Friday, November 2, 2018

வியாழேந்திரன் பிரதி அமைச்சராக பதவியேற்றார். எஸ்.பி நாவின்னவும் பல்டி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திந்திரன் சற்று முன்னர் பிரதியமைச்சராக பதவியேற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி யின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

புளொட் அமைப்பின் பிரதிநிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வியாழேந்திரன் நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் வெளிநாடு ஒன்றில் இருந்திருந்தபோதும், இன்று காலை நாட்டிற்குள் வந்தவுடன் நேரடியாக மஹிந்த தரப்பினரை சந்தித்து, தற்போது கிழக்கின் அபிவிருத்திக்கான பிரதி அமைச்சராக பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளார்.

இதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் பா.உ எஸ்பி நாவின்ன உள்நாட்டலுவல்கள் , கலாச்சார மற்றும் பிரதேச அமைச்சராக பதிவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com