Sunday, February 3, 2019

போதைப்பொருள் வியாபாரத்திற்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் தொடர்புண்டு. - எதிர்க் கட்சித் தலைவர்

போதைப் பொருள் வியாபாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தீர்மானம் மாத்திரம் போதுமானதல்லவென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் தலை தூக்கி இருக்கும் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த முடியாமைக்கு பொலிஸ் அதிகாரிகளும் காரணம். பொலிஸ் அதிகாரிகள் சிலர் போதைப் பொருள் வியாபாரத்தின் பின்னால் செயற்படுகின்றனர். குறித்த அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புண்டு. இந்த நிலையில் போதை பொருளை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரிகளும், இராணுவமும் இணைந்து போதைப் பொருள் வியாபாரத்தைக் கட்டுப்படுத்த தொடர் சுற்றிவளைப்புக்களை மேற்க்கொள்கிறார்கள். ஆனால் போதைப்பொருளை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் சட்டவிரோதமாக செயற்படும் பொலிஸாரை இனங்கண்டுகொள்ள வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com