Saturday, November 10, 2018

பல்கலைக்கழக மாணவர்கள் மூவர், நீரில் மூழ்கி உயிரிழப்பு

பெலிகுல்ஓயா, பலாங்கொட, பகன்குடாவல பிரதேசத்தில் குளிக்கச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இன்று பெலிகுல்ஓயாவில் குளிப்பதற்கு சென்றுள்ளதுடன், அவர்களில் மூவர் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதனையடுத்து பிரதேசவாசிகளால் மீட்கப்பட்ட மூன்று பேரும் பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களே உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கற்கும் மூன்றாம் வருட மாணவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி பயிலும் இணுவில் பாலாவொடையை சேர்ந்த செல்வரட்ணம் திசான் (வயது 25), வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சரவணபவன் கோபிசன் (வயது 23), நல்லூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் சாரங்கன் (வயது 25) ஆகிய மூன்று மாணவர்களுமே உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பில் பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com