Saturday, December 21, 2019

ஐதேக-ததேகூ தேன்நிலவு கலைகின்றது. கூட்டமைப்பு வட-கிழக்குக்கு வெளியேயும் போட்டியிட தீர்மானம்.

கடந்தகாலங்களில் இடம்பெற்ற தேர்தல்களின்போது, ஐக்கிய தேசியக் கட்சியினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஒப்பந்த அடிப்படையில் சில தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுவதை தவிர்ந்து ஒருவருக்கு ஒருவர் வெற்றிக்கு உதவியிருந்தனர் என்பது யாவரும் அறிந்த விடயம்.

ஆந்த வரிசையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியின் ஊடாக சம்பந்தரின் ஆசனத்தை காப்பாற்றுவதற்காக திருகோணமலையில் போட்டியிடுவதை ஐக்கிய தேசியக் கட்சி தவிர்த்திருந்தது. அதற்கு கைமாறாக கொழும்பில் போட்டியிடுவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவிர்த்திருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்பு , கம்பஹா , கழுத்தறை , பதுறை , ரத்தினபுரி, நுவரேலியா , கண்டி உட்பட பல மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பாக தமிழரசுக் கட்சியின் உயர்பீடம் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளதுடன் , இறுதிமுடிவை சம்பந்தரே எடுப்பார் என தெரியவருகின்றது. கடந்தகாலங்கள்போன்று திருமலையில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடாது விடின் சம்பந்தனின் முடிவுகள் மாற்றமடையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் பொழும்பு மற்றும் ஏனைய மாவட்டங்களில் போட்டியிட்டால், சுமார் நான்குக்கும் அதிகமான மேலதிக ஆசனங்களை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பங்கள் இருக்கின்றபோதும், சுயநலங்களுக்காக இம்முறையும் காட்டிக்கொடுப்பு இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com