Sunday, September 29, 2019

புதுக்குடியிருப்பில் புலிகளின் கிளைமோர் குண்டுகள் மீட்பு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் சுதந்திரபுரம் பகுதியில் 8 கிளைமோர் குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று (29) சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் நிலத்தினை உழவு செய்யும் போது கடந்த கால போரின் போது புதைக்கப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்..

சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு காணி உரிமையாளரினால் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்குடியிருப்பு பொலிசார், குறித்த இடத்தில் காணப்பட் 8 கிளைமோர் குண்டுகளையும் சுமார் 60 டெட்டனேட்டர்களையும் மீட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அதனை செயலிழக்கச் செய்து அங்கிருந்து அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளார்கள்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com