Saturday, December 14, 2019

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை மூடிமறைக்க பொலிஸார் ஆடிய நாடகம் அம்பலத்திற்கு வந்துள்ளது!

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு முன்னர் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸ் நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக உயர் போலிஸ் அதிகாரிகள் அளித்த அறிக்கைகள் முற்றிலும் பொய்யானவை என்று ஜனாதிபதி விசாரணை ஆணையம் உறுதிகூறியுள்ளது.

இவ்வாறு சோடித்துச் சொல்வதற்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு மூத்த பொலிஸ் அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், கோட்டாஹேன பொலிஸார் இந்தச் செய்தியை குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற தினத்திற்குப் பின்னர் புதிதாக பொலிஸ் புத்தகத்தில் இணைத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஆணையத்தில் தெரிய வந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com