Monday, September 30, 2019

பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் எச்சரிக்கை

சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வை வழங்காவிட்டால் எதிர்வரும் இரண்டாம் திகதி முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,அரச ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழு அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு விரைவாக தீர்வொன்றை காணவேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் தொழிற்சங்க போராட்டத்துக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும்.

கடந்த வாரம் அமைக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு உறுப்பினர்களில் அமைச்சர்களான மங்கள சமரவீர, ரன்ஜித் மத்தும பண்டார, வஜிர அபேவர்த்தன, ராஜித்த சேனாரத்ன மற்றும் ராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த சம்பள முரண்பாட்டுக்கு கடந்த இரண்டு வருடங்களாக தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முடியாமல் போயுள்ளது.

அதனால் எமது சம்பள பிரச்சினைக்கு உடனடியாக தீர்வொன்றை பெற்றுக்ககொடுக்க தவறினால் எதிர்வரும் 2ஆம் திகதி முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்திருக்கின்றோம்.நோயாளர்களின் நலனை கருத்தில்கொண்டே இதுவரை காலமும் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடாமல் இருந்து வருகின்றோம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com