ஆயுதங்கள் மீது காதல்கொண்ட மனநோயாளிகள்..
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு முதற்கட்ட தீர்வாக இந்திய அரசின் முழு செல்வாக்குடன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் தமிழ் மக்களது உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது, அவர்களது இருப்புக்கான நிரந்தர தீர்வ எவ்வாறு அமைந்திருந்தது என்பது தொடர்பாக தமிழ் மக்கள் நன்கு அறிந்திருந்தாலும் புலிகளின் வன்செயல்களுக்கு அச்சமுற்றதனால் ஆதரவாக பேச மறுத்தபோதும், இலங்கை அரசு அதன் உள்ளடக்கத்தையும் அவ்வொப்பந்தம் எவ்வாறு இலங்கை நாட்டை கூறுபோடுகின்றது என்பதையும் உணர்ந்ததனால், ஜே.ஆர் ஜெயவர்த்தனவினால் கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிவேன் என அவரது கட்சியின் இரண்டாம் தலைமையாக இருந்த ஆர் பிறேமதாச சூழுரைத்து ஆட்சிபீடம் ஏறினார்.
ஆட்சிப்பீடமேறிய பிறேமதாஸ குறித்த ஒப்பந்தத்திலுள்ள விடயங்களை நிறைவேற்ற இந்திய அமைதி காக்கும் படையாக வந்திருந்த இந்திய இராணுவத்தை இலங்கையை விட்டு வெளியேறுமாறு பணித்தார். அதன்போது நாங்கள் தமிழ் மக்கள் சார்பாக கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என இந்திப்படை கூற தமிழ் மக்கள் குறித்த ஒப்பந்தத்திலுள்ள தீர்வை ஏற்றுக்கொள்ளவில்லை நீங்கள் வெளியேறலாம் என்றார் பிறேமதாஸ.
தமிழ் மக்கள் குறித்த ஓப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை தமிழ் மக்களே கூறவேண்டும். நீர் கூறுவதை செவிமடுத்து நாங்கள் வெளியேறமுடியாது என்றபோது, பிரபாகரனை பணமும் ஆயுதங்களும் கொடுத்து விலைக்கு வாங்கிய பிறேமதாஸ, அவனைக் கொண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தமிழ் மக்களின் பெயரால் எதிர்த்தார். புpரபாகரனை கொண்டு இந்திய இராணுவத்தின் மீது போர் தொடுத்தார். அதற்காக பிரபாகரனுக்கு போதிய பணமும் , ஆயுதங்களும் , கொழும்பு நட்சத்திர ஹோட்டல்களில் உல்லாச வாழ்வும் வழங்கப்பட்டது.
வுடகிழக்கை விட்டோடிய புலிகள் வடகிழக்குக்கு வெளியேயுள்ள பெருநகரங்களிலும், வடகிழக்கின் எல்லை புறங்களிலும் சிங்கள இராணுவத்தின் அனுசரிப்பில் இருந்து இந்திய இராணுவத்தின் மீதும் அவ்விராணுத்தினருடன் சேர்ந்தியங்கிய இதர தமிழ் இயக்கங்கள் மீது தாக்குதல்களை தொடுத்து அவர்களை கொலை செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இந்திய இராணுத்தினர் இலங்கையை விட்டு வெளியேற முடிவு செய்து 1989 ம் ஆண்டு இறுதிப்பகுதியில் வெளியேறியபோது, பிறேதாஸவுடன் தேனிலவு கொண்டாடிக்கொண்டிருந்த புலிகள் எனப்பெயர் கொண்டிருந்த கூலிப்படை இலங்கை இராணுவத்தினருடன் இணைந்து மீண்டும் வடகிழக்கை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
இலங்கை இராணுவத்துடன் இணைந்து வந்த புலிகள் வடகிழக்கெங்குமிருந்த மாற்று இயக்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும் சித்திரவதை செய்யவும் கொலைசெய்யவும் ஆரம்பித்தனர். இவ்வாறு வடமாகாணத்தில் கைது செய்யப்பட்ட பலர் துணுக்காயிலுள்ள நெல்களஞ்சியசாலையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டும் சிலர் விடுதலை செய்யப்பட்டும் உள்ளனர். இதனால் துணுக்காய் வதை முகாம் சித்திரவதைகளுக்கு மிகவும் பெயர் போனதாக அக்காலத்தில் இருந்தது. துணுக்காய் என்கின்றபோது சலீம், காந்தி, சின்னவன் என்ற கொலைஞர்களின் பெயர்கள் அலைமோதுவதுண்டு.
இந்நிலையில் துணுக்காய் வதைமுகாமில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகின்ற, தங்கத்துரை என்பவரின் மகளான தயானி என்பவர் தனது தந்தையார் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்று நம்பும் அந்த இடத்தை காணச் சென்றமை இன்று சமுக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், பாசிச வெறியர்கள் அவ்வாறானதோர் முகாம் அங்கு இருக்கவே இல்லை என முழுப்பூசணிக்காயை ஒரு உள்ளங்கை சோற்றினுள் புதைக்க முற்படுகின்றனர்.
ஆனால் குறித்த துணுக்காய் முகாமில் சித்திரவதைகளுக்குள்ளாகி புலிகளுக்கு ஓலை கொடுத்து வெளியேறிய அல்பேட் ஜூலியின் என்பவர் தனது துணுக்காய் முகாம் சித்திரவதை கொடுமைகள் தொடர்பாக 1995 புத்தகமாக எழுதியுள்ளதுடன், குறித்த புத்தகத்தின் ஆங்கிலப்பிரதிகள் அந்த ஆண்டே இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் செயற்பட்டுக்கொண்டிருந்த பல்வேறு மனித உரிமை காக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பதை இன்று கண்மூடி பால்குடிக்கும் பூனைக்குட்டிகள் அறிந்திருக்க வாய்பில்லை.
எனவே வரலாறு எமக்கிட்டுள்ள கட்டளையாக இந்த அமிழ்ந்து போகும் உண்மையை மிதக்க வைக்கும் நோக்கில் புத்தகத்தினை, இலங்கைநெட் பகுதிகளாக தரவேற்றுகின்றது.
ஆயுதங்கள் மீது காதல்கொண்ட மனநோயாளிகள்.. பகுதி 1
இந்தப் புத்தகத்தை வாசித்து மூடுகையில் மனசாட்சியைக் கழற்றி வைத்துவிடாத ஒரு சராசரி மனிதனின் மனதில் எங்கள் சமுதாயத்தில் மனிதாபிமானம் எவ்வளவு இழிநிலை எய்திவிட்டது என்பதை எண்ணிய வேதனைதான் எஞ்சியிருக்கும். ஏனெனில் உலகின் வரலாற்றில் எந்த நாட்டிலும் கேள்விப்படாத குரூரமான சித்திரவதைக்ளை நாம் நமது சுதந்திரப்போராட்டம் என்று மகுடம் சூட்டிப் பூஜித்த "புனிதமான கோயிலின்” மூலஸ்தானத்திலேயே தரிசிக்கும் துர்ப்பாக்கியம் பெற்றவர்களாகிவிட்டோம். "நாம் ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட மனநோயாளிகளல்ல,” என்று விடுதலைப் புலிகள் தங்கள் கோஷத்தில் பொறித்துக் கொண்டாலும், பயங்கர நோய்களின் விளைவுகளை அறிந்து கொள்ள விஞ்ஞான கூடங்களில் பரிசோதனைக்காக வளர்க்கும் விலங்குகளைப் போலப் பாவித்து மனிதனின் தேகத்தில் தங்கள் கற்பனையில் உதிக்கும் வினோதமான சித்திரவதைகளையெல்லாம் நடத்தி எது மனிதனுக்கு அதிக வேதனையைத் தரக்கூடிய சித்திர வதையெனக் கண்டு பிடிக்கத் துடிக்கும் அவர்களின் வெறியும் ஒவ்வொரு அணுவும் துடிதுடிக்கும் உச்ச வேதனையின் ஈனக்குர லையும், இரத்தத்தையும், கன்றிய கதைகளில் கிளம்பும் துர்நாற்ற த்தையும் ரசிக்கின்ற குரூர ரசனையும் இவர்களைப் பீடித்துள்ளமனநோய் எத்தனை உச்சத்தை எய்தியுள்ளது என்பதையே வெளிச் சமிட்டுக் காட்டுகிறது. இது எமக்கும் நரமாமிசம் புசிப்போரின் சந்ததித் தொடர்பு எங்கேனும் இருந்திருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
டாக்டர் சிவகுமாரனைப் போன்ற பெரிய மருத்துவர்கள் குடாநாட்டை விட்டு வெளியேற விண்ணப்பித்தவர்களைப் பரிசோதித்து அவர்களின் உடல்நிலை குடாநாட்டினுள் சிகிச்சை பெற்று மாற்ற முடியாததுதானாவென புலிகளுக்கு மருத்துவச் சான்றிதழ்கள் வளங்கித் தம் சேவையை நல்கும் போது இங்கு வியாதிகளால் பீடிக்கப்பட்டவர்கள் எப்படிப் பராமரிக்கப்பட்டடார்கள் என்பதை மருத்துவ உலகம் அறிந்து கொள்ளக் கூடியதாயுளளது.
சிவத்தம்பி போன்ற பேராசிரியர்கள் புலிகளின் முத்தமிழ் விழாக்களுக்குத் தலைமை தாங்கும்போது இந்த வதை முகாம்களில் தமிழ் எப்படி வாழ்கிறது என்பதை தமிழுலகம் புரிந்து கொள்ளக் கூடியதாயுள்ளது.
இருப்பினும் இப்போது கூட இந்த வதைகளுக்கு வக்காலத்து வாங்க சில புலி ஆதரவாளர்கள் தயங்காமல் முன்வருவார்கள். அவர்கள் படித்தவர்கள் பெரியவர்கள் என்ற பட்டங்களைத் தாங்கியவர்களாயும் இருப்பார்கள். இவர்கள் முதலில் இப் புத்தகத்தை முடி மறைத்து இருட்டடிப்புச் செய்ய முற்படுவார்கள். ஆனால் அதையும் மீறி இது வெளிப்படுமானால் "இவை அனை த்தும் சுத்தப் பொய்” என்று தமது வளமையான பாணியில் மறுப் பார்கள். ஆனால் அது அவர்களின் அடிவருடிகளான சிலரைத் தவிர சிந்திக்கக் கூடிய அனைவரையும் திருப்திப்படுத்தாது என்பது சில புத்திசாலிகளுக்குப் புரியும். அதனால் அவர்கள் சில வேறு வழிகளைக் கையாளுவார்கள். இப்படி வதைபட்ட அத்தனை பேரும் காட்டிக் கொடுத்த துரோகிகள்தானென்று அடித்துச் சொல்லுவார்கள். இத்தனைக்கும் அவர்கள் தாம் குற்றம் சாட்டும் ஒருவரது பெயரைக்கூட அறிந்திருக்க மாட்டார்கள். எனினும் தாம் கண்ணால் கண்டது போல அடித்துச் சொல்லு வார்கள். ஏனெனில் கேள்வி கேட்கக் கூடிய அளவுக்கு இவர்களின் வக்காலத்தை செவிமடுப்பவர்களும் இவ்வதைகளுக்குள்ளாகியவர்கள் பற்றி முகமறியாதவர்களாகவே இருப்பார்களென்பது அவர்களின் எண்ணமாக இருக்கும்.
இருந்தும் எல்லா இடமும் இதே பதிலைச் சொல்லிச் சமாளிக்க இயலாதேபாது இவர்கள் சில நுட்பங்களைக் கையாழுவார்கள். அதிலொன்று பிழையை ஒத்துக் கொள்வது. ஆனால் பிழையை அதற்குரிய பரிமாணத்தில் பார்க்காமல் மிகவும் சிறிய ஒரு *விடயமாக்கி "அவர்களும் சின்னப் பிழைகள் விட்டிருக்கிறார்கள் தான்” என்னும் தட்டிக் கழிக்கும் பாணியில் ஒத்துக்கொள்வது. இதன் உள்ளார்ந்த அர்த்தம் "இதுகளையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது" என்னும் கருத்தைத் தொனிக்கும். மற்றொரு வழி உடனே இந்தக் கதையை ஒதுக்கிவிட்டு மற்றவர்களும் இப்படிச் செய்திருக்கிறார்கள்தானே என்று குற்றம்சாட்டப் புறப்படுவது. கணிதத்தில் ஒரு கணியத்தை இல்லாதாக்க வேண்டுமானால் அக் கணியத்தை இன்னொன்றுக்குச் சமன் என சமன்படுத்திவிடுவது, பின் இரண்டையும் ஒரு புறத்திற்கு எடுத்து ஒன்றிலிருந்து மற்ற தைக் கழித்தால் விடை பூச்சியமாகிப் போய்விடும். அப்படி ஒரு பிழையை இல்லாது ஒழிப்பதற்கு இனங்னொரு பிழையைக் காட்டி அதனுடன் இதை சமன்செய்து கொண்டால் பிழையே பிழையில்லாததாகிவிடும் மாயஜாலம் இது.
எப்படியிருந்தாலும் இப்புத்தகத்தின் தாக்கத்தையிட்டு இவர்கள் இப்படிப் பயப்படும் அச்சமொன்றே இதில் உள்ள உண்மையின் கனம் எத்தகையது என்பதைத் தெரிவிக்கப் போதுமானது, இன்னும் புலிகள் வதை முகாம்களில் கூறுவது போலவே உலகின் நான்காவது படையை தோற்கடித்த லேசுப்பட்டவர்களல்லாதவர்களாக இருக்கலாம். இப் புத்தகத்தை தனது தார்மீகக் கடமையாகக் கருதி எழுதியவர் ஒரு தனிமனிதனாக இருக்கலாம். இவர்கள் எம்மை ஒரு புழுப்போல் நடத்தலாம்.
ஆங்கிலத்தில் Even a worm will turn என்றதொரு வாக்கியமுண்டு. (முதுகெலும்பில்லாத புழுக்கூட இறுதியில் திரும்பும்) இம்சையின் தாங்கமுடியாத கட்டத்தில் மெளனமாக சாவதைவிட தனது இறுதி எதிர்ப்பைக் காட்டவே செய்யும். தனிமனிதனாக இருந்தாலும், ஒரு அற்பனாக இருந்தாலும் தனக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கெதிராக ஏதாவது ஒரு எதிர்ப்பைக் காட்டத்தான் செய்வான். அந்தவகையில் இந்தப் புத்தகம் அபாயத்தின் மத்தியிலும் துணிந்து வெளிவரும் எதிர்ப்பின் சின்னமாக விளங்குகிறது.
இப்புத்தகம் புலிகளின் வதைகளைப்பற்றி தான் அனுபவித்த அனுபவத்தைக் கூறும் ஒருவரின் எந்த மிகைப்படுத்தலுமற்ற உண்மைகளின் பதிவு. ஆனால் இதன் அர்த்தம் புலிகள் இவ்வாறான கொடுமைகளைச் செய்கிறார்கள் என்று அம்பலப்படுத்துவதென்பது அரசையோ மற்றய அமைப்புக்களையோ நியாயப்படுத்தும் அல்லது வக்காலத்து வளங்கும் நோக்கிலானது அல்ல. அதே வேளை தமிழ் மக்கள் பூரண உரிமைகளும் பெற்ற சமுதாயமுமல்ல. உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற சமுதாயம். இங்கு இப் போராட்டத்தை தவறான வழியில் இட்டுச் சென்று சிதைப்பதில் புலிகளின் தவறுகள் காரணமாயிருந்தாலும் இப் போராட்டத்திற்கே மூலகாரணமான உரிமைகள் மறக்கப்பட்டுள்ள, நசுக்கப்படுகின்ற நிலமைக்கு காரணமான ஆட்சியாளர்களது தவறுகள் மறுக்கப்பட முடியாதவை. இந்தப்பக்கத்தில் இழைக்கப் பட்ட மனித உரிமை மீறல்களும் எந்தவகையிலும் குறைத்து மதிப் பிடக் கூடியவையுமல்ல. மக்களின் நலத்தின் மீது அக்கறை கொள்ளாது தம் சொந்த நலன்களுக்காகச் செயற்படும் போக்கு எது வரை தொடருமோ அதுவரை இம் மனித உரிமை மீறல்கள் தொடரத்தான் செய்யும்.
கொலைகாரப் புலிகளினால் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, துணுக்காய் காட்டில் சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருந்தபோது, புலிகளின் இக் கொடுமைகளை உலகத்திற்கு குறிப்பாக அவர்களை உத்தமர்களாக, விடுதலை வீரர்களாகக் கருதும் அப்பாவித் தமிழர்களுக்கு அறியத்தர வேண்டும் என பல தடவைகள் எண்ணினேன். இதை என் கடமையாகவும் கருதினேன். புலிகளின் கொடுஞ் சிறையிலிருந்து தப்பி வந்தபின் யாழ்நகரில் தலைமறைவாக இருந்தேன். புலிகளின் கண்ணுக்குள் மண்ணைத்தூவி விட்டு தமிழீழத்திலிருந்து தப்பி கொழும்பு வந்து சேர்ந்தேன். என் உடலில் ஏற்பட்ட காயவடுக்கள் மறைந்து போனாலும் போகலாம். ஆனால் இக் கொடிய புலிகளினால் என் நெஞ்சில் ஏற்பட்ட காயம் என்றுமே ஆறாது. ஆனால் காயம் பட்ட என் நெஞ்சுக்கு ஆறுதலாகவும், மனித நேயம் பேணப்பட நான் செய்யும் சிறு பணியாகவும் கண்ணிருடன் இதை எழுதுகிறேன்.
1990 இன் ஆரம்பம், இலங்கையின் வடக்கு கிழகக்கில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்படப்போகும் அறிகுறிகள் தென்படத் தொடங்கியது. காட்டுக்குள் இருந்த கொடிய மிருகங்கள் மெல்ல மெல்ல நாட்டுக்குள் ஊடுருவத் தொடங்கிய காலம். மனித நேயம் மீண்டும் மழுங்கடிக்கப்பட்டது. அடுத்து சில நாட்களில் தமக்கு விழப்போகும் அடிமை விலங்கைப்பற்றி உணரமுடியாத வட-கிழக்கு மக்களும் யாழ்ப்பாண பத்திரிகைகளும் புலிகளின் வரவை ஒரு வகையில் வரவேற்றனர். இந்நிலையில்தான் மாகாண அரசை ஆதரித்த தமிழ் மக்கள் மீது புலிகளின் பழிவாங்கல் நட வடிக்கைகள் தொடங்கின. மாற்று இயக்கத்தினருக்கு தலைவரால் பொது மன்னிப்பு அழிக்கப்பட்டுள்ளதாகவும் தம்மிடம் சரணடையும் படியும் ஒலிபெருக்கிகள் மூலம் தெருத் தெருவாக அறிவிக்கப்பட்டது. எங்கும் பரவலாகப் பலர் கைது செய்யப்படுவதாக அறியக்கூடியதாக இருந்தது. கைது செய்யப்படுபவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதோ அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதோ யாருக்குமே தெரியாது. கைது செய்யப் படுபவர்களை பெற்றோரோ அல்லது உறவினர்களோ பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை தமிழீழமெங்கும் கொலைகாரப் புலிகளின் கொடிய ஆட்சி ஆரம்பமாகியது. 1990 ஏப்ரல் மாதத் தில் ஒரு நாள் புலிகள் வந்து தேடிக்கொண்டு போவதாக வீட்டில் சொன்னார்கள். மனம் துணுக்குற்றது. என்னவாக இருக்கும் என சந்தேகித்தபடியே அருகில் அமைந்திருந்த புலிகளின் குகை (முகாம்) நோக்கி சென்றேன்.
முன் காப்பரணில் சீருடையில் இருந்த சிறுவன் ஒருவன் என்னை யாரென விசாரித்தான். நான் மிகமிகப் பணிவாக வந்த காரணத்தை சொன்னேன். உடனே என்னை ஒரு திருடனைப் போல் பார்த்து என் உடல் எல்லாம் தடவிப்பார்த்து சோதித்து திருப்திப்பட்டவராக உள்ளே செல்ல அனுமதித்தார். அது ஒரு வழிப்பாதை என்பதும், இந்த வழியால் உள்ளே போனவர்கள் உயிருடன் திரும்புவதில்லை என்பதையும் முன்னர் நான் அறிந்திருந்ததால் மரணபயத்துடனேயே உள்ளே சென்றேன்.
அங்கே முகாம் பொறுப்பாளர் முன் போய் பவ்யமாக நின்றேன். அவர் எனது பெயர் முகவரி ஆகியவற்றை விசாரித்து விட்டு “உன்னை அழைக்கும்படி மேலிடத்திலிருந்து எமக்கு உத்தரவு வந்துள்ளது. அவர்கள் வந்துதான் உன்னை விசாரிப்பார்கள். அதுவரை இங்கு இரு" எனக் கூறி ஒரு அறையினுள் விட்டுப் பூட்டினர். நேரம் இரவு பத்து மணி, அறை ஒரே இருட்டாக இருந்தது. சுமார் இரண்டு மணிநேரம் அப்படியே நின்றேன். பின்னர் சுவர் ஒரமாக உட்கார்ந்தேன். யோசித்துக்கொண்டேயிருந்து அப்படியே தூங்கி விட்டேன். மறுநாள் காலை எட்டு மணிபோல் அறை திறக்கப்பட்டது. காலைக் கடன் செய்வதற்கு அனுமதிக்கப் பட்டேன். பின் மீண்டும் அறைக்குள் அடைக்கப்பட்டேன். நண்பகல் மதியச் சாப்பாடு தந்தார்கள். சாப்பிடவில்லை. சாப்பிடச் சொல்லி ஏசினார்கள். சிறிது சாப்பிட்டேன். இரவு ஒன்பது மணிபோல் பானும், வாழைப்பழமும் தந்தார்கள். சாப்பிட்டேன். சாப்பாடு கொண்டு வந்த சீருடைச் சிறுவனிடம் "அண்ணே என்னை எப்போ விடுவார்கள்” எனக் கேட்டேன். தெரியாது எனச் சொல்லி விட்டு கதவைப் பூட்டிக் கொண்டு சென்று விட்டார். இரவு முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தேன். பொழுது புலர்ந்தது. கதவு திறந்தது. காலைக் கடனை முடிப்பதற்கு அனுமதித்தார்கள். அந்த நேரத்தில் முகாம் பொறுப்பாளரைக் கண்டேன் என்னை எப்போ விடுவீர்கள்? என அழுது கொண்டே கேட்டேன், “தலைமைக் காரியாலயத்திலிருந்து இன்று இரவு ஆட்கள் வந்து உன்னை விசாரித்து பிரச்சனை இல்லை என்றால் உடன் விடுதலை செய்வார்கள்." என்றார். மனதுக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது. அன்றும் வழமைபோல் மதிய உணவும், இரவு உணவும் தரப்பட்டது. இரவு விசாரணைக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் தூக்கம் வராமல் விழித்திருந்தேன்.
நடுநிசி பன்னிரண்டு மணி இருக்கும் கதவு திறக்கப்பட்டு அறைக்கு வெளியே அழைக்கப்பட்டேன். கறுத்த தடித்த புலி ஒருவர் நின்றார். எனது பெயர் ஊர் எல்லாம் விசாரித்தார். EPRLF. உடன் என்ன தொடர்பு எனக் கேட்டார். தொடர்பு ஏதுவுமே இல்லை என மறுத்தேன். மீண்டும், மீண்டும் அதையே கேட்டார். நான் இல்லை, இல்லை என மறுத்தேன். "டேய் சுத்துறியா?" (என்னை மடையனாக்குகின்றாயா?) எனக்கேட்டு அடிக்க வந்தார்.
"அண்ணே அடிக்காதீர்கள். எனக்கு இயக்கங்களுடன் தொடர்புகள் இல்லை. எனக்கு குடும்பப் பொறுப்பு அதிகம்,” எனச் சொல்லி அழுதேன். "டேய். (கெட்டவார்த்தை) எல்லோரும் இப்படித்தானடா சுத்துகிறீர்கள். நீ EPRLF க்கு றெக்கி (உளவுசொன்னது) கொடுத்து வந்தது எமக்கு தெரியும். பொய் சொல்லாதே," எனக் கூறினார். பின்னர் அங்கு நின்ற வேறு புலியைக் கூப்பிட்டு “இவனின் சேட்டைக் கழற்றி கண்ணைக் கட்டு" என்றார். அவ்விதமே செய்யப்பட்டேன். கைக்கு விலங்கிடப்பட்டேன். சிறிது நேரம் புலிகள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். என்னை இழுத்துச் சென்று ஒரு வாகனத்தில் ஏற்றினார்கள். வாகனம் எங்கு செல்கிறது என்பது தெரியாமல் வாகனத்தின் அடியில் குப்புற படுக்க வைக்கப்பட்டிருந்த நான் ஏதேதோ பயங்கர கற்பனையில் பயணப்பட்டுக்கொண்டிருந்தேன். இடைவழியில் வாகனம் நிறுத்தப்பட்டது. என்னை அழைத்துச் சென்றவர் வேறு யாருடனோ கதைப்பது கேட்டது. "யார் வானுக்குள் நல்ல கிடாய்" எனப் புதிய குரல் கேட்க "இதை சுடலையில் தட்டப்போகிறேன்" என என்னை அழைத்துச் சென்றவர் சொல்வது கேட்டது. எனக்கு மரண பயம் பிடித்துக் கொண்டது. தட்டப் போகிறேன் என்றால் அவர்கள் பாஷையில் சுடப்போகிறேன் என்று அர்த்தம். எனக்கு உடலெல்லாம் வியர்த்தது. சிறிது நேரத்தில் ஒன்றுமே தெரியாத நிலைக்கு நான் வந்துவிட்டேன். வாகனம் எவ்வளவு நேரம் ஓடியது என்பதோ, எங்கு போகிறதென்பதோ எனக்கு எதுவும் தெரியவில்லை. வாகனத்தில் இருந்து இழுத்து இறக்கப்படும் போதுதான் சுய உணர்வு வந்தது.
Read more...