Monday, November 11, 2019

எங்களுக்கு நன்மையாக இருப்பவருக்கே எங்கள் வாக்குகள்! - சம்பந்தன்

தான் ஆதரிக்கும் வேட்பாளர் தனக்கு பயன்தருபவராக இருக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன், கூறுகிறார்.

நேற்று மங்குளத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இந்த இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றும்போது,

"இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாயின் ஒருவர் 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். அதேபோன்று நாங்கள் தெரிவுசெய்யும் அந்த நபர் எங்களுக்கு ஒரு நன்மையுடையவராக இருக்க வேண்டும். விடுதலைப் புலிகள் அவர்களுக்கான உரிமைகளைக் கேட்டார்கள். தமிழ் மக்களும் தங்களுடைய உரிமைகளையே கோருகிறார்கள்.

எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் பிச்சை எடுக்க வேண்டியதில்லை. நாம் நமது உரிமைகளை மிகவும் கண்ணியமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால்தான் நாங்கள் எங்கள் உரிமைகளைக் கோருகிறோம்.

அங்கு கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உரையாற்றும்போது,

'யுத்தம் நடைபெற்றபோது என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, நாங்கள் கோதபய ராஜபக்ஷவைத் தோற்கடிக்க வேண்டுமாயின் நாங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அன்னச் சின்னத்தில் போட்டியிடும் நபருக்கு எங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.

இல்லையென்றால், கோதபய ராஜபக்ஷவை வெல்வதை யாராலும் தடுக்க முடியாது. அன்னச் சின்னத்தில் போட்டியிடுபவர் எங்களுக்கு வாக்குறுதிகைளத்தானும் அளிக்கின்றார். ஆனால் மற்றவர் எங்களுக்கு ஒரு வாக்குறுதியைக் கொடுப்பதில்லை. அதுபற்றி அவருக்குக் கவலையுமில்லை” எனக் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com