Saturday, June 28, 2025

ஆயுதங்கள் மீது காதல்கொண்ட மனநோயாளிகள்..

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு முதற்கட்ட தீர்வாக இந்திய அரசின் முழு செல்வாக்குடன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் தமிழ் மக்களது உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது, அவர்களது இருப்புக்கான நிரந்தர தீர்வ எவ்வாறு அமைந்திருந்தது என்பது தொடர்பாக தமிழ் மக்கள் நன்கு அறிந்திருந்தாலும் புலிகளின் வன்செயல்களுக்கு அச்சமுற்றதனால் ஆதரவாக பேச மறுத்தபோதும், இலங்கை அரசு அதன் உள்ளடக்கத்தையும் அவ்வொப்பந்தம் எவ்வாறு இலங்கை நாட்டை கூறுபோடுகின்றது என்பதையும் உணர்ந்ததனால், ஜே.ஆர் ஜெயவர்த்தனவினால் கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிவேன் என அவரது கட்சியின் இரண்டாம் தலைமையாக இருந்த ஆர் பிறேமதாச சூழுரைத்து ஆட்சிபீடம் ஏறினார்.

ஆட்சிப்பீடமேறிய பிறேமதாஸ குறித்த ஒப்பந்தத்திலுள்ள விடயங்களை நிறைவேற்ற இந்திய அமைதி காக்கும் படையாக வந்திருந்த இந்திய இராணுவத்தை

Read more...

Friday, June 27, 2025

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள். தோழர் மணியம் தேனிக்காக எழுதிய அனுபவத்தொடர். பாகம் 1

துணுக்காய் வதை முகாமில் நான்காயிரம் மனித உயிர்கள் புலிகளால் வதைக்கப்பட்டு அவர்களில் பலர் கொலைசெய்யப்பட்டு உடல்கள் வவுனிக்குளக்கரையில் எரிக்கப்பட்டு அக்குளத்திலேயே கரைக்கப்பட்ட வரலாறு புதைக்கப்பட்டுள்ளது. அதே வதை முகாமில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகின்ற திரு தங்கத்துரை என்பவரது மகள் தனது தந்தையார் புதைக்கப்பட்ட இடம்தேடி துணுக்காய் சென்றபோது பாசிசத்தின் அடிவருடிகள் அவரது நீதிகோரும் உரிமையை மறுக்க முற்படுவதுடன் வரலாற்றையும் புதைக்கப்பட்ட மனிதர்களுடன் புதைக்கவே முற்படுகின்றனர்.

ஆனால் துணுக்காய் வதை முகாம் தொடர்பில் இன்று தயானி பேச முற்படும்போது அதனை தடுக்க முற்படும் தற்குறிகளுக்கு குறித்த வரலாறு இற்றைக்கு ஒன்றரை இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே எழுதப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டவேண்டியுள்ளது.

ஆகையால் இலங்கைநெட், தோழர் மணியம் தேனிக்காக தனது வதை முகாம் அனுபவங்கள்

Read more...

Friday, September 13, 2024

பழையபாதையா ? புதியபாதையா? யாழ்பாணத்தில் தமிழ் மக்களின் மனச்சாட்சியை பலமாக தட்டிய அனுர

மேடையில் அமர்ந்திருக்கும் தோழர் ராமலிங்கம் உள்ளிட்ட இந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் எமது கட்சியை கட்டியெழுப்புவதற்காகக் கடுமையாக உழைக்கும் சகோதர சகோதரிகள் அனைவரிடமும் அனுமதியைக் கோருகின்றேன்… இன்று இந்த யாழ் மாவட்டத்திற்கான தலைமைத்துவத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக மிகவும் வலுவானதொரு இளைஞர் அணி தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்துள்ளதுள்ளதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அதேபோல, எங்களுக்குச் செவிமடுக்கவும், எங்களுடன் உரையாடவும் இந்த இடத்தில் கூடியிருக்கிற உங்களனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அனுமதியையும் கோருகின்றேன்…

இந்தச் செப்டெம்பர் 21 ஆம் திகதி தேர்தலொன்று நடைபெறவுள்ளதென்பதை நாமனைவரும் அறிவோம்… பிரசார நடவடிக்கைகளுக்காக எஞ்சியிருப்பது

Read more...

Thursday, August 29, 2024

'யாழ்ப்பாணத்தை தீயிடுதல்' நந்தன வீரரத்ன

இலங்கை இனப்பிரச்சினை கொழுந்து விட்டெரிவதற்கு காரணமாகிப் போன யாழ் நூலக மற்றும் நகர எரிப்பு தொடர்பில் மூத்த ஊடகவியலாளரான நந்தன வீரரட்ண என்பவர் 'யாழ்ப்பாணத்தை தீயிடுதல்' என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

1981ம் ஆண்டு யாழ் நூலகம் மற்றும் நகரம் ஏரியூட்டப்பட்டமை, ஜே: ஆர் ஜெயவர்த்தவினால் எவ்வாறு வடிவமைக்கப்பட்டது ? திட்டத்தை நிறைவேற்ற அவர் தேர்ந்தெடுத்த நபர்கள் யார்? அந்நபர்களின் பங்களிப்பு, செயற்பாடுகள் எவ்வாறமைந்திருந்தது? அதன் விளைவுகள் எவ்வாறன தாக்கத்தை ஏற்படுத்தின என்பன

Read more...

Monday, March 25, 2024

சிறுபாண்மையினனுக்கு இந்நாட்டின் பிரதமராக , ஜனாதிபதியாக வரமுடியாது என்ற உணர்வு வருகின்றதென்றால் பிரச்சினை இருக்கிறதாம். கனடாவில் அனுர

நேற்று முன்தினம் 23.02.2024 தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கனடா வாழ் இலங்கையர்களுடன் சந்திப்பு ஒன்றை நாடாத்தியிருந்தார். கனடா வரலாற்றில் மிகப்பெரும் திரளான சிங்கள , தமிழ் , முஸ்லிம் மக்கள் ஒன்றாக கலந்து கொண்டிருந்த அச்சந்திப்பில் பேசிய அவர் இலங்கையில் சிறுபாண்மையினரின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டியதன் அவசியத்தை அனுபவ ரீதியான உதாரணங்களுடன் உணர்த்தினார். அவர் அங்கு பேசுகையில்,

திரு. சம்பந்தன் ஐயா அவர்கள் பாராளுமன்றத்தில் எனக்குப் பக்கத்தில் சிலகலமாக அமர்ந்திருந்த காலத்தில் எனது இருகரங்களையும் பற்றிப்பிடித்து இப்படி சொன்னார்: 'அனுர, நான் ஒரு ஸ்றீ லங்கன் என்று சத்தம் போட்டு உலகத்திற்குச்

Read more...

Saturday, March 9, 2024

இந்திய எதிர்ப்பு வாதத்தை தூசிதட்டும் புலித்தேசியம்.

ஒரே நொடியில் சந்திக்கு வந்த தேசியம் பேசுவோரின் இந்திய விரோத வீரம்.
புலிகளால் கட்டி எழுப்பப்பட்ட மக்களுக்கு விரோதமான கருத்தியல்கள் எண்ணிலடங்காதவை. இதில் இந்திய எதிர்ப்பு மனோநிலையை மக்கள் மனங்களில் விதைத்ததும் முக்கியமான ஒன்று. 1987 ஒப்பிரேசன் லிபரேசன் நடவடிக்கை இலங்கை இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்டது. புலிகள் தமது பலமிக்க கோட்டையாக இருந்த வடமராட்சியில் இருந்து, படிப்படியாக விரட்டியடிக்கப்பட்டு, இறுதியாக குறிகட்டுவான் கடலடி மட்டும் வந்து இந்தியாவுக்குப் படகேற காத்திருந்தார்கள். விட்டால் யாழ் குடாநாடு முழுவதும்

Read more...

Sunday, February 25, 2024

தீப்பொறி - புதியதோர் உலகம் - தமிழீழக்கட்சி விசாரம்

அமைப்பிற்கு உள்ளே வைக்கப்படவேண்டிய விமர்சனங்களை அமைப்பிற்கு உள்ளேயே வைக்கவேண்டும் . அவற்றிற்கு இடமில்லாதபோது அந்த அமைப்பிலிருந்து விலகி வெளியே வைத்தல் மிகவும் நிதானத்துடன் செய்யப்படவேண்டும்.

தனிமனித ஆளுமையும் அரசியற் தெளிவும் கொண்ட டொமினிக்- கேசவன் - தான் சார்ந்த புளொட் அமைப்பிலிருந்து வெளியேறி அந்த அமைப்பிலிருந்த முரண்பாடுகளை ,குழப்பங்களை ,நெருக்கடிகளை தன் பார்வையில் தீப்பொறி என்ற சிறிய அமைப்பொன்றை உருவாக்கி புதியதோர் உலகம் என்ற நூலைத் தன்

Read more...
Page 1 of 127812345678910111278Next
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com