Saturday, December 14, 2019

ஊடகவியலாளர்கள் அதிகாரிகளுக்கு ஏதிராக செயற்பட்டால் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டிவரும் கருணா அம்மான்

மட்டக்களப்பில் சில அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநாகரிகமாக செயற்படுகின்றனர். அதே நேரத்தில் ஊடகவியலாளர்கள் அதிகாரிகளுக்கு எதிராக செயற்படுவார்களாக இருந்தால் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டிய நிலை ஏற்படும் என கருணா அம்மான் தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பு மாங்காட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்.

நல்லாட்சி என்று கூறிக்கொண்டு வந்த அரசாங்கத்தில் கடைசி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஊடகவியலாளர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அநாகரிகமான செயலை அதிகாரிகள் செய்துள்ளனர். என்னுடைய பல தவறுகளையும் ஊடகவியலாளர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர். அதனை நான் வரவேற்றுள்ளேன். ஊடகவியலாளர்கள் தவறுகளை சுட்டிக் காட்டும் போது அதனை நாம் திருத்திக் கொள்ளலாம். அதை விட ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் அனைவருக்கும் தேவை ஏனென்றால் பல அதிகாரிகளின் ஊழல்களை தட்டிக் கேட்பதற்கு ஊடகவியலாளர்கள் தேவை.

எனவே ஊடகவியலாளர்களை தண்டிப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும். இதைவிட ஊடகவியலாளர்கள் தன்னிச்சையாக செயற்பட்டு அதிகாரிகளுக்கு எதிராக செயற்பட்டார்கள் என்றால் பல அதிகாரிகள் உள்ளே செல்லவேண்டி வரும். ஏனென்றால் அதிகாரிகள் மீது அவ்வளவு பெரிய பிரச்சினைகள் உண்டு. எனவே ஊடகவியலாளர்களை தன்டிப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்பதை இந்த இடத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com