ஜனா மீதான தாக்குதலும் பூசாரியின் காவாலித்தனமும்.
கடந்த புதன் கிழமை இரவு வாழைச்சேனை கருணைபுரம் குழந்தையேசு கிறவுண் விளையாட்டு மைதானத்தில், கிறவுண் விளையாட்டு கழகத்தின் 27 வது வருட நிறைவையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கிழக்கு மாகாண சபையின் த.தே.கூ உறுப்பினரும் ரெலோ அமைப்பின் முக்கியஸ்தருமான கோவிந்தன் கருணாகரன் என்கின்ற ஜனா உரையாற்றுகையில், மக்கள் முன் அவரது ஒலிவாங்கி பறிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்டுக்கதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் தெரியவருவது யாதெனின்:
கிறவுண் விளையாட்டுக்கழகத்தினரால் கடந்த பல ஆண்டுகளாக இவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றது. இந்நிகழ்வுக்காக கடந்த சில வருடங்களாக பூசாரியான யோகேஸ்வரன் எம்பி நிதியுதவி செய்து வந்துள்ளார். அந்நிதியுதவிக்கு பிரதிபலனாக நிகழ்வின் பிரதம விருந்தினர் இருக்கையையும் பூசாரி அலங்கரிந்து வந்துள்ளார்.
ஆனால் இம்முறை விளையாட்டுக்கழகத்தினர் யோகேஸ்வரன் எம்பி யிடம் நிதியுதவி கேட்டு சென்றபோது, பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதைதொடர்ந்து ஜனாவிடம் சென்ற விளையாட்டுக்களத்தினருக்கு நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளது. தொடர்ந்து நிகழ்விற்கு ஜனா பிரதம அதிதியாக அழைக்கப்பட்டுள்ளார்.
பிரதம அதிதி கதிரை பறிபோனதை சகித்துக்கொள்ள முடியாத எம்பி யோகேஸ்வரன், பிரதேசத்தை சேர்ந்த மதுவுக்கு அடிமையான இளைஞன் ஒருதனுக்கு சாராயப்போத்தலை வாங்கி கொடுத்து மேற்படி இழிசெயலை நடாத்தியுள்ளார்.
மதுவுக்கு அடிமையான சிவகுமார் என்ற இளைஞன் கடந்த 23 ம் திகதி பொலிஸாரல் கைது செய்யப்பட்டு ஜனாவை தாக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது 25 ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கதிரைக்காக, மேடைக்காக, பதிவிகளுக்காக, ஒலிவாங்கிக்காக தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டிருக்கின்றனர் என்பதற்கு இச்சம்பவம் சிறந்து உதாரணமாகும்.
பூசாரியின் இக்குழிபறிப்பு தொடர்பில் கூட்டமைப்பு விசாரணை மேற்கொண்டு அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமா என மக்கள் வினவுகின்றனர்.
0 comments :
Post a Comment