Thursday, September 16, 2010

இந்திய மாணவர்களை விட நன்றாகப் படிக்க வேண்டும்: ஒபாமா

அமெரிக்க பள்ளி மாணவர்கள் இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரும் போட்டியை சமாளிக்கக் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிபர் ஒபாமா தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ஒபாமா பென்சில்வேனியா மாநிலம் பிலடெல்பியாவில் உள்ள ஒரு பள்ளிக்கூட மாணவர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

உலக நாடுகள் அனைத்தும் முன்பை விட தற்போது அமெரிக்காவுடன் அதிகமாக போட்டி போடுகின்றன. வளர்ந்து வரும் நாடுகளான இந்தியாவிலும், சீனாவிலும் உள்ள மாணவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருக்கின்றனர்.

இந்த சவால்களை எதிர்கொள்ள அமெரிக்க மாணவர்களும் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அமெரிக்க பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து ஏராளமான தொழில் துறை அறிஞர்களை உருவாக்க வேண்டும். அப்பொழுது தான் உலக அரங்கில் அமெரிக்கா தலை நிமிர்ந்து நிற்க முடியும்.

பள்ளிகளில் எவ்வளவு தூரம் முன்னேறுகிறீர்களோ, அந்த அளவு வாழ்க்கையிலும் முன்னேறுவீர்கள். பள்ளியில் பெறும் வெற்றி மாணவர்களின் வாழ்க்கையில் பெறப்போகும் வெற்றியை மட்டும் தீர்மானிப்பதன்று. அது தான் அமெரிக்காவின் வெற்றியையும் தீர்மானிக்கும். எனவே, நீங்கள் முன்பை விட நன்றாகப் படித்து வெற்றி பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

Read more...

ஜோர்டானில் பயங்கரவாதிகள் தாக்கலாம் . அமெரிக்கா எச்சரிக்கை

ஜோர்டான் நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதால் அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜோர்டானில் உள்ள துறைமுக நகரமான அகாபா ஏராளமான அயல்நாட்டு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் ஒரு இடமாகும். இந்நிலையில் இந்த நகரில் வெளிநாட்டினர், குறிப்பாக அமெரிக்கர்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக நம்பத்தகுந்த தகவலக்ள் தெரிவிக்கின்றன என்று ஜோர்டானில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனால் இரண்டு நாட்களுக்கு அகாபா பக்கம் அமெரிக்கர்கள் செல்லவேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் அமெரிக்கத் தூதரகத்தின் இந்த எச்சரிக்கையை ஜோர்டான் அமைச்சர் அலி அல் அயத் நிராகரித்துள்ளார். தீவிரவாதிகள் அபாயம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

Read more...

ஐ.நா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அமெரிக்கா பயணம்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடர் எதிர்வரும் 20 முதல் 22 ம் திகதி வரை அமெரிக்காவில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்கா புறப்பட்டுள்ளார். அவர் தனது பணத்தின்போது ஜேர்மனில் இருநாட்கள் தங்கியே அமெரிக்கா செல்வார் என தெரியவருகின்றது.

அத்துடன் ஐ.நா வின் கூட்டத்தொடரில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பங்கு கொள்கின்றனர்.

Read more...

Read more...

சிறுவனின் மரணம் தொடர்பில் 5 பொலிஸார் உட்பட 9 பேர் கைது.

பேருவளை பகுதியில் நேற்று இடம்பெற்றத் துப்பாக்கிச் சூட்டில் பலியான சிறுவனின் மரணம் தொடர்பில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹரகமை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுடன் சேர்த்து 4 பொது மக்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறுது.

பேருவளைப் பகுதியில் நேற்று பொலிஸாருக்கும் கொள்ளைக்காரருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தின் போது 8 வயதுச் சிறுவன் உயிரிழந்தார். மஹரகம பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை தேடிச்சென்ற வேளையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் இந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இரு தரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான சுதுல் நிலுபுல் என்ற சிறுவன் பேருவளை மொரகல்லை பகுதிச் சேர்ந்தவராவார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Read more...

பசில் தலைமையில் யாழில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும்.

இலங்கையின் வடக்கே யாழ் மாவட்டத்தின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக அமைச்சர் பசில் ராஜபக்ஷ் தலைமையில் நடைபெற்ற முக்கிய உயர் மட்டக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் முதற் தடவையாக நேற்று கலந்து கொண்டார்கள்.

அரச அமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்வதைத் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளது. இந்த நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கெடுக்க வேண்டும் என்று ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமையவே தாங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூட்டமைப்பின் யாழ், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

வவுனியா, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் நடைபெற்ற இத்தகைய கூட்டங்களில் வன்னிமாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ் மாவட்டத்தின் வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தின் காங்கேசன்துறையின் மேற்குப் பகுதி, கட்டுவன், கீரிமலை, தொண்டமனாறு ஆகிய பகுதிகளில் அடுத்த வாரம், இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என நேற்றைய தமக்கு உறுதியளிக்கப்பட்டதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய எஸ்.சரவணபவன், எஸ்.சுமந்திரன் ஆகியோரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொண்டார்கள்.

Read more...

Wednesday, September 15, 2010

டக்ளஸ்,கருணா,பிள்ளையான் ஆகியோரை அரசு ஒரம்கட்டி விட்டது. ஐ.தே.க பொதுச் செயலாளர்.

பிரித்தானியாவிற்கு பிரத்தியேக விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பா.உ திஸ்ஸ இலங்கைநெற் இற்கு வழங்கிய விசேட செவ்வியில் அரசாங்கம் கே.பி யுடன் உருவாக்கிக் கொண்டுள்ள உறவுகளின் பின்னர் பயங்கர வாதத்தை ஒழிப்பதற்கு அரசுடன் இணைந்திருந்த டக்ளஸ் தேவானந்தா , கருணா , பிள்ளையான போன்றோரை ஓரம்கட்டி விட்டது என தெரிவித்துள்ளார். பேட்டி கண்டவர் பீமன்.

செவ்வியின் முழுவடிவம்.

கேள்வி - தற்போது இலங்கையில் நிலவரங்கள் எவ்வாறு காணப்படுகின்றது?

பதில் - யுத்தம் முடிவடைந்த பின்னர் மக்களுக்கு வாழ்க்கைச் சுமையை குறைப்பதாக கூறினார்கள். பொருட்களின் விலை குறைக்கப்படும், மக்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்படும், மக்களுக்கு வேலைப்வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் , வருவாiயை அதிகரிக்கச் செய்வது போன்ற பல உறுதிகளை வழங்கினார்கள். ஆனால் இன்று மக்கள் முன்னரை விட மிகுந்த சுமையை சுமக்கவேண்டிய நிலையில் உள்ளனர்.

யுத்தத்தின் பின்னர் வடகிழக்கிலுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக அரசு உறுதியளித்தது. ஆறு மாதங்களினுள் மக்களை மீள் குடியேற்றுவோம் என உறுதி அளித்தார்கள். இவற்றில் எந்த ஒரு உறுதிமொழியையும் இந்த அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியவில்லை.

இன்று ஜனாதிபதியை அவரது குடும்பம் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது. குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சட்டங்கள் கையிலெடுக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட சகல உறுதி மொழிகளையும் மறந்து அரசாங்கம் தொடர்ந்தும் நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை பலப்படுத்தும் விதமாக அரசியல் யாப்பிலும் மாற்ற ங்களை மேற்கொண்டுள்ளது.

கேள்வி - நிறைவேற்று அதிகார ஆட்சி முறை உங்கள் கட்சியினால் கொண்டுவரப்பட்ட ஒன்றுதானே?

பதில் - 1978ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சி முறையை இந்நாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்தது உண்மை. ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சிமுறைக்காக அன்று ஜே.ஆர் ஜெயவர்த்தன அவர்கள் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றே அதை செய்திருந்தார் என்பதை திடமாக கூறுகின்றேன். ஆனால் அவர் அன்று அந்த அதிகாரங்களை இன்றுள்ளவர்கள்போல் துஸ்பிரயோகம் செய்யவில்லை. நாட்டின் அபிவிருத்திக்காகவே பயன்படுத்தினார். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தல் வாக்குறுதியாக நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பேன் என்று கூறி ஆட்சியை பிடித்த பின்னர் , நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மேலும் பலப்படுத்திவருகின்றார். இவ்விடயத்தினை நாம் முற்றாக எதிர்கின்றோம்.

கேள்வி - இடைத்தங்கல் முகாம் மக்களின் நிலைமைகள் எவ்வாறுள்ளது?

பதில் - இடைத்தங்கல் முகாம் மக்களை மீள் குடியேற்றும் பணிகள் மந்தகதியிலேயே இடம்பெறுகின்றது. இவ்வரசாங்கம் 6 மாத காலத்தினுள் மீள் குடியேற்றுவதாக இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் வழங்கிய உறுதிமொழியை காப்பாற்றத் தவறியுள்ளது. இன்னும் அம்முகாம்களில் லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர்.
இது நாட்டின் எதிர்காலத்தில் மீண்டும் பயங்கர வாதம் ஒன்று உருவாக வழிவகுக்கலாம்.

கேள்வி - ஐக்கிய தேசியக் கட்சி இன்று ஆட்சியிலிருந்திருந்தால், இவ்விடயத்தை எவ்வாறு கையாண்டிருக்கும்?

நாம் ஆட்சியில் இருந்திருந்தால் , இம்மக்களை அவர்களுக்கு சொந்தமான இடங்களில் கால நேரத்துடன் குடியமர்த்தி , அவர்கள் தங்கள் சொந்த பந்தங்களுடன் வாழக்கூடிய நிலை ஒன்றினை நிச்சயமாக ஏற்படுத்தியிருப்போம். நாம் இம்மக்களை சிறைக்கைதிகளைப் போல் நடாத்தாமல் , அம்மக்கள் சுயமாக தொழில் புரிந்து கௌரவமாக வாழக்கூடிய நிலையை உருவாக்கியிருப்போம். ஆனால் நாம் தற்போதும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றோம்.

கேள்வி - வன்னிமக்கள் குடியேற்றப்படுவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் குறைபாடுகள் , வன்னி பிரதேச அபிவிருத்தி பற்றி குறிப்பிடுகின்றீர்கள் , அரசாங்கம் இன்று நாட்டில் பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றது. சமநேரத்தில் சமவேகத்தில் சகல விடயங்களையும் மேற்கொள்ள எமது அரசாங்கத்திடம் பொருளாதார வசதி உண்டா?

பதில் - அபிவிருத்தி நடைபெறவில்லை என நான் கூறவில்லை. தென்பகுதியில் நடைபெறுகின்ற விடயங்கள் நாட்டின் வடகிழக்கிலும் இடம்பெறவேண்டும். எமது நாட்டில் அனைவரும் இணைந்து செயற்படவேண்டும். அனைவரையும் ஒரேவிதத்தில் பார்க்கப்பட வேண்டும். தென்பகுதியில் இடம்பெறுகின்ற அதே வேலைத்திட்டங்கள் வடகிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே மேலுமோர் பயங்கர வாதம் தலைதூக்காது நாட்டைப் பாதுகாக்கலாம்.

கேள்வி - மீண்டும் நாட்டில் பயங்கர வாதம் தோன்றாலம் என்ற அடிப்படையிலான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றீர்கள். இது மக்களிடம் காணப்படும் அச்சமா?

பதில் - நிச்சயமாக கூறுகின்றேன். இடைதங்கல் முகாம் மக்களை மீள் குடியேற்றுவதை அரசாங்கம் தாமதப்படுத்துவது சாதாரணமான விடயமல்ல. இந்நாட்டில் மேலுமோர் பிரபாகரன் உருவாகாமல் இருக்கவேண்டுமென்றால் அம்மக்கள் விடயத்தில் அரசாங்கம் அதிக சிரத்தை செலுத்தவேண்டும்.

கேள்வி - எதிர்கட்சிகள் பலவீனமாகிச் செல்வதாக கூறப்படுகின்றதே..

பதில் - அரசு இன்று தனக்கெதிராக செயல்படுகின்ற கட்சிகளை பிளவு படுத்துவதிலும் , துண்டாடச் செய்வதிலும் ஈடுபட்டுவருகின்றது. எதிர்கட்சிகளின் குரல்வளைகளை நசுக்குவதற்கு அரசு வௌ;வேறு தந்திரங்களை கையாள்கின்றது. அதிகார பலத்தினால் பல அழுத்தங்களை கொடுத்து சிதற வைக்க முயற்சி செய்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சி அனைத்து மக்களையும் ஒரே பார்வையில் பார்த்ததோர் கட்சி. தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களை ஒரேவிதமாக பராமரித்த கட்சி. சகல இனங்களினதும் அங்கீகாரத்தைப் பெற்ற கட்சி. இவ்வாறானதோர் பாரம்பரியத்தை கொண்ட இக்கட்சியை தற்போதைய அரசாங்கம் சிதறடிக்கவே முயற்சிக்கின்றது. எமது அமைச்சர்களை பணம் கொடுத்து வாங்கி கட்சியை சிதறடிக்கின்றனர். அது தவறானதோர்செயல். இது ஜனநாயகத்தை மீறும்மோர் செயல். இது மக்களுக்கு எவ்வித நன்மையையும் தரப்போவதில்லை.

கேள்வி - எதிர்கட்சிகள் பலவீனமாகியுள்ள நிலையில் அக்கட்சிகள் யாவும் இணைந்து செயற்படவேண்டும் என்ற கருத்தியல் உள்ளது. இவ்விடயத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சி எதைச் செய்துள்ளது?

பதில் - நாம் அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றோம். அரசிற்கு எதிரான அனைத்துக்கட்சிகளையும் ஒன்றிணைத்து வேலை செய்யும் ஒர் திட்டத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம். தற்போது கட்சிகளிடையே காணப்படும் பிளவுகள் அரசிற்கு சாதகமாக அமைந்துள்ளது. அத்தோடு பாராளுமன்றில் நாம் வௌ;வேறாக பிரிந்து நிற்பதும் அவர்களுக்கு சாதகமாகவுள்ளது. அரசிற்கு ஒர் பாடத்தை புகட்டவும் சவாலாக திகழவும், அரசிற்கு எதிரான கருத்தினை கொண்டவர்கள் ஒன்றிணையவேண்டும். பாராளுமன்றிற்கு உள்ளே உள்ள கட்சிகள் மாத்திரமல்ல , வெளியேயுள்ள கட்சிகள் , தொழிற் சங்கங்கள் , பொதுஜன அமைப்புக்கள் ஆகியனவும் எம்மோடு ஒன்றிணையவேண்டும். அதற்கான அர்ப்பணிப்புகளையும் நாம் செய்துவருகின்றோம்.

கேள்வி - எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி என்ற ஒன்று மிஞ்சுமா?

பதில் - நாம் வீழ்ந்து எழுந்திருக்கின்றோம். ராஜபக்ச அரசாங்கம் ஐ.தே.கட்சியை அழிக்க முயற்சித்தாலும் , நாம் மக்கள் பலத்தோடு மீண்டும் ஆட்சிக்குவருவோம். ஐக்கிய தேசிய கட்சியை ஒருபோதும் அழித்து விடமுடியாது. இது இவர்களது தற்காலிக எத்தனிப்பு . இதே முயற்சியை 1956 இல் எஸ் ஆர்.டபிள்யூ பண்டாரநாயக்க அவர்கள் மேற்கொண்டிருந்தபோது கட்சி முற்றிலும் அழிந்துபோகும் வெளித்தோற்றமே காணப்பட்டது. ஆனால் நாம் 1970 களில் மீண்டும் பலம்பெற்று ஆட்சியை கைப்பற்றினோம். இவ்வாறான நிலைகள் அனைத்துக்கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கின்றது, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் லங்கா சமசமாஜ கட்சிக்கும் கொமுனீசக் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கின்றது. உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் 1978 க்கு பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க , சந்திரிகா அம்மையார் , அனுரபண்டாரநாயக்க ஆகியோர் கூட சின்னாபின்னப்பட்டு போயிருந்தார்கள்.

ஏன் ஜேவிபியை எடுத்துப்பாருங்கள். அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி , சிறிலங்கா சுதந்திரக் கட்சியை விட மாறுபட்ட கொள்கையுடன் இடதுசாரிப் போக்கினை கொண்டவர்கள். இவர்களுடனிருந்த விமல்வீரவன்ச போன்றோர் பிரிந்து சென்று அரசுடன் இணைந்ததன் ஊடாக அவர்களுக்கும் இவ்வாறான நிலைமைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டிருந்தது, எனவே இது இலங்கை அரசியல் வரலாற்றில் புதியவை அல்ல. அநத்வகையில் ஐக்கிய தேசியக்கட்சி அதேபோன்றதோர் பிரச்சினைக்கு தற்போது முகம் கொடுத்துள்ளது. இன்றைய எம்நிலைமை நிரந்தரமானது அல்ல. தவறுகளை திருத்திக்கொண்டு நாம் மீண்டும் செயல்படுவோம். அதற்கான மக்களின் அடித்தளம் எமக்குண்டு.

கேள்வி - நாட்டை ஆண்ட இரு பிரதான தேசியக் கட்சிகளில் ஒன்றான தங்கள் கட்சியினுள் இன்று உட்பூசல் தோன்றியுள்ளது. இப்பூசல்களை தீர்த்துக்கொள்ள முடியாத உங்களால் எவ்வாறு நாட்டிற்கு தலைமைத்துவத்தை வழங்க முடியும்?

பதில் - ஐக்கிய தேசியக் கட்சி மண்டியிடும் கட்சியல்ல. இக்கட்சி 7 தலைவர்களால் வழிநடத்தப்பட்டு வந்துள்ளதோர் கட்சி. எமது கட்சி ஒரு தனிநபருக்கோ குடும்பத்திற்கு கட்டுபட்ட சொத்தாக இருந்ததில்லை. தற்போது ஒர்பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலைமையை அரசாங்கமே திட்டமிட்டு செய்து வருகின்றது. எமது கட்சியின் சிலர் பணத்திற்காகவும் பதவிகளுக்காகவும் கட்சியை காட்டிக்கொடுத்திருக்கின்றார்கள். இவ்வாறான பல சரித்திரங்களை நாம் கண்டிருக்கின்றோம். நாம் மீண்டும் பழைய நிலைக்கு வருவோம் என்ற நம்பிக்கையும் தைரியமும் எம்மிடமுண்டு.

கேள்வி - ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரசின் பக்கம் தாவியுள்ளனர். அவர்களுள் ஐ.தே.கட்சியில் நுவரேலிய மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய முன்னாள் ஊடகவியலாளரான சிறிரங்காவும் அடங்குகின்றார். இவ்வாறான நிலைமைகள் உருவாக என்ன காரணம்?

பதில் - இது மனவருத்தத்திற்குரியதோர் விடயம். இவர்களுக்கு உண்ண உணவு கொடுத்தது ஐக்கிய தேசியக் கட்சி. இவர்களுக்கு கிடைத்த வாக்குகள் அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கினால் கிடைத்த வாக்குகள் அல்ல. இவை கட்சிக்கான வாக்குகள். இவர்கள் தனியாக போட்டியிடுட்டு வெற்றிபெற்றிருந்தால் அவர்களின் செயற்பாட்டில் தவறில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குளை பெற்று பணத்திற்காக பா.உ அங்கத்துவத்தை விற்பனை செய்துள்ளனர். அடுத்த தேர்தலில் அதற்கான பாடம் மக்களால் புகட்டப்படும். அங்கேயுள்ள அப்பாவி மலையகத் தமிழ் மக்களின் வாக்குகளை இவர் விற்றுள்ளார். இம்மலையக மக்கள் தமது வாக்குகளை ஐ.தே.கட்சிக்கே அளித்தனர். விருப்புவாக்குகளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே உரியவையாகும். தனக்கு ஓர் பதவியோ , அந்தஸ்தோ கிடைத்தால் அவற்றை ஏலத்தில் விடுவது அழகல்ல.

கேள்வி - பா.உ சிறிரங்கா , நாட்டின் ஜனாதிபதியின் புத்திரர் நாமல் ராஜபக்சவின் தலைமையிலான இளையோருக்கு நாளை எனும் அமைப்பில் ஓர் முக்கிய பதவியை வகிப்பதாகவும், அரசாங்கத்துடன் மிகுந்த உறவை கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்துள்ளபோதும் , ஐக்கிய தேசியக் கட்சியில் அவர் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமைக்கான பின்னணி அல்லது மர்மம் என்ன?

பதில் - அரசியல் ரீதியாக இவர் விடயத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. இலங்கையின் முன்னணி ஊடக ஸ்தாபனம் ஒன்றின் தலைவரும் சில ஊடக முக்கியஸ்தர்களும் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே இவருக்கு எமது கட்சியில் போட்டியிட அனுமதி கிடைத்தது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிறிதொரு கட்சிக்கு தாவமாட்டோம் என இவர்கள் வாக்குறுதியும் வழங்கிவிட்டே கட்சியில் போட்டியிட்டார்கள். அவர்கள் வேறு ஒரு கட்சிக்கு செல்லும் எண்ணம் இருந்திருந்தால் அவர்கள் அங்கே போட்டியிட்டிருக்க வேண்டும். இது அவர்கள் கட்சிக்கு செய்த அநீதி மட்டுமல்ல அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் செய்த அநீதியாகும். இவர்கள் அனாதைகள் ஆகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

கேள்வி - ஜெனரல் பொன்சேகாவின் தற்போதைய நிலை என்ன?

பதில் - ஜெனரல் சரத் பொண்சேகாவுக்கு அரசு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளது. ஜெனரல் பொன்சேகாதான் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான யுத்தத்திற்கு தலைமை தாங்கினார். சிலர் காரியாலயங்களில் இருந்து கொண்டும் , வீடுகளில் இருந்துகொண்டும் ஆலோசனைகளையே வழங்கிவந்தார்கள். சரத் பொன்சேகாவோ நேரடியாக யுத்த முனையிலேயே அதற்காகச் செயற்பட்டார். இந்த வெற்றியை வைத்துத்தான் இவர்கள் வாக்குகளை பெற்றது. இதனால் ஜெனரல் பொன்சேகா மீது மக்களுக்கு அபிமானம் உண்டு. இப்படி மக்கள் அபிமானம் உள்ள ஒருவரைத்தான் அரசு சிறையில் அடைத்து வைத்துள்ளது. நாம் அவரை விடுதலை செய்வதற்கான முன்னெடுப்புக்களைச் செய்கின்றோம். அரசாங்கம் அவரை தடுப்புக்காவலில் வைத்துள்ளது. போரில் முன்னணியில் இயங்கிய இராணுவச் சிப்பாய் தொடக்கம் ஜெனரல்கள் வரை அரசு சிறைகளில் அடைத்துள்ளது. யுத்தத்திற்கு தலைமை தாங்கிய பலரை பதவிகளிலிருந்தும் விலக்கி வருகின்றது.

கேள்வி - ஜெனரல் பொன்சேகா இன்று எதிர்நோக்கும் சிக்கல்களிலிருந்து அவர் மீள உங்கள் கட்சி என்ன செய்திருக்கின்றது?

பதில் - அவருக்காக நாம் குரல் கொடுக்கின்றோம். அவர் எமது கட்சியைச் சார்ந்தவர் அல்ல. அதிபர் தேர்தலுக்கு பொது அபேட்சகர் ஒருவரை தெரியும்போது அவரை தேர்ந்தெடுத்தோம். அவர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு முற்றாக உழைத்தோம். அவர் தேர்தலில் பெற்ற பெரும்பாண்மையான வாக்குகள் எம்முடைய வாக்குகள். எங்களால் முடிந்தவை யாவற்றையும் நாம் அர்பணிப்புடன் செய்துள்ளோம். ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிரான பல வழக்குகளில் எமது சட்டத்தரணிகளே அவருக்காக வாதாடுகின்றனர். இந்த அநீதிக்கு எதிராக உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் அவர் சார்பாக போரட்டங்களை நாடாத்துகின்றோம். சர்வதேச அமைப்புக்களின் கவனத்திற்கு இவர் விடயத்தினைக் கொண்டு சென்றவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினர்தான். உதாரணத்திற்கு ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்திற்கு அவர் குறித்த விடயத்தை நாம் கொண்டு சென்றுள்ளோம். இவ்விடயத்தை எமது கட்சியின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான விடயங்களை கையாளும் கலாநிதி ஜெயலத் ஜெயவர்த்தன முன்னெடுத்துச் செல்கின்றார். எதிர்வரும் ஐப்பசி மாதத்தில் ஜெனிவா செல்லவுள்ள ஜெயலத் ஜெயவர்த்தன அவர்கள் மேலதிய விடயங்களை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு எடுத்துச்செல்வார்.

கேள்வி - அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ள புலிகளின் முக்கியஸ்தர் கே.பி தொடர்பாக பலதரப்பட்ட செய்திகள் நாளாந்தம் வெளிவருகின்றது. உங்கள் கருத்து என்ன?

பதில் - குமரன் பத்மநாதனை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால் அவர் புலிகளியக்கத்தின் தலைவர் தானே என பிரகடனப்படுத்தியிருந்தார். கே.பி கைது செய்யப்பட்டார் என்ற செய்தி வெளியாகியிருந்தபோது, எமது ஊடகங்கள் யாவும் புலிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் கே.பி யிடமே உள்ளதாக கூறியிருந்தன. அவர் பெயரில் உள்ள கப்பல்கள் உட்பட அசையும் அசையா சொத்துக்களை நாட்டுக்காக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அனால் இன்று அவ்வாறான செயல்கள் எதுவும் நடந்தேறியதாக தெரியவில்லை.

கே.பி இலங்கை அரசிற்கு சொந்தமான கெலிக்கொப்டர்களில் வவுனியா மற்றும் வன்னி பிரதேசங்களுக்கும் சுற்றுப்பயணங்களைச் செய்துள்ளார். அது மட்டுமல்ல இலங்கையின் பத்திரிகைகள் சிலவற்றுக்கும் செவ்விகளை வழங்கியுள்ளார். அச்செவ்விகளினூடாக அவர் இலங்கையின் பாதுகப்பு அமைச்சின் செயலருடன் மிக நெருக்கமான தொடர்பினை கொண்டுள்ளமை தெளிவாகின்றது. எனவே நாம் சொல்கின்றோம். அவர் தடுப்புக்காவலில் இல்லை. அரசுடனான உடன்படிக்கையுடன் , அரச பாதுகாப்பில் தங்கியுள்ளார் என்றே நாம் கூறுகின்றோம். அவரிடம் உள்ள சொத்துக்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் வெளிவரவில்லை. அவற்றை அறிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு. எனவே இவர் விடயமான உண்மைகளை மக்களுக்கு அரசாங்கம் தெரியப்படுத்தவேண்டும்.

கேள்வி - மேற்படி குற்றச்சாட்டுக்களுக்கு என்ன ஆதாரங்கள்?

பதில் - ஆதாரங்கள். புலிகளின் தற்போதைய தலைவர் என தன்னை பிரகடணப்படுத்தியுள்ள இவர் ராஜதந்திரிகள் தங்கவைக்கப்படும் இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். குமரன் பத்தநாதனுக்கு எதிராக குற்றங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. புலிகளுக்காக ஆயுதங்களை கொள்வனவு செய்தவர். இவர் அரச பாதுகாப்பில் உள்ளார். அவரிடமிருந்த சொத்துக்கள் யாருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. புலிகளின் வருவாய் யாருக்கு சென்றுகொண்டிருக்கின்றது.

கேள்வி - கடந்தகாலங்களில் அரசுடன் இணைந்திருந்தவர்களை புறந்தள்ளி கே.பி யை முதன்மைப்படுத்தும் செயற்பாட்டில் அரசாங்கம் இறங்கியுள்ளதாக பா.உ சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இவ்விடயத்தில் உண்மைகள் உண்டா?

பதில் - ஆம் இது முற்றிலும் உண்மை, திரு. டக்ளஸ் தேவானந்தா, திரு. கருணா , திரு. பிள்ளையான் ஆகியோர் புலிகளுக்கு எதிரான விடயங்களில் அரசிற்கு ஆதரவினை வழங்கி வந்தார்கள். இன்று இவர்களின் நிலை என்ன? இவர்களை கணக்கில் எடுக்கின்றார்களா? , ஒத்துழைப்பு வழங்குகின்றார்களா ? இல்லை. கே.பி யை தமிழ் மக்களின் ஒரேதலைவராக்குவதற்கு முயற்சிகளை அரசு மேற்கொள்கின்றது. அதாவது விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்களை புறந்தள்ளி , புலிகளின் தலைவர் ஒருவரை வாழவைக்க முயற்சிக்கின்றது. XIII

Read more...

பாரீஸ் ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க, உலகப்புகழ்பெற்ற பாரீஸ் ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்ததையடுத்து சுற்றுலாப்பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன் பிறகு காவல்துறையினர் வெடிகுண்டைக் கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினர் ஆனால் குண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இது தவிர பாரிஸ் மெட்ரோ ரயில் நிலையத்திலும் குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது.

இந்த மிரட்டலை போலீஸார் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை காரணம் 1995ஆம் ஆண்டு இதே மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டு வெடித்து 8 பேர் பலியாயினர். 80 பேர் காயமடைந்தனர்.

மெட்ரோ நிலையத்திலும் மக்கள் வெளியேற்றப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் இது வெறும் வதந்தி என்று தெரியவந்துள்ளது.

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதற்கு பிரான்ஸில் தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து அடிப்படைவாத, தீவிரவாத இஸ்லாமிய பிரிவினரின் விரோதத்தை சம்பாதித்துள்ளது பிரான்ஸ், இதனையடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Read more...

எகானமிஸ்ட் இதழ் மீண்டும் பறிமுதல்

இலங்கையில் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சாசனத் திருத்தம் குறித்து கடுமையான விமர்சனங்களை கொண்ட கட்டுரையை பிரசுரித்திருந்த எகானமிஸ்ட் வார இதழின் பிரதிகளை இலங்கை அதிகாரிகள் விநியோகிக்க முடியாதபடி பறிமுதல் வைத்துள்ளனர்.

எகானமிஸ்ட் இதழின் பிரதிகள் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. சில நேரங்களில் பறிமுதல் செய்யப்பட்ட இதழ்கள் தாமதமாகவே விடுவிக்கப்பட்டதன் காரணமாக இதழை விநியோகிப்பதில் கால தாமதம் ஏற்பட்டிருந்தது.

நேரடியாகவும், தயவு தாட்சண்டமின்றியும் கருத்துக்களைத் தெரிவிக்கும் எகானமிஸ்ட் நாளிதழின் தலையங்கங்கங்கள் இலங்கை அதிகாரிகளை சில முறை கொதிப்படையச் செய்துள்ளன. சில முறை அதன் அதிகாரிகளை எரிச்சலடையச் செய்துள்ளன.

இதன் காரணமாக உலகில் பெரிய அளவில் வாசிக்கப்படும் அரசியல் மற்றும் வர்ச்சக சஞ்சிகைளில் ஒன்றான எகானமிஸ்ட்டின் பிரதிகள் இலங்கையில் இருக்கும் அதன் ஒரே முகவரை சென்றடையும் முன்பே பல முறை பறிமுதல் செய்யப்படுகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை எகானமிஸ்ட் சஞ்சிகையின் இதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதன் சமீபத்திய உதாரணம்.

அரசியல் சாசனத்தில் மாற்றங்களை செய்ததன் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே நாட்டின் நல்லிணக்க நடவடிக்கைகளை உருவாக்குவதற்கு முன்பாக தனது குடும்பத்தின் அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்த விழைந்திருக்கிறார் என்று எகானமிஸ்ட் இதழின் தலையங்கம் கூறியுள்ளது.

இது போன்ற விமர்சனங்கள் கராணமாகவே இந்த இதழை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கலாம் என எகானமிஸ்ட் பத்திரிக்கையை இலங்கையில் இறக்குமதி செய்து விநியோகித்து வரும் முகவரான விஜித யாப்பா பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான எகானமிஸ்ட் இதழில் போரால் இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்படுதலில் உள்ள பிரச்சனைகள், அதிலும் குறிப்பாக உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் சந்திக்கும் பிரச்சனை பற்றிய கட்டுரை இடம்பெற்றதால் அந்த பிரதிகள் முதலில் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் சில தினங்களில் அவை விற்பனைக்காக விடுவிக்கப்பட்டன.

வெளிநாட்டில் இருந்து பிரசுகரமாகும் பத்திரிக்கைகள் நாட்டியின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தால், அவை பறிமுதல் செய்யப்படும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையத்தின் தலைவர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் இலங்கையில் உள்ள பல பத்திரிக்கைகள் அரசியல் யாப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை கடுமையாக விமர்சிக்கும் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் உள்ளது என்பதற்கு இது போன்ற கட்டுரைகளே சாட்சியமாக திகழ்வதாக அரசு கூறுகிறது. ஆனால் பின்விளைவுகளுக்கு அஞ்சி பலர் தாம் சொல்ல வரும் விடயங்களில் சிலவற்றை தாமாகவே தணிக்கை செய்து விடுவதாக மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றன.

Thanks BBC

Read more...

பிரபாகரன் இறந்ததாக கூறப்படும் இடத்தில் நாமலுடன் சிறி ரங்கா.

வன்னிப் பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவினர் பிரபாகரன் இறந்ததாக அரசாங்கம் தெரிவிக்கும் நந்திக்கடல் பிரதேச்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர். இக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசின் பக்கம் தாவியுள்ள சிறிரங்காவும் சென்றுள்ளார். புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளை நியாயப்படுத்திவந்த சிறிரங்கா கடந்த காலங்களில் அரசுடன் இணைந்திருந்த தமிழ் அரசியல் கட்சிகளை விமர்சித்து வந்தவர். இன்று அதே பாதையில் அவர் பயணிப்பதையிட்டு மக்கள் பெரிதும் விசனம் கொண்டுள்ளனர்.



Read more...

13ம் திருத்தச்சட்டம் விரைவில் மாற்றியமைக்கப்படும்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக 1987ம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்ட அரசியல் அமைப்பின் 13ம் திருத்தச்சட்டமூலத்தில் மேலும் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். 18ம் திருத்தச் சட்டம் வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.

அத்துடன் பாராளுமன்ற தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தல் உள்ளிட்ட சில திருத்தங்கள் விரைவில் நிறைவேற்றப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது. விருப்பத் தெரிவு மற்றும் தொகுதிவாரி முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முறைமை தொடர்பான திருத்தங்களுக்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாகவும் விரைவில் திருத்தங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

இலங்கையில் ஊடக சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியா

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கையில் ஊடக சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மனித உரிமைகள் குறித்து பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக மத்தியகிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான பிரித்தானிய அமைச்சர் அலெஸ்டெயார் பர்ட் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்றில் இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வட பகுதி மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பிரித்தானியா அதிகூடிய கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவென 13.5 மில்லியன் பவுன்களை ஒதுக்க தீர்மானித்துள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்னளுடன் இணைந்து துரிதமாக செயற்பட்டு வருவதாக மத்தியகிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான பிரித்தானிய அமைச்சர் அலெஸ்டெயார் பர்ட் கூறியுள்ளார்.

Read more...

Tuesday, September 14, 2010

மீள்குடியேற்ற விவகாரம் திருப்தி தரவில்லை. மீண்டுமோர் கிளர்ச்சி தோன்றலாம்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவதில் அரசின் கவனம் போதாது எனவும் இதனால் நாடு மீண்டுமோர் கிளர்ச்சிக்கு முகம்கொடுக்க நேரிடலாம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். பிரத்தியேக விஜயம் ஒன்று தொடர்பாக பிரித்தானியாவில் தங்கியுள்ள திரு. அத்தநாயக்க இலங்கைநெற் இற்கு அளித்த செவ்வியில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியினுள் நிலவும் உட்பூசல் தொடர்பாக கேட்டபோது, ஐக்கிய தேசிய கட்சியை ஒருபோதும் அழித்து விடமுடியாது. இது அரசின் தற்காலிக எத்த னிப்பு . இதே முயற்சியை 1956 இல் எஸ் ஆர்.டபிள்யூ பண்டாரநாயக்க அவர்கள் மேற்கொண்டிருந்தபோது கட்சி முற்றிலும் அழிந்துபோகும் வெளித்தோற்றமே காணப்பட்டது. ஆனால் நாம் 1970 ல் மீண்டும் பலம்பெற்று ஆட்சியை கைப்பற்றினோம். இவ்வாறான நிலைகள் அனைத்துக்கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கின்றது, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் லங்கா சமசமாஜ கட்சிக்கும் கொமுனீசக் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கின்றது. உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் 1978 பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க , சந்திரிகா அம்மையார் , அனுர பண்டாரநாயவினால்கூட ஒன்றபட்டு செயல்படமுடியாது உடைந்து போனார்கள். ஏன் ஜேவிபி யை எடுத்துப்பாருங்கள். அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி , சிறிலங்கா சுதந்திரக் கட்சியை விட மாறுபட்ட கொள்கையுடன் இடதுசாரி போக்கினை கொண்டவர்கள். இவர்களுடனிருந்த விமல்வீரவன்ச போன்றோருர் பிரிந்து சென்று அரசுடன் இணைந்தன் ஊடாக அவர்களுக்கும் இவ்வாறான நிலைமைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டிருந்தது, எனவே இது இலங்கை அரசியல் வரலாற்றில் புதியவை அல்ல. அந்தவகையில் ஐக்கிய தேசியக்கட்சி அந்த யதார்த்தத்திற்கு தற்போது முகம் கொடுத்துள்ளது என தெரிவித்தார்.

செவ்வியின் முழுவடிவம் நாளை வெளிவரும் .

Read more...

Monday, September 13, 2010

இலங்கையின் அரசியல் சூழ்நிலை குறித்து இந்தியாவிடம் அறிக்கை கேட்கிறது அமெரிக்கா

இலங்கையின் நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட 18 ஆவது திருத்தச் சட்ட மூலம் உள்ளிட்ட அரசியல் சூழ்நிலைகள் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட விவரங்களை தரும்படி இந்தியாவிடம் அமெரிக்கா கோரியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் அரசியல் நிலைமைகள், பிராந்தியத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதனைத் தெளிவுபடுத்துமாறும் அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகம், இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகள், வெளிவிவகாரம், அரசியல் சாசனத் திருத்தங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்தியாவிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி கோரிக்கையை அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகம் மூன்று தினங்களுக்கு முன் விடுத்துள்ளதாகவும், இந்திய அரசாங்கம் அந்த அறிக்கையைத் தயாரித்து வருவதாகவும் இருநாட்டு தூதரக வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more...

நம்பிக்கெட்ட புளட்டும் நம்பிக்கைத்துரோகம் செய்த புலிகளும்.

தமிழீழ மகள் விடுதலைக் கழகத்தின் அரசியற் செயலாளர் வாசுதேவா (வாசு)
படைத்துறைச்செயலாளர் ஜோதீஸ்வரன் (கண்ணன் ) பாவானந்தன் சுபாஸ்) ஆனந்தன் மற்றும் பலரின் 23ம் ஆண்டு நினைவுநாள்.

1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13ம் திகதி காலை புளட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களான வாசுதேவா , கன்ணன் , சிவராம் (தராக்கி ) ஆகியோர்கள் தங்கியிருந்த வாசுதேவாவின் அக்கா வீட்டிற்கு செண்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களான பொட்டம்மான் , கருணா , கரிகாலன் , சித்தா உள்ளிட்ட புலிகளின் பிரதிநிகள் புளட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நாடாத்தி காலை உணவினை வாசுதேவாவின் சகோதரியின் இல்லத்தில் ஒன்றாக இருந்து அருந்தி மத்தியானச்சாப்பாட்டிற்கு தங்களது அலுவலகத்திற்கு வருமாறு அழைப்புவிடுத்து கைகுலுக்கிசென்ற புலிகளின் நயவஞ்சகத்தன்மையை அறிந்திராத புளட் அமைப்பினர் மத்தியானம் சாப்பாட்டிற்கு வருவதற்கு ஒப்புதலும் வழங்கினார்கள்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாகத்தன்னும் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்த புளட் இயக்கத்தினர் ஒற்றுமை என்ற போர்வையில் தமிழீழ விடுதலை இயக்க தலைவர் சிறீ சபாரத்தினத்திற்கு நேர்ந்த நிலைமையை உணராமல் போனது வேதனையான விடயமே.

இந்தத்தருனத்தில் புலிகளை முழுமையாக நம்பமுடியாது பாதுகாப்பிற்காகத்தன்னும் சில ஆயுதங்களையும் தொலைத்தொடர்பு சாதனங்களையும் எடுத்துச்செல்லவேண்டும் என வற்புறுத்திய பவனின் ஆலோசனையும் (தற்போது கனடாவில் இருக்கின்றார் ) புலிகள் அப்படிசெய்யமாட்டார்கள் என்ற வாசுதேவாவின் மித மிஞ்சிய நம்பிக்கையால்; கைவிடப்பட்டது.

இதில் இன்னோர் விடயத்தையும் சொல்லியாகவேண்டும் புலிகளுடனான மத்தியான சந்திப்பில் சிவராமும் கலந்துகொள்வதாகவே ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் வாசுதேவா கண்ணன் ஆகியோர் பாசிக்குடா சென்றசமயம் சிவராம் யாருக்குமே சொல்லாமல் கொழும்பிற்கு பஸ்ஸில் புறப்பட்டு சென்றுவிட்டார்.

நடைபெற இருக்கும் விபரீதத்தை சிவராம் முன்கூட்டியே அறிந்திருந்தாரோ என்ற என்னிமுள்ள சந்தேகம் இன்றும் எனக்கு நீங்கவில்லை . இவ்விடயம் சம்பந்தமாக மாணிக்கதாஸனிடம் வினவியபோது அந்தச் சந்தேகம் தனக்கும் இருப்பதாக சொல்லியிருந்தார் என்பதை விட சிவராமை தற்செயலாக சந்தித்தபோது அவரிடமே எனது கேள்வியைக்கேட்க இப்படி எத்தனை கதைகள் வரும் என மட்டுமே சிவராம் பதிலளித்தார்.
பாசிக்குடாவில் இருந்து புலிகளின் அலுவலகம் நோக்கிப்புறப்பட்ட வாசுதேவா , கண்ணன் , சுபாஸ் , ஆனந்தன் உள்ளிட்ட புளட் இயக்க உறுப்பினர்கள் கிரான் சந்தியில் இவர்களை எதிர்பார்த்திருந்த புலிகளினால் படுகொலை செய்யப்பட்டது மட்டுமல்லாமல் அனைவரது உடல்களையும் வேறு இடத்திற்கு எடுத்துச்செண்று எரித்தும் முடித்தார்கள் புலிகள்.

இச்செய்தி மட்டக்களப்பு முழுவதும் பரவத்தொடங்கியதும் ஒருவித பதட்டநிலை உருவானதையும் தெளிவாக அறிந்த புலிகளின் தலைமைகள் தலைமறைவாக சித்தா என்பவர் மட்டுமே மட்டக்களப்பில் இருந்த புலிகளின் அலுவலகத்தில் தங்கியிருந்தார்.

ஒரேதினத்தில் பல தடவைகள் சித்தாவை சந்தித்து புளட் இயக்க உறுப்பினர்களின் உடல்களையாவது தாருங்கள் என வாசுதேவாவின் உறவினார்கள் சித்தாவைக்கேட்டபோதும் எந்தவிதமான பதில்களையும் சித்தாவினால் வழங்கமுடியாற்போனது.

அடுத்தநாள் காலை புலிகளின் மட்டக்களப்பு அலுவலம் வாசுதேவாவின் உறவினர்கள் நன்பர்கள் பலரினால் முற்றுகையிடப்பட்டு ஏற்றப்பட்டடிருந்த புலிக்கொடியும் வாசுதேவாவின் உறவினர்களால் கழட்டி எறியப்பட்டது.

கொடி களட்டப்பட்டதும் மிகவும் கோபமடைந்த சித்தா இன்னும் பலருக்கு மோசமான விளைவுகள் ஏற்படாமல் தடுப்பதென்றால் இங்கிருந்து செல்லுங்கள் என உரக்கக் கத்தியபோது வாசுதேவாவின் உறவினர்களால் பலவந்தமாக தரையில் தள்ளப்பட்டு தாக்குதலுக்கும் இலக்கானார்.

மிகவும் கேவலாமாக நயவஞ்சகமான முறையில் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டவர்கள் எத்தனையாயிரம்?

அந்த நிலைதான் இறுதியாக நந்திக்கடலிலும் நடந்தேறியது.

கப்பல் வரும் எனக் காத்திருந்ததும் ஹெலிவாங்கத்திட்டமிட்டதும் அதே பாணியில் நடந்தேறிய சம்பவங்களே.

எஸ்.எஸ்.கணேந்திரன்

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com