Showing posts with label INEWS. Show all posts
Showing posts with label INEWS. Show all posts

Monday, December 12, 2011

நல்லிணக்க ஆணைக்குழு வின் அறிக்கை சர்வதேசத்திற்கு பாடம் புகட்டும்.Ggeoffrey van orden

இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வந்த அநேக குற்றச்சாட்டுக்களுக்கு, கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சிறந்த பாடமென ஐரோப்பிய பாராளுமன்ற பாதுகாப்பு துறை தலைவர் ஜெப்ரி வேன் வோர்டன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்நாட்டு பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு வாய்ப்பளிக்க வேண்டுமெனவும் அன்னியத்தரப்புக்கள் அதற்கு உதவியை மட்டுமே புரிய வேண்டுமெனவும் வேன் வோர்டன் தெரிவித்துள்ளார்.

தனது இலங்கை விஜயத்தின் அனுபவங்களை நினைவுகூர்ந்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர் புதிய எதிர்ப்பார்ப்புக்களை கொண்ட மனிதர்களும் பொருளாதார மறுமலர்ச்சியும் இலங்கையில் காணக்கிடைத்ததாக தெரிவித்தார்.

30 வருட கால பயங்கரவாத யுத்தத்தை நிறைவுபெற்று அபிவிருத்தி பாதையில் செல்லும் இலங்கைக்கு கைகொடுத்து உதவுவது சர்வதேசத்தின் பொறுப்பாகும். தமிழ், முஸ்லிம் மக்களே பயங்கரவாதத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டதாகவும் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருப்பதற்கு இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வும், அரசியல் ஒற்றுமையும் அவசியமெனவும் ஐரோப்பிய பாராளுமன்ற பாதுகாப்பு துறை தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் பிரிவினை வாதத்தின் பின்னால் செல்லாமல் உலகெங்கும் வாழும் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களும் ஏனைய தரப்பினரும் இலங்கையில் கட்டியெழுப்பப்பட்டு; வரும் நல்லிணக்கத்திற்கு பக்கபலமாக செயற்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

Read more...

Wednesday, November 23, 2011

ஒருகொடவத்தையில் கடத்தப்பட்ட வர்த்தகர் நீர்கொழும்பில் விடுவிப்பு

ஒருகொடவத்த பகுதியில் நேற்றைய தினம் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வர்த்தகர் நீர்கொழும்பு பகுதியில் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளார்.லலித் குமார என்ற வர்த்தகரே இவ்வாறு விடுவிக்கப்பட்டவராவார்.இவர் நேற்றிரவு 11.30 அளவில் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாயக்கிழமை அதிகாலை 5.45 அளவில் இனந்தெரியாத நால்வரால் இந்த வர்த்தகர் ஒரு கொடவத்த பகுதியில் கடத்தப்பட்டுள்ளதாக கிராண்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கடத்தப்பட்ட வர்த்தகரான லலித் குமார ஊடகவியலாளர்களுக்கு இன்று இது பற்றி தெரிவிக்கையில்,

இளைஞர்கள் சிலர் என்னை வாகனமொன்றில் கடத்தினர்.அந்த வாகனம் நீர்கொழும்பு திசையை நோக்கிச் சென்றது.இதன்போது அவர்கள் எனது கண்களை கட்டியதுடன், தாக்கவும் செய்தனர். இரவு வரை என்னை தடுத்து வைத்து விட்டு, நீர்கொழும்பு பகுதியில் கைவிட்டுச் சென்றனர். பின்னர் அங்கிருந்து பஸ்ஸொன்றில் கொழும்பு புறக்கோட்டைக்கு வந்தேன்.அங்கிருந்து வீடு சென்றடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடத்தப்பட்ட லலித் குமாரவிடம் கிரேண்ட்பாஸ் பொலிஸார் வாக்கு மூலம் ஒன்றை பெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இந்த வர்த்தகர் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று தெமட்டகொட முச்சந்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com