Tuesday, February 5, 2019

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின், சமையல் அறைக்கு, சீல் வைக்கப்பட்டது.

ஹட்டன் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் சமையல் அறைக்கு, சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 450 ஆசிரிய மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கான சமைத்த உணவுகள், குறித்த சமையல் அறையிலேயே தயார் செய்து வழங்கப்படுகின்றன. எனினும் குறித்த சமையல் அறையில் உணவுகள் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதில்லை என, பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இதனை அடுத்து இன்று ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட, உணவு சுகாதார பரிசோதகர்கள், அங்குள்ள சமையல் அறைக்கு சீல் வைத்துள்ளனர்.

அத்துடன் குறித்த சமையல் அறையை சுத்தம் செய்து, சுகாதாரமாக பேணுவதற்காக, மூன்று மாதம் கால அவகாசம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெற்று வந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com