Thursday, October 16, 2014

றிப்தி அலியின் “அமெரிக்காவில் 30 நாட்கள்” நூல் வெளியீடு!

இளம் ஊடகவியாளர் றிப்தி அலி எழுதிய அமெரிக்காவில் முப்பது நாட்கள் (அனுபவப் பகிர்வு) நூல் வெளியீடும் விடியல் இணையத்தளத்தின் பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் சனிக்கிழமை (18) பி.ப 3.30 மணிக்கு இல. 149, மாளிகாகந்த வீதி, கொழும்பு 10 இல் அமைந்துள்ள ஜம்இய்யதுஷ் ஸபாப் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமயில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் இலங்கை அபவிருத்தி ஊடக மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.சீ.ரஸ்மின் 'முஸ்லிம் சமூகமும் சமூக ஊடகங்களும்'' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார்.

புனித ரமழானை முன்னிட்டு விடியல் இணையத்தளத்தினால் நடத்தப்பட்ட கேள்வி – பதில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இதன்போது பரிசுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com