Wednesday, January 30, 2019

மட்டக்களப்பில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்!

மட்டக்களப்பில் இன்றைய தினம், விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தொடர்பில் ஆராயும் கூட்டமே இன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு, எகெட் ஹரித்தாஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசார்பற்ற ஒன்றியங்களின் இணையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வமத ஒன்றியத்தின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், காணாமல் போனோருக்கான சங்கம்ம் பொதுமக்கள் உட்பட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.

இலங்கையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக பயங்கரவாத எதிப்புச்சட்டம் கொண்டுவரப்படவுள்ள நிலையில், அது தொடர்பான நிலைமைகளை அறிந்து கொள்ளவும் அதற்கு எதிரான அழுத்தங்களை வழங்கும் வகையிலும் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com