Thursday, January 17, 2019

21 ம் திகதி மேலுமொரு பெருந்தொகை காணி விடுவிக்கப்படுகின்றது.

வடக்கில் பாதுகாப்புப்படையினர் வசம் உள்ள மேலும் பல காணிகளை விடுவிக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 1,201 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றினூடாக இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் காணிகள் விடுவிப்பு நடவடிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் 972 ஏக்கர் காணியும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 120 ஏக்கர் காணியும் யாழ்ப்பாணத்தில் 46 ஏக்கர் காணியும் வன்னியில் 63 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணிககளை, இதுவரை காலமும் இலங்கை இராணுவத்தினர் தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைக்கு ஈடுபடுத்தியிருந்துள்ளனர்.

மேலும், இந்தக் காணி விடுப்பின் தொடர்ச்சியாக இராணுவப் பண்ணைகள் காணப்பட்ட நாச்சிக்குடா, வெல்லன்குளம், உடையார்கட்டுகுளம் ஆகிய பகுதிகளும் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com