Sunday, May 4, 2014

இலங்கை குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம்!

மனித உரிமை, ஜனநாயகம், பயங்கரவாதம் போன்றன தொடர்பில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் பொதுவான நிலைப்படே காணப்படுவதாகவும் இலங்கை குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களை சர்வதேச சமூகம் சாதகமாக நோக்கத் தொடங்கியுள்ளதாகவும் அமெரிக்காவுடன் மிக நெருங்கிய தொடர்புகள் மிக நீண்ட காலமாக பேணப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர் இந்த உறவுகளின் மூலம் இரு நாடுகளும் நன்மை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் பயங்கரவாத்திற்கு நிதி வழங்குதல் மற்றும் சட்டவிரோத நிதி கொடுக்கல் வாங்கல்களை தடுக்க அமெரிக்க மேற்கொண்ட முனைப்பு பாராட்டுக்குரியது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com