Saturday, June 28, 2014

இலங்கைக்கு எதி­ராக ராஜ­தந்­திர ரீதி­யி­லான ஆளில்லா விமான தாக்­குதலை நடத்துகின்றது ஐ.நா விசாரணைக் குழு!

ஐ.நா மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை நிய­மித்­துள்ள நிபு­ணர்கள் குழு இலங்கை அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ராஜ­தந்­திர ரீதி­யி­லான ஆளில்லா விமான தாக்­குதலை நடத்துகின்றது என இலங்­கையின் முன்னாள் இரா­ஜ­தந்­தி­ரியும் சிரேஷ்ட அர­சியல் விமர்­ச­க­ரு­மான கலா­நிதி தயான் ஜய­தி­லக்க தெரி­வித்­துள்ளார்.

அத்துடன் அண்­மையில் அளுத்­க­மவில் இடம்­பெற்ற முஸ்லிம் விரோத கல­வ­ரங்­களும் இந்த குழுவின் விசா­ர­ணை­க­ளுக்கு பரிந்­து­ரைக்கும் எனக் கூறப்­ப­டு­கி­றது. இதற்கு சாதகமாக அளுத்­க­மவில் இடம்பெற்ற சம்­ப­வங்­க­ளுக்கு கண்­டனம் வெளி­யிட்­டி­ருந்த நவ­நீ­தம்­பிள்ளை, கொழும்பு அர­சாங்கம் அனைத்து சிறு­பான்மை மதத்­தி­னரை பாது­காக்க வேண்டும் அழைப்பு விடுத்­தி­ருந்­துடன் அஸ்மா ஜஹாங்­கீரை நிபு­ணர்கள் குழுவின் உறுப்­பி­ன­ராக நிய­மித்­தி­ருந்­தாக ஜய­ல­தி­லக்க சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

பாலஸ்­தீ­னத்தின் காசாவில் இடம்­பெற்ற மோதல்­களில் இடம்­பெற்ற மீறல்­களை கண்­ட­றிய ஐ.நா ரிச்சர்ட் கோல்ட்ஸ்டோன் என்ற ஒரு நபரை மட்­டுமே நிய­மித்­தி­ருந்­தது. எனினும் இலங்கை மீதான விசா­ர­ணை­க­ளுக்கு மூவர் கொண்ட குழுவை ஐ.நா மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­லகம் நிய­மித்­துள்­ளது. இந்த குழு மிகவும் வலு­வா­னதும் கனத்தை எடை­யையும் கொண்­டது எனவும் தயான் ஜய­தி­லக்க குறிப்­பிட்­டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com