Saturday, July 18, 2020

கொரோனா ஒழிப்பிலிருந்து வெளியேறும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்!


கொரோனா ஒழிப்பு செயற்திட்டத்திலிருந்து தாம் விலகுவதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி நேற்று மதியம்முதல் கொரோனா ஒழிப்பு செயற்பாட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

மக்கள் இன்னல்களை சந்திக்காமலிருப்பதற்காக, பொதுச்சுகாதார பரிசோதர்களிற்கு கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரம் வழங்கப்படாது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com