Monday, December 17, 2018

அன்ரன் பாலசிங்கம்! அறியாத வரலாறு. By நட்சத்திரன் செவ்விந்தியன்

இப்போது சில நாட்கள் "ரணில் ஒரு நரியன்" என்று அன்ரன் பாலசிங்கம் உரையாற்றுகிற ஒரு வீடியோ முகநூலில் உலாவருகிறது. இந்த உரையை வழங்குகிறபோது பாலசிங்கம் வன்னியில் செத்துப்பிழைத்து தாய்லாந்து வழியாக லண்டன்சீமைக்கு நடைப்பிணமாக வந்தவர். அவரது மதியுரைஞர் வாழ்நாள் முழுக்க சாராய புகையிலை போதையில் இருந்தவர் சலரோக/சக்கரை நோய் முத்தி தன் சிறுநீரகங்களை இழந்து இரவல் சிறுநீரகங்களில் பிழைத்த பாலசிங்கத்தின் உடல் மொழியை கவனியுங்கள். எவ்வளவு கஸ்ரப்பட்டு அந்த உரையை வழங்குகிறார். இப்போது பாலசிங்கம் உயிர்வாழ்வதற்கு வழங்கப்பட்ட குளிசைகளின் போதையில் இவ்வுரையை வழங்குகிறார். அவரது நாக்கு மட்டுமல்ல உடலும் தள்ளாடுகிறது. கடல்வழியாக தாய்லாந்து வழி லண்டன்போன பிற்காலத்தில் பாலசிங்கம் வழங்கிய பல உரைகள் சபை நாகரீகமற்ற பேச்சுக்கள். ஒரு ராசதந்திரியின் பண்புகளற்றவை. கருணா தாய்லாந்தில் சரக்கடித்ததால்தான் பின்னர் பிரிந்தார்/ ஆனந்த சங்கரியின் உடும்பு றச்சியும் இரண்டு கிழவிகளும்/ சிங்களவனுக்கு மேல்வீடு இல்லை இந்த வகையான விசிலடிச்சான் குஞ்சுகளுக்கான குடிகாரனின் கள்ளுக்கடை #ஓத்தா பேச்சுக்கள்.

அன்ரன் பாலசிங்கத்தை மதிப்பிட அவரின் சிறுவயது வரலாற்றிலிருந்து தொடங்குவோம். ஒரு கரவெட்டி கத்தோலிக்க வெள்ளாடிச்சிக்கும் மட்டக்களப்பு சைவக்குருக்களின் மகனுக்கும் பிறந்த பாலசிங்கம் கத்தோலிக்கராக தாயால் கரவெட்டியில் வளர்க்கப்பட்டவர். தந்தை சிறுவயதிலேயே பாலசிங்கத்தின் தாயைவிட்டு பிரிந்துவிட்டார். கரவெட்டி அம்பம் சிறு ஆஸ்பத்திரியில் Mid wife ஆக தொழில் செய்து கஸ்ரப்பட்டுத்தான் தாயார் பாலசிங்கத்தையும் உடன்பிறப்புக்களையும் வளர்த்தார். நெல்லியடி St Anthony's church அக்காலத்தில் வெள்ளாள கத்தோலிக்கர் ஆதிக்கம் மிக்கது. தாயார் வெள்ளாடிச்சி என்றாலும் ஒரு மட்டக்களப்பானை கட்டியவர் என்பதால் பாலசிங்கம் குடும்பம் வெள்ளாள கத்தோலிக்க குடும்பங்களால் பாரபட்சமாக நடத்தப்பட்டது. பாலசிங்கம் குடும்பம் தேவாலயத்துக்கு வருவது மட்டுந்தான். இவர்கள் சக வெள்ளாள குடும்ப நிகழ்வுகளுக்கு அழைக்கப்படுவதில்லை.(முக்கியமான இத்தகவலை எனக்கு தந்தது இப்போது புலம்பெயர்ந்து வாழும் அதே கத்தோலிக்க சமூகத்தை சேர்ந்த பத்திரிகையாளர்) இந்த பாரபட்சம்தான் அன்ரன் பாலசிங்கத்தின் பொதுவாழ்வில் பின்னாட்களில் பெருந்தாக்கம் செலுத்தியது.

தேவாலயத்துக்கருகிலுள்ள Sacred Heart பாடசாலையில் அக்கால ஆங்கிலமுல matriculation சாதாரண தரம்வரைதான் பாலசிங்கம் படித்தார். வறுமையும் சமுகப்பாரபட்சமும் குடும்பத்தை கடுமையாகப் பாதித்தது. இளவயதிலேயே பாலசிங்கம் மதுவுக்கும் சிகரெட்டுக்கும் அடிமையாகிவிட்டார். சிறுவயதிலேயே மேற்படிப்பு படிக்காமல் பத்திரிகையாளராக வேலைசெய்ய கொழும்புபோனார். சுய படிப்பு வாசிப்பு மூலமே புத்திஜீவியானவர் பாலசிங்கம். பாலசிங்கத்தின் கொழும்பு புத்சிஜீவி நண்பர்களில் ஒருவர் பின்னாளில் பேராதனை பல்கலைக்கழக தத்துவவியல் விரிவுரையாளரான சா.வே. காசிநாதன். மற்றவர் செய்தி என்ற வார இதழின் ஆசிரியர். பாலசிங்கம் பிரித்தானிய தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளராக ஆனபின்னரே அவர் வாழ்வில் திருப்புமுனையானது. இடையில் அவர் முதல் காதல் மனைவி மரணம். இதோடு பாலசிங்கத்துக்கு லண்டன் போகவாய்ப்பு வருகிறது. ஆனால் இதற்குமுதலே காசிநாதன் கலாநிதிப்படிப்புக்காக லண்டன் போய்விட்டார். தனக்கு A/L படிப்பு பல்கலைக்கழக படிப்பு என்பன உரிய காலத்தில் இலங்கையில் வறுமைகாரணமாக மறுக்கப்பட்டதும் கரவெட்டில் இருந்த பாரபட்சமும் அவரை ஒரு நிரந்தரமான காழ்ப்புமிக்க மனிதனாக்கிவிட்டது. பின்நாட்களில் லண்டனில் பாலசிங்கம் கலாநிதிப்படிப்புக்கு பதிவுசெய்த வாய்ப்பு வந்தபோதும் அவரது காழ்ப்பு விலகவில்லை.

யாழ் குடாநாட்டை ஒரு மாநிலமாக எடுத்தால் இவர் வளர்ந்த கரவெட்டி ஒரு Province ஆகிறது. யாழ்ப்பாணம் Cosmopolis. பாலசிங்கத்தின் காழ்ப்பிலிருந்து அவரது Personal Agenda வருகிறது. ஈழ கிறிஸ்தவர்களில் கத்தோலிக்கர்கள் தான் பெரும்பான்மை என்றாலும் டச்சுக்காலத்திலிருந்து Cosmopolitan களான அங்கிலிக்கன் மற்றும் ரோமன் கத்தோலிக்கரல்லாதவர்களே புலமைசார் செல்வம்சார் மேட்டுக்குடிகளாக இருக்கிறார்கள். அமெரிக்கன் மிசன் ஆரம்பித்த அப்போது பல்கலைக்கழகத்துக்கு சமனாக இருந்த வட்டுக்கோட்டை கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி இவற்றை அடியொற்றி வந்த சீ.வை தாமோதரம்பிள்ளையிலிருந்து வந்த யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்(ஹண்டி பேரின்பநாயகம்), ராஜினி திராணகம, நீலன் திருச்செல்வம்( இந்து ஆனாலும்) லக்ஸ்மன் கதிர்காமர், ராஜன் ஹுல் வரையான நவீன புலமைத்துவ பாரம்பரியத்தில் புலிகளுக்கிருந்த வெறுப்பு பிரபாகரனால் வந்ததல்ல. பாலசிங்கத்தின் personal Agenda வின் ஆன விளைவு. பாலசிங்கம் புலிகளின் சிந்தனையில் 1983 ஜூலையின் பின் தாக்கம் செலுத்தமுன் புலிகள் அமிர்தலிங்கம் சுட்டிக்காட்டிய துரையப்பா தியாகராஜா முதலியவர்களுத்தான் கொன்றார்கள். பாலசிங்கத்தின் பின் தான் புலிகள் St.John's College அதிபர் ஆனந்தராஜ், சாம் தம்பிமுத்து, ராஜினி திராணகம, நீலன் திருச்செல்வம், கதிர்காமர் போன்றவர்களைக்கொல்கிறார்கள்.

புரியவில்லையல்லவா! தெளிவாக விளக்குகிறேன். பாலசிங்கம் அசலான ஒரு புத்திஜீவி. தீலிரமான வாசகர்/படிப்பாளி. லெனினையும் ஸ்ராலினையும் மாவோவையும் தெளிவாகப்புரிந்து கடந்து இடதுசாரியத்தை புரிந்தவர் பாலசிங்கம் என்பதை அவரது புலி அரசியல் சாராத கட்டுரைகளின் தொகுப்புமூலம் அறியலாம். அவரது எழுதி சமர்ப்பிக்கப்படாத கலாநிதி பட்ட தலைப்பையும் ஆராய்ந்து பாருங்கள். சி.சிவசேகரம் போன்ற கட்டுப்பெட்டி மார்க்சியர் அல்லர் பாலசிங்கம். இப்படியானவர் ஏன் அக்காலத்திலிருந்த இடதுசாரி இயக்கங்களான EROS, EPRLF என்பவற்றிலும் தலமை தீவிர இடதுசாரித்தனமாக இல்லாவிட்டாலும் பெரும்பாலான தொண்டர்கள் இடதுசாரிகளாக இருந்த PLOTE, TELO என்பவற்றில் சேராமல் அப்பட்டமான வலதுசாரியான புலிகளில் போய்ச்சேர்ந்தார். பின் புலிகள் வலதுசாரிகளைவிடமோசமாகி பாசிஸ்டுகள் ஆனபின்னும் அதனை நியாயப்படுத்தினார்? வலதுசாரியான பிரபாகரனை சந்திக்கமுதல் EROS ஸ்தாபகர் ரட்ணசபாபதி, EPRLF பத்மநாபா ஆகியோரை லண்டனில் சந்தித்திருந்தபோதும் அசல் இடதுசாரி புத்திஜீவியான பாலசிங்கம் புலிகளில் இணைந்தார். காழ்ப்புதான் வேறொன்றுமில்லை.(#தொடரும்)

Tamil Tigress: The fake memoirs எனும் முகப் புத்தகத்திலிருந்து



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com