Showing posts with label NEWS. Show all posts
Showing posts with label NEWS. Show all posts

Monday, March 11, 2013

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தை 23ல் ஜனாதிபதி திறக்கிறார்.

மட்டக்களப்பு கல்லடிப்பாலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் எதிர்வரும் 23ஆம்திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. இதனையொட்டி மட்டக்களப்பு நகரில் நடைபெற்றுவரும் தேசத்திற்கு மகுடம திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும், மாநகர அழகுபடுத்தும் வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான வேலைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் திணைக்களத் தலைவர்களுடனான சந்திப்பினைடுத்து மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றுவரும் வேலைத்திட்டங்கள் பார்வையிடப்பட்டன.

இம்மாதம் 23ஆம்திகதி அம்பாறையில் நடைபெறவுள்ள தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை ஒட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் பல மில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாகவும் முக்கியமானதாகவும் உள்ள மட்டக்களப்பு மாநகர அழகுபடுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுவரும் நீதிமன்றம் அருகிலுள்ள முதியோர் பூங்கா, காந்திப் பூங்கா, இருதயபுரம் சந்திக்கு அருகிலுள்ள லீனியர் பார்க், திருமலை வீதியின் வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட அபிவிருத்தி வேலைகளை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டதுடன் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருபவர்களுக்கும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.

மட்டக்களப்பு நகர அழகுபடுத்தல் திட்டத்தின் கீழ் நகரின் மத்தியில் உள்ள காந்தி சதுக்கம் காந்தி பூங்காவாக மாற்றம்பெறுகிறது. தேசத்தின் மகுடம் (தயட்ட கிருள) வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த அபிவிருத்தி த்திட்டத்துக்கென 38.301 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ் வேலைத்திட்டத்தினை மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்துகின்றன.

Read more...

Monday, March 4, 2013

சுகாதார அமைச்சர்- பிரதிப் பொலிஸ் மா அதிபர் களன் மகன்களின் வழக்கு 8ஆம்திகதிக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வைத்தியங்காரவின் மகன் அசேல தாக்கப்பட்டமை தொடர்பிலான வழங்கு விசாரணை இம்மாதம் 08ம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 24ம் திகதி சுகாதார அமைச்சர் மைத்திலிபால சிறிசேனவின் மகனுக்கும், பிரதிப் பொலிஸ்மா அதிபர் வைத்தியங்காரவின் மகன் ஆகியோருக்குமிடையிலாக கைகலப்பு வாழைச்சேனை பாசிக்குடாவில் இடம் பெற்றிருந்தது. இதுதொடர்பிலான வழக்கு விசாரணைகள் திங்கட்கிழமை வாழைச்சேனை நீதவான் நிதிமன்ற பதில் நீதிபதி வினோபா இந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த வழங்கு விசாரணைகள் எதிர்வரும் 8ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவும் நீதிமன்றில் ஆஜராகியருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவில் மகன் சார்பாக பிரதி அமைச்சர் பைஸர் லலித் திசாநாயக்க, என்.எம்.சஹீட் உட்பட சுமார் 15 சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இக் கைகலப்பு சம்பவத்தில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் மகனுடன் 15க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வைத்திய அறிக்கையின் பின்னர் உடனடியாக பொலிஸ் பிணை வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி வைத்தியலங்காரவின் மகள் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தம் மீது தாக்குதல் நடத்திய சுகாதார அமைச்சரின் மகன் மது போதையில் இருந்தார் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com