Tuesday, January 15, 2019

அடுத்த மாதம் முதல் இ-ஹெல்த்கார்ட்கள் அறிமுகம்

இலங்கையில் உள்ள இரண்டு கோடி மக்களுக்கு இ-ஹெல்த்கார்ட்களை வழங்கும் நடவடிக்கை அடுத்தமாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இ-ஹெல்த்கார்ட்களை வழங்கும் வேலைத்திட்டங்கள் களுத்துறை வைத்தியசாலை மற்றும் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலைகளில் ஆரம்பிக்கப்படவுள்ளன. சுமார் ஏழுமாதங்களில் சகல மக்களுக்கும் இ-ஹெல்த்கார்ட்களை வழங்குவது இலக்காகும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் 71ஆ வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும்
ஏப்ரல் மாதம் இடம்பெற்றவுள்ளது. இந்த நிகழ்வின்போது, இ-ஹெல்த்கார்ட்கள் இலங்கையர்களுக்கு அறிமுகம் செய்யும் வேலைத்திட்டம் நடைபெறவுள்ளது. இ-ஹெல்த்கார்ட்டில் நோயாளர்களின் முழுமையான மருத்துவ அறிக்கை உள்ளடக்கப்பட்டிருக்கும். அதன்படி, நோயாளர்களுக்கு நாட்டின் எந்தப் பிரதேச வைத்தியர்களிடமும் விரைவாக சிகிச்சையை பெற்றுக்கொள்ள ஏதுவாக குறித்த இ-ஹெல்த்கார்ட் அமையும்.

இந்த நிலையில், நவீன தொழில் நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் ஊடாக பொதுமக்களுக்கு விரைவாக சேவையை வழங்குவதே தமது நோக்கம் என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com