Thursday, January 24, 2019

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பறவைகளுடன் ஒருவர் கைது - சுங்க திணைக்களம்.

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 168 பறவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பேங்கொக்கில் இருந்து இலங்கை வந்த பயணியிடமிருந்தே இந்த பறவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த 168 பறவைகளும், 42 கூடுகளில் குறித்த பயணி, இவ்வாறு பறவைகளை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார். சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மாரவில பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயணி பறவைகளை இலங்கைக்கு கொண்டுவர எந்த விதமான அனுமதியையும் பெற்றிருக்கவில்லை என தெரிவித்த சுங்க திணைக்களம், கைப்பற்றப்பட்டுள்ள பறவைகளின் பெறுமதி 8 லட்சம் ரூபாய்கள் என மதிப்பிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com