Tuesday, February 5, 2019

இந்த அரசாங்கம், சர்வாதிகார போக்கில் செயல்பட்டு வருகின்றது - ஜீ.எல்.பீரிஸ்.

தற்போதைய அரசாங்கம், சர்வாதிகார போக்கில் செயல்பட்டு வருவதாக, பொதுஜன பெரமுனவின் தவிசாளர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரச நிர்வாகத்தின் மீது அரசாங்கம் சர்வாதிகார போக்கிலான செயற்பாடுகளை முன்னெடுப்பது, கண்டிக்கத்தக்கது என பொதுஜன பெரமுனவின் தவிசாளர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் செயல்பாடுகள், மக்கள் மத்தியில் பெரிதும் விமர்சிக்கப்படுகின்றன. அத்துடன் அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையை அனைத்து செயல்பாடுகளிலும் காண முடியும் என, பொதுஜன பெரமுனவின் தவிசாளர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com