Wednesday, January 30, 2019

நீதித்துறையின் செயற்பாட்டிற்கு பாராட்டு பெற்ற இலங்கை

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரைமப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரளவுக்கும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவக்குடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இலங்கைக்கும், ஜேர்மனுக்கும் இடையிலான சட்டத்துறைசார்ந்த ஒத்துழைப்புக்களை மேலும் விஸ்தரிக்கும் வேலைத்திட்டம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இலங்கையின் நீதித்துறை உட்பட ஏனைய துறைகளுக்காக ஜேர்மன் வழங்கும் ஒத்துழைப்புக்களையும் அமைச்சர் இதன்போது நன்றியுடன் நினைவு கூர்ந்தார். நீதித்துறையின் சுதந்திரத்தையும், சட்டவாட்சியையும் உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையை ஜேர்மன் தூதுவர் இதன் போது பாராட்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com