Monday, February 18, 2019

புலிகளின் ஆயுத கிடங்கில் இருந்து, இதுவரை ஆயுதங்கள் எவையும் மீட்கப்படவில்லை.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனை கடற்கரையை அண்மித்த பகுதியில், இன்று ஆயுதங்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அந்த ஆயுதக் கிடங்கில், ஆயுதங்கள் எவையும் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய ஆயுத கிடங்கு என்று அடையாளம் காணப்பட்ட குறித்த பகுதி, பளை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் ஆயுதங்கள் எவையும் அந்த இடத்தில் மீட்கப்படவில்லை. அத்துடன் குறித்த கிடங்கிலிருந்து தண்ணீர் வெளிவந்த நிலையில், அகழ்வுப் பணிகள் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிலை கொண்டிருந்ததாக கூறப்படும் அந்த பகுதியில், பாரிய ஆயுதக்கிடங்கு உள்ளதாக, கடந்த தினம் பளை பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது.

இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, இந்த ஆயுதக்கிடங்கு அடையாளம் காணப்பட்டது.

இந்த பகுதியில் தற்போது பளை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர், அகழ்வு பணிகளில் ஈடுபட்ட நிலையில், தற்போது அந்த பணிகளை கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com