Sunday, April 9, 2017

புலிகளின் இனவழிப்பும் இலங்கை அரசின் கையாலாகத்தன்மையும். பீமன்.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 34 வது அமர்வுகள் நிறைவுற்றவுடன் புலிகளின் இனவழிப்பு கோஷம் மீண்டுமொருமுறை அடங்கியிருக்கின்றது. மேலும் இக்கோஷம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வழமைபோல் கேட்கக்கூடியதாக இருக்கும்.

கடந்த பங்குனி மாதம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் ஆரம்பமானபோது இலங்கையிலே இனவழிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக உலகமக்களுக்கு சொல்லும் பொருட்டு புலிப்பினாமிகள் ஓர் புகைப்படக்கண்காட்சியை நடாத்தினார்கள். ஐநா முன்றலிலுள்ள இடமொன்றுக்கு பெரும்தொகைப் பணத்தை செலுத்தி அவ்விடத்தில் கூடாரமொன்றை அமைத்து இக்கண்காட்சி இடம்பெற்றது. கூடாரத்தின் இருமருங்கிலும் சில நிறுத்திகளில் பதின்ம வயது யுவதிகள் சிலரின் புகைப்படங்கள் „இலங்கையில் தமிழினவழிப்பு – Genocid of Tamil in Sri Lanka“ என்ற வாக்கியத்தின் கீழ் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அங்கே சுமார் 40 யுவதிகளின் படங்கள் காணப்பட்டன.

அப்புகைப்படங்களை பார்க்கச் சென்றவர்களுக்கு வாய்மூல விளக்கமுமளிக்கப்பட்டது. படத்திலுள்ள யுவதிகள் தொடர்பில் வினவப்பட்டபோது, இவர்கள் செஞ்சோலை என்ற அநாதைகள் முகாமைச் சேர்ந்தவர்கள் என்றும் இலங்கை அரசாங்கத்தின் குண்டுவீச்சில் இறந்த அநாதைக்குழந்தைகள் என்றும் சொல்லப்பட்டது.

புலிகளின் இராணுவப்பயிற்சி முகாம் ஒன்றின் மீதான வான்தாக்குதலை செஞ்சோலை என்ற அநாதைகள் முகாம் என்றும் அங்கு கொல்லப்பட்டவர்கள் அம்முகாமிலிருந்த அநாதைகள் என்றும் எவ்வித இங்கிதமுமின்றி தொடர்ந்தும் பிரச்சாரம் செய்து வருகின்றமை புலிகளின் இயலாமையை பறைசாற்றுகின்றது. இப்பிரச்சாரமானது புலம்பெயர் தேசத்தில் வளர்ந்துவரும் இளைய தமிழ் தலைமுறையினர் மீது மிகுந்த பாதிப்பை செலுத்தியது. தமது வயது அநாதைகள் இலங்கையிலே இவ்வாறு கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்ற செய்தி அவர்களது மனங்களில் பசுமரத்தாணிபோல் பதிந்தது. அவர்கள் இலங்கை அரசுக்கெதிரான வேலைகளில் இறங்கினர். ஆனால் இலங்கை அரசோ புலிகளின் இப்பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்து உண்மையை உணர்த்துவதில் தனது இயலாமையை இன்றும் நிருபித்துவருகின்றது.

இங்குள்ள பதின்ம வயது யுவதிகள் யார்? இவர்கள் புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயம், விசுவமடு மாகாவித்தியாலயம், உடையார்கட்டு மகாவித்தியாலயம், முல்லைத்தீவு மகாவித்தியாலயம், குமுளமுனை மகாவித்தியாலயம், வித்தியானந்தா கல்லூரி – முள்ளியவளை, மேமாலை மகாவித்தியாலயம், ஒட்சிசுட்டான் மகாவித்தியாலயம், தர்மபுரம் மகாவித்தியாலயம் மற்றும் பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவர்கள்.

புலிகளால் பலவந்தமாக வள்ளிபுனம் முகாமில் இராணுவப்பயிற்சி வழங்கப்பட்டுக்கொண்டிருந்தபோது இலங்கை வான்படையினரின் வான்தாக்குதலால் இவர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள் என்பது முழு வன்னி பிரதேசமும் அறிந்திருந்த உண்மை. அத்துடன் இங்கு வேதனைக்குரிய விடயம் யாதெனில் இவர்கட்கு பலவந்தமாக இராணுவ பயிற்சிகளை வழங்கிய காளி மாஸ்டர் என்பவர் தற்போதும் எவ்வித குற்ற உணர்வுமின்றி வன்னியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இருந்தபோதும் புலிகள் இன்றும் இம்மாணவர்கள் செஞ்சோலை என்ற அநாதைகள் இல்லத்தை சேர்ந்தோர் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மாணவர்கட்கு கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டமை ஓர் சூட்சுமமான கதை. இச்சூட்சுமத்திற்கு அன்று வன்னியிலிருந்த கல்வித்திணைக்கள அதிகாரிகள் உட்பட பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் புலிகளுக்கு சார்பாக செயற்பட்டுள்ளனர். 15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் அனைவரும் முதலுதவிப்பயிற்சியை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் முதலுதவிப் பயிற்சி பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை பாடசாலை நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கத்தவறுவோர் எந்தவொரு பரீட்சைக்கும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் நிபந்தனையொன்றை (மிரட்டலை) பாடசாலை நிர்வாகம் விதித்துள்ளது. பாடசாலை நிர்வாகத்தின் நிபந்தனையை தட்டிக்கழிக்கமுடியாத மாணவர்கள் முதலுதவிப் பயிற்சிக்கென சென்றபோதே அவர்களுக்கு அங்கு இராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை இம்மாணவர்களை புலிகளின் கட்டாயப் பயிற்சிக்கு நிர்பந்தித்த கல்வித்திணைக்களத்தை சேர்ந்த எந்தவொரு நபரும் தண்டிக்கப்படவில்லை.

அக்காலகட்டத்தில் குறித்த இளைஞர்-யுவதிகளின் பெற்றோர் தமது பிள்ளைகளை புலிகளிடமிருந்து காப்பாற்றுமாறு ஐ.நா வின் சிறுவர் காப்பகத்திற்கு (யுனிசெப்) சென்றபோது, மேற்படி கல்வி அதிகாரிகள் மாணவர்கள் சுயமாக முதலுதவிப் பயிற்சிக்கு சென்றுள்ளார்களென ஐ.நா அதிகாரரிகட்கு பொய்கூறி புலிகளை காப்பாற்றியதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் இலங்கை அரசினால் வழங்கப்படும் நஷ்டஈட்டு கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டுள்ளனர். பெற்றோர் இப்பணத்தை பெற்றுக்கொள்ள முனைந்தபோது, தமது போலிமுகத்திரை கிழியப்போகின்றது என அறிந்த புலிகள் பெற்றோர் நஷ்டஈடு பெறுவதனை தடுப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் புலிகளின் தடையை மீறி பெற்றோர் நஷ்டஈட்டு கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இவ்விடத்தில் கவலைக்குரிய விடயம் யாதெனில் இலங்கை அரசாங்கம் இச்சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த தவறியுள்ளது. இறந்தவர்கள் அநாதைகள் என்று பிரச்சாரம் செய்யப்பட்டதன் பின்னணியையும் அதனால் ஏற்படுத்தப்பட்ட தாக்கத்தையும் கவனத்திலெடுத்து இழப்பிற்கான நஷ்டஈட்டை பெற்றுக்கொண்ட பெற்றோரை உலகிற்கு அறிமுகம் செய்துவைக்க தவறியுள்ளது. கடந்த அரசாங்கம் இவ்விடயத்தில் தவறுவிட்டிருந்தாலும் இப்போதிருக்கின்ற அரசாங்கமாவது எதிர்வரும் மனித உரிமைகளை அமர்விற்கு முன்னர் குறித்த மாணவர்களின் பெற்றோரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்து அவர்கள் எவ்வாறு புலிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உரத்துசொல்லவைக்க ஆவன செய்யவேண்டும்.

புலிகள் கொல்லப்பட்ட மாணவர்களின் படங்களை இலங்கையில் தமிழ் இனவழிப்பு எனப்பிரச்சாரம் செய்கின்றனர். இங்கு நான் கேட்கும் கேள்வியாதெனில் , இம்மாணவர்கள் கொல்லப்பட்டமை தமிழினவழிப்பாயின் அதற்கு பொறுப்பாளிகள் யார்? இலங்கை வான்படையினரா? இல்லை இம்மாணவர்களை பலவந்தமாக பிடித்துச் சென்று தாக்குதல்களிலிருந்து தப்பிக்கக்கூடிய எவ்வித முன்னேற்பாடுகளுமில்லாத காட்டுப்பகுதியில் அவர்களின் வாழ்வை அபாயத்திற்குள் தள்ளிய புலிகள் தமிழினவழிப்பாளிகளா?

குறித்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மாணவர்களின் பெயர்ப்பட்டியலும் ஜெனீவா ஐநா முன்றலில் காட்சிப்படுத்தப்படும் படங்கள் சிலவும் கீழே தரப்படுகின்றது.












The Name list of killed school girls at Sencholai.

School: Puthukkudiyiruppu Mahavidhyalayam

Thambirasa Lakiya DOB: 26-03-89, Mullivaikal west
Mahalingam Vensidiyoola DOB: 07-10-89, Mullivaikal west
Thuraisingam Sutharsini DOB: 28-07-89, Ward 10, PKT

School: Visuvamadu Mahavidhyalayam

Nagalingam Theepa DOB: 29-03-87, Puthadi, Visuvamadu
Thambirasa Theepa DOB: 07-02-87, Valluvarpuram, Redbarna
Thirunavukkarasu Niranjini DOB: 29-11-88, Puthadi, Visuvamadu
Raveenthirarasa Ramya DOB: 14-11-88, Thoddiyadi, V. madu
Kanapathipillai Nanthini DOB: 05-10-88, Koddiyadi, Visuvamadu
Vijayabavan Sinthuja DOB: 24-05-88, Koddiyadi, Visuvamadu
Naguleswaran Nishanthini DOB: 11-04-89, Thoddiyadi, V.madu
Tharmakulasingam Kemala DOB: 09-09-87, Kannakinagar,
Arulampalam Yasothini DBO: 18-01-88, Puththadi, Visuvamadu

School: Udayarkaddu Mahavidhyalayam

Muthaih Indra DOB: 08-08-88, Suthanthirapuram centre
Murugaiah Arulselvi DOB: 14-07-88, Suthanthirapuram centre
Sivamoorthy Karthikayini DOB: 13-02-88, Vallipunam
Santhanam Sathyakala DOB: 20-08-86, Vallipunam
Kanagalingam Nirupa DOB: 11-02-89, Visuvamadu
Kanagalingam Nirusa DOB: 11-02-89, Vallipunam
Navaratnam Santhakumari DOB: 28-05-88, Kaiveli
Nagalingam Kokila DOB: 12-02-87, Vallipunam
Sivamayajeyam Kokila DOB: Kuravil
Shanmugarasa Paventhini DOB:
Balakrishnan Mathani DOB: 09-05-88, Vallipunam

School: Mullaitivu Mahavidhyalayam


Sivanantham Thivya DOB: 30-05-88, Vannankulam
Thambirasa Suganthini DOB: 18-02-88, Alampil,
S Vathsalamary DOB: 20-11-86, Manatkudiyiruppu
Thanabalasingam Bakeerathy DOB: 03-02-87, Mullivaikal west
Thanikasalam Thanusa DOB: 02-12-87, Kallappadu
Pathmanathan Kalaipriya DOB: 23-09-88, Kovilkudiyiruppu
Markupillai Kelansuthayini DOB: 14-07-88, Vannankulam
Hamsana DOB: 29-05-87, Alampil

School: Kumulamunai Mahavidhyalayam

Vivekanantham Thadchayini DOB: 31-01-88, W 10, PTK
Santhakumar Sukirtha DOB: 08-08-87, Ward 7, Kumulamunai
Uthayakumaran Kousika DOB: 22-08-87, Kumulamunai
Nallapillai Ninthija DOB: 03-03-88, Ward 6, Kumulamunai
Veerasingam Rajitha DOB: 28-02-88, Ward 5, Kumulamunai

School: Vidhyananda College, Mulliyavalai

Thamilvasan Nivethika DOB: 02-12-88, Ward 2, Mulliyavalai
Suntharam Anoja DOB: 12-09-89, Kumulamunai
Puvanasekaram Puvaneswari DOB: 06-06-89, W 4, Mulliyavalai
Kiritharan Thayani DOB: 28-12-89, Thannerutru, Mulliyavalai

School: Chemmalai Mahavidhyalayam

Mahalingam Vasantharani DOB: 23-03-88, Alampil, Chemmalai
Thuraisingam Thisani DOB: 06-12-88, Alampil, Chemmalai
Vairavamoorthy Kirithika DOB: 12-07-87, Alampil, Chemmalai
Chandramohan Nivethika DOB: 04-01-89, Alampil, Chemmalai

School: Oddusuddan Mahavidhyalayam

Sellam Nirojini DOB: Koolamurippu, Oddusuddan

School: Muruhananda Mahavidhyalayam

Tharmarasa Brintha DOB: 06-01-89, 189/1 Visuvamadu
Thevarasa Sharmini DOB: 09-03-89, 90, Periyakulam, Kandavalai

School: Tharmapuram Mahavidhyalayam

Varatharaja Mangaleswari DOB: 24-07-89, 577, 13 U, T.puram
Rasenthiraselvam Mahilvathani DOB: 04-12-88, Tharmapuram
Nilayinar Nivakini DOB: 04-04-89, Kaddakkadu, Tharmapuram

School: Piramanthanaru Mahavidhyalayam

Kubenthiraselvam Lihitha DOB: 05-02-87, Kalaveddithidal, Puliyampokanai

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com