Thursday, February 14, 2019

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி விடுதலை

பண்டாரவளையில் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் சரண் அடைந்திருந்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது சட்டத்தரணியூடாக பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் ஆஜராகி இருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் அவரது உத்தியோகத்தர் ஆகிய இருவரும், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com