Saturday, March 2, 2019

வடக்கு, கிழக்கின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பம் - வே. சிவஞானசோதி

வடக்கு கிழக்கில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ், சிறந்த கல்வித் தரத்தினை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள முதல்கட்ட பணிகளில், மூன்று பாடசாலைகளுக்கான கட்டடங்கள், உபகரணங்கள், விஞ்ஞான ஆய்வுகூடங்கள் என்பன கடந்த வாரம் கையளிக்கப்பட்டுள்ளன. தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சித் திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி இதனை தெரிவித்தார்.

இந்த அமைச்சு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. மட்டக்களப்பில் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வின் போது, மட்டக்களப்பு வாழைச்சேனை இந்துக் கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூடம் ஒன்று கையளிக்கப்பட்டது.

அதேவேளை கொம்மாதுறை சித்தி விநாயகர் பாடசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத் தொகுதி மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இதேபோன்று நெடியமுனை பாடசாலைக்கும் புதிய கட்டடத் தொகுதி ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதியின் தலைமையில் இடம்பெற்றன.

இந்தத் திட்டங்களுக்காக 26 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக .
வே.சிவஞானசோதி குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com