா சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை. பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. எந்த ஒரு பெண்ணாவது தன்னைத்தானே இப்படி எடுத்துக் கொள்வாளா?

உங்கள் கணவர் ராகேஷை ஏன் விவாகரத்து செய்தீர்கள்?

பத்திரிகை- டிவிக்களில்தான் இப்படி சொல்கிறார்கள். ஏன் இப்படி? எனக்கும் என் கணவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.

நடந்த உண்மையை வெளிச்சத்துக்கு வந்து நீங்களே சொல்லலாமே?

அதான் இப்போது சொல்லிட்டேனே... நித்யானந்தா மகாஞானி. அடுத்த இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்வார். தயவு செய்து மீடியாக்கள் என்னை மேலும் காயப்படுத்தாதீர்கள்...'

-இவ்வாறு கூறியுள்ளார் ரஞ்சிதா.

Read more...

Monday, March 8, 2010

ரிரான் அலக்ஸ் ரிஐடி யினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

ரிஐடி எனப்படும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மங்கள சமரவீர தலமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) யின் பொதுச் செயலாளர் ரிரான் அலெக்ஸ் அவர்களை விசாரணை செய்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலங்களில் ஜெனரலுக்கு எவ்வித உதவிகளை மேற்கொண்டீர்கள் என்ற கேள்விகள் கேட்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

Read more...

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 1,2,3

யூதர்களை கிட்லர் எப்படிக் கொடுமைப்படுத்தினார் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டது. புகைப்படங்களாக, திரைப்படங்களாக உலகமக்கள் கண்டு மிரண்டனர். யூதர்கள் மீது இரக்கம் கொண்டனர். ஆனால் தமிழீழம் என்ற சொல்லின் பின்னால் மறைந்திருந்த மிருகங்களான அட்டைகள் (புலிகள்) எங்கள் இனத்தவரை எப்படியெல்லாம் கொடுமைக்கு உள்ளாக்கினர் என்பது வெளியுலகுக்குத் தெரியாது. இந்த அட்டைகள் எங்கள் இனத்தை நசுக்கி அதன் இரத்தத்தினை உறிஞ்சிய வரலாற்றினை எங்கள் மக்களுக்கு எடுத்துரைக்க அட்டைகளே வழி கோலியுள்ளனர்.

“தமிழ்வின்” என்ற நாசகார இணையதளத்தில் ஈ.என்.டி.எல்.எப். பற்றிய அவதூறுப் பிரசாரத்தினை இந்தத் தளம் மேற்கொண்டது. ஒட்டுக்குழு என்றும், இலங்கை அரசுடன் இணைந்துள்ளனர் என்றும், கிளிநொச்சியில் முகாம் அமைக்கின்றனர் என்றும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை இந்தத் தளம் எங்கள் மக்களுக்குத் தெரிவித்து மக்களையும் குழப்பி, இயக்கங்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளனர்.

உண்மையில் இந்தத் தளம் சரியான தகவலை வெளியிட்டிருந்தால் நாம் அதனை எதிர் கொண்டு விளக்கம் அளித்திருப்போம். இப்படிப் பொய்யான தகவல்களை பரப்பிவிட்டு வேடிக்கைப்பார்க்கும் போக்கு நரித்தனமானது. இந்தச் செய்தியைப் பரப்பிய மனிதரை எமக்குத் தெரியாது. ஆயினும் இந்தத் தளம் புலிகளின் ஆதரவுத் தளமாகும். ஆதலால் புலிகள் பற்றிய உண்மைத் தகவல்களை வெளியிட நாம் அவர்களாலேயே தள்ளப்பட்டுள்ளோம். இங்கே வரும் புலிகள் என்ற சொல்லுக்குப் பதிலாக நாம் அட்டைகள் என்று குறிப்பிட்டுள்ளோம். கீழே வரும் தகவல்களில் அட்டைகள் என்ற பதத்தினை புலிகள் என்று எடுத்துக்கொள்ளவும். நாசிகளின் கொடுமைகளை விட அட்டைகள் செய்த கொடுமைகள் பயங்கரமானது.

எங்கள் இணைய தளம் மூலமாக தனது அனுபவங்களை வெளியிடுகிறார், திரு. கிறேசியன். இவர் நாற்பது மாதங்கள் அட்டைகளின் வதை முகாம்களில் இருந்துள்ளார். இதோ அவரே:- எனது சொந்த ஊரான நாவாந்துறை யாழ்ப்பாணம் நகரில் நான் இருந்தபோது ஆயுதம் தரித்த அட்டைகள் இரண்டு பேர் என் வீட்டுக்கு வந்தனர். விசாரணை ஒன்று உள்ளது எங்களுடன் வரவேண்டும் என்றனர்.

எங்கள் ஊரின் தலைவர் முன்னிலையில் இவர்கள் அட்டைகள்தான் என்பதை உறுதி செய்த பின்னர், என்னை நல்லூருக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து ஒரு வானில் ஏற்றி கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றனர். என்னுடன் மூன்று அட்டைகள் ஒட்டிக்கொண்டிருந்தனர்.

மறுநாள் அங்கிருந்து வட்டக்கச்சிக்கு சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றனர். கூடவே இரண்டு அட்டைகள் சைக்கிளில் வந்தனர். அங்கு சென்றதும், வட்டக்கச்சி பொறுப்பாளர் நசீர் என்னும் பெரிய அட்டையிடம் ஒப்படைத்தனர். அவர் என்னுடைய முகவரி, குடும்ப உறுப்பினர்கள் விபரங்களைச் சேகரித்தார்.

ஒருநாள் அங்கு வைத்திருந்தனர். மறுநாள் காலை மீண்டும் சைக்கிளில் உருத்திரபுரத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே “அத்தார்” என்ற பெரிய அட்டையும் உதவி அட்டை கீதன் என்பவரும் என்னை விசாரித்தனர். 1990 மார்ச் 15ம் திகதி என்று நினைக்கிறேன், உருத்திரபுர வயல்வெளியில் தனியாக ஒரு வீடு இருந்தது. அங்கே அழைத்துச் சென்றனர். அந்தத் தனி வீட்டினுள் ஏறக்குறை 15 தமிழ் இளைஞர்கள் விலங்கு மாட்டப்பட்டு தனித்தனியாக அமரவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தலையைக் குனிந்து கொண்டிருந்தனர். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. இலங்கை ராணுவம்தான் கைவிலங்கிட்டு தமிழர்களை வதைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருந்தேன். முதல் தடவையாக தமிழர்கள் தமிழர்களை கைவிலங்கிட்டு அமரவைத்திருந்ததைப் பார்த்தேன். பின்நாளில் நான் படவிருக்கும் கொடுமைகளை அன்று அறிந்திருக்கவில்லை.

அந்த தனிவிடுதியில் இரண்டு நாட்கள் வைத்திருந்தனர். இந்த இரண்டு நாளும் அங்கிருந்த ஏனைய 15 பேருடனும் கதைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அங்கிருந்தவர்களும் என்னுடன் கதைப்பதற்கு முற்படவில்லை. அந்த அறையினுள் எந்த நேரமும் நான்கு ஐந்து அட்டைகள் எங்களை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மூன்றாவது நாள் ஒரு ட்ராக்ரர் ஒன்று நாம் இருந்த வீட்டின் முன் வந்து நின்றது. அதில் உருத்திரபுரம் பெரிய அட்டை அத்தார் இருந்தார். மாலை ஆறுமணியளவில் அந்த ட்ரக்ரரில் ஏறச் சொன்னார் ஒரு முரட்டு அட்டை. நாம் ட்ராக்ரரில் ஒவ்வொருவராக ஏற்றப்பட்டோம். ஏறுவதற்கு முன்னர் என்னுடைய கண்கள் கட்டப்பட்டன. அதே போன்று ஏனையவர்களது கண்களும் கட்டப்பட்டன. இருட்டு வேளை, வாகனம் நகர்கிறது. எந்தப்பக்கம் அந்த வாகனம் செல்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. ட்ராக்ரர் பெட்டி குலுக்கிக் கொண்டும், சிலவேளை எங்களை ஒருவருக்கு மேல் ஒருவர் மோதி விழவும் செய்தது. கண்கள் கட்டப்பட்டிருந்ததால் விழுந்துவிடாமல் இருக்க எதனைப் பிடிக்கவேண்டும் என்று தெரியாது. ஒரு தடவை அத்தனை பேரையும் மூன்றடி உயரத்துக்குத் தூக்கி வீசி நாம் அனைவரும் பெட்டியின் ஓரங்களில் அடிபட்டு விழுந்தோம். இதனைக் கண்டு நகைத்தனர். அவர்களுக்கு இந்தக் காட்சியைப் பார்க்க வினோதமாகவும், வேடிக்கையாகவும் இருந்திருக்கும். ஏனென்றால் நாம் அவர்களுக்கு அப்போ மனிதர்களாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்கள் மனிதர்கள் அல்ல என்று பின்னால் கண்டுகொண்டேன்.

மூன்று மணி நேர ஓட்டத்திற்குப் பின்னர் அந்த இருட்டுவேளையில் ஓர் வீட்டினில் வாகனத்தை நிறுத்தி அனைவரையும் இறங்கும்படி அத்தார் என்ற பெரிய அட்டை உத்தரவிட்டார். கட்டப்பட்டிருந்த கண்கள் கழற்றப்பட்டன. அந்த வீட்டில் மல்லி என்ற ஓர் கொடிய அட்டை எங்களைப் பார்த்து முறைத்தது. இந்த அட்டைக்குத் துணை அட்டையாக இருந்தது ராஜன் என்ற அட்டை. எங்களை அத்தார் அட்டை மல்லி அட்டையிடம் ஒப்படைத்துவிட்டு புறப்பட்டார். இந்த அத்தாரை நான் இதன் பின்னர் பார்க்கவே இல்லை. இரண்டு ஆண்டுகளின் பின்னர் இந்த அத்தார் அட்டை தற்கொலை செய்து கொண்டதாகக் கேள்விப்பட்டேன். இராணுவத்திடம் அகப்பட்டுக்கொண்டதால் தற்கொலை செய்து கொண்டதாக எண்ணவேண்டாம். பெண்களுடன் தவறாக நடந்துகொண்டதும், மக்களிடமிருந்து பறித்த பணத்தை இவர் கையாடல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. சம்பவங்கள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டதால் அவமானத்தினால் விசாரணைக்கு முன்னரே சைனையிட் உண்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலையில் தெரியவந்தது நாம் இருக்கும் இடம் வவுனிக் குளத்தில் இருக்கும் சிவபுரம் என்பது. இந்த இடத்தில் ஐந்து முதல் ஆறு வீடுகள் வரையில் அட்டைகள் வைத்திருந்தனர். கையில் போடப்பட்டிருந்த விலங்குகள் கழற்றப்பட்டன. அதற்குப் பதிலா சங்கிலி கொண்டு வந்தனர். அந்தச் சங்கிலி 2 அடி நீளம் இருக்கும். என்னுடைய இரண்டு கால்களையும் அதன் இரு முனைகளாலும் சுற்றி முனைகளில் பூட்டுப் போட்டு பூட்டினர். எனது இரு கால்களுக்குமிடையில் இருந்த சங்கிலி நீளம் 10 அங்குலங்களாகும். எனதருமைத் தமிழர்கள் எங்களுக்கு மிருகங்களைப் போன்று கால்களில் விலங்கிட்டனர். நான் ஓர் கிறிஸ்தவன், “ஓ ஆண்டவரே இந்தப் பாவிகளை மன்னிக்க வேண்டும்” என்று இறைவனை வேண்டிக்கொண்டேன். ஏனெனில் இதுவே கொடுமை என்று அப்போது எண்ணிக் கொண்டேன். இதையும் விடக் கொடுமைகள் எனக்கு நடக்கப் போகிறது என்று என்னால் உணர முடியவில்லை!

நான்கு நாட்கள் இந்தச் சங்கிலியுடன் பெரும் அவதிப்பட்டேன். மலம் கழிப்பதற்கு கழிவிடம் ஒரு திசையிலும் கிணறு ஒரு திசையிலும் இருந்தது. கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு கழிவிடத்துக்குச் செல்ல வேண்டும். நிதானம் தவறி காலை எடுத்துவைத்து ஐந்தாறு தடவைகள் முகம் நிலத்தில் படுமளவு விழுந்து முகத்தில் காயம் ஏற்பட்டது. நான் நடந்து செல்வதை அட்டைகள் தள்ளி நின்று ரசிப்பார்கள். எங்கள் வேதனை அவர்களை மகிழ்வித்தது.

ஐந்தாவது நாள் என்னை விசாரிக்க வேண்டும் என்று கூறி எனது கண்களைக் கட்டினர்.

(பகுதி 2)

ஐந்தாவது நாள் என்னை விசாரிக்க வேண்டும் என்று கூறி எனது கண்களைக் கட்டினர். அருகில் இருந்த இன்னொரு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். விசாரணை அதிகாரி அங்கே இருந்த மல்லி என்ற கொடிய அட்டைதான். இந்த மல்லி என்ற அட்டை பிரபாகரனுக்கு மிகவும் வேண்டியவராம். அப்போது அவர் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களை நெத்தியில் சுட்டுக்கொன்ற மாவீரன் என்று சிறிய அட்டைகள் புகழ்ந்து சொன்னார்கள். தமிழர்களைக் கொன்றதில் புகழ்ச்சி கொண்டவர்களா விடுதலைப் போராளிகள்? மனதுக்குள் நினைத்துக்கொண்டு மெதுவாக நடந்து அந்த வீட்டுக்குச் சென்றேன். அங்கே, என்னைத் தரையில் அமரும்படி கூறினர். நானும் அமர்ந்தேன் என் எதிரில் ஓர் கதிரை போடப்பட்டது. அந்தக் கதிரையில் மல்லி என்ற அட்டை அமர்ந்தது.

தடித்தக் குரலில் கேட்டார்:-

மல்லி – உனது பெயர் என்ன?

கிறேசியன் – எனது பெயர் கிறேசியன்.

மல்லி – சொந்த ஊர்?

கிறேசியன் – நாவாந்துறை

மல்லி – எந்த இயக்கம்?

கிறேசியன் – ஈ.என்.டி.எல்.எப்.

மல்லி – எப்போது அதில் சேர்ந்தாய்?

கிறேசியன் – 1987ல்

மல்லி – எங்கே பயிற்சி எடுத்தாய்?

கிறேசியன் – கிளிநொச்சியில்.

மல்லி – எத்தனை பேரைக் கொலை செய்தாய்?

கிறேசியன் – நான் யாரையும் கொன்றதில்லை.

மல்லி – எங்கே எல்லாம் கொள்ளையடித்தாய்?

கிறேசியன் – நான் எங்கும் கொள்ளையடித்ததில்லை.

மல்லி – உன்ர கொக்காவை இந்தியன் ஆமிக்கு எத்தனை தரம் கூட்டிக்கொடுத்தாய்?

கிறேசியன் – பதில் எதுவும் கூறவில்லை.

மல்லி – மீண்டும் – அப்ப கொம்மாவைக் கூட்டிக் குடுத்தியா?

கிறேசியன் – மரியாதையான கேள்வி கேட்டால் நான் பதில் சொல்வேன்.

உடனே மல்லி அட்டைக்கு கோபம் வந்து எனது முகத்தில் அவரது செருப்புக் காலால் உதைத்தார். நான் மறு முனையில் வீழ்ந்தேன். எனது கண்கள் கட்டப்பட்டிருந்ததால் என்னைச் சுற்றி எத்தனை பேர் ,ருக்கின்றனர் என்பது தெரியாது. மல்லி கோபத்துடன் கத்துகிறார். ‘அந்தக் கருங்காலி கட்டையை எடுத்துவாடா’ என்று. அடுத்த நிமிடத்தில் ஓர் முரட்டுத்தனமான கட்டையால் நிலத்தில் கிடந்த என்னைத் தாக்கினார். கைகள், கால்கள், முதுகு. வயிறு என்று அனைத்துப் பகுதியிலும் மாறி மாறி அடித்தார். ஒரு அடி விழும் போது வலியினால் துடித்துத் திரும்புகையில் மறு புறத்தில் அடிப்பார். அந்தப் பக்கம் வலியினால் திரும்புகையில் எதிர்புறத்தில் அடிப்பார். தலையைத் தவிர ஏனைய அனைத்துப் பாகங்களிலும் அடித்தார் அந்தக் கருங்காலிக் கட்டையால்.

மரணத்தின் வேதனை எனக்குத் தெரியாது. ஆனால் சித்திரவதையின் ஆரம்பக்கட்டத் தண்டனையை அனுபவித்தேன். நான் எனது நண்பர்களையோ, உறவினரையோ, என் வயதில் குறைந்தவர்களையோ ‘வாடா, போடா’ என்று கதைப்பது கிடையாது. என்னைத் தாக்கும் போது அந்த மல்லி என்ற அட்டையிடமிருந்து வந்த வார்த்ததைகளை இதில் எழுத முடியாத நிலையில் இருக்கிறேன். தமிழில் அப்படியான கொடிய வார்த்தைகள் இருக்கிறதா என்று வியந்தேன் அந்த வேதனையிலும். குறைந்தது ஐந்து நிமிடங்கள் வரையில் ,வ்விதம் தாக்கிய அந்த அட்டை, களைப்படைந்து விலகிச் சென்றது. சிறிது நேரத்தில் மீண்டும் வந்து அதே கட்டையால் தாக்கினார்.

அவருக்குக் கோபம் வந்தது எதனால் என்றால் நான் ‘மரியாதையான கேள்வி’ என்று கேட்டதுதான். அவர் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் மரியாதையானவை, நான் கேட்டதுதான் மரியாதைக் குறைவான வாசகமாக அவர் அறிவுக்குப்பட்டது.

மீண்டும் களைப்படைந்த அந்த அட்டை சிறிய அட்டைகளிடத்துச் சத்தமாகச் சொன்னார், ‘இவனை இழுத்துக்கொண்டு போய் அந்த அறையில் போற்றா’ என்றார். அவர்களும் எனது கால்ச் சங்கிலியில் பிடித்து இழுத்துச் சென்று அறையினுள் விட்டனர். எனது முதுகு நிலத்தில் உரசியதால் அடி வலியுடன் அதுவும் சேர்ந்து வதைத்தது.

தொடர்ந்து நான்கு நாட்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தேன். இரவு 11மணியளவில் பல அட்டைகள் சேர்ந்து கதைக்கும் சத்தம் கேட்டது. இரண்டு லொறிகள் எங்கள் கைதிக் கல்லறைகள் முன் வந்து நின்றன.

நாங்கள் இருந்த வீட்டைச் சுற்றிலுமிருந்த வீடுகளிலிருந்தும் பல பேருக்கு விலங்கிட்டு அழைத்து வந்திருந்தனர். எங்களையும் வெளியில் அழைத்தனர். மெதுவாகச் சென்றோம். என்னுடன் அந்த அறையில் இருந்தவரது பெயர்கள்

(01) திரு. ஈசன் (நெடுந்தீவு)

(02) திரு. நாகேஸ் (புங்குடுதீவு)

(03) திரு. கண்ணன் (அரியாலை)

(04) திரு. பாலசுப்பிரமணியம் அல்லது ஜோதி (காங்கேசன் துறை)

(05) திரு. சிவலிங்கம் (குருநகர்)

(06) திரு. பிரசாந்த் (கிளிநொச்சி)

ஆகியோர் அங்கு நின்ற லொறியினுள் ஏறினோம். எங்கே கொண்டு செல்கின்றனர் என்பதும் எமக்குத் தெரியாது.

இவர்கள் யார்? ஏதற்காக இப்படிக் கொடுமைப்படுத்துகின்றனர்? விடுதலை யாருக்காக? நாங்கள் எங்கள் இனத்தின் எதிரிகளா? சிங்களவருடன் நாம் எதற்காகப போராடவேண்டும், விடுதலை இந்தக் கொடிய அட்டைகளிடமிருந்தா? அல்லது சிங்கள ,ராணுவத்திடமிருந்தா? சட்டம், ஒழுங்கு, விசாரணை என்று இருந்த காலம் போய் மிருகங்களிடம் அகப்பட்டுக்கொண்ட மனிதர்களாகி விட்டோமே என்று எண்ணிக் கொண்டு லொறியின் உள் ஓரத்தில் அமர்ந்தேன்.

வாய் பேசும் மிருகங்களிடம், வாய் பேசும் மனிதன் அகப்பட்டுள்ளான் என்ற எண்ணத்துடன் அடுத்த வதை முகாமுக்கு பயணம் செய்ய தயாராக்கிக் கொண்டேன். ஏறக்குறைய ,ரண்டு லொறிகளிலுமாக 150 பேர்வரை ஏற்றப்பட்டோம். மிருகங்கள் போல் உள்ளே தள்ளி தார்ப்பாயால் லொறியின் பின்பகுதியை மறைத்தனர். இந்தவேளை மல்லி அட்டை அங்கே வந்தார்.

டே, சலீமிட்ட சொல்லடா, ‘ இவர்கள் அத்தனை பேரையும் சுட்டுக் கொல்லச் சொல்லி’ என்று கூறி லொறிகள் இரண்டையும் புறப்படச் சொன்னார்,

இந்த மல்லிப் பற்றி சிறு குறிப்பைத் தருகிறேன்:-

மல்லியின் பிடியில் நான் ஒரு மாதத்திற்கும் மேலாக இருந்தேன். தினமும் அந்த அறையில் ,ருந்த தமிழ் ,ளைஞர்களை தாக்குவதும் சித்திரவதைச் செய்வதுமாகத்தான் இருந்தார். இவர் இப்படி ஓர் பதவியை அடையக் காரணமாக இருந்தது இவர் செய்துவிட்ட கொலைகள்தானாம். யாழ்ப்பாணம் கிளிநொச்சியில் இருந்த ஏனைய இயக்க உறுப்பினர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும், சந்தேகப்படுபவர்களையும் இவர் சுட்டுக் கொன்று விடுவாராம். பின்னர் சுட்டுக் கொன்றவர்களது விபரங்களை எழுதி தலைவர் பிரபாகரனுக்கு அனுப்புவாராம். சுட்டுக்கொல்லப்படும் அனைவரும் துரோகிகள் என்று இவரே தீர்ப்பும் கூறி எழுதி அனுப்ப தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சியடைந்து இவரைத் தேர்வு செய்து பதவி உயர்வு கொடுத்து சிவபுரம் முகாமுக்கு சித்திரவதை வல்லூனராக அனுப்பிவைக்கப்பட்டாராம். இவரை மண்டை மல்லி என்றும் பிணம் தின்னி என்றும் ,வரது சகாக்களால் பெருமையாக அழைக்கப்பட்டனர். தமிழர்களை இவர் தலையில் சுட்டுக்கொல்வதால் ,வருக்கு மண்டை மல்லி என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறினர்.

என்னுடன் இருந்தவர்களை இவர் சித்திரவதை செய்யும் போது நான் பார்த்துக் கொண்டிருப்பேன். எனது மனதுக்குள் நான் வேண்டிக்கொண்டேன், இவனது மரணத்தை நான் பார்க்க வேண்டும், இறைவன் இவனுக்கு உரிய தண்டனை வழங்குவார் என்பது என் நம்பிக்கையாக இருந்தது. இரண்டு ஆண்டுகளின் பின் இரண்டு வாரங்கள் மட்டுமான ஓர் யுத்த நிறுத்தம் ஏற்பட்டது. அட்டைகளாக(புலி) அறிவித்த அந்த யுத்தநிறுத்தத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.

யுத்த நிறுத்தம்தானே என்ற துணிச்சலில் மல்லி அட்டையும், வேறு ஓர் அட்டையும் ஒட்டுசுட்டான் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இலங்கை இராணுவம் இந்த இரு அட்டைகளையும் சுட்டது. இதில் மல்லி கீழே விழுந்ததும். கூட வந்த அட்டை மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டது. மல்லியின் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.

தகவல் அறிந்த அட்டைக் கூட்டம் ஒட்டுசுட்டான் சென்று மல்லியின் தலையில்லா முண்டத்தை எடுத்து வந்தனர். மல்லியின் தலைக்காக அட்டைகள் (புலிகள்) மூன்று நாட்களாகக் காத்திருந்தனர். செஞ்சிலுவைச் சங்கத்திடம் அட்டைகள் முறையிட்டு மல்லியின் தலையைக் கண்டுபிடித்துத் தரும்படி மன்றாடி நின்றனர். செஞ்சிலுவைச் சங்கம் ஒட்டுசுட்டான் காடுகளில் தேடிப்பார்த்தனர், ,ராணுவம் மல்லியின் தலையை வெட்டி காடுகளுக்குள் வீசியிருக்கலாம் என்று செஞ்சிலுவைச் சங்கம் சந்தேகப்பட்டது.

சிலவேளை நாய் அல்லது நரிகள் மல்லியின் தலையை இழுத்துச் சென்றிருக்கலாம் என்று செஞ்சிலுவைச் சங்கத்துக்கு சந்தேகம் தோன்றியது. இதனால் செஞ்சிலுவைச் சங்கம் ஒட்டுசுட்டான் காடுகளிலும், நாய்கள் உள்ள வீடுகளிலும் தேடிப்பார்த்தனர் மல்லியின் தலையை! கடைசிவரை கிடைக்கவே இல்லை மல்லியின் தலை. நான்காம் நாள் தலையில்லாத மல்லிக்கு பட்டம் வழங்கப்பட்டு எரியூட்டப்பட்டார்.

லெப்ரினள் கேணல் நவநீதன் (மல்லி) (புதுக்குடியிருப்பு)

மல்லியின் சித்திரவதையை அனுபவித்த போது நான் என்மனதுக்குள் இறைவனிடம் வேண்டிக்கொண்டது என் கண் முன்னாலேயே இவரது மரணத்தைப் பார்க்க வேண்டும் என்று. மண்டை மல்லி மண்டை இல்லாமலேயே மக்கள் முன் மாண்டுபோனார். இறைவன் ஒரு நாள் தண்டிப்பார் என்பது என் நம்பிக்கையாக ,ருந்தது.

வவுனிக்குளம் சிவபுரத்திலிருந்து புறப்பட்ட லொறி இரவு 20 நிமிடங்கள் வரை பயணித்து ஓர் இடத்தில நிறுத்தப்பட்டது.

(தொடரும்….)

(பாகம் -3)

வவுனிக்குளம் சிவபுரத்திலிருந்து புறப்பட்ட லொறி இரவு 20 நிமிடங்கள் வரை பயணித்து ஓர் இடத்தில நிறுத்தப்பட்டது. எங்களை இறங்கும்படி பணித்தனர் அட்டைகள். இறங்கினோம். கட்டப்பட்ட கண்கள் கழற்றப்பட்டன. எங்கும் வெளிச்சமாக இருந்தது.

இந்த இடம் துணுக்காய் என்றனர், அட்டைகள் நடத்திவரும் வதைமுகாம் இதுதான் என்றனர் என்னுடன் விலங்கிடப்பட்டிருந்தவர்கள். இறங்கிய எங்களை ஓர் பழைய அரிசி மில் ஒன்றினுள் அழைத்துச் சென்றனர். அங்கே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தரையில் படுத்திருந்தனர். அவர்களது கால்களில் சங்கிலிகள் மாட்டப்பட்டிருந்தன. இருவர் ஒரு சங்கிலியில் மாட்டப்பட்டிருந்தனர். எங்களது கால் சங்கிலியை கழற்றினர். இருவர் இருவராக நிற்கச் சொல்லி ஒரு சங்கிலியில் இருவரை இணைத்தனர். பின்னர் இவர்களினுடே படுத்துக்கொள்ளும்படி கூறினர். நாளை வருகிறோம் என்று கூறிச் சென்றனர்.

காலை 5.50மணிக்கு எழுந்து காலைக் கடனுக்கு செல்லும்படி பணித்தனர். நாம் இரண்டு பேர் ஒரு சங்கிலியில் இணைக்கப்பட்டிருந்தோம். அப்படியே சென்று கடனைக் கழித்துவிட்டு வரும்படி கூறினர். அங்கே இருந்த அத்தனை பேரும் இவ்விதம் பிணையப்பட்டு இருந்தனர். பலர் மெலிந்து நோய்வாய்ப்பட்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

என்னுடன் விஜயன் என்ற இளைஞர் பிணைக்கப்பட்டிருந்தார். இவர் டெலொ இயக்கத்தைச் சேர்ந்தவர். நாம் இருவரும் காலைக் கடனைக் கழிக்கச் சென்றோம். 15அடி ஆழம் கொண்டதும் முப்பது அடி நீளம் கொண்டதாகவும் அமைந்த குழியின் மேல் மரங்கள் போடப்பட்டு அதன் குறுக்கே பலகைகளைப் போட்டிருந்தனர். பலகைகளின் இடையே அரையடி அளவு இடைவெளியிருக்கும், அதன் ஊடாக நாம் மலம் கழிக்க வேண்டும். வாழ்வின் முதல் தடவை கைதியாக நாசி யேர்மனியரின் வதை முகாம் காட்சிகளைக் நேராகக் கண்டேன் அங்கே!

இருவர் இருவராக பிணைக்கப்பட்ட மாடுகள் போன்று வரிசையாக நடந்து சென்று மலம் கழிக்கும் மையத்தை அடைந்தோம். அருகில் இன்னொருவர் நெருக்கமாக இருக்கும் போது எப்படி காலைக் கடனை முடிப்பது. விஜயன் தனது கடனை முடித்தார். நான் சிறுநீர் மட்டும் கழித்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். எங்களது அரிசி மில் போன்ற வேறொரு அரிசிமில்லில் இதே போன்று பல பேர் சங்கிலியால் பிணைக்கப்பட்டு காலைக் கடன் கழிக்க வரிசையாகச் சென்று கொண்டிருந்தனர்.

காலையில் தண்ணீர், தேனீர், உணவு எதுவும் கிடையாது. கொட்டடிக்குள் மீண்டும் வந்ததும் யாருடனும் கதைக்கக் கூடாது, நிலத்தில் கீழே பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கும்படி உத்தரவிட்டனர் அட்டைகள். காலை 8.30 மணியளவில் “சலிம்” என்ற செம்பாட்டு சலீம் அல்லது சேர்லி அம்மான் என்ற குள்ளமான அட்டை (புலி) வந்தார். தலை மயிர் செம்பாட்டு நிறத்தில் இருந்தத

நேற்று இரவு இங்க வந்த எல்லாரையும் வெளியில வரச் சொல்லு என்று சத்தமாகச் சொன்னார். சில அட்டைகள் உள்ளே வந்து இரவு வந்த எல்லாரும் வாங்கடா வெளியில் என்றனர். நாம் அனைவரும் (150பேர்) வெளியில் வந்தோம். செம்படை தலை அட்டை அங்கே நின்று கொண்டு எங்களை நோக்கி அறிவுரை வழங்கினார்.

நீங்கள் இங்கு வந்திருப்பது விசாரணைக்காக, விசாரணை முடிந்ததும் நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள். விசாரணை முடியும் வரை நீங்கள் இங்கேதான் இருக்க வேண்டும். விசாரணை செய்யும் எங்களுக்கு நீங்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். நீங்கள் இருந்த இடத்துக்கு திரும்பிச் சென்று இருக்கவும் என்று கூறி அவரது அறிவுரையை முடித்தார்.

இவர் தனது அறிவுரையை முடித்துவிட்டு விசாரணைப் பகுதிக்குச் சென்றார். விசாரணைப் பகுதி எங்கள் இருப்பிடத்திலிருந்து சுமார் 20 அடிகள் தள்ளி இருந்தது. இந்த அட்டை அங்கே சென்றதும் இளைஞர்கள் அலறும் சத்தம் கேட்கத் தொடங்கியது. அம்மா, அய்யோ என்ற இரண்டு வார்த்தைகளும் தொடர்ந்து அபயக் குரலுடன் ஒலித்துக் கொண்டே இருந்தது.

இந்த ஓநாய்கள் எங்கள் இளைஞர்களை வதைக்கிறார்கள், யாராக இருந்தாலும் மனித நேயம் என்பது இயற்கையாக இருக்க வேண்டியது மனிதனுக்கு. இந்த அட்டைகளுக்கு இதயம் என்ற ஒன்றே இருந்ததாகத் தெரியவில்லை. தமிழனை இவ்வளவு அரக்கனாகவா இறைவன் படைத்தான். இளைஞரது அலறும் சத்தம் ஒரு மனிதனால் கேட்கமுடியாததாக இருந்தது. நான் தாக்கப்படும் போது ஏற்பட்ட வலியை விட இந்த இளைஞர்கள் தாக்கப்படும் போது அவர்கள் எழுப்பும் அவலக் குரல் மிருகங்களையும் இரங்கவைக்கும். முதலில் “ஆண்டவரே இவர்களை மன்னித்துவிடும்” என்று கோரிக்கை வைத்த நான் இப்போது, “ஆண்டவரே இவர்களை மன்னிக்காதீர்” என்ற கோரிக்கையை வைத்தேன்.

காலை 9மணியளவில் “தீபன்” என்ற ஒரு அட்டை உள்ள வந்தது. விசாரணைக்கான நபர்களைத் தேர்ந்து கைதிகளாகிய எங்களை இந்த நபர்தான் அவர்களிடத்து அனுப்பிவைப்பார். உள்ளே வந்த இந்த அட்டை புதிதாக வந்த எங்களுக்கு கைதி இலக்கம் வழங்கப் போவதாகக் கூறி ஓர் கதிரையில் அமர்ந்தார். நாங்கள் வரிசையாக நடந்து அவர் முன் ஆஜர் ஆனோம். அவர் ஒவ்வொருவருக்கும் இலக்கங்களை வழங்கினார். எனக்கு வழங்கப்பட்ட இலக்கம் ; K. 87 இந்த அட்டைகளின் சிறை நிர்வாகத்தில் A முதல் Z வரை ஒவ்வொரு எழுத்துக்கும் 100 பேர் வீதம் இருக்கும்.

இலக்கத்தைப் பெற்றுக் கொண்டு மீண்டும் அந்த மில்லுக்குள் சென்று நிலத்தில் அமர்ந்தேன். மறுபடியும் உள்ளே வந்த தீபன் அட்டை கைதிகள் இருக்கும் நிலத்தில் இரண்டடி அகலம் இரண்டடி நீளத்தில் பெட்டி போன்ற வடிவத்தில் நீல நிறத்தில் கோடுகள் வரையும் படி உத்தரவிட்டார்.

சில மணி நேரங்களில் வண்ணப் பெயிண்ட் வந்தது. நான்கு கைதிகளை அழைத்து கோடுகளை வரையச் சொன்னார். சதுரங்க அட்டை போல இருந்தது அந்தக் கோடுகள். இந்த 2X2 அளவில் உள்ள கோடுகளுக்கு நடுவில் கைதிகள் அமர்ந்திருக்க வேண்டும். ஒருவருடன் ஒருவர் கதைக்கக் கூடாது. கால்களை நீட்டக் கூடாது. நிமிர்ந்து சப்பாணி போட்டபடி அமர்ந்திருக்க வேண்டும். இப்படி ஓர் உத்தரவு போட்டார் தீபன் அட்டை!

நாம் இருவர் இருவராக பிணைக்கப்பட்டிருந்தோம். அதனை நீக்கிவிட்டு தனித் தனியாக சங்கிலி கொண்டு இரண்டு கால்களையும் இரு முணைகளாலும் சுற்றி எலக்ரிக் வெல்டிங் செய்தனர். இரண்டு கால்களுக்கும் இடையில் உள்ள சங்கிலியின் நீளம் ஒன்றேகால் அடி இருந்தது. எலக்ரிக் வெல்டிங் செய்யும் போது எனது காலில் வெப்பம் தாக்கியது. நெருப்பு பொறி முகத்தில் சிதறி விழுந்தது. நாங்கள் நடமாட முடியாத மிருகங்கள் ஆக்கப்பட்டோம். எங்கள் சேட்டுகளைக் கழற்றச் சொன்னார்கள். இனிமேல் கைதிகள் மேலாடை அணியக் கூடாது என்று தீபன் அட்டை சத்தமிட்டுக் கூறினார்.

சேட்டைக் கழற்றச் சொன்னதும் நான் மிகவும் பயந்தேவிட்டேன். சில வேளை எங்கள் பகுதியில் மாடுகளுக்கு அடையாளங்களாக பெயர் அல்லது இலக்கத்தினை நெருப்புக் கம்பிகளால் சூடுவைத்து அடையாளம் இடுவார்கள். அப்படித்தான் இந்த கயவர்கள் செய்யப் போகிறார்களோ என்று மிரண்டு போயிருந்தேன்! நல்லவேளையாக அப்படி சூடு போடவில்லை. அப்படி ஓர் அடையாளம் இடும் முறை ஈழத்தில் இருப்பது தீபன் என்ற அந்த அட்டைக்கு ஞாபகம் வராமல் விட்டதற்கு நான் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன் மனதுக்குள்.

முதல்நாள் காலை முதல் இரவு வரை நான் அவர்கள் வரைந்த கோடுகளுக்குள் நடுவில் இருந்தேன். கால்கள் இரண்டும் விறைத்துவிட்டன. இவர்கள் பூட்டிய சங்கிலி விலங்கு கால்களை நெரித்து இழுத்து அண்டிக்கொண்டே இருந்தது. இரண்டு கால்களிலும் சங்கிலி பதிந்து கொப்புளங்கள் ஒரே நாளில் ஏற்பட்டுவிட்டது. மறுநாள் விடிந்ததும் காலைக் கடன் கழிக்க நடந்து செல்லக் கூடாது ஓடிச் செல்ல வேண்டும் என்று அங்கு நின்றிருந்த ஒரு அட்டை உத்தரவிட்டது. சங்கிலியால் பிணைத்திருக்கும் எம்மால் எப்படி ஓட முடியும். இரண்டு கால்களையும் அருகருகில் வைத்து துள்ளித் துள்ளிதான் சென்றேன் கழிவிடத்துக்கு சிலர் மெதுவாக வந்தனர், அவர்களுக்கு முதுகில் கட்டையால் அடித்தது அந்த அட்டை.

அன்று 11மணியளவில் அரை றாத்தல் பாணும் ஒரு தட்டில் பருப்புக் கறியும் கொடுத்தனர். ஒரு தட்டில் இருக்கும் கறியை பாணில் தொட்டு இருவர் உண்ண வேண்டும். ஒரு பிளாஸ்ரிக் கப்பில் தண்ணீர் கொடுத்தனர். மாலை 5மணியளவில் சோறும் பருப்பும் சோயா பீன்சும் கலந்த கறி ஒன்று கொடுத்தனர். பத்துப் பேருக்கு ஒரு பிளேட். ஒருவர் மாறி ஒருவர் உண்ண வேண்டும். பிளேட் கழுவப்படாமல் மாறி மாறிச் சாப்பிட வேண்டும். கைகழுவதற்கு அனுமதியில்லை. விரல்களை நாங்கள் நாக்கினால் நக்கி சுத்தம் செய்தோம்.

காலை மாலை இரு வேளை தவிர இடையில் எக்காரணத்தைக் கொண்டும் இயற்கை உபாதைகளைக் கழிக்க அனுமதிக்க மாட்டார்கள். மலம், சிறுநீர் இரண்டையும் அடக்கிக் கொண்டு இருக்க வேண்டும். அப்படி இடையில் மலம் சிறுநீர் வந்தால் சொப்பின் பையில் அதனை நிரப்பி வைத்திருந்து மாலையோ அல்லது காலையிலோ வெளியில் எடுத்துச் செல்ல வேண்டும்.

நான்கு நாட்கள் இப்படிக் கடந்தன. இரவு ஒரு மணியிருக்கும் ஒரு வாகனம் வந்தது. அதிலிருந்து இந்த அட்டைகள் வேட்டையாடி வந்த தமிழ் சகோதரர்கள் இறங்கினர். அப்படி வந்தவர்களில் ஒருவர் எனக்கருகில் அமர்த்தப்பட்டார். நானும் உறங்கிவிட்டேன். காலையில் எழுந்ததும் அவரை உற்றுப்பார்த்தேன். வெள்ளை நிறம், தடித்த உருவம், குறைந்த உயரம், வெறும் மேலுடன் உறங்கிக் கொண்டிருந்தார். சில இடங்களில் லேசாகக் கண்டங்கள் தெரிந்தன. நான் முதலில் இருந்த சிவபுரம் அட்டைகளைக் கடந்து தான் இவர் வந்திருப்பார் என்று நினைத்துக் கொண்டேன். மல்லி என்ற அந்த அட்டை இவரது இரத்தத்தை உறுஞ்சியிருப்பார் என்பது உறுதியானது.

அவரும் கண்விளித்து என்னைப் பார்த்தார். அவருக்கு சங்கிலி பிணைப்பு இடப்பட்டிருந்தது. கண்கள் கலங்கியபடி பரிதாபமாக என்னை நோக்கினார். உங்கள் பெயர் என்ன? என்று கேட்டேன்!

தொடரும்


இது தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. T111


Read more...

ஜெர்மனி சூதாட்ட மையத்தில் ஆயுதமேந்திய கொள்ளையர்

ஜெர்மனியின் பெர்லின் நகரில் சூதாட்ட மையம் ஒன்றில் அரிவாள் கள், கைத்துப்பாக்கி களுடன் சனிக் கிழமை நுழைந்த கொள்ளையர் கிட்டத்தட்ட 800,000 யூரோக் களைக் (S$1.1 மி.) கொள்ளையடித் துள்ளதாக ஏஎப்பி செய்தித் தகவல் கூறுகிறது. ஆனால் இந்த ஒரு நல்ல அம்சம் என்னவென்றால் சூதாட்ட மையத்திலிருந்த பாதுகாவலர் ஒருவர் கொள்ளையர்களை எதிர் கொண்டதால் அவர்கள் கொள்ளைப் பணத்தின் பெரும் பகுதியை விட்டு விட்டுச் சென்றதுதான். மொத்தம் 7 முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இதில் ஈடுபட்டனர்.

Read more...

பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் நினைவுச் சின்னம்

புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்படும் நந்திக்கடல் பிரதேசத்தில் ராணுவம் நினைவுச் சின்னம் எழுப்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com