Saturday, January 26, 2019

அங்குணுகொலபெலஸ்ஸ விவகாரம் - இரண்டாவது அறிக்கையில் தாமதம் - காரணம் இதுதான்

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டாவது விசாரணைக்குழுவின் அறிக்கை, இன்னும் நிறைவு செய்யப்படவில்லை என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டாவது குழுவின் அறிக்கை நேற்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவிடம் ஒப்படைக்கப்பட இருந்த நிலையில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட இரண்டாவது குழு தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுப்பதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியது.விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் வாரத்தில் அறிக்கையை தயாரித்து சமர்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அந்தக்குழு அறிவித்துள்ளது என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com