Thursday, December 27, 2018

மாவனெல்ல புத்தர் சிலைகள் உடைப்பு தொடர்பில் தாய்லாந்திலிருந்து கபீர் ஹசிமை தொடர்பு கொண்ட ஜனாதிபதி.

புத்த சிலைகள் சில மாவனெல்ல பிரதேசத்தில் உடைக்கப்பட்டமையால் அப்பிரதேசத்தில் எற்ப்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைபற்றி விடுமுறைக்காக வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் கபீர் ஹசீமை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வினாவியுள்ளார்.

அத்தோடு அப்பிரதேசத்தில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்குமாறு பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு ஜனாதிபதி தெரிவித்ததாகவும் இச்சம்பவத்தின் போது அமைச்சர் கபீர் ஹசீம் அவர்கள் முன் நின்று செயற்பட்டமை தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் தனது பாராட்டை தெரிவித்ததாகவும் அமைச்சரின் பணியாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மாவனெல்ல சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் மாவனெல்ல பிரதேசத்தில் சந்தியில் உள்ள பௌத்த சிலைக்கு சேதம் ஏற்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில் பிரதேச மக்கள் அவர்களை மடக்கி பிடித்துள்ளனர்.

அதில் ஒருவர் அவ்விடத்தை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த போதிலும் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எம்.அஷ்பர் என்ற சந்தேக நபரை தாக்கிய பிரதேச மக்கள் பின்னர் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக குறித்த பிரதேசத்தில் இவ்வாறு புத்தர் சிலைகள் உடைக்கப்படும் சம்பவங்களுக்கும் குறித்த இளைஞர்களுக்கும் இடையில் தொடர்பிருக்கும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் பதற்ற நிலைமையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com