Wednesday, June 10, 2020

சமகி பலவேகய கட்சியின் காலி மாவட்ட வேட்பாளர் இராஜினாமா!

சமகி பலவேகய கட்சியின் காலி மாவட்ட வேட்பாளர் டென்னட் பனியன்தூவகே தனது வேட்புமனுவை இராஜினாமாச் செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமாவை அறிவித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கும் கடிதம் எழுதியுள்ளார். பின்னர் சமகி பலவேகய கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை விமர்சித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியுள்ளார்.

எதிர்காலத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தான் சேரப்போவதாக அவர் கூறினார். அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துதற்போதைய அரசாங்கத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com