Sunday, February 3, 2019

சுதந்திர தினத்தில், 545 சிறைக்கைதிகள் விடுதலை - ஏமாற்றம் கண்ட அரசியல் கைதிகள்.

நாளை கொண்டாடப்படவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு, 545 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விடுதலை செய்யப்படும் சிறைக் கைதிகளில், எந்த தமிழ் அரசியல் கைதிகளும் இல்லை என, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு 4 பெண்கள் உட்பட 545 சிறைக் கைதிகள், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாளைய தினம் விடுவிக்கப்படவுள்ளனர்.

அந்த வகையில் விடுவிக்கப்படவுள்ள சிறைக் கைதிகளின் பட்டியலில் தமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம், நாளைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வை முன்னிட்டு, இன்றும் பல ஒத்திகை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதன் காரணமாக, கொழும்பு காலி முகத்திடல், லோட்டஸ் சுற்று வட்டம் ஆகிய பகுதிகளில், பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com