Tuesday, February 26, 2019

கடுவெல வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு

கடுவெல பாலத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பணிகள் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 4 நாட்களுக்கு கடுவெல – பியகம வீதியுடனான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸார் அறிவித்துள்ளார்கள்.

இன்று முதல் மார்ச் மாதம் 2ஆம் திகதி வரை, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை குறித்த வீதி உடனான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. எனவே, இந்த வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள், மாற்றுவீதியினூடாக அதிவேக வீதியைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளார்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com