Friday, March 1, 2019

அரசாங்கம் பாரிய அரசியல் குற்றம் புரிந்துள்ளது. சம்பிக்க ரணவக்க

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியதன் ஊடாக அரசாங்கம் பாரிய அரசியல் குற்றம் புரிந்துள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில், பிரித்தானியா மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகள் இணைந்து மேற்குறித்த தீர்மானத்தை நீடிப்பதற்கான பிரேரணை ஒன்றை கொண்டுவரவுள்ளதாக ஊடகங்கள் மூலமாக அறியக்கூடியதாகவுள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவுற்ற 10 வருடங்களில் நாட்டில் தமிழ் சிங்கள மக்களுக்கிடையில் எவ்விதமானதோர் இனரீதியான வன்செயல்களும் பதிவாகியிராத நிலையில் இவ்வாறான பிரேரணைகளும் நீடிப்புக்களும் அவசியமற்றதாகும் என கூறினார்.

யுத்த காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள புலிகள் மற்றும் இராணுவத்தினர் ஆகிய இருதரப்பினருக்கும் பொதுமன்னிப்பளிப்பதே சிறந்தாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com