Friday, April 7, 2017

இராஜபக்சாக்கள் செய்த அதே ஊழல் மோசடி ஆட்சியே நல்லாட்சி என்று சொல்லப்படும் ஆட்சியிலும் நடைபெறுகின்றது. விஜிதகேரத்

நாம் அதிகாரத்திற்கு வந்தால் ஜனாதிபதி அமைப்ப்பு முறையை இல்லாமல் செய்வோம், ஊழல் மோசடிக்கு எதிராக பாரபட்சம் அற்ற விசாரணை நடத்திதண்டனை வழங்குவோம் என மக்களுக்கு வாக்குறிதிகளை வழங்கி அதிகாரத்திற்கு வந்த மைத்திரி ரணில் அரசு இன்று இராஜபக்சாக்கள் செய்த அதே ஊழல் மோசடி ஆட்சியையே தொடர்ந்து செய்கின்றார்கள் அத்துடன் பழைய கள்வர்களுடன் ஒப்பந்தங்களையும் செய்து கொண்டுள்ளார்கள் என நீர்கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் ஜேவிபி யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜிதகேரத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடந்து உரையாற்றிய அவர் பேசுகையில் , தனி தனி கட்சி அதிகாரத்திற்காக இவர்களுக்கு இடையே பனி போரும் இடம் பெற்று வருகின்றது ஏற்றுமதி இறக்குமதி வருமான நிலைக்கு இடையே பாரிய இடை வெளி காணப்படுகின்றது. உதாரணமாக பெரும் கடல் வளத்தை கொண்டுள்ள எமது நாட்டில் சென்ற ஆண்டு மொத்த கடல் உற்பத்தி பொருட்களின் இறக்குமதி 1 லட்சத்து 15000 தொன் ஆகும். அதேவேளை உள்நாட்டு உற்பத்தி 26000 தொன் ஆகும். இதே மாதிரியே மற்றைய துறைகளிலும் இடம் பெறுகின்றது.

வெளி நாட்டு முதலீடுகள் வரும் 10 லடசம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்றார்கள் அதுவும் இந்த நாட்டில் காணப்படும் ஊழல் மோசடி அரசியல் ஸ்திரதன்மை, லஞ்சம், ஒழுங்கான உட்கட்டமைப்பு வசதி இன்மை போன்றகாரணதால் வியட்னாம் மலேசிய போன்ற நாடுகளை நோக்கி நகருகின்றன.

காதலர்களுக்கு இலகுவாக காதல் செய்வதற்கு கார் வாங்கலாம் என்றார்கள். ஆனால் நடந்தது என்ன வைத்திருந்த போனில் S.M.S அனுப்பக் கூட முடியாமல் 49% வரியை அதிகரித்துள்ளார்கள்:

எனவே இவர்களின் ஆட்சி வரி வட்டி தண்டப்பணம் அதிகரிப்பு, மானிய குறைப்பு, தேசிய வளங்களை விற்பனை செய்தல் போன்ற அபிவிருத்திக்கு எவ்வகையிலும் உதாவாத முறைமையிலேயே இடம் பெறுகின்றது. நாம் கேட்கிறோம்? இவர்களின் பின்னால் சென்று நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்ல போகிறீர்களா? அல்லது எம்முடன் இணைந்து உங்கள் எதிகால வாழ்வை வழம்படுத்தப் போகிறீகளா?

ஜனவரி 8 ன் பின் நாம் சில நன்மைகளை அடைந்து உள்ளோம் இதை பின்நோக்கி செல்ல விடாது, இராஜபக்சாக்களின் இருண்டயுகத்திற்கு மீண்டும் செல்லவிடாது தடுத்து; உற்பத்தி பொருளாதார முறைமையை அடிப்படையாக கொண்டு முன் நோக்கி நகர்வோம். இன மத மொழி கட்சி பேதங்களை மற்ந்து எங்கள் பின்னால் அணிதிரளுங்கள் என்றார்.

முழுப் பேச்சு




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com