Friday, April 26, 2019

அஷ்ரப் வைத்தியசாலையில் 5 உடலங்கள்..

சற்றுமுன்னர் சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் உயிரழப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இதுவரை அஷ்ரப் வைத்திசாலைக்கு 5 உடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இவர்களில் இரு பெண்களும் மூன்று ஆண்களும் அடங்குகின்றனர்.

இதேநேரம் பாதுகாப்பு தரப்பிலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை ஊர்ஜிதம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்..

சாய்ந்தமருது பிரதேசத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் பாவித்து வருகின்றார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் வீடொன்று சுற்றி வளைக்கப்பட்டபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com