Friday, August 16, 2019

சஜித்தை ஜனாதிபதியாக்க தற்கொலை படையாக மாறப்போகின்றார் நீதி அமைச்சர் தலதா அத்துக்கொறலே!

உயிர்த் தியாகம் செய்தாவது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஒத்தழைப்புடன் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவை எவ்வாறாவது ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் எனத் தெரிவித்துள்ள நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரள, அது குறித்து எவரும் கவலையடைய தேவையில்லை என்றும் கூறினார்.

அபிவிருத்தி செய்யப்பட்ட வீதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு அமைச்சர் அதுகோரள தலைமையில் இன்று பலாங்கொடையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

வெளியாள் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க இந்த முறை ஐக்கிய தேசிய கட்சியில் வாய்ப்பு இல்லை. 2010 ஆம் 2015 ஆம் ஆண்டுகளில் கட்சியின் முட்டாள் தனமான தீர்மானங்களினால் , தோல்வியை நாங்களே ஏற்படுத்திக் கொண்டோம். ஆனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் உயிர்த் தியாகம் செய்தாவது எங்களின் வேட்பாளரை வெற்றி பெற செய்வோம் என்றும் அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com